Sunday, August 28, 2011

ஜென் குருவுடன் சில மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -2

அந்த சந்திப்பு நடந்த இடம் முழுதும் , உற்சாக மின்சாரம் செலுத்தப்பட்டது போல குதூகல மன நிலையில் இருந்தது. அதே நேரத்தில் அனைத்தும் சிறப்பாக , கச்சிதமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.. பழங்கள்,  நன்னாரி சர்பத் என அவ்வபோது ஏதாவது கிடைத்து கொண்டு இருந்தன.. இதற்கு உழைத்தவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்... இலக்கியம் மனிதனை எப்படி பண்படுத்துகிறது என்பதற்கு இந்த நிக்ழ்வே ஒரு சாட்சியாக இருந்தது..

  இன்னொரு சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. மதிய உணவு முடிந்த பின், ஜாலியாக சற்று நேரம் சுற்றிக்கொண்டு இருந்தேன்...அப்போது, ஏதோ பேச்சு குரல் கேட்கவே, பார்த்தேன்,,, சாரு அங்கு இருந்த ஒரு நாய் குட்டியுடன் பேசிக்கொண்டு இருந்தார்.. ஆம்... பேசினார்...

வழக்கமாக நாயை கொஞ்சுவோமே, அப்படி இல்லாமல் ஒரு மனிதனிடம் பேசுவது போல , “ எப்ப்டி இருக்கிறாய்? சாப்பிட்டு விட்டாயா? பசிக்குமே! “ என அக்கறையுடன் கேட்பதை பார்த்து, வியந்து போனேன்... ( சற்று நேரத்திற்கெல்லாம் வயிறார சாப்பிட்டு விட்டு, சோஃபாவில் உறங்கியது அது...எனக்கு உட்கார இடம் இல்லை... அதற்கு தனி இருக்கை .. பொறாமையாக இருந்தது )

அன்பு செலுத்துவது வேறு..அன்பாகவே வாழ்வது வேறு என்பது அப்போது புரிந்தது,,, சாரு மிகவும் கனிந்து இருப்பதும் , ஆன்மீக நிலையில் முதிர்ந்த நிலையை அடைந்து இருப்பதும், பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்துகொண்டே இருந்தது...



சிலருக்கு “ தண்ணியில் “ மிதப்பது பிடிக்கும், சிலருக்கு நீச்சல் குளத்தில் மிதப்பது பிடிக்கும், அதே போல நடனம் , இலக்கிய விவாதம் , வாசித்தல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை..  இந்த அனைத்தும் ஒரே இடத்தில் நடந்தது அற்புதமாக இருந்தது...  be yourself என்பதன் மகத்துவம்  
வெளிப்பட்ட இடம் அது....

அரசியல், சினிமா, மது, ஆன்மீகம், துரோகம் , காதல், காமம் என வானத்துக்கு கீழ் இருக்கும் அனைத்து விஷயங்களும் சுவையாக விவாதிக்கப்பட்டன... ஆழமான கேள்விகள் முதல் அபத்தமான கேள்விகள் வரை எதுவாக இருந்தாலும், பளிச் பதில் அளித்தார் அல்ட்டிமேட் ரைட்டர்.

புக் ஸ்டால்  வைக்கப்பட்டு இருந்தது பயனுள்ளதாக இருந்தது... அதே நேரத்தில் வாசக நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்ததும் இனிமையான அனுப்வம்...  

சரி... சாருவுடன் உரையாடலில் சில பகுதிகள்..

**********************************************************************
 உங்கள் நாவல்களில் எனக்கு பிடித்தது ராசலீலா.. ஒரு வாசகனாக , உங்கள் பிடித்த உங்கள் நாவல் எது?

முந்தா நாள் வரை எனக்கு பிடித்த நாவல் ராச லீலா.. ஆனால் நேற்று முதல் , எக்சைல் நாவல் மிகவும் பிடித்து விட்டது... என்னையே பிரமிக்க செய்யும் அளவுக்கு சிறப்பாக வந்து இருக்கிறது நாவல்... ஒரு வகையில், சீரோ டிகிரியின் இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம்... பல விஷ்யங்களை தொட்டு செல்கிறது நாவல்.. படித்தவர்கள் அந்த பாதிப்பில் இருந்து மீள்வது கடினம்..

வாழ்க்கை என்பது என்ன?

வாழ்க்கை என்றால் என்ன..இலக்கியம் என்றால் என்ன..கவிதை என்றால் என்ன என்றெல்லாம் ரெடிமேட் கேள்விகள் கேட்பதால் பயனில்லை... வாழ்க்கை என்றால் என்பது வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும்..

எழுத்தாளன் ஆக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

நிறைய படிக்க வேண்டும்.. உலக சினிமா பார்க்க வேண்டும்.. எல்லாவற்றுகும் மேலாக மனதில் அன்பு இருக்க வேண்டும்.ஈகோ இருக்க கூடாது.... ஒருவரை துன்புறுத்துபவர் எழுத்தாள்ராக இருக்க முடியாது... எழுத்தாளன் என்பது ஒரு நிலை... டைரகடர் ஆவது எப்படி என சொல்லி தருவது போல , எழுத்தாளன் ஆவது எப்படி என சொல்லித்தர முடியாது..துறவி ஆவது எப்படி என சொல்லித்தர முடியுமா?

இது வரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது உங்களுக்கு தோன்றுவது என்ன?


பல தவறான முடிவுகள் எடுத்து இருக்கிறேன்.. ஆனால் அதற்காக அழுவதில்லை.. எல்லாமே அனுபவம்தான்... செஸ் ஆட்டத்தில் , சரியான மூவ் தவறான் மூவ் இரண்டும் சேர்ந்துதான் ஆட்டத்தை உருவாக்குகின்றன...எனவே மூவ்தான் முக்கியம்... ஆட்டத்தில் இருப்பது முக்கியம்... 

என் தந்தை ஒவ்வொரு வருடமும் சபரி மலை செல்வார்.. ஏன் என கேட்டால் , நீ சின்ன பையன் சொன்னால் புரியாது என்பார். நீங்கள் சொல்லுங்கள் .. சபரிமலை ஏன்?

அய்யப்பன் என்பவன் என்னைபோன்றவன் என நண்பர் ஒருவர் சொன்னார்.. என் எழுத்துக்கள் பற்றி தெரியாதவன் பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை.. ஆனால் என் எழுத்தைப்படித்து விட்டு , புரிந்து கொள்ளாமல் தவ்றாக பேசினால் எனக்கு கோபம் வரும். அதே போல அய்யப்பன் என்பதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்கள் பற்றி அய்யபனுக்கு கவலை இல்லை.. ஆனால் அய்யப்ப பக்தராக காட்டிகொண்டு, தவ்று செய்தால் அய்யப்பன் சும்மா விட மாட்டான் என சொல்லி சில உதாரணங்கள் சொன்னார் நண்பர்..

என்னை பொறுத்தவரை , நான் ஒரு நான் வெஜ் அடிக்ட் ... பைபாஸ் சிகிச்சை நடந்து , அசைவம் சாப்பிட்டால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையிலும் அசைவம் சாப்பிட்டவன் நான்.. என்னை எந்த கொம்ப்னாலும் மாற்ற முடியாது... அப்படிப்பட்ட என்னை , ஒழுங்கு தவறாமல் விரதம் இருக்க வைத்தது இந்த வழிபாட்டு முறைதான்.. மனதாலும் கூட விதிமுறை தவறாமல்  விரதம் இருந்தேன்... விரத காலத்தில் என்னை சாமியாக மதித்து காலில் விழுவார்கள்..  அதற்கு உரியவனாக நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியை , இது ஏற்படுத்தியது... இது வேறு எந்த வழிபாட்டு முரையிலும் இல்லை... 

சில தீவிரவாதிகள் எதிரி சிறுவர்களை கொல்லும்போது, அவர்களுக்கு செக்ஸ் அனுபவம் இருக்கிறதா என கேட்பார்கள்.. பதில் என்னவாக இருந்தாலும் கொல்வார்கள்... ஆனால் அந்த அனுப்வம் இல்லாமல் ஒருவனை கொல்லும்போது, ஒரு சாடிஸ்டிக் மகிழ்ச்சி கிடைக்கும்.. ஒரு முக்கியாமன் அனுபவம் இல்லாமலேயே சாகிறான்..
அதே போல , சபரிமலை பயணம் என்பது அற்புதமான அனுப்வம்... அது இல்லாமல் சாவது பரிதாபத்துக்கு உரியது..

சீரோ டிகிரியை எப்படி படிப்பது?

நியாயமாக ஓர் எழுத்தாளன் இதற்கு பதில் சொல்ல கூடாது.. எப்படி படிக்க வேண்டும் என அதிலேயெ குறிப்புகள்  ஆங்காங்கு இருக்கின்றன.. 
உலகம் என்பது வன்முறைமயமானது.. கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட உலகம் ஏன் இவ்வள்வு கொடூரமாக இருக்கிறது... நான் ஏன் இவ்வளவு கொடுமைக்காரனாக இருக்கிறேன்... என் நாக்கு ருசிக்காக ஏன் ஒரு அப்பாவி விலங்கை கொல்கிறேன்..  இது போன்ற கேள்விகள் அதில் அலசப்பட்டு இருக்கும்..

சீரோ என்பது மரணம்... சூன்யம்.. மரணத்தின் இன்னொரு துருவம் செக்ஸ்.. செக்ஸ் இல்லாவிட்டால் ஃபேஷன் டெக்னாலஜி உட்பட எதுவும் இல்லை. இது போன்று  சீரோ டிகிரியில் ஆங்காங்கு இருக்கும் குறிப்புகளை பிடித்து கொண்டு மேலே மேலே போய்க்கொண்டே இருக்கலாம்... எத்த்னை முறை வேண்டுமானாலும் படிக்கலாம்.. 

சீரோ டிகிரியின் கடைசி வாக்கியம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை சொல்லும்... ஆனால் அது “ சொல்” என்று முடியும்... அமைதியை சொல்லும் வாக்கியம் சொல் என முடியும்..

சீரோ டிகிரியின் துவக்க வாக்கியம், உன்னோடு பேசி எத்தனை நாட்கள் ஆகின்றன என தொடங்கும்..

ஆரமப்ம பேச்சு, முடிவு சொல்... ஆதியிலே வார்த்தை இருந்தது என்பார்கள்.. இதுபோல பல அதில் புதைந்துள்ளன..தேடி கண்டு பிடியுங்கள்

********************************************************

நாஸ்திகனாக இருந்ததால் , சபரிமலையை இத்தனை நாள் தவற விட்டு விட்டேனே என வருந்தியதாக சாரு சொன்னார்... சாருவை பார்ப்பவர்கள், சில தவறான பிரச்சாரங்களால் , இத்தனை நாள் அவரை தவற விட்டு விட்டொமே என வருந்துவார்கள் என்பது உறுதி...






சுவாசிப்பு போல வாசிப்பும் அவசியம்



இயற்கை அழகு கொஞ்சும் இடத்தில் இலக்கியம்

சீரோ டிகிரி- ஒருவிவாதம்


அன்பு இல்லாதவன் எழுத்தாளன் ஆக முடியாது

வானமே உங்கள் எல்லை

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்

Saturday, August 27, 2011

ஜென் குருவுடன் சில மணி நேரங்கள்- சாரு சந்திப்பு -1

இலக்கிய சந்திப்பு என்றால் டிரையாக இருக்கும் என்ற நிலையை மாற்றி, ஈசிஆரில் அல்ட்டி மேட் ரைட்டர் பங்கு பெறும் இலக்கிய சந்திப்பு என்ற போதே சற்று ஆச்சரியமாக இருந்தது...ஆனால் அடுத்தடுத்து பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன என முதலில் தெரியவில்லை..

 நான் செல்வதற்குள், துல்லியமாக திட்டமிட்டு ஏற்பாடுகளை முடித்து இருந்தார்கள்.. சிலரை முதன்முறையாக சந்த்திக்கிறேன்.. ஆனாலும் பல நாள் பழகியவர்களை சந்திப்பது போலவே இருந்தது... சுரேஷ், மணிவண்ணன், ஞானசேகரன், பாலா, பிரபாகரன், சிவம் , சிபி, செல்வம் மாணிக்கம், மணிகண்டன், சதீஷ், பிரபு ராமகிருஷ்ணன், பார்த்திபன்,கிருபா சங்கர் கார்த்திகேயன், வெற்றி, சிவம், ஜான், வில்லன் வில்லன், சரவண குமார் என ஒவ்வொருவரையும் பற்றியும் நிறைய சொல்லலாம்.. சாருவிடம் இப்படி ஒரு சக்தி வாய்ந்த இளம் படை இருப்பது பெருமையாக இருந்தது..
சாரு வருவ்தற்கு முன் இலக்கியம், அரசியல் , சினிமா என பல விஷ்யங்கள் குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். திடீரென பரபரப்பு..

ஒரு ஜென் குரு காரில் இருந்து இறங்கினார்... அட.. நம்ம சாரு... வித்தியாசமான தோற்றம்...பேச்சிலும் நிறைய வித்தியாசங்கள்...
பாஸ்கரும், பாத்திபனும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்..சற்று நேரத்துக்கு பின் உரையாடல் தொடங்கியது... கேள்வி கணைகள் பாய்ந்தன.. பதில்களும் கருத்து செறிவுடன் வந்தன...

*************************************************

திடீரென அய்யப்பனை தரிசிக்க சென்றீர்களே .. இந்த எண்ணம் எப்படி வந்தது?

பல காரணங்கள்..
என் நண்பர் ஒருவரை அடிக்கடி சந்திப்பது வழ்க்கம்..அவரது அய்யப்பன் அனுபவங்கள் ஆச்சர்யமாக இருந்தன,, நேர்மையாக , ய்தார்த்தமாக இருந்தன... அவர் இப்படி சொல்வதே எனக்கு ஓர் அழைப்பாக தோன்றியது..

வாழ்வில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அம்சமும் ஒரு காரணம்..அமெரிக்காவில் ஒரு மில்லியனர் சற்றும் எதிர்பாராத வகையில் சிறை செல்ல வேண்டியதாகி விட்டது...அவசரத்தில் ஷேவிங் செட் பைக்கு பதில் , ரிவால்வர் பையை எடுத்து வந்ததுதான் அவர் செய்த பிழை.. வாழ்வின் இந்த எதிர்பாராத த்ன்மை, அபத்தம் போன்றவை அச்சமூட்டக்கூடியவை... இதை சமாளிக்கும் வலிமையை பெறுவதன் ஆலயம் சென்றதற்கு ஒரு காரனம்..

அரசன் போல இருக்கும் ஒருவனை, நிர்வாணப்படுத்தி, கழுதை ஊர்வலம் நடத்தி அசிங்கப்படுத்வது போல சிலர் எனக்கு எதிராக செயல்பட்டனர்... அவர்கள் மேல் எனக்கு இப்போது எந்த கோபமும் இல்லை..மன உளைச்சலும் இல்லை.... அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு  மீண்டெழ ஆலய பயணம் தேவைப்பட்டது..எனவே அவர்களும் ஒரு காரணம்...

சில நாடுகளில் எழுத்தாளனை சிறையில் தள்ளி அவன் வாயை அடைப்பார்கள்.. நம் நாட்டில் போலியான அவதூறுகளால் அவனை அடக்க நினைப்பார்கள்... இதை சமாளிக்க்கும் மனோ வலிமை தேவை

நீங்கள் எதிர்பார்த்தது சபரிமலையில் கிடைத்ததா?

வாழ்க்கை என்பதே எதிர்பாராமல் கிடைத்த ஒன்று...  எதிர்பார்ப்புக்கெல்லாம் அப்பாற்பட்டது அய்யப்பன் தரிசனம்... கடவுள் இருக்கிறார் இல்லை. என்பதற்கு அப்பாற்பட்டு, ஒருவர் சபரி மலை செல்லவில்லை என்றால் அவர் வாழ்வில் ஒரு முக்கிய விஷ்யத்தை தவற விடுகிறார் என பொருள்.. அது ஓர் அற்புதம்... அந்த அனுபவத்தை பெறாமல் ஒருவர் இழந்து விட்டால், மிகப்பெரிய ஒன்றை அவர் இழந்து விட்டார் என்று அர்த்தம்..

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கோயிலில் முதல் மரியாதை... சுலப்மாக சாமி தரிசனம் செய்யலாம்.. ஏழை கியூவில் நிற்க வேண்டும்... இப்படி ஏற்ற தாழ்வு இருக்கும் கோயிலுக்கு ஏன் செல்ல வேண்டும்?

இந்த ஏற்ற தாழ்வைத்தான் சீரோ டிகிரி பேசுகிறது..பிச்சாவரம் சந்திப்பில் ஓர் ஆட்டின் கழுத்தை அறுத்து, சமைத்து உண்டு மகிழ்ந்தோம்... ஓர் ஆட்டின் வலி எங்களுக்கு ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது? என கேட்டு கொண்டேன்..அந்த வலியை என்னால் என்றும் மறக்க முடியாது... புணர்ச்சி முடிந்ததும் இறந்து விடும் பூச்சி பற்றி சீரோ டிகிரியில் எழுதி இருக்கிறேன்... பெண் பூச்சியின் அழைப்பு ஒலி , ஆண் பூச்சிக்கு மரணமாகிறது...
இது போல எத்தனையோ  ஏற்ற தாழ்வுகள் உலகில்  இருக்கின்றன.. இதற்கு முன் நீங்கள் சொன்ன , விவகாரம் மிக மிக சாதாரணமானது...

எழுத்தாளனாக இருப்பது துன்பம் மிகுந்த வேலை என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அப்படி இருந்தும் சிலர் ஏன் எழுதுகிறார்கள்?

பல் காரணங்கள்... எழுத்து மீதான தீராத காதல்...
எழுத்தின் மீதான அடிக்‌ஷன்
ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களை சந்த்திதாலும், மூச்சு விட மற்ப்பதில்லை... எழுத்து மூச்சு போன்ற விஷ்யம்..

படிப்பவர்கள் சிலராக இருந்தாலும், அவர்கள் காட்டும் அன்பு நிஜம்.. அந்த அன்புக்காக எவ்வளவு சிரமங்களையும் சந்தித்து எழுதலாம்


( சீரோ டிகிரியை எப்படி படிப்பது? எழுத்தாளன் ஆவது எப்படி? வாழ்க்கை என்றால் என்ன ? அடுத்த நாவல் எதைப்பற்றியது ? )  அடுத்த பாகத்தில்.... 

இரண்டாம் பாகம் படிக்க இதை சொடுக்கவும்

Tuesday, August 23, 2011

உண்ணாவிரத கலைஞன் - உலக புகழ்பெற்ற சிறுகதை

காப்காவின் இந்த கதை உலக புகழ் பெற்ற ஒரு கதை... மிகவும் யோசிக்க வைத்து , என் நினைவில் நீங்கா இடம் பெற்ற இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


************************************************************************
                    கடந்த சில வருடங்களில் பட்டினி கலைஞர்களின் மீதான ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. ஒரு காலத்தில் பட்டினி கிடக்கும் இந்த அரிய கலையை பயன்படுத்தி , சுய தொழில் செய்ய முடிந்தது. வெகுவாக பணமீட்டவும் முடிந்தது.
                    இப்போது இது சாத்தியமில்லை.
                        அதெல்லாம் ஒரு காலம். அப்போதெல்லாம் ஒரு பட்டினி கலைஞன் , ஒட்டு மொத்த ஊரின் கவனத்தை ஈர்த்து வைத்திருப்பான். உண்ணாவிரத்தை ஆரம்பித்து அதை முடிக்கும் வரை , நாளுக்கு நாள் பார்வையாளர்கள் அதிகரித்தவண்ணம் இருப்பார்கள். உண்ணாவிரத கலைஞனை , ஒவ்வொரு நாளும் ஒரு முறையேனும் பார்த்து விடுவார்கள்.நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டை மொத்தமாக வாங்கி கொண்டு நாள் முழுதும் , அந்த உண்ணா விரத கலைஞன் அமர்ந்து இருக்கும் சிறிய கூண்டின் முன் அமர்ந்து ஆவலாக கவனிப்பவர்களும் உண்டு. இரவில் இந்த நிகழ்ச்சியை கண்டு மகிழ்பவர்களும் உண்டு. இரவை பகலாக்கும் ஒளி வசதி , இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கியது.

                     சில பிரத்தியேக நாட்களில் அந்த கூண்டு திறந்த வெளிக்கு எடுத்து வரப்பட்டு , பட்டினி கலைஞன் மக்கள் பார்வைக்கு - குறிப்பாக சிறுவர்களின் பார்வைக்கு - வைக்கப்படுவான்.பெரியவர்களை பொருத்தவரை இந்த கலை நிகழ்ச்சியை ஒரு நகைச்சுவையாகத்தான் நினைத்தார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது நாகரிகம் என கருதப்பட்டதால் இதில் கலந்து கொண்டனர்.ஆனால் சிறுவர்கள் , இதை வாய் மூடாமல் பிரமிப்புடன் பார்த்தார்கள். ஒருவர் கரத்தை ஒருவர் பாதுகாப்பாக பற்றியவண்ணம் நிகழ்ச்சியை பார்த்தார்கள்.

                அந்த கலைஞன் கூண்டில் அமர்ந்து இருப்பான். சில சமயம் மென்மையாக தலையசைப்பான். வலுக்கட்டயமாக வரவழைக்கப்ப்ட்ட புன்னகையுடன் கேள்விகளுக்கு பதில் அளிப்பான். ,
                      சமயங்களில் தன் கைகளை வெளியே நீட்டி , சாப்பிடாமல் தான் மெலிந்து போயிருப்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துவான்.ஆனால் இது கொஞ்ச நேரம்தான். அதன்பின் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னுள் ஆழ்ந்து விடுவான். அந்த கூண்டில் இருக்கும் கடிகாரம் உட்பட எதையும் கவனிக்க மாட்டான். கண்கள் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் தன் முன்புறமாக பார்வையை செலுத்திகொண்டு இருப்பான். அவ்வப்போது சிறிய குடிவையில் இருக்கும் தண்ணீரை சற்று உறிஞ்சி , தன் உதடுகளை ஈரமாக்கிக் கொள்வான்.

                      அவ்வப்போது பார்த்து செல்லும் பார்வையாளர்களைத்தவிர சில நிரந்தரமான பார்வையாளர்களையும் பொதுமக்கள் நியமித்து இருந்தனர். இதில் வினோதம் என்னவெனில் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் , கசாப்புக்கடைக்காரர்கள். எந்த நேரத்திலும் மூன்று பேர் கொண்ட அந்த குழு இரவும் பகலுமாக அந்த கலைஞனை கண்காணிக்கும். ரகசியமாக அவன் உணவு அருந்த வில்லை என்ப்தை உறுதி செய்வது இந்த குழுவின் வேலை.
                       ஆனால் இது சம்பிரதாயமான ஒன்று. இந்த கண்காணிப்புக்கு அவசியமே இல்லை. எந்த ஒரு நிலையிலும், வற்புறுத்தப்பட்டால் கூட , அந்த கலைஞன் ஒரு துளி உணவைக்கூட எடுத்துக்கொள்ள மாட்டான் என்பதை அனைவரும் அறிவர். அந்த கலையின் கவுரவம் அதை ஏற்காது.

                  அந்த கண்காணிப்போர் குழுவுக்கு இது புரியவில்லை. வேண்டுமென்றே சற்று தொலைவில் அமர்ந்து தீவிரமாக சீட்டாடுவார்கள். தம் கவனம் முழுதும் ஆட்டத்தில் இருக்கும்ப்போது அந்த கலைஞன் ரகசியமாக சாப்பிடக்கூடும் என்பது அவர்கள் எண்ணம்.
                   இது போன்ற கண்காணிப்பை போல வேதனை தருவது வேறு ஒன்றும் அந்த கலைஞனுக்கு இல்லை. அவனை அவர்கள் நோகடித்தார்கள். அந்த கலையை கடினமாக்கினார்கள். இதை சமாளிப்பதற்காக, அவர்கள் பார்க்கும்போது பாடுவது அவன் வழக்கம். அவர்கள் சந்தேகம் எவ்வளவு தவறானது என இப்படி உணர்த்த முயற்சிப்பான். ஆனால் அதில் பயன் அதிகம் இல்லை. பாடிக்கொண்டே எப்படியோ சாப்பிட்டு விடுகிறானே என அவர்கள் ஆச்சரியத்துடன் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள் அவர்கள்.

             அந்த அறையின் மங்கலான வெளிச்சத்தில் திருப்தி அடியாத நிகழ்ச்சி நிர்வாகி மின் ஒளி விளக்குகளை பார்வையாளர்களுக்காக ஏற்பாடு செய்திருந்தார். இந்த ஒளி வெள்ளம் அந்த கலைஞனை கொஞ்சமும் பாதிக்கவில்லை. பொதுவாக அவனால் தூங்க முடிந்ததே இல்லை. எந்த வெளிச்சத்திலும், எந்த சத்தத்திலும் , கூட்டத்திலும், எந்த நேரமாக இருந்தாலும் சற்று கண் அயர்வான் . அவ்வளவுதான்.
                தன்னை கண்காணிக்க பார்வையாளர்கள் இருப்பது இந்த கலைஞனுக்கு மகிழ்சி ஏற்படுத்தும். அவர்களுக்காக இரவு முழுதும் தூங்காமல் இருப்பான். அவர்களுடன் கலகலப்பாக பேசியும், பழங்கதைகள் பேசியும் , அவர்கள் கதையை சொல்ல சொல்லியும், அவர்களை தூங்காமல் பார்த்து கொள்வான். தான் உண்மையிலேயே சாப்பிடாமல் இருப்பதை இப்படி நிரூபிப்பான். ஆனால் காலையில் தன செலவிலயே அவர்களுக்கு காலை உணவு வழன்கி மகிழ்வான். இரவு முழுதும் விழித்து இருந்து கடுமையாக பணியாற்றிய அவர்கள் ஆவலாக உணவை எடுத்துக்கொள்வார்கள்.. ஆனால் இதுவும் ஒரு சாராரிடையே சந்தேகத்தை கிளப்பியது. காலை உணவு வாங்கி கொடுத்து , கண்காணிப்பாளர்களை பொய் சாட்சி சொல்ல வைக்கிறான் என குற்றம் சாட்டினர் சிலர்.. சரி, உணவு வாங்கி தரவில்லை.. நீங்கள் வந்து கண்காணியுங்கள் என அழைப்பு விடுத்தால், சாக்கு போக்கு சொல்லி நழுவினர். ஆனாலும் அவர்கள் சந்தேகம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது                     

ஆனால் இந்த சந்தேகம் தவிர்க்க முடியாத ஒன்று . ஏனென்றால் இரவு பகலாக , அவன் அருகேயே அமர்ந்து அவனை கண்காணிப்பது சாத்தியமற்ற ஒன்று. அதனால் தன அனுபவத்தை மட்டும் வைத்து ,அவன் சாப்பிடாமல் ஏமாற்றாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறான் என யாரும் சொல்லும் நிலையில் இல்லை.. அந்த கலைஞனுக்கு மட்டுமே உண்மை தெரியும்,. அதே சமயம்&கலைஞனின்;;உண்ணாவிரத செயல் திறமை மீது முழு திருப்தி கொண்ட ஒரே பார்வையாளனும் அந்த கலைஞன் மட்டும்தான்.

ஆனால் அவன் திருப்திக்கு காரணம் வேறு. இந்த நிறைவுக்கு காரணம் , அவனை எழும்பும் தோலுமாக ஆக்கி , சிலர் பார்க்க விரும்பாத பரிதாப தோற்றத்தை தந்த , இந்த உண்ணாவிரதம் அன்று. இந்த உண்ணாவிரதம் எவ்வளவு சுலபமான ஒன்று என அவைக்கு தெரியும். அதை சொல்லியும் இருக்கிறான்., ஆனால் யாரும் இதை நம்ப தயாராக இல்லை..சிலர் தன்னடக்கம் என நினைத்தனர் அவனை ஏமாற்றுக்காரன், விளம்பர மோகம் படித்தவன் என நினைத்தனர் . .
(தொடரும் )

Tuesday, August 16, 2011

தமிழர்களுக்கு பிடிக்காத டாப் ஃபைவ் வார்த்தைகள்

மற்ற மொழியினரை விட , அன்றாட வாழ்வில் அதிக வார்த்தைகள் பயன்படுத்துவது தமிழர்கள்தான்.. காரணம் மற்ற மொழியினர் அவரவர் தாய் மொழியில் பேசுவார்கள்.. நம்மவர்கள் தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் -அரைகுறையிலாவது -பேசுவார்கள்.

இப்படி பேசினாலும் இவர்கள் ஐந்து வார்த்தைகளை பயன் படுத்துவதே இல்லை என்பது வியப்பூட்டும் ஒன்று.. இதை பலர் உற்று கவனித்து இருக்க வாய்ப்பில்லை..எனவே பொது நலன் கருதி , தமிழர்களுக்கு பிடிக்காத ஐந்து வார்த்தைகளை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிலாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்படுகிறது....


1 ஆச்சர்யப்படுத்திய வார்த்தை

சில ஆண்டுகளுக்கு , என் வாழ்வில் முதன் முதலாக  ஒரு வெளினாட்டு தூது குழுவினருடன் அலுவலக பணிக்காக ஒரு விருந்தில் கலந்து கொண்டேன். அப்போதுதான் இப்படி ஒரு வார்த்தை இருப்பதே எனக்கு தெரிய வந்தது..

ஆனால் ஏன் இந்த வார்த்தையை பயன் படுத்துகிறார்கள்.. இதன் அர்த்தம் என சரியாக புரியவில்லை.. பிறகு ஒருவரிடன் கேட்டு அர்த்தம் தெரிந்து கொண்டேன்...

sorry என்றால் வருந்துகிறேன் என அர்த்தமாம்.. அவர்கள் எதற்கெடுத்தாலும் வருத்தப்ப்டுவது புதுமையாக இருந்தது...  தெரியாமல் மேலே உரசிவிட்டால்., பேச்சின் போது இடையூறு ஏற்படும் நிலை உருவாக்கினால், சொன்ன நேரத்தை விட இரண்டு நிமிடங்கள் தாமதமாக வந்தால் என அவர்கள் வருத்தம் தெரிவிப்பது , ஆச்சரியமாக இருந்தது.. நம் ஊரில் , கூட்ட்டதில் நடக்கும்போது யார் மீதாவது மோதினால் , எருமை மாடு போல செல்வோமே தவிர வருதம் தெரிவிக்க மாட்டோம்...

நாம் பயன்படுத்தாத வார்த்தை - சாரி, வருந்துகிறேன்

டிப்ஸ் - இந்த வார்த்தையை அவ்வபோது பயன்படுத்தி பாருங்கள்...  மற்றவர்களை ஆச்சர்யப்படுத்தலாம்..

எசாரிக்கை - அதிகமாக இதை பயன்படுத்தாதீர்கள்.. உங்களை பலவீனமானவராக நினைத்துக்கொள்வார்கள்

2 . நன்றி மறந்த தமிழன்
 இந்த வார்த்தையை , சென்ற தலை முறையினர் பயன்படுதுவதில்லை.. இப்போது பரவாயில்லை... இளம் தலைமுறையினர் பயன்படுத்துகிறார்கள்.. தேங்க்ஸ் - நன்றி என்பதே அந்த வார்த்தை...  முன் பின் தெரியாதவருக்கு , ஒரு சிறிய உதவி செய்திருப்பீர்கள்... அவர் அதை அலட்சியமாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து செல்வார்... நன்றி சொல்ல மாட்டார்..

பெரிய உதவிக்கும் நன்றி கிடைக்காது..  ஆனால் இளைஞர்கள் நன்றி சொல்லாவிட்டாலும் தேங்க்ஸ் சொல்கிறார்கள்... நல்லது...

டிப்ஸ் - இந்த வார்த்தையை பயன்படுத்தினால் , உங்களுக்கு உதவியருக்கு மகிழ்ச்சி ஏற்படும். அடுத்து உதவி கேட்டால் செய்ய வாய்ப்பு இருக்கிறது

எச்சரிக்கை - டிக்கட் தரும் கண்டக்டருக்கெல்லாம் தேங்க்ஸ் சொல்லாதீர்கள்... அவர் அதிர்ச்சி அடையக் கூடும்.. நாம் இன்னும் அந்த அளவுக்கு வளரவில்லை

3 வாழ்க ஆங்கிலம்

இந்த வார்த்தையும் சென்ற தலைமுறையில் புழக்கத்தில் இல்லை... ஆங்கில வளர்ச்சியால் பயன்பாட்டுக்கு வந்த வார்த்தை இது..

யாரிடமாவது உதவி கேட்கும்போது, அல்லது ஒன்றை செய்ய சொல்லும்போது, ப்ளீஸ் என்று ஆரம்பித்து சொல்வது இப்போது நடைமுறைக்கு வந்து இருக்கிறது,,,,  ஆனால் தயவு செய்து என்ற வார்த்தை ஒழிந்தே போய் விட்டது...

டிப்ஸ் - அலுவலக பயன்பாட்டில் கூட , சென்ற தலைமுரையினர் , ப்ளீஸ் என்பதை பயன்படுத்துவதில்லை. இது தவறு...

எச்சரிக்கை - அப்படிப்பட்டவர்களிடன் இந்த வார்த்தையை பயன்படுத்தீர்கள்..எதிர் விளைவே ஏற்படும்...


4 எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்

    இது மிகவும் முக்கியமான வார்த்தை... அலுவலகம், குடும்பம், சாலையில் வழி கேட்பது போன்ற பல சந்தர்ப்பங்களில் இந்த வார்த்தை பயன்பாடு இல்லாமையால் பெரும் தொல்லைகள் ஏற்படும்... ஒரு விஷயம் தெரியாது என நம் மக்கள் சொல்லவே மாட்டார்கள்...

            தெரியாத ஒன்றைக்கூட தெரியும் என்பது போல காட்டிக்கொள்ள விரும்புவதால் ஏற்படும் பிரச்சினைகள் பல... ஒருவரிடம் வழி கேட்கிறீர்கள்.. அவருக்கு தெரியாவிட்டாலும், ஏதோ ஒரு பதிலை சொல்லி உங்களை அனுப்புவார்.. ஆனால் தெரியாது என மட்டும் சொல்ல மாட்டார்..

சில அலுவலகங்களில் ஒரு விண்ணப்பத்துக்காக  சென்று இருப்பீர்கள்.. சம்பந்தப்ப்ட்டவர் தனக்கு அது தெரியாது என சொல்ல மாட்டார்.. ஆனல் தன் அறியாமையை மறைக்கும் பொருட்டு , உங்கள் விண்ணப்பத்தில் தவறு இருக்கிறது என்பது போல எதையாவது பேசி அனுப்புவார்..

டிப்ஸ்- ஒருவருக்கு ஒன்று தெரியாது என்பதை அவர் பேசுவதை வைத்து முடிவெடுத்து, சீக்கிரம் அவரிடம் இருந்து தப்பிக்க பாருங்கள்..

எச்சரிக்கை- உண்மையிலேயே விஷயம் தெரிந்தவர்களை சந்தேகப்பட்டு விடாதீர்கள்

5 முடியாதது எதுவும் இல்லை..

தன்னம்பிக்கை நூல்களை படித்து படித்து, எல்லாம் தன்னால் முடியும் என நினைக்க ஆரம்பித்து விட்டது தமிழகம்.. தன்னால் செய்ய முடியாத வேலையை ஏற்று கொள்வார்கள் சிலர்...

உதாரணமாக ஒரு சட்டை தைக்க நினைக்கிறீர்கள்.. இந்த தேதிக்குள் தர  முடியாது என சொல்ல மாட்டார் டெய்லர்.. முடியும் என சொல்லி விடுவார் ... ஆனால் சொன்ன நேரத்தில் தராமல் இழுத்தடிப்பார்,,,  அவர் முடியாது என சொல்லி இருந்தால் நாம் வேறு யாரிடமாவது வேலையை கொடுத்து இருக்கலாம்

டிப்ஸ் - பத்து நிமிடம் என்பது ஆபத்தான வார்த்தை... பத்து நிமிடத்தில் முடித்து விடுகிறேன்.. பத்து நிமிடத்தில் செய்து விடுகிறேன் என யாராவது சொன்னால், அந்த வேலை முடியாத ஒன்று என்ப்தை உணர்ந்து கொள்ளுங்கள்

எச்சரிக்கை - இந்த விஷயத்தில் யாரும் திட்டமிட்டு தவறு செய்வதில்லை... தமிழர்களின் டைம் கான்ஷியஸ் குறைபாடே இது.. எனவே தேவையில்லாமல் டென்ஷன் ஆகாதீர்கள்

Sunday, August 14, 2011

தவற விடக்கூடாத சாரு நிவேதிதாவின் கட்டுரை

  நண்பர்களை சந்திப்பது எப்போதுமே மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷ்யம். எனவே தான் நண்பர்களை சந்திக்க கூடுதல் கவனம் எடுத்து கொள்வது என் இயல்பு..

சென்ற வாரம் ஒரு நாள் , நண்பர் சந்திப்புக்காக அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு தயாராக இருந்தேன்.. 3 மணிக்கு சந்திக்க வேண்டும் என்றால் , இரண்டரை மணிக்கே அந்த இடததை அடைய பிளான் செய்வது என் வழக்கம்... சென்னை டிராபிக் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால் இந்த ஏற்பாடு..

ஆவலுடன் சொன்ன இடத்தில் காத்து கொண்டு இருந்தேன்.. ஆனால், சென்னை நகரின் டிராபிக் வேலையை காட்டிவிட்டது... நண்பரால், சொன்ன நேரத்துக்கு அந்த இடத்துக்கு வர இயலவில்லை...

அதற்கு பிறகு அரைமணி நேரம் காத்து இருந்தும் அவரால் வர இயலவில்லை....- டிராபிக்...

வேறு சில வேலைகள் இருந்ததால், அவரை சந்திக்காமலேயெ கிளம்ப வேண்டிய நிர்ப்பந்தம்... கனத்த மனத்துடன் அவரிடம் சொல்லி விட்டு கிளம்பினேன்...


சென்னையில் சாலைகள் அமைக்கிறோம் , நகரத்தை விரிவாக்குகிறோம் என சொல்லி , மரங்களை அழிக்கிறார்கள் .. ஆனாலும் நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை... சரியான திட்டமிடுதல் இல்லாததால், தேவையின்றி மரங்கள் அழிக்கப்படுகின்றன, எந்த பயனும் இல்லாமல்..

இந்த சிந்தனையோடு நான் இருந்த போது, தினமலரில் சாரு எழுதிய கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது..

அட... என ஆவலுடன் படித்தேன்...  மிகவும் தேவையான ஒரு விஷயத்தை , அழகாக சொல்லி இருந்தார்..
அவர் ஒரு புத்தகம் பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் ஏற்ப்படுத்தி விட்டார் அவர்.. விரைவில் படிக்க வேண்டும்..

எழுத்தாளர் என்பதை தாண்டி , ஒரு ஜென் குரு போல அவர் மாறிக்கொண்டு இருப்பது கட்டுரையின் பல இடங்களில் தெரிகிறது..

மரம் பற்றிய கட்டுரையில், கோமியம் , இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என பல இடங்களை அவர் தொட்டாலும், என்னை கவர்ந்த இடம் இன்னொன்று...

ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.


இப்படி அவர் முழங்கும்போது, எல்லோரும்  உயர் நிலை அடையும்  நன்முறையை , இந்தியா உலகுக்கு அளிக்கும் என பாரதியார் வரிகள் நினைவுக்கு வந்தன..
பொருத்தமான வரிகளை , கடைசியில் மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு..

அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை இது...படித்து பாருங்கள்.. பிரிண்ட் எடுத்து நண்பர்களுக்கு கொடுங்கள்

****************************************************************************


மனிதர் வாழ மரம் வாழட்டும்
- அல்ட்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதா.. 





வெளிநாட்டிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு, பெரும் அதிர்ச்சியைத் தரக் கூடிய விஷயம், இங்கே மரங்கள் இல்லாததுதான். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, தமிழகத்தில், 5 சதவீத மரங்களே உண்டு. சில ஊர்களில் மருந்துக்குக் கூட, ஒரு மரம் கிடையாது. ஏதோ பாலைவனத்தைப் போல், வறண்டு கிடக்கிறது தமிழ்நாடு.
சென்னையை எடுத்துக் கொள்ளுங்கள்... 50 ஆண்டுகளுக்கு முன், இப்படியா சென்னை இருந்தது? படகுப் போக்குவரத்து நடந்து கொண்டிருந்த கூவம், சாக்கடையாக இன்று நாறிக் கொண்டிருக்கிறது.லண்டனில் தேம்சும், பாரிசில் செய்ன் நதியும், ஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்ட்டில் டன்யூபும், அந்த நாடுகளையே, சொர்க்க பூமியாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. பாரிசில் எந்தப் பக்கம் திரும்பினாலும், அங்கே அமைதியாக, செய்ன் நதி ஓடிக் கொண்டிருக்கும். படகுப் போக்குவரத்து உண்டு; குட்டிக் கப்பல்களும் ஓடும்.

ஒரு காலத்தில் நம் நாடும், அப்படித்தான் இருந்தது. 1000 ஆண்டுகளுக்கு முன், "விருட்ச ஆயுர்வேதம்' என்ற நூலை, சம்ஸ்கிருதத்தில் சுரபாலர் எழுதினார். நம்முடைய அலட்சியத்தால், அழிந்து போக இருந்த சம்ஸ்கிருதப் பொக்கிஷங்களில், இந்நூலும் ஒன்று.
கிழக்கிந்தியக் கம்பெனியார், இந்நூலைக் கொண்டு போய், லண்டனில் வைத்துக் கொண்டனர். 1996ம் ஆண்டுதான், இந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இப்போது, இயற்கை விஞ்ஞானி, ஆர்.எஸ் நாராயணன், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
விருட்ச சாஸ்திரத்தின்படி, நம் ஜென்ம நட்சத்திரத்துக்கும், பாதத்துக்கும் தகுந்தாற்போல், இன்ன மரம் நட வேண்டும் என, சொல்லப்பட்டிருக்கிறது. 27 நட்சத்திரங்கள், ஒவ்வொன்றுக்கும், 4 பாதங்கள்; ஆக மொத்தம், 108 மரங்கள்.

நமது ஜென்ம நட்சத்திரத்துக்கு ஏற்ற மரத்தை நட்டால், நம் வாழ்வு வளம் பெறும் என்கிறது விருட்ச சாஸ்திரம்.ஆனால், இப்போது மரத்தை வெட்டினால் அல்லவா வாழ்வு? கேட்டால், "பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, நகரத்தை விரிவுபடுத்துகிறோம்' என்று சொல்கின்றனர். சென்னை மட்டும் அல்ல; உலகில் உள்ள எல்லா நகரங்களும் விரிவுபடுத்தப்பட்டே வருகின்றன.எந்த நகரமும், 50 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லை. ஆனால், அதற்காக அவர்கள், மரங்களை அழிப்பதில்லை. திருச்சியில், முந்தைய ஆட்சியில் ஒரு பிரமுகரின் கல்லூரிக்காக, சாலையையே மாற்றி அமைத்தனர். ஆனால், மரம் இருந்தால் மட்டும் வெட்டி விடுகின்றனர்.

"மெரீனா கடற்கரையை அழகு படுத்துகிறோம்' எனச் சொல்லி, அங்கே இருந்த அத்தனை மரங்களையும் காலி செய்தனர். மரங்களை வெட்டி கான்கீரீட் போட்டு விட்டால், அழகு என்று யார் சொன்னது? ஒரு மரம் வளர குறைந்தபட்சம், 50 ஆண்டுகள் தேவை; ஆனால், மரத்தை வெட்ட ஒரு மணி நேரம் போதும். 50 ஆண்டுகளை நம்மால், திரும்பக் கொண்டு வர முடியுமா? மனிதனால் முடியவே முடியாத காரியங்களில் ஒன்று, மரணத்தை வெல்வது. அதைப் போலவேதான், காலத்தை வெல்வதும். ஒரு மனித உயிரை அழித்தால், அதைக் கொலை என்கிறோம். அதேபோல், மனிதனை விட அதிக ஆண்டுகள் வாழ்ந்து, இந்த பூமியை, மனிதர்கள் வாழ்வதற்குரிய இடமாக ஆக்கிக் கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, மனிதக் கொலையை விட மோசமானது அல்லவா?

மரங்கள் இருப்பதால்தானே, மனிதனால் பூமியில் உயிர் வாழ முடிகிறது? இப்படிப்பட்ட மரங்களை அழிப்பது, மனித குலத்துக்கே விரோதமான செயல் அல்லவா?
"மரம் நடுங்கள்' என, தெருவுக்குத் தெரு போஸ்டர் ஒட்டி, மக்களுக்கு உபதேசம் செய்யும் அரசு நிர்வாகமே, தொடர்ந்து மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது, இந்த ஆட்சியிலாவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.ஏனென்றால், மரம் நடுவது தனி மனிதர்களின் கைகளில் இல்லை; இதில், அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். முக்கியமாக, மக்கள் நலனில் அக்கறை காட்டும் ஜெயலலிதா, இதை ஒரு சேவையாக எடுத்துச் செய்ய வேண்டும்.

இந்திய சரித்திரத்தில் எத்தனையோ மன்னர்கள், மாமன்னர்கள் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும், அசோகரின் பெயர்தானே நிலைத்து நிற்கிறது? காரணம், நாம் சிறுவயதில் படித்தோம்; மன்னர் அசோகர், மரங்கள் நட்டார் என்று.
அசோக மன்னன், மரம் நட்ட விஷயத்தை, 2,300 ஆண்டுகள் ஆகியும், இன்னும் நாம் மறக்காமல் படித்துக் கொண்டிருக்கிறோம். மரங்கள் நட்டால், ஜெயலலிதாவுக்கும், இப்படி ஒரு அழியாத இடம் வரலாற்றில் கிடைக்கும்.

மரங்களை வெட்டியதால் தான், ஐப்பசியில் பெய்ய வேண்டிய அடைமழை, கண்ட கண்ட பருவத்தில் பெய்கிறது. மரத்தைப் போல், நாம் கவனம் செலுத்த வேண்டிய இன்னொரு விஷயம், மாடு. மாடு என்றால் சீமை மாடு அல்ல; நாட்டு மாடு. இந்த நாட்டு மாட்டின், காலையில் நிலத்தில் படாத கோமியத்தை ஆவியாக்கி, அந்த ஆவியிலிருந்து வடியும் நீரை மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். அதன் பெயர் அர்க். 10 லிட்டர் கோமியம், 5 லிட்டராக வடிய வேண்டும்.

"இந்த அர்க்கை, 30 மில்லி எடுத்து, 100 மில்லி தண்ணீரில் கலந்து குடித்தால், புற்றுநோயே வராமல் தடுக்கலாம்' என, கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கோமியம் ஆவியான பிறகு, பானையில் தங்கும் அடி வண்டலின் பெயர் கண்வெட்டி. இதையும் மருதமரப் பட்டையையும் கலந்து உட்கொண்டால், இதயநோயைத் தவிர்க்கலாம்.
இதுபோல், அர்க் மூலம் பல நோய்களைத் தீர்க்க முடியும். எல்லாவற்றுக்கும் அடிப்படை, நாட்டு மாடுகளின் கோமியம். நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, நாட்டு மாடுகள்தான் விவŒõயப் பொருளாதாரத்தின் ஆதாரமாக இருந்திருக்கின்றன.

மாட்டையும், குரங்கையும், மாட்டின் சாணியையும் கும்பிடும் காட்டுமிராண்டித்தனம் என்று, இந்தியக் கலாசாரம் பற்றிக் குறிப்பிடுகிறார் கார்ல் மார்க்ஸ். ஆனால், நஞ்சில்லாத இயற்கை விவசாயத்துக்கு இன்றைய விஞ்ஞான உலகம் சிபாரிசு செய்வது, மேற்கண்ட கோமியத்தையும், சாணத்தையும்தான்.ரŒõயனப் பொருட்களால் உலகம் அழிந்து கொண்டிருப்பது பற்றி, மேற்குலக விஞ்ஞானிகள் கவலை கொண்டிருக்கும் நிலையில், இதற்கு ஒரே மாற்றாக இருப்பது, இந்தியப் பாரம்பரிய இயற்கை விவசாயமும், இயற்கை மருத்துவமும் தான்.

ஒரு விவசாயி, மாடுகளை வைத்தே தன் வாழ்க்கையை சீராக ஓட்ட முடியும். மாட்டிலிருந்து கிடைக்கும் ஒவ்வொரு பொருளும், நமக்கு நன்மை தருவதாக இருக்கிறது. இப்போது, கல் மாவிலிருந்தெல்லாம் விபூதி தயாரிக்கப்படுகிறது. ஆனால், பசுவின் சாணத்தில் தயாரிக்கப்படுவதே உண்மையான விபூதி என்பது நமக்குத் தெரியும்.
"பஞ்ச கவ்யம்' என்பது, ஒரு அருமையான இயற்கை உரக் கரைசல். பசுவின் சாணம், கோமியம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டது இது. ரசாயன உரங்களால் இன்று, உலகம் முழுவதும் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறி ஆகியிருக்கிறது.

நம் விவசாய நிபுணர்கள், இந்தப் பஞ்ச கவ்யத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், இதற்கு அரசாங்கம் ஆதரவு தந்தால், இதன் மூலம் நமது விவசாயம் மட்டுமல்ல, இதை ஏற்றுமதியும் செய்து, நாம் பொருளாதார ரீதியில் தன்னிறைவைப் பெறலாம்.
ஐரோப்பியர்கள், சென்ற நூற்றாண்டுகளில் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனங்கள் அதிகம்; ஆனால், அதே விஞ்ஞானம் மனித வாழ்வில் பேரழிவைக் கொண்டு வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், உலகத்துக்கு வழங்க நம்மிடம் எத்தனையோ இருக்கின்றன.
இந்தியப் பாரம்பரிய சிந்தனா முறை பற்றி, பல ஆய்வுகளைப் படித்துக் கொண்டிருந்த போது, அரவிந்தன் நீலகண்டன் என்ற பெயர், எனக்கு முக்கியமாகத் தெரிய வந்தது. அவர் எழுதியுள்ள, "பஞ்ச கவ்யம்' பற்றிய கட்டுரையை இவ்வாறாக முடிக்கிறார்:

ஆபிரகாமிய அகங்காரப் பண்பாட்டில் உருவான முதலாளித்துவத்துக்கும், மார்க்சியத்துக்கும் அப்பால், மூன்றாம் பாதை ஒன்று இங்கு இருக்கிறது. கிராமக் கோவில்களில் அம்மன் சிலைகளுக்கு முன்னால், மண்விளக்குகளில் ஆமணக்கு எண்ணெயில் ஏற்றப்படும் தீபமென, அமைதியாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் அந்த ஒளி, உலகமெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட பண்பாடுகளின் உள்ளொளி. ஐயாயிரம் ஆண்டுகள், அதை நாம் பாதுகாத்து வந்தோம். இனி அதை வளர்த்தெடுத்து உலகுக்கு அளிப்போம்.அதற்கு என்ன செய்யலாம் நாம்?

-  நன்றி , தினமலர்

Friday, August 12, 2011

நல்லோரைப் பற்றி பேசுதல் நன்று- பதிவர் சிவகுமார்

 அந்த காலத்தில் கிரேக்க  நாட்டில், ஒரு பிரமாண்டமான , அழகிய , காலகாலமாக பெயர் சொல்லும் கட்டடம் ஒன்று கட்ட முடிவெடுத்து கட்டினார்கள்.
மாபெரும் பொருட்செலவு... மனித உழைப்பு... பலரின் தியாகம்...

ஆனால் , காலம் காலமாக நின்று பெயர் சொல்ல போகிறதே... அதன் பொருட்டு, இந்த விலையை கொடுக்க தய்ராக இருந்தார்கள்..

அடுத்த நாள் திறப்பு விழா...

உழைத்த களைப்பு தீர , அனைவரும் உறங்கினர்...

ஃபிரெஷாக குளித்தி விட்டு, திறப்பு விழாவுக்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்து இருந்தது..
ஆம்.. அவர்களது கனவு மாளிகை தரை மட்டம் ஆக்கப்ப்ட்டு இருந்தது,,

நாடே சேர்ந்து கட்டிய கட்டடம்..எனவே இதற்கு ஆபத்து வரும் என யாரும் எண்ணிப்பார்க்கவில்லை... எனவே பாதுகாப்பு போடப்படவில்லை..
யார் இடித்தது? ஏன் இடித்தார்கள்?

துப்பறியும் நிபுணர்களுக்கு வேலை வைக்காமல் , குற்றவாளி சரண் அடைந்தான்..

“ நான் தான் இடித்தேன் .. எனக்கு மரண தண்டனை விதிப்பீர்கள் என தெரியும்..பரவாயில்லை... என் பெயர் சரிதிரத்தில் இடம் பெற்று விட்டது. அது போதும் “ என்றான்..

யார் யார் அந்த கட்ட்டம் கட்ட உழைத்தார்கள் என்பது மறந்து விடும்..இடித்தவன் பெயர் நின்று விடும் என்பது அவன் கணக்கு....

மனித மனம் என்றும் இப்படித்தான் செயல்படுகிறது/// நமக்கு கெட்டது செய்பவர்களை திட்டும் நான், நல்லது செய்பவர்களை பாராட்டுவதில்லை
( மேற்கண்ட சம்பவத்தில், குற்றவாளியின் பெயரை வேண்டும் என்றே மறைத்து இருக்கிறேன் )

ஒரு துரோகியை பற்றி சில நாட்களாக எழுதி வரும் நான், ஒரு நல்லவரைப்ப்ற்றி எழுதாமல் போய் விட்டேனே என்ற வேதனையில், இதை எழுதுகிறேன்..

பதிவர் மெட்ராஸ் பவன் சிவகுமார் நான் ரசிக்கும் பதிவர்களில் ஒருவர்,,
தரமான எழுத்து அவர் பாணி.

அவர் புத்தக காதலர் என சொல்ல முடியாது... அவரது முதல் காதல் உலக சினிமாதான்.. புத்தகங்களும் படித்தாலும், தன் அறிவுக்கு பசிக்கு புத்தகங்களை மட்டும் அவர் நம்பி இருப்பதில்லை...

ஆனால் , புத்தக கண்காட்சி நடந்தால் , அதைப்பற்றி உடனே பதிவிட்டு விடுவார்.... எனக்கு தனிப்பட்ட முறையில் போன் மூலம் தெரிவிப்பார்...

இது போல சமீபத்தில் , ஒரு புத்தக கண்காட்சி அவர் மூலம் கேள்விப்பட்டு சென்றேன்.. அவரைப்பார்த்து  நாளாகி விட்டதால், அவரையும் வர சொல்லி இருந்தேன்.

அவரும் குறிப்பிட நேரத்துக்கு வந்தார்..
அவருடன் உரையாடுவது தனி அனுபவம்... தரம் குறையாமல் , அதே நேரத்தில் உறுதியாக தன் கருதுக்களை சொல்வதிலும் , வாதம் புரிவதிலும் திறமைசாலி அவர்..

இருவரும் புத்தகங்கள் எடுக்க ஆரம்பித்தோம்.... அவர் பரபரப்பாக புத்தங்கள் செலக்ட் செய்வது பார்த்து ஆச்சரியமாக இருந்தது....

பிறகு தெரிந்தது... அவர் எடுத்த புத்தகங்கள் அவருக்கு அல்ல ( அவருக்கு தேவையானதை முன்பே வாங்கி விட்டார்) இப்போது வாங்குவது அவரது அன்னைக்கும், நண்பர்களுக்கும் பரிசளிக்க...

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...

அதன் பின் பில் போடும் இடத்தில், இன்னொரு சர்ப்ரைஸ்...

” நீங்கள் வாங்கிய அனைத்து புத்தகங்களும் என் பரிசாக வைத்து கொள்ளுங்கள் “ என சொல்லி விட்டு தானே பில் கொடுத்து விட்டார் அவர்...

ஒரு சகோதரன் போல அவர் காட்டிய அன்பு மகிழ வைத்தது என்றால், அதன் பின் அவர் இல்லம் சென்ற போது, அவர் அன்னை , என்னையும் ஒரு மகனாக நினைத்து அன்புடன் பேசியது நெகிழ வைத்து விட்டது...

விடை பெற மன்ம் இல்லாமல் , கிளம்பி வந்தேன்,,,

இது போன்ற நல்லவர்களை பற்றி பேசினால்தான், நல்லது பரவும்..மீண்டும் மீண்டும் சில துரோகிகளை பற்றி பேசினால், கசப்புதான் பரவும் என்பதால் இந்த பதிவு.

Wednesday, August 10, 2011

குற்றம் சாட்டினால் குடும்பத்தை பிரிப்பேன் - காலச்சுவடு பத்திரிக்கைக்கு “கவிஞர்” மிரட்டல்

முன் எப்போதும் இல்லாத இல்லாத அளவுக்கு தமிழ் இலக்கிய யுத்தம் கேவலமான நிலையை அடைந்து இருப்பது , இலக்கிய உலகை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

சில தினங்கள் முன்பு, அல்ட்டிமேட் ரைட்டர்  சாரு நிவேதிதா , ஒரு பதிப்பகம் மேல் சில குற்றச்சாடுக்கள் வைத்தார். அந்த குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் அளிக்காத அந்த பதிப்பக உரிமையாளர், சாருவுக்கு எதிராக பல சதி வேலைகளில் இறங்கி தன்னை களங்கப்படுதிக்கொண்டார். ஒரு சாமியாரின் அபாண்டமான குற்றச்சாடுக்கு பின் இருந்து செயல்பட்டவர் , இந்த பதிப்பக அதிபர்தான் என பேசப்பட்டது...

ஆனால் இதை சிலர் நம்பவில்லை.. இவ்வளவு கேவலமாக அவர் இறங்க மாட்டார் என சிலர் நினைத்தனர்..

இந்த நிலையில் , இலக்கிய இதழான காலச்சுவடு அந்த நபர் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தது...




  • கருணாநிதி கைதுசெய்யப்பட்ட முறை கண்டிக்கப்பட வேண்டியது என்ற எண்ணம் எனக்கு இருந்தாலும் அதற்கான சூழலை - போலீசின் சீரழிந்த பண்பாட்டை - உருவாக்கியதில் கருணாநிதி அரசுகளின் பங்களிப்பும் விமர்சிக்கப்பட வேண்டும் என்று கருதினேன். இதுபற்றிய என்னுடைய கட்டுரை ‘ஜனநாயக அராஜகம்’ ஜூலை 15, 2001 திண்ணை.காம் இதழில் வெளிவந்தது. காலச்சுவடில் ஏன் வெளிவரவில்லை? அப்போது ஆசிரியர் குழுவிலிருந்து, நடைமுறையில் பொறுப்பாசிரியராக இயங்கி வந்த ****னுக்குத் திமுக பற்றிய விமர்சனப் பார்வையை வெளியிடுவதில் விருப்பமிருக்கவில்லை. திமுகவை விமர்சிக்க இது உகந்த காலகட்டமல்ல என்பதே அவர் முன்வைத்த காரணம். எதை எப்போது யார் விமர்சிக்கலாம் எனப் பிறர் முடிவுசெய்வதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. இருப்பினும் எதையும் பிரசுரிக்கும்படி பொறுப்பாசிரியர்களை வலியுறுத்துவது என் பாணி அல்ல. அதிலும் என் எழுத்தாக இருந்தால் நிச்சயமாக வலியுறுத்துவது இல்லை. கனிமொழியின் கணவர் அரவிந்தனின் முதலீட்டில் சுஜாதாவின் படைப்புகளை வெளியிட ***ரன் ஒரு பதிப்பகம் தொடங்கும் திட்டத்துடன் இருந்தது எனக்கு அப்போது தெரியாது. பின்னர் அவரே அறிவித்த ‘நம்பமுடியாத காத’லில் அப்போது அவர் மூழ்கிக்கிடந்ததும் எனக்குத் தெரியாது. அதிலிருந்து தான் வெளியேறிவிட்டதாக அவர் அறிவித்தது உயர்வு நவிற்சியாக இருக்கக்கூடும்.
  • ஆலோசனைக் குழுவில் இருந்த காலகட்டத்தில் கனிமொழிக்கு ஒரு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது காலச்சுவடில் இருந்து விலகியிருந்த ****ன், ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெறும் நாட்களை அலுவலக ஊழியர்கள் வழி துப்புத் துலக்கி, கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரங்களில் கனிமொழிக்குக் குறுஞ்செய்திகள் அனுப்புவார். அவருடைய நடவடிக்கை தனக்குத் தெரியும் எனக் காட்டிக்கொள்வதே அவற்றின் நோக்கமாக இருக்கும். இது முதலில் நகைச்சுவைக்கு உரியதாக இருந்து பின்னர் கண்காணிப்பின் நெருக்கடியாக உருவெடுத்ததும் ஒருமுறை என்னிடம் கனிமொழி அலுவலகச் சூழல் பற்றிக் கடுமையாகப் புகார் கூறினார். அலுவலக நண்பர்களிடம் விஷயத்தை விளக்கி, சில செய்திகளைப் பரப்புரை செய்யலாகாது என்பதைப் புரியவைத்து இதற்கு ஒரு முடிவு கட்டினோம்

ஒரு இதழில் வேலை செய்த போது, அந்த இதழுக்கு உண்மையாக இல்லாமல் துரோகம் செய்தது, ஒருவரிடம் காசு வாங்கி கொண்டு, அவருக்கு சாதகமாக எழுதுவது, காட்டி கொடுப்பது போன்றவை குற்றச்சாட்டுக்கள்... 

இதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா?

  • ஓர் இலக்கிய பத்திரிக்கையில் என்னைப்பற்றிய செய்திகள் வந்துள்ளன... நான் நினைத்தால் அந்த கட்டுரை எழுதியவரிம் குடும்பத்தை பிரிக்க முடியும், அவர் மனைவி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பும்படி செய்ய வேண்டும்.. செய்யலாமா என யோசிக்கிறேன்

ஒரு குற்றச்சாட்டுக்கு , என்ன ஒரு பதில் பாருங்கள்..

இருவருக்கிடையே சண்டை என்றால் பெண்களை ஏன் இழுக்கிறீர்கள்... இலக்கியம் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விட்டதே என ஆதங்கப்ப்டுகிறார்கள் பொதுமக்கள் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா