Friday, April 22, 2011

சாய் பாபாவுக்காக , கலைஞர் பிரார்த்தனை!!!!!

புட்டபர்த்தி சத்யா சாய் பாபா உடல் நலம் இன்றி இருப்பதை ஒட்டி , ஒவ்வொருவரின் எதிர் வினைகளை ஒரு பார்வையாளானாக கவனிப்பது நிறைய பாடங்கள் கற்று தருகிறது..




ஒரு சம்பவம் , எப்படி எல்லாம பார்க்கப்படுகிறது?



இந்தியாவை மட்டம் தட்ட கிடைத்தது ஒரு வாய்ப்பு என்ற கோணத்தில் இதை செய்தியாக்குகின்றன வெளி நாட்டு மீடியாக்கள்...



மரணம் என்பது பயப்பட வேண்டிய ஒன்றல்ல என்ற கோணத்தில் இதை அணுகுகிறார்கள் இந்திய ஆன்மீக வாதிகள்... யாராக இருந்தாலும் உடல் என்பது ஒரு நாள் அழிந்துதான் போகும்... இதில் பரபரப்படிடைய எதுவும் இல்லை என்கிறார்கள் இவர்கள்...



நடப்பது அனைத்தும் தெய்வ லீலைகளின் ஓன்று என்கிறார்கள் சாய் பாபா பக்தர்கள்...



சாய் பாபா உடல நிலை குறித்து தவறான தகவல்கள்தான் வருகின்றன... அவரை வைத்து சிலர் வியாபாரம் செய்கின்றனர்.. கடந்த சில மாதங்களாகவே அவர் ஒரு கைதி போலத்தான் இருக்கிறார் என்கின்றனர் சிலர்..



இந்த நிலையில் முரசொலியில் கலைஞர் தன கருத்தை கூறி இருக்கிறார்...

*************************************************

சாய் பாபா உடல நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறாரே?



கலைஞர் : சாய் பாபா தமிழர்கள் மீதும் தமிழ் நாடு மீதும் அன்பு கொண்டவர்... என் மேல் தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டவர்.. தமிழ் நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வர அவர் உதவியதை மறுக்க முடியாது.. என் வீட்டுக்கே வந்து வெகு நேரம் பேசி கொண்டு இருந்தார்.. விழாவில் கலந்து கொண்டோம்.. அவர் உடல் நலம் பெற அவர் பக்தர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.. அவர்கல் பிரார்த்தனை பலிக்க வேண்டும் என நானும் உளமார வேண்டுகிறேன்.







2 comments:

  1. யாரை வேண்டினார்?

    ReplyDelete
  2. மறைந்த சாய் பாபா என்ற மனிதருக்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலி.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா