Tuesday, December 25, 2018

குழந்தைகளை கனவு காண விடுங்கள் - சோவியத் எழுத்தாளர் பேட்டி

சோவியத் யூனியன் உலக இலக்கியத்துக்கு அளித்த பங்களிப்பு மகத்தானது... ஆனால் சோவியத் யூனியன் மறைவுக்குப் பின் அதன் இலக்கியவாதிகள் பலரை நம் சூழலில் பேசுவதில்லை.. இது வருந்தத்தக்கது...

உலக இலக்கிய சூழலில் இவர்களைப் பேசினாலும் தமிழிலும் பேச வேண்டியது அவசியம்..

எழுத்தாளர் வலண்ட்டின் கிரிகோரியேவிச் ரஸ்புடின் அந்த காலத்தில் வழங்கிய பேட்டி ஒன்று... பேட்டி எடுத்தவர். அலக்சாண்டர் அஃபனஸ்யேவ்

தமிழாக்கம் - பிச்சைக்காரன்

----------------------------------------------

ர்ஸ்புட்டீன் : குழந்தைகள் அவர்களுக்கு உரிய குழந்தைக்கதைகளால் சூழ்ந்திருக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.. அவர்களை ஆன்மாவை பாதுகாக்கவும் வளர்க்கவும் இந்த கதைகள் அவசியம். ”உலக அறிவு ” என்று உரிய வயதுக்கு முன்பே தேவையற்றதை மூளையில் திணித்து பிஞ்சில் பழுத்து வெம்பிப்போவது நல்லதன்று’

பேட்டியாளர் - உலக ஞானம் என்பதில் என்ன தவ்று கிரிகோரியேவிச். உலகத்தை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தையின் வாழ்க்கையும் அந்த குழ்ந்தை எடுக்கும் முடிவுகளும் சிறப்பாக இருக்கும் என்கிறார்களே

ர  -இப்படி நினைப்பதில் மிகப்பெரிய பிழை இருக்கிறது... இந்த சிந்தனையை நான் மறுக்கிறேன்.  உலகம் , அதன் கொடுமைகள் , தீமைகள் , நன்மை , மனித பிறவியின் நோக்கம் என அனைத்தும் குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என நினைத்து பெற்றோர்கள் சின்ன வயதில் இருந்தே குழந்தைகள் மூளையில் பாடங்களை திணிக்கிறார்கள்.. இவற்றால் பயனேதும் இல்லை.. இவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள ஒரு வாழ் நாள் முழுக்க தேவைப்படும். குழ்ந்தைப்பருவத்துக்குரிய கற்பனைகள் , கனவுகள் போன்றவற்றுக்கு இடமளிக்க வேண்டும்.. இன்றைய சூழலில் குழ்ந்தைக் கதைகளுக்கு இடமே கொடுப்பதில்லை


குழந்தைகள் கதைகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும் என்கிறீர்கள்.. நல்லதுதான்.. ஆனால் இப்படி வளரும் குழந்தைகள் உலகை எதிர்கொள்ள தேவையான மனப்பக்குவத்தை பெற்றிருக்குமா?


ர- உண்மையான குழந்தைக்கதை என்றால் அதில் எல்லாமே இருக்கும்..  புத்திகூர்மை , தாய்ப்பற்று , தேச பக்தி , நன்மை தீமைக்கான போராட்டம் , நன்மை வெல்வதன் அவசியம் என எல்லாமே இருக்கும். குழந்தைக்கதைகள் பொழுது போக்கி மகிழ்வூடுதல்ல... இவை கற்பிக்கின்றன... மரியா ரோடியோவ்னா என்று ஒரு கதை சொல்லும் பெண் கிடைத்திரா விட்டால் புஷ்கின் என்றொரு மாபெரும் கவிஞன் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்.

 நெறிகளை விழுமியங்களை சொல்லித்தர வேண்டாமா

நன்மை எது தீமை எது என அனைவருக்கும் தெரியும்.. சொல்லித்தர வேண்டிய இல்லை... எழுத்தாளன் என்பவன் சமூகத்தை கண்காணிக்கும் போலிஸ்காரன் அல்லன்


( சம காலப்பிரச்சனைகளில் கருத்து சொல்லாமல் எழுத்தாளன் விலகி இருக்க வேண்டுமா...     ஆன்மிக வெற்றியும் உலகியல் வெற்றியும் ஒன்றாக அடையக்கூடியதா... எதை இலக்க்கியம் முன் வைக்க வேண்டும்... அடுத்த பதிவில் பார்ப்போம்)

- தொடரும்


Sunday, December 23, 2018

ராயல்ட்டி யாருக்கு... வைரமுத்து காமெடி

இப்போதெல்லாம் அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் வருவதில்லை.. பிரியாணி கொடுத்தும் காசு கொடுத்தும்தான் கூட்டம் திரட்டுகின்றனர்.

இதற்கு மாறாக இப்போதெல்லாம் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது...

இது ஆரோக்கியமான போக்காகும்

இலக்கிய முன்னோடிகளை அறிமுகம் செய்யும் தமிழாற்றுப்படை எனும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கபிலர் குறித்து வைரமுத்து பேசினார்.

நல்ல கூட்டம்.. குடும்ப தலைவிகள் பலரும்கூட , தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர்... மகிழ்ச்சி..

வைரமுத்துவுக்கு பேசியவர்கள் சிறப்பான ஆழமான உரை வழங்கினர்..
(செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் முனைவர் தெ.ஞானசுந்தரம் தலைமை உரை. முனைவர் சாரதா நம்பி ஆரூரன் வாழ்த்துரை)

வைரமுத்து மிக உன்னிப்பாக இந்த உரைகளை கவனித்து தன் பேச்சில் மேற்கோள் காட்டினார்... இது நல்லதொரு பண்பாகும்.. பலர் மற்றவர் உரைகளை கவனிப்பதில்லை


இருவர் படத்தில் தான் எழுதிய நறுமுகையே பாடலில் வரும் அற்றைத்திங்கள் என்ற வரிக்கு ராயல்ட்டி கொடுப்பதென்றால் , கபிலருக்குதான் கொடுக்க வேண்டும் என யாரையோ மறைமுகமாக கேலி செய்து நகைச்சுவையாக பேசினார்


புலிக்கும் யானைக்கும் சண்டை வந்தால் புலிதான் வெல்லும் என்கிறார் வள்ளுவர்... புலி தற்காலிகமாக தோற்றிருக்கலாம்.. யானையின் சூழ்ச்சியால் தோல்வி.. ஆனால் புலிதான் வெல்லும் என்று வைரமுத்து பஞ்ச் ஆக பேசினார்... ஆனால் சூழ்ச்சியால் புலியை வீழ்த்திய யானையுடன் தற்போது கூட்டணி அமைத்துள்ள நிலையில் அந்த பஞ்ச் வசனம் சரியாக எடுபடவில்லை


அவரது பேச்சு முன்பு தினமணியில் வந்தது... பிறகு தமிழ் ஹிந்துவில் வந்தது... இந்த பேச்சு நக்கீரனில் வருகிறது..

இது வளர்ச்சியா வீழ்ச்சியா என தெரியவில்லை

ஆனால் ஒரு நல்ல தமிழ் விருந்து... எந்த பந்தியில் பரிமாறப்பட்டாலும் நல்லதுதான்..


 

Tuesday, December 11, 2018

இங்க் பேனாவும் இள மாணவனும்



இங்க் பேனாவின் இனிமை குறித்து எழுதி இருந்தேன் அல்லவா..,, அதை எழுதும்போது , இன்க் பேனாவெல்லாம் நம் தலைமுறையோடு முடிந்தது என நினைத்தேன்.

ஆனால் அந்த கட்டுரையைப் படித்த பள்ளி மாணவன் ஒருவன் , நல்ல பள்ளிகளில் எல்லாம் இங்க் பேனாவில்தான் எழுதச்சொல்லி பழக்குகிறார்கள் என்ற தகவலைச் சொன்னான்.. அதற்கு காரணம்  ஒரே பேனாவில் எழுதினால்தான் கை எழுத்து கன்சிஸ்டெண்ட் ஆக அழகாக இருக்கும்...

என் கை எழுத்து தலை எழுத்த்து போல இருப்பதற்கு காரணம் , அது போன்ற பள்ளிகளில் படிக்காததுதான்,,   நான் படித்த அரசுப்பள்ளியில் அது போல கண்டிஷன் போட்டால் பாதிபேர் வர மாட்டார்கள்.. அதனால் , தக்காளி , நீ எப்படியாவது எழுதித்தொலை என தண்ணி தெளித்து விட்டு விட்டனர்,, எழுத்தாணியால் எழுதினாலும் சரி... இங்க் பென் என்றாலும் சரி,, உன் பேனா,,உன் சுதந்திரம்

எது எப்படியோ..., நம்மை விட நம் அடுத்த தலைமுறை சிறப்பான நிலையில் இருப்பது எல்லா உயிர்க்கும் இனிது.. அம்மாணவன் சொன்னது மகிழ்ச்சி அளித்தது

இன்க் பேனாதான் நல்லது என நான் கஷ்டப்பட்டு தெரிந்து கொண்டதை அந்த பள்ளி சுலபமாக சொல்லிக்கொடுத்து விட்டது


இதே போல , ஒவ்வொரு துறையிலும் அனுபவத்தின் சாராம்சங்கள் சுலபமாக கிடைக்கின்றன.. நாம் அதை தெரிந்து கொள்ளாமல் கஷ்டப்பட்டு தெரிந்து கொள்கிறோம்


Sunday, December 9, 2018

படையப்பாவுக்கு பிறகு ரஜினி படங்கள் - ஓர் அலசல்


படையப்பா திரைப்படம் வெளி வந்து வரலாறு காணா வெற்றி பெற்றதும் ரஜினிக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டது... அடுத்து என்ன என்ற யோசனை... வெற்றியின் உச்சத்தை பார்த்தாயிற்று... அதற்கு மேல் என்ன செய்வது என்ற நியாயமான யோசனை... வெற்றி என்பது மட்டும் போதாது..  வேறு ஏதோ ஒன்று கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.. இதனால் 1999ல் வெளிவந்த படையப்பாவுக்கு பின் இரண்டு ஆண்டுகள் ரஜினி படம் ஏதும் வரவில்லை..

2000த்துக்கு பின்புதான் அவர் படங்கள் வரலாயின... அந்த படங்கள் படையப்பாவின் வெற்றியை மிஞ்சினவா..  ஓர் அலசல்

----

2002 - பாபா...

  சினிமா வரலாற்றில் அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. சினிமா பத்திரிக்கைகள் மட்டும் அல்ல.. அரசியல் , ஆன்மிகம் , கில்மா , குடும்பம் , விளையாட்டு என எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அதில் பாபா குறித்து ஏதேனும் செய்தி வந்து விடும்... 

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை...  ஆனால் பாபா என்ற மகான் குறித்து பரவலாக மக்கள் அறிந்தார்கள்... அப்போதையை எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லையே தவிர இன்றும் பார்க்கும்படி இருக்கிறது... வியாபார ரீதியாக பண இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்...  ஆனால் ரஜினிக்கு பெருமை சேர்க்கும் படம்


2005 - சந்திரமுகி

அவ்வளவுதான் ரஜினி என பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்தே அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகளின்போது சிலர் சொல்வதும் ரஜினி மீண்டு எழுவதும் வரலாறு...  என்னைப்பத்தி ஆயிரம் பேரு , என்னென்ன சொன்னாங்க.. இப்பென்ன செய்வாங்க.. என ரஜினிக்காக கண்ணதாசன் எழுதி இருப்பார்... அந்த வரலாற்று தருணங்களை பலர் படித்திருப்பார்கள்.. நேரில் அனுபவித்து இருக்க மாட்டார்கள்...

2005ல் வர்லாறு மீண்டும் படைக்கப்பட்டது... ரஜினி அவ்வளவுதான் என்று சொல்லப்பட்ட சூழலில் 2005ல் சந்திரமுகி வெளியானது.. அதே தினத்தன்று கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ்.. விஜயின் சச்சின்.. வெளியாகின.. அஜித்தின் வரலாறு ( காட் ஃபாதர் ) படமும் அதே தினத்தன்று திட்டமிடப்பட்டு பிறகு ஒத்தி வைக்கப்பட்டது

ஆக , ஒரு உச்சகட்ட மோதல் அன்று நிகழ்ந்தது....  ஆனந்த விகடன் விமர்சனத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் , சச்சின் ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்தான் சந்திரமுகிக்கு கொடுத்தனர்

ஆனால் மக்கள் சந்திரமுகி படத்துக்குதான் முதல் இடம் கொடுத்தனர்.. முதல் இடம் மட்டும் அல்ல...முதல் மூன்று இடங்களையுமே சந்திரமுகி பெற்றது.. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே முதலிடம் என நிரூபித்த சந்திரமுகி ரஜினிக்கு பெருமை சேர்த்த படம்

2007 , சிவாஜி

ஜெண்டில்மேன் , இந்தியன் ,  முதல்வன் உட்பட பல பட்ங்களை ரஜினியை மனதில் வைத்தே ஷ்ங்கர் எழுதினாலும் அந்த காம்பினேஷன் சில காரணங்களால் உருப்பெறவில்லை... சிவாஜி படத்தில் இந்த ஷங்கர- ரஜினி காம்பினேஷன் உருவானது சிவாஜி த பாஸ் என்ற விளம்பரமே அதிரடியாக இருந்தது...   ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்த வெற்றிப்படம் என்ற வகையில் இது ஒரு முக்கியமான படம்

2008  குசேலன்

ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படம் என்றாலும் ரஜினி படம் என்றே அறியப்பட்டது.. எனவே ரஜினி படமாகவும் இல்லாமல் , ரஜினி பொறுப்பேற்கும் குழப்பமான சூழல் உருவானது

ரஜினிக்கு பெருமை சேர்க்காத படம்.. தவிர்த்திருக்கலாம்

2010  எந்திரன்

ஒரு டிரண்ட் செட்டர்...    அதிரடி வெற்றியையும் மீறி ஒரு டிரண்ட் செட்டர் என்ற வகையில் பெருமை சேர்க்கும் படம்.. இதன் வெற்றி அடுத்த பாகத்துக்கும் வழி வகுத்தது.. 8 ஆண்டுகள் கழித்து அடுத்த பாகம் வந்தாலும் இந்த படத்தை நினைவு வைத்து ரசிகர்கள் இதன் ரெஃபர்னஸ் காட்சிகளை ரசித்ததே இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று

2014 கோச்சடையான்

இனி வெற்றி மட்டும் வேண்டாம்.. புதிதாக முயல்வோம் என நினைத்து அனிமேஷன் டெக்னாலஜியை முயன்ற படம் இது... அந்த முயற்சி சிறப்பாக அமையவில்லை... முயலை குறி வைத்து வெல்வதை விட யானையை குறி வைத்து குறி தவறுவது மேல் என்பதைபோல் நல்ல முயற்சி என்பதில் பெருமைப்படலாம்

2014    லிங்கா

அவசரமாக எடுக்கப்பட்ட படம்...  தவிர்த்திருக்க வேண்டிய படம்.. எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை...


2016 கபாலி

வழக்கமான மசலாக்களில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய பாணியில் எடுக்கப்பட அழகான படம்.. நல்ல வெற்றி... ஜானி , முள்ளும் மலரும் பட வரிசையில் வைக்கத்தக்க பெருமைப்படத்தக்க படம்

2017  காலா

தேவர் மகன் என்றெல்லாம் ஆதிக்க சாதி பெருமை பேசிய படங்கள் மத்தியில் முதன் முறையாக நம் மண் குறித்த நம் மக்கள் பெருமை பேசிய படம்.. அதுவும் சொந்தப்படம்...  என்றென்றும் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படம்

2018  2.0

வயதாகி விடட்து என்பது மட்டுமே இப்போதெல்லாம் ரஜினி மீது வைக்க்கப்படும் “ குற்றச்சாட்டு “ எல்லோருக்கும் வயதாகும்.. ஓய்வெடுப்பார்கள்..ஆனால் இந்த வயதிலும் இப்படி ஒரு ஹிட்.. அதுவும் உலக அளவில் ஒரு ஹிட்,,,, நம்ப முடியாத ஓர் அற்புதம்

மொத்ததில் நடிப்பு வாழ்வின் இந்த கால கட்டத்தில் தொடர்ந்து நல்ல படங்களையே ( இரண்டு மட்டும் விதிவிலக்குகள்)  வெற்றி படங்களையே தந்து வருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான் என்று தோன்றுகிறது 






Friday, December 7, 2018

கன்னட மொழிச் சித்தர் -பசவண்ணா


 நமது சித்தர்கள் , நாயன்மார்கள் பாடல்கள் போல கன்னட மொழியில் பாடல்கள் உண்டு.. கச்சேரிகளில் அவ்வப்போது கேட்டிருப்பீர்கள்

குறிப்பாக பசவண்ணாவின் பாடல்கள் வீரியமிக்கவை.. இவர் தீவிர சிவ பக்தர்..  முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்.. சாதி ,மத , பால் , மொழி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டவர்..

வெகு சுருக்கமாகவே இவர் பாடல்கள் இருக்கும்.. ஆனால் கருத்தாழம் மிக்கவை

சில சாம்பிள்கள்

----------------

 நலம் விசாரிப்பதால் உன்

பணம் பறந்து விடப்போகிறதா என்ன?

அன்பாக ஒருவனை அமரச்சொன்னால்

உன் இல்லம் இடியப்போகிறதா?

தகுந்த பதில் அளிப்பதான் உன்
தலை நொறுங்கப்போகிறதா?

யாருக்கும் எதையும் கொடுக்காவிட்டாலும்
அன்பாக இருப்பதில் என்ன கஷ்டம்?

அன்பற்ற நெஞ்சை இறைவன் ஏற்பது கஷ்டம்

-----------------------

பகட்டான ஆலய்ங்களை
பணக்காரன் கட்டக்கூடும்

ஏழை நான் என் செய்வேன்?

கால்களை தூண்களாக்கி

என் உடலையே கோயிலாக்குவேன்

என் தலை ஆகட்டும் தங்க கோபுரமாய்

என் இறைவா.. நீ அறிவாய்

மண்ணில் நிற்பது அழியும்

மண்ணில் நகர்வது நிலைக்கும்

------------------------------


வீடு ஒன்றைக் கண்டேன்

புழுதி படிந்திருந்தது

களைகளும் குப்பைகளும் சூழ்ந்திருந்தன

உரிமையாளரால் கைவிடப்பட்ட
உயிரற்ற வீடு போல என எண்ணிக்கொண்டேன்

மனிதர்கள் பலரை காண்கிறேன்

உடல் முழுக்க பொய்கள்

மனம் முழுக்க அசுத்தம்

கைவிடப்பட்ட உயிரற்ற உடல்கள் போலும்

-------------------


மண் இன்றி

குடம் இல்லை

பொன் இன்றி

நகை இல்லை

குரு இன்றி

உயர்வில்லை

____________________-


Thursday, December 6, 2018

பட்சிராஜனாக கமல் நடித்திருந்தால் - 2.0 சில If....


2.0 உலகளாவிய வெற்றியை பெற்று ஓடினாலும் தமிழ் ரசிகர்களுக்கு  கிடைத்துள்ள இந்த மாபெரும் விருந்து மறக்க முடியாது... திரையரங்களில் குழந்தைகள் முதியோர் இளைஞர் என அனைத்து தரப்பினரையும் பார்க்க முடிகிறது..

 அக்‌ஷய் குமாருக்கும் இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.. கமலுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டுகளை அவர் அள்ளிக்குவித்து வருகிறார்...


கமல் நடித்திருந்தால்...  இன்னும் வசனங்கள் அதிகமாக இருந்தால்.. இளையராஜா இசை அமைத்திருந்தால்..

பார்ப்போமோ

1 கமல் நடித்திருந்தால்,,,

கண்டிப்பாக தமிழ் நாட்டில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கும்... ரஜினிக்கும் கமலுக்கும் மிகப்பெரிய நடிப்பு போட்டி நடந்திருக்கும்.. ஆனால் படம் இந்த அளவு உலகளாவிய வெற்றியை பெற்றிருக்க முடியாது.. தமிழ் நடிகர்களின் படம் என ஒதுக்கி இருப்பார்கள்.. தமிழகத்தில் மட்டும் ஓடி இருக்கும்.. படத்தின் பட்ஜெட்டுக்கு அது போதாது...


2 இளையராஜா இசை அமைத்திருந்தால்...

பாடல்கள் சேர்க்கப்பட்டிருக்கும்.. என்னதான் அவர் பாடல் இனிமையாக இருந்தாலும் படத்தின் வேகம் மட்டுப்பட்டிருக்கும்


3 வசனங்கள் கூடுதலாக இருந்திருந்தால்...


சினிமா என்பது காட்சி ஊடகம் என்பது ஆணித்தரமாக இந்த படத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது...   ஆரம்ப காலங்களில் பாடல்களுக்காக படங்கள் ஓடின.. பிறகு வசனங்களுக்காக ஓடின.. இதை உடைத்து காட்சிகளுக்காக ஓடும் முதல் சினிமா என்ற வரலாறை 2.0 படைத்துள்ளது... வசனங்கள் கூடுதலாக இருந்திருந்தால் இந்த பெருமை கிடைத்திராது

அளவான வலுவான வசனங்கள் படத்தின் பலங்களில் ஒன்று

Sunday, December 2, 2018

மண்டூகங்கள் - மதியிலிகள் - சிட்டுக்குருவிகள் - செல்போன்கள்


 ஒரு புளிய மரத்தின் கதை நூலைப் படித்து விட்டு , புளிய மரத்தைப் பற்றி நூல் சரியாக விளக்கவில்லையே என கேட்கும் மக்கள் நிரம்பிய தேசம் இது

புளிய மரம் என எதை குறிப்பால் உணர்த்துகிறார் என நூலாசிரியர் விளக்கினால்தான் புரியும்.. 

நூல்களுக்கு விளக்கவுரை எழுதுவது போல இப்போது சினிமாவுக்கும் விளக்கவுரை தேவைப்படும் காலம் வந்து விட்டது...  ஒரு சராசரி ரசிகனுக்கு எந்த சிக்கல்களும் இல்லை.. உற்சாகமாக படத்தை ரசிக்கிறான்

ஆனால் சில இலக்கிய  பத்திரிக்கைகளுக்குத்தான் விளக்கம் தேவைப்படுகிறது

2.0 படத்தில் , பறவை ஆர்வலர் ஒருவர் இருக்கிறார்..செல்போன்களால் பறவை அழிகிறது என நினைத்து அதே செல்போன்களை ஆயுதமாக்கி பழி வாங்குகிறார் என்பது கதை..   செல்போன்களால் குருவி அழிகிறது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது இந்த ஆர்வலரின் எதிர் தரப்பின் கருத்து... இந்த இருவரும் மோதுகின்றனர் என்பதுதான் கதை

செல்போன்களால் குருவி அழிவதாக படம் சொல்கிறது என பலர் ஆய்வுக்கட்டுரை எழுகின்றனர்... உண்மையில் படம் அப்படி சொல்லவில்லை.. அதில் வரும் ஒரு கேரக்டர் சொல்கிறது.. அவ்வளவுதான்


 நுகர்வு வெறி தவறு என அந்த கேரக்டர் நினைக்கிறது..அதனால் ஏற்படும் விளைவுகள்தான் கதை

   ஒரு சாதாரண விஷ்யத்தை புரிந்து கொள்ள இவர்கள் எல்லாம் பத்திரிக்கை ஆசியர்களாக இருப்பது விந்தைதான்

  தினமலர் , இந்து போன்ற பல இதழ்கள் நடு நிலைமையாக அழகாக எழுதியுள்ளர்.. ஒரு சில இலக்கிய இதழாசிரியர்கள்தான் விபரமின்றி குப்பையாக எழுதுகின்றனர்






Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா