Monday, January 31, 2011

பரிணாம வளர்ச்சி என்பது தவறா? –இளைஞன் பார்வையில் இஸ்லாம்

எதையும்  கேள்வி கேட்பது பகுத்தறிவு..

நடை முறையில் பகுத்தறிவு என்பது அப்படி செயல்படுவதில்லை…

கடவுள் இல்லை என நம்புவது மட்டுமே  பகுத்தறிவு என்பதே தமிழ் நாட்டு பாணி.

கடவுள் மட்டும் இல்லை.. அரசியல், சினிமா மயக்கம், அறிவியல் என எல்லாவற்றையும் முன் முடிவு எதுவும் இல்லாமல் பார்ப்பதே உண்மையான பகுத்தறிவு..

அதாவது ஒரு விஷ்யத்தை தேடி கண்டு பிடிக்க வேண்டும்… ஒரு முடிவு எடுத்து விட்டு தேடுதல் கேலிக்குரியது..

அறிவியல் என சொல்வதை அப்படியே நம்பி கொண்டு இருந்தால், உலகம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது..

உலகம் தட்டை என்று சொன்ன அன்றைய “ அறிவியல் “ உண்மை பின்பு மாற்ற்ப்பட வில்லையா?

அறிவியல் என்பது தொடர்ந்து மாறி கொண்டு இருக்கும் ஒன்று..

உதாரணமாக பரிணாம கொள்கை என்பது ஒரு காலத்தில் அறிவியல் உண்மையாக இருந்தது.. இப்போது அதுவே கூட தவறாக இருக்க கூடும் என்ற கருத்து பரவ ஆரம்பித்துள்ளது…

 

உதாரணமா சர்வைவல் ஆஃப் ஃபிட்டஸ்ட் என்ற கொள்கையை பாருங்கள்.

தகுதியுடையதே எஞ்சும் என்பது ஓர் அறிவியல் விதி.

இதற்கு நிரூபணம் என்ன?

யானை போன்ற விலங்குகள் இன்னும் வாழ்கின்றன என்றால் அதற்கு காரணம் அவை தகுதியுடையவை என்றார்கள் ..

ஆனால் தகுதியுடைய, வலிமுடைய விலங்குகள் அழிந்து இருக்க கூடும் என்ற சாத்தியத்தை இப்போது உணர ஆரம்பித்து உள்ளார்கள்.

 

தகுதியுடையது வாழும்,,, வாழும் உயிரினங்கள் தகுதி இருப்பதாலேயே வாழ்கின்றன என்ற அபத்தமான லாஜிக்கை உணர ஆரம்பித்து இருப்பதால் , பரிணாம கொள்கையின் அடிப்படையே தகர ஆரம்பித்துள்ளது…

என்னை பொருத்தவரை கடவுள் இருக்கிறார் , இல்லை என்றோ இந்த கடவுள்தான் உண்மை அந்த கடவுள் பொய் என்றோ எந்த முன் முடிவும் இல்லாமல் ,  ஓர் ஆய்வு மாணவனை போல, ஒரு பார்வையாளனை போல அனைத்தையும் கவனிப்பது வழக்கம்..

இப்படி இருப்பதால், கடவுள் என ஒருவர் இருந்தால், கண்டிப்பாக அவர் என்னை ஏற்பார் , என் ஆர்வத்தை மதிப்பார் என்பது என் எண்ணம்..

அப்படி கடவுள் என யாரும் இல்லாவிட்டாலும் கூட வாழ்வில் பல விஷ்யங்களை தெரிந்து கொண்ட திருப்தி கிடைக்கும் ..

கடவுள் இல்லை என தீவிர நம்புவது ஒரு வித மன தடையே.. அதே போல ஆன்மீகம் சார்ந்த மூட நம்பிக்கைகள், சாமியார்களை நம்பி ஏமாறுதலும் மன தடைதான்..

இதெல்லாம் இல்லாமல் , வெறும் தேடலுடன் மட்டும் இருந்தால் எத்தனை எத்தனை விஷ்யங்கள் நம்மை சுற்றி கொட்டி கிடக்கின்றன.

 

கிறிஸ்தவ பள்ளியில் படித்ததால், சிறு வயதில் இருந்தே பைபிள் அறிமுகம் உண்டு..

வாழ்வின் அனுபவங்கள் சேரும் போது அது ஒவ்வொரு அர்த்தம் அளித்து வருவதால் அதை இன்னும் படித்து முடிக்கவில்லை..

அதே போல கீதையும் அவ்வப்போது படிப்பதுண்டு..

ஆனால் குர் ஆன் அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருந்து வந்தது…

சமீப கால கட்டத்தில் அதையும் படிக்க ஆரம்பித்து இருக்கிறேன்..

அடடா… இத்தனை காலம் படிக்காமல் விட்டு விட்டோமே..இதை பற்றி தெரிந்து கொள்ளாமல் போய் விட்டோமே என வருந்தினேன்..

சென்ற வாரம் நான் படித்த ஒரு வாசகம்…

அவன் நாடினால் உங்களை அகற்றி விட்டு உங்களுக்கு பதிலாக ஏதேனும் புதிய படைப்பை கொண்டு வந்து விடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு சிரமமல்ல- திருக்குர் ஆன் – 35:16

படித்ததும் திகைத்தேன்..

இது என்ன சொல்கிறது?

மனித இனம் அழிந்து அதற்கு பின் வேறொரு உயிர் தோன்றுமா என யோசித்தேன்..

யோசித்து பார்த்தால் பரிணாம வளர்ச்சி என்பதற்கெல்லாம் ஆதாரம் இல்லை…

ஏதோ ஒரு இயற்கை சக்தியால் , ஒரு அபூர்வ நிகழ்ச்சியால்தான் மனிதன் உண்டாகி இருக்க முடியும்..

அந்த இயற்கை சக்தியை அல்லா என்றோ அல்லது வேறு பெயரிலோ சொல்லலாம்.. ஆனால் ஓர் இயற்கை சக்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது…

இதை குறித்து நண்பர் அரபு தமிழனிடம் விளக்க்கம் கேட்டேன்..

அவர் பதில் அனுப்பினார்…

”மேற்கண்ட வசனம் இறை நம்பிக்கையாளர்களை விளித்துச் சொல்லப் பட்டது. நீங்கள் நான் கொடுத்த பொறுப்பைத் தட்டிக் கழித்தால், நான் (மனிதர்களில்) வேறொரு சமுதாயத்தைக் கொண்டு இப் பணியை வாங்கிக் கொள்வேன் என்ற அர்த்தத்தில் சொல்லப் பட்டது.
மனிதர்களுக்கு முன் இப் பூவுலகின் ஆட்சி ஜின்களுக்குக் கொடுக்கப் பட்டிருந்தன. அவைகள் செய்த அட்டூழியத்திற்குப் பிறகு மனிதன் அனுப்பப் பட்டு அவனிடம் ஆட்சி கொடுக்கப் பட்டுள்ளது. இந்த இரு இனத்திற்குப் பிறகு வேறு ஒரு புதிய கூட்டம் வரப் போவதில்லை.”

'தன்னால் கொண்டு வர முடியும்' என்று இறைவன் கூறினாலும் மனிதன்,ஜின் இந்த இரண்டைத் தவிர‌
சோதனைக்கு உட்படுத்தப்படும் வேறு புதிய யாரும் வரப்போவதில்லை என்பதுதான் எல்லோருடைய ஏகோபித்த கருத்து

இது அவர் அளித்த பதில்..

நான் மறைவானப் பொக்கிஷமாக (தனியாக) இருந்தேன்.

எனது அருமை பெருமைகள் அறியப்பட விரும்பினேன். எனவே என்னிலிருந்து ஒளியை எடுத்து அதிலிருந்து படைப்பினங்களைப் படைத்தேன். எனது படைப்புகளில் ஆகச் சிறந்த படைப்பு, மனிதன்”

புகை அற்ற நெருப்பின் ஜ்வாலையால் அவன் ஜின்னை படைத்தான் “

இது போன்ற கருத்துக்களை ஆழ்ந்து யோசித்து வைத்தன….

 

ஒரு விஷ்யத்தை இருக்கிறது , இல்லை என அவசரமாக பேசுவ்தை விட, தெரிந்து கொள்ள வேண்டும் என்று அணுகினால் எத்தனையோ கதவுகள் நமக்காக திறக்க காத்து இருகின்றன..

அறிவியலை குறிப்பிட்ட அளவுக்கு மேல் படிக்க்க ஆரம்பித்தால் , தத்துவ நூல் போல தோன்றும்//

அதே போல மத நூல்கள் , குறிபிட்ட அளவுக்கு மேல் அறிவியல் போல தோன்றும்…

 

நான் குறிப்பிட்ட ஒரு வரி என்னை ஒரு வாரம் யோசிக்க வைத்தது.. படிக்க வைத்தது…

படிக்க படிக்க , இன்னும் படிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது..

கடந்த தலைமுறை செய்த தவறை நாமும் செய்ய கூடாது…

உண்மையான பகுதறிவு என்பது அனைத்தையும் அறிவதே.. எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது பகுத்தறிவு அல்ல..

Thursday, January 27, 2011

உலகின் கடைசி மனிதன் - End of World


அவன் நாடினால் உங்களை அகற்றி விட்டு உங்களுக்கு பதிலாக ஏதேனும் புதிய படைப்பை கொண்டு வந்து விடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு சிரமமல்ல- திருக்குர் ஆன் – 35:16
*********************************************************
சார்..ப்ளீஸ் ஏதாவது செய்யுங்க…  புற ஊதா கதிர் வீச்சின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.. உலகில் மிச்சமிருக்கும் நாமும் அழிந்து விடுவோமோ என பயமாக இருக்கிறது “
அச்சதுடன் பேசிய அமைச்சர் சிங்கை  மனதிற்குள் சிரித்தவாறே பார்த்தார் விஞ்ஞானி விஜயன்.
இயற்கையை சீர் குலைப்பதில் முக்கிய பங்காற்றிய அமைச்சர், கறுப்பு பணத்தை வங்கிகளில் முடக்கிய தலைவர்கள் எல்லாம் இப்போது அதன் விளைவை அனுபவிக்கிறார்கள்.. இப்படி ஒரு நிலை வரும் எனபதை அவர்களே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

Wednesday, January 26, 2011

சாமியாரின் ரகசிய ஆராய்ச்சி – the unknown island



ந்த சாமியார் ஆசிரமத்துக்குள் நுழைந்தது வேறு ஏதோ ஒரு நாட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது . வேறு நாடு என சொல்வதை விட வேறு உலகம் என்றே சொல்லலாம். எங்கும் எதிலும் ஒரு கட்டுப்பாடு, ஒழுங்கு. தீவில் இருக்கும் அந்த ஆஸ்ரமத்துக்கு சிறிய கப்பல் மூலம்தான் ( மின் சக்தி மூலம் இயங்க கூடியது) வர முடியும்.. என்னை மட்டும் ஹெலிகாப்டரில் வர அனுமதித்து இருந்தார்கள்.
ஏனென்றால் நான் பக்தி காரணமாகவோ, அரசியல் காரணமாகவோ , பேட்டிக்காகவோ இங்கு வரவில்லை. சாமியாரின் விசேஷ அழைப்பின் பேரில் வந்து இருக்கிறேன்.
ஒரு சாஃப்ட்வேர் நிபுணனான என்னிடம் சாமியாருக்கு என்ன வேலை இருக்க வேண்டும்?
எனக்கு புரியவில்லை.. ஆனால் அந்த இடத்தை பார்க்க வேண்டும் என ரொம்ப நாளாக ஆசை.. நிறைய கேள்வி பட்டு இருக்கிறேன்.
சாமியாரின் மந்திர ஆற்றல், ஆசி பெற்றதும் அமைச்சர் பதவி கிடைத்த அதிசயம், மூன்று மாதத்தில் ஆன்மீக விழிப்புணர்வு தரும் பயிற்சி போன்ற விஷயங்கள் ஒரு புறம்- பவுர்ணமி அன்று நடக்கும் நிர்வாண பூஜை,  ஆன்மீக நடனங்கள் போன்ற விஷ்யங்கள் ஒரு புறம் என என் புனைவும் அபுனைவும் கலந்து என் ஆர்வத்தை கிளறி விட்டு இருந்தன.
எல்லாவற்றுகும் மேல் எனக்கு அழைப்பு விடுத்த ஆஷ்ரம பெண்ணின் குரல் எனக்கு போதை ஏற்றி இருந்தது..

Saturday, January 22, 2011

சாரு நிவேதிதா எந்த இயக்கத்தை சேர்ந்தவர் ? -- Mrinzo நிர்மல்






மனிதனின் வேதனையை , வலியை சாருபோல எழுதியவர்கள் யாரும் இல்லை..
எனவேதான் ஆரம்பகாலத்தில் அவர் இடது சாரி சிந்தனையாளர் என நினைத்தேன்…
பிறகுதான் அவர் எந்த வட்டத்திலும் சிக்காத சுதந்திர எழுத்தாளர் என புரிந்தது…
இந்துத்துவாவை எதிர்ப்பார்..திடீரென ஆன்மிகம் எழுதுவார்…
பெரியாரை போற்றுவார்..

Thursday, January 20, 2011

பத்தாவது உலகம் – THE TEN’TH WORLD

 

தாமஸ் ஆல்வா எடிசன் தனக்கு புது புது ஐடியாக்கள் தோன்றியது எப்படி என தனக்கே புரியவில்லை என பேட்டியில் குறிப்பிட்டார்.. ஏதோ ஒரு வேற்று கிரகத்தில் இருந்து யோசனைகளை யாராவது அனுப்புகிறார்களோ என அடிகடி நினைப்பதாக குறிப்பிட்டார்…

தையல் மெஷினுக்கு தகுந்த ஊசி அமைப்பது குறித்து எந்த ஐடியாவும் இன்றி குழம்பினேன்… ஒரு நாள் தூக்கத்தில் ஒரு கனவு..சிலர் என்னை கொல்ல வருகிறார்கள்.. அவர்கள் கயில் வேல்… அந்த வேலின் நடிவில் ஓர் ஓட்டை.. தையல் ஊசி பிறந்தது இந்த கனவு மூலம்தான்

எனக்கு அவள் மேல் எந்த கோபமும் இல்லை.. ஏன் அவளை கொன்றேன்.. ஏன் அப்படி நடந்து கொண்டேன்… எனக்கே புரியவில்லை…

எடிசன் மரண தருவாயில், யாரோ ஒருவருடன் பேசுவது போல இருந்தது… அங்கு யாரும் தென்படவில்லை ..

 

*******************************************************************************************************

ன்னும் கொஞ்ச நேரத்துல பத்தாம் உலகம் கிரகத்தில் கால் வைத்து விடுவோம் ..என்ன நடக்க போகுதா ?” திகிலடைத்த குரலில் சொன்னார் ஆராய்ச்சியாளர் ராஜா..

”ஒண்ணும் கவலைப்படாதீங்க… தற்காப்பு ஆயுதங்கள் நம் கிட்ட இருக்கு.. தவிர, சிக்னல் கொடுத்தா உடனே வந்து காப்பாற்ற சக விஞ்ஞானிகள் பக்கத்துலயே , விண் ஊர்த்தியில சுத்திகிட்டு இருக்காங்க… “ என்றான் ஆய்வு மாணவன் குமார்..

அவனுக்கு விண்வெளி பயணம் பற்றிய அனுபவம் இருப்பதால் பயமின்றி இருந்தான்.. ராஜாவை பொறுத்த வரை அவர் விஞ்ஞானி என்ற போதிலும் விண்வெளி துறைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை… இருந்தாலும் அவரை அழைத்து வந்து இருந்தார்கள்.. அவர் தம்பி ஒருவன் சென்ற பயணத்தில் காணாமல் போனவர்களில் ஒருவன்.. எனவே ராஜாவும் இதற்கு ஒப்பு கொண்டார்..

சூரியனை சார்ந்து ஒன்பது கிரகங்கள்தான் இருக்கின்றன என வெகுகாலமாக நினைக்கப்பட்ட நிலையில், பத்தாவது கிரகம் கண்டு பிடிக்கப்பட்டபோது உலகெங்கும் அதிர்ச்சியும் ஆவலும் ஏற்பட்டன..

புதிய உலகம் கண்டு பிடிப்பு “

“ மனிதர்கள் உள்ளனரா? உயிர்கள் இருக்கின்றனவா ?”

“ இத்தனை காலம் மறைந்து இருந்தது எப்படி ‘?

“ ஆய்வு செய்ய செல்வது ஆபத்தா ? ”

என்றெல்லாம் செய்தி தாள்களும் , தொலைகாட்சி சானல்களும் செய்திகள் வெளியிட்டு தள்ளின..

இவ்வளவுக்கும் மத்தியில் ஆய்வுக்காக கிளம்பிய ராக்கெட்டும் அதில் கிளம்பியவர்களும் திரும்பி வரவில்லை..

எந்த தகவலும் கிடைக்க வில்லை..

ராக்கெட் காணவில்லை… விஞ்ஞானிகள் கதி என்ன ?”

“ இந்த பயணத்தை அனுமத்தித்தது சரியா? “

“ இந்தியா இதை செய்திருக்க கூடாது… வளர்ந்த நாடுகள்தான் செய்ய முடியும் “

கண்டனங்களும் விமர்சனங்களும் குவிந்தன..

 

இவ்வளவு நடந்த பின், ஆய்வை கை விடுவது மானப்பிரச்சினை…

பலத்த பாதுகாப்புடன் அடுத்த பயணத்துக்கு ஆயத்தமானது இந்திய விண்வெளி கழகம்…

சென்ற முறை போல் அல்லாது, விண்வெளி ஆய்வாளர்கள் மட்டுமன்றி பல்துறை ஆய்வாளர்களையும் அனுப்ப முடிவு செய்தது…

பன்னிருவர் அடங்கிய குழு புறப்பட்டது..

அதி ஒருவர்தாம் இயற்பியல் விஞ்ஞானி ராஜா..

பத்தாம் உலகத்தை நெருங்கியதும் , அந்த குழு ஒரு முடிவெடுத்தது..

- அனைவரும் போய் ஆபத்தில் சிக்கினால் , தகவல் கிடைக்காமல் போய் விடும்… இருவர் மட்டும் முதலில் செல்லட்டும்.. அவர்கள் தரும் தகவல் அடிப்படையில் மற்றவர்கள் செல்லலாம்..

 

விண்வெளி ஆய்வாளர்கள் ஜேம்சும், குமாரும் கிளம்ப ஆயத்தமானார்கள்..

ஆனால் ஒரு சிக்கல்..

இவர்கள் சென்று அனுப்பும் தகவல் அடிப்படையில் செயல்பட போதிய அனுபவம் தேவை..ஜேம்சுக்குதான் இந்த அனுபவம் உண்டு.. அவரே  போனால் எப்படி?

கடைசியில் பல யோசனைகளுக்கு பிறகு ராஜாவும் , குமாரும் பத்தாம் உலகத்தில் இறங்குவது என்றும், மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட பாதையில் சுற்றி கொண்டு இருப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது..

 

ன்னொரு கிரகத்தில் கால் வைத்து விட்டோம் “ ராஜாவுக்கு சிலிர்ப்பாக இருந்தது…

கதைகளில் மட்டுமே படித்து இருப்பது நடந்து விட்டதே…

தொலைவில் குயில் கூவும் சப்தம் கேட்டத்து..

ஏங்கோ ஓர் இடத்தில் தேவன் கோயில் மணியோசையும், ஆலய மணியோசையும், தொழுகைக்கான அழைப்பு ஓசையும் கேட்டன..

இருவருக்கும் ஆச்சர்ய்மாக இருந்தது…

திடீரென ஆச்சர்யம் விலகி அதிர்ச்சி ஏற்பட்டத்து…

எங்கோ ஒரு கிரகத்தில் எப்படி இது போல நடக்க முடியும்? ஒரு வேளை இதெல்லாம் நம் கற்பனையா?

- இன்னும் உள்ளே சென்று பார்க்கலாம்..

இருவரும் நடந்தனர்…

கீழே ஏதோ பேப்பர் பறந்து வந்த்தது..

எடுத்து பார்த்தான் குமார்..

தமிழ் எழுத்துக்கள் !!!!

நம்பவே முடியவில்லை…

படித்தான்…

முதல் நாளில், கூட்டமே இல்லாததை வைத்து கமல் படம் பிளாப் என சொல்ல முடியாது…  அவரது நடிப்பு திறமை எக்ஸ் எனவும் , உழைப்பு ஒய் என்றும் , கூட்டாம் இசட் எனவும் வைத்து கொள்ளுங்கள்.

வெற்றி = எக்ஸ் பிளஸ் ஒய் மைன்ஸ் இசட்

இந்த அடிப்படையில் படம் மாபெரும் வெற்றிதான்..

இந்த ஃபார்முலாவை வைத்து பார்த்தால், ரஜினி படத்துக்கு கூட்டம் அதிகம்,,, இசட் மதிப்பு அதிகம் என்பதால் அது மைன்ஸ் ஆகி விடும்.. எனவே அது தோல்வி என கருதப்பட வேண்டும்..”

 

- என்ன இது… 

குமாரின் முகத்தை பார்த்தார் ராஜா..

திடீரென அவருக்கு உண்மை புரிந்தது..

“ அட பாவிகளா.. எங்கெல்லாமோ சுத்தி விட்டு, பூமியிலேயே இறங்கி விட்டோம் போல.. இது பூமிதான்.. பத்தாம் உலகம் அல்ல “

கத்தினார் ..

- சார்.. சார்… அப்படி நடக்க வாய்ப்பில்லை… பூமிக்கும் நமக்குமான தூரத்தை செக் செய்த படியேதான் இருக்கிறோம்.. இப்போது பூமியை விட்டு பல கோடி மைல் தள்ளி இருக்கிறொம்… வாருங்கள் ..இன்னும் பார்க்கலாம்..

இருவரும் சென்றனர்,,,

 

ஊர் போல தோன்றியது..

வீடுகள் அழகாக, வரிசாக இருந்தன…

அதிகாலை நேரம்… வீடுகள் பூட்டப்பட்டு இருந்தன….

தெரு சுத்தமாக இருந்தது…

- சார்… பூமி போலவே மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது உறுதிடாகி விட்டது.. பாருங்கள்

- அப்படி இருந்தாலும், அங்கு நடந்த வளர்ச்சி போலவே இங்கும் எப்படி நடந்தது? ஆச்சர்யம்…

 

புரிந்தும் புரியாமலும் நடந்தனர்,,,

தமிழ்னாட்டில் நடப்பது போலவே இருந்தது…

- சரி.. யாரிடமாவது பேசி பார்க்கலாம்

ஒரு வீட்டின் கதவை தட்டினர்..

டொக் டொக் டொக்..

- யாரது……………….

ஒரு பெண் கதவை திறந்தாள்….

நம் ஊர் பெண் போலவே இருந்தாள்,,,

- என்ன வேணும்…

- மேடம்.. வந்து… இது என்ன உலகம்? இந்த உலகத்தின் பெயர் என்ன ?

அவள் எரிச்சலுடன் பார்த்தாள்…

- ஏதாவ்து கேம் ஷோவா? என்ன கேள்வி இது ?

கதவை அடித்து சாத்தினாள்…

- ஒண்ணும் புரியல. சிக்னல் கொடுத்து நம்ம ஆட்களை வர சொல்லலாமா?

ராஜா யோசித்தார்,,,

- வேண்டாம்.. இன்னொரு வீட்டில் பார்க்கலாம்..

இருவரும் நடக்க தொடங்கினர்..

நான் போக்கிரிக்கு போக்கிரிராஜா..

ஒரு வீட்டில் இருந்து பாடல கசிந்து கொண்டு இருந்தது..

- நான் என்ன நினைக்கிறேன் என்றால், உலகின் போக்கு பிடிக்காத சிலர் இங்கு ரகசியமாக வந்து செட்டில் ஆகி இருக்கிறார்கள்.. சில நூறு ஆண்டுகள் முன்பு இப்படி வந்து இருக்க வேண்டும்.. அப்படியே ஒரு நாகரிகம் வளர்ந்து வருகிறது … ஆக நாம் பார்ப்பது மனிதர்கள்தான்..

ராஜா சொன்னதை மறுத்தான் குமார்..

- இல்லை… இயற்கை ஒரு பேக்கப் போல பூமியை போன்ற , மனிதர்களை போன்ற ஒன்றை உருவாக்கி இருக்கிறது… பூமி அழிந்தாலும் , இந்த பூமி தொடரும் என்பது அதன் எண்ணமாக இருக்கலாம்…

அடுத்த வீட்டு கதவை தட்டினார்கள்..

பிறகு காலிங் பெல்லை கவனித்து அதை அழுத்தினார்கள்…

கதவு திற்க்கப்பட்டது…

அங்கே..

….

….

முதல் பயணத்தில் காணாமல் போன விஞ்ஞானிகள் அமர்ந்த்து பேசி கொண்டு இருந்தனர்…

கதவை திறந்தது மகேஷ்.. ராஜாவின் தம்பி…

“ மகேஷ் !!! “ அவனை கட்டி பிடித்து கொண்டார் ராஜா,,

-வாங்க…

இருவரையும் வரவேற்று அமர வைத்தனர் அவர்கள்…

- இங்கு இருப்பவர்கள் அனைவரும் மனிதர்கள்தான்… பூமியில் இருக்கும் சிறந்தவர்களை வைத்து இது உருவாகி வருகிறது..

இளம் வயதில் இறந்து விட்டதாக நீங்கள் நினைக்கும் கவிஞர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் , போராளிகள்  எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்…

எங்களை போன்ற ”காணாமல் போனவர்களும் “ இங்குதான் இருக்கிறார்கள்…

- பாரதியார் இங்குதான் இருக்கிறாரா? ஆவலுடன் கேட்டான் குமார்..

அவர் மட்டுமல்ல… இன்னும் பலரும் இங்கு வந்து கவிதைகள் படைத்து இருக்கிறார்கள்… கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இருக்கிறார்கள்… சரி… நீ போய் ரெஸ்ட் எடு… பிறகு பேசலாம்..

குமாரை அனுப்பினான் மகேஷ்…

மகெஷும் ராஜாவும் மட்டும் இருந்தனர்..

“ அண்ணே.. இனி நான் அங்கு வர முடியாது… சில கண்டு பிடிப்புகளை மட்டும் உனக்கு சொல்றேன்.. பயன் படும்…

யுரேனியம் மூலம்தான் அணு சக்தி கிடைக்கும் என்பதல்ல.. வேறு வழியும் இருக்கிரது..”

விளக்க ஆரம்பித்தான்…

வியப்புடன் கேட்டார் ராஜா..

- இனி அணு குண்டு செய்வது பொம்மை செய்வது போல ஆகி விடுமே .. நினைத்து கொண்டார்..

-இன்னொரு ஆய்வு..  இந்த முறையை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை விட வலுவான, ஆனால் லேசான  பொருளை தயாரிக்கலாம்.. ஒரு மரத்தை வெட்டினால் ஒரு டன் சூப்பர் பிளாஸ்டிக் தயாரிக்கலாம்.. இதை அழிக்கவே முடியாது..

- அட வியந்து போனார் அவர்…

அவன் கொடுத்த ஆய்வு தாள்களை படிக்க ஆரம்பித்தார்…

அங்கே நுழைந்த இன்னொரு ஆய்வாளரையோ, அவரை நோக்கி மகேஷ் வெற்றி என கட்டை விரல் உயர்த்துவதையோ கவனிக்கவில்லை…

இரவு சாப்பிட்டிவிட்டு, இருவரும் ஒரே அறையில் படுத்தனர்.

ராஜாவுக்கு தூக்கம் வரவில்லை..

திடீரென ஓர் எண்ணம்..

முதுகு தண்டு சில்லிட்ட்டது..

ஒரு வேளை அனைத்துமே நாடகமோ….

இப்படி ஏமாற்றி தூங்கவைத்து கொன்று விடுவார்களோ…

பக்கத்தில் பார்த்தார்..

மகேஷ் ஆழந்து தூங்கி கொண்டு இருந்தான்..

- இதுதான் சந்தர்ப்பம்.. ஓடி விடலாம்..

மெல்ல நகர்ந்தார்,,,,

- எங்கே போகிறீர்கள்

மகேஷ்….

- இல்லை.. பிஸ் அடிக்கணும்

- ஹா.. ஹா… இப்பத்தானே போய் வந்தீர்கள்..அதற்குள் திரும்ப ஏன்?

அவன் குரலில் இருந்த அழுத்தம் நடுங்க வைத்தது…

அப்படியே மயங்கி விழுந்தார்..

 

கேஷ் முகம் மெல்ல , மெழுகு உருகுவது போல மாறி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனது…

வீடுகள், தெருக்கள், மரங்கள், ஆய்வாளர்கள் எல்லாம் மறைந்தன்..

வெளி மட்டுமே இருந்தது….

கண் விழித்தபோது, குமாரும் அருகில் இருந்தான்…

கண்ணுக்கெட்டிய வரை யாரும் இல்லை…

பாலைவனம் போல இருந்தது….

- எல்லாம் கனவா… சிரித்து கொண்டார்..

குமாரும் கண்விழித்தான்..

அவனுக்கு எதுவும் நினைவில்லை…

- ஓக்கே சார்…. இங்கு மனிதனோ வேறு உயிரிகளோ இருக்க வாய்ப்பில்லை .. இங்கு ஆய்வு செய்யவும் எதுவும் இல்லை.. ரிப்பொர்ட் க்ளோஸ் செஞ்சு்டலாம்.. போன முறை வந்தவர்கள் விபத்தில் சிக்கி இருக்க கூடும்….”

*************************************************

- நான் கண்டுபிடித்துள்ள இந்த முறையை பயன்படுத்தி ஒவ்வொரு கிராமத்திலும் சின்னஞ்சிறிய அணு மின் நிலையம்  தயாரிக்கலாம்… கிராமங்கள் தன்னிறைவு பெறும் .

ராஜா உரை ஆற்றி முடிந்ததும் நிருபர்கள் சூழ்ந்து கொண்டனர்..

“ இந்த ஐடியா எப்படி சார் தோன்றியது ?”

“ எல்லாம் ஆழ் மனதின் ஆற்றல்.. ஒரு விஷயத்தை ஆழ்ந்து யோசித்தால் கனவுகள் மூலம் தீர்வு கிடைக்கும்.. எனக்கு கனவில்தான் இந்த ஐடியா கிடைத்தது… சுப்பர் பிளாஸ்டிக்கும் இப்படித்தான் கண்டு பிடித்தேன் “

சுற்றுச்சூழல் சிந்தனையாளர்களின் எதிர்ப்பு புறக்கணிக்கப்பட்டு , டைனி நியூக்லியர் பிளாண்ட், சூப்பர் பிளாஸ்டிக் திட்டங்கள் செயல்படுத்த பட்டன..

ராஜா நோபல் பரிசு பெற்றார்..

இந்த இரண்டும்தான் உலகையே அழிக்க போகின்றன என்பதையோ அதன் பின் பத்தாம் உலக வாசிகள் ஆதிக்கத்துக்குள் பூமி வந்து விடும் என்பதையோ அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை…

 

- ங்கு உயிர் இல்லை என அவசரப்பட்டு முடிவு செய்து விட்டோமோ… உயிர் என்றால் நம்மை போலவே இருக்கும் என எப்படி நினைத்தோம்? உடலே இல்லாமல் வாழும் சாத்திய கூறுகள் கூட இருக்கலாமே… ஒரு நாள் முழுக்க அங்கு இருந்திருக்றோம்.. களைப்பே இல்லையே.. சாப்பிட்டது போலவும்,  செஸ் விளையாடியது போலவும் தோன்றியதே?

குமார் மட்டும் குழம்பிக்கொண்டு இருந்தான்..

Tuesday, January 18, 2011

கேபிள் எழுதிய “சினிமா வியாபாரம்” புத்தகம்- சிறப்பானதா.. சிக்கலானதா?

ஆங்கிலத்தில் சில வியாபார, மேனேஜ்மெண்ட் , மார்கெட்டிங் சம்பந்தமான புத்தகங்கள் படிக்கும் போது இது போல தமிழில் இல்லையே என்ற ஏக்கம் உண்டாகும்...

ஒரு கார் நிறுவன மேலாண்மை இயக்குனர் தன் கஷ்ட நஷ்டங்களை சொல்லும்போது , கார் துறையில் இல்லாதவர்களுக்கும் கூட அது பயன்படும்... அடிப்படை தொழில் நுணுக்கங்கள், செயல்பாடுகள், முடிவெடுக்கும் கலை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்..

Monday, January 17, 2011

செக்ஸை தீர்மானிப்பது எது??


 நண்பர் நிர்மல் தனக்கே உரிய பாணியில் வழங்கும் இந்த அறிவியல் கட்டுரையை படித்து பாருங்கள்..

___________________________________________________________________

ஒய் குரோமோசோம்- மனித இடப்பெயர்ச்சி வரலாற்றின் கதா நாயகன் - -Mrinzo Nirmal

மனிதர்களின் chromosome எண்ணிக்கை 23 ஜோடி என்று தெரியும், இந்த 23 ஜோடிகளில் ஒரு ஜோடிதான் நமது செக்ஸ்   அதாவது நாம் ஆண் / பெண் என்று தீர்மானிக்கிறது என்பதும் தெரியும்.

 மேலும் ஆண்களின் செக்ஸ் chromosome ஜோடி XY என்றும் பெண்களின் ஜோடி XX என்று குறிபிடுவார்கள். இந்த ஆண்களின் செக்ஸ் chromosome ஜோடியிலுள்ள Y என்ற chromosome ஒரு சிறப்பு தன்மை உள்ளது என்கிறார்கள். 
எப்படியென்றால் எனது Y chromosome  நான் எனது அப்பாவிடமிருந்து பெற்றேன்.
அவர் அவரது அப்பாவிடமிருந்து என     தலைமுறை தலைமுறையாக மாறாமல் அந்த Y-Chromosome வந்துகொண்டிருகிறதாம். சுருக்கமாக சொல்லப்போனால் நான், எனது சகோதரன், எனது அப்பா , தாதா அவரது அப்பா,  பெரியப்பா, சித்தப்பா அவரது ஆண் மக்கள் எல்லோருக்கும் ஒரே Y-Chromosome தான் இருக்கும், ஏன் வாசித்துகொண்டிருக்கும் உங்களுக்கும் எனக்கும் கூட ஒரே Y -Chrmosome இருக்கலாம். இப்படி ஒரே மாதிரியான Y-Chromosme உள்ளவர்கள் தற்போதோ அல்லது சில / பல தலைமுறைகளுக்கு முன்பு ஒரு ஆணிடமிருந்து பெற்றிருப்பார்கள். இப்படி தலைமுறை தலைமுறையாய் வந்துகொண்டிருக்கும் இந்த Y-Chromosome  சில சமையத்தில் சிறு மாறுதல் உண்டாகுமாம் இந்த மாறுதல் சில நூறாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கலாம் இந்த மாறுதலை Mutation என்று குறிப்பிடுகிறார்கள், இந்த மாறுதல் ஒருமுறை நடந்தால் நமது Y-Chromosome அந்த மாற்றங்களோடுதான் தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கும்.
 
      இந்த மாற்றங்களோடு வந்துகொண்டிருக்கும் Y-Chromosome தான் நமது ஹீரோ, எழுதபடாத மனித இடப்பெயர்ச்சி  வரலாற்றின் கதாநாயகன், இந்த y-Chromosome மாற்றத்தை ஆராய்வதுமுலம் நமது பூர்விகம் எது நமக்கும் உலகில் உள்ள மற்ற மக்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அறியலாம. அதன்படி பார்த்ததில் தற்போது வாழும் எல்லா மனிதர்களும் Africa கண்டத்திலிருந்துதான் இடப்பெயர்ச்சி ஆனார்களாம், அவர்கள் ஆப்ரிக்காவின் கிழக்கு கடற்கரை ஓரமாக நடந்து மத்தியாசியவிற்கு வந்து பின்பு ஐரோப்பா, ரஷ்யா, அலாஸ்கா அதன்   வழியாக அமெரிக்க கண்டம் சென்றார்களாம், மேலும் மத்திய ஆசியாவிலிருந்து இந்தியா கடற்கரை வழியாக ஆஸ்திரேலியா சென்றார்கள் என்கிறார்கள்  இந்த ஆராச்சியாளர்கள். see the map for reference
 
எப்படி மனித இரத்ததை வகைபடித்தினர்களோ அதுபோல இந்த y-Chromosome  வகைபடுத்திவிட்டார்கள். 
உங்களது y-Chromosme  என்ன என்பதை தெரிந்துகொண்டால் உங்களை போல y-Chromosme  உள்ளவர்கள் எங்கிருக்கிறார்கள் எனபது கண்டுபிடித்துவிடலாம், உங்களது mutation marker வைத்து உங்களின் இடப்பெயர்ச்சி  வரலாற்றை எழுதிவிடலாம்.
 
-Mrinzo Nirmal

Saturday, January 15, 2011

சாரு- மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு வரும் எழுத்தாளர்

மிகவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட மனிதர்  என்று ஓஷோவை சொல்வதுண்டு…
அதே போல தவறாக கருதப்பட்டு வரும் எழுத்தாளர் என்றால் அது சாரு நிவேதிதாதான்..

நேர்மையான பேச்சு, வெளிப்படையான விமர்சனம், பேசாத பொருளை பேசத் துணிந்த எழுத்து என்பதெல்லாம் தமிழ் சமுதாயத்துக்கு புதிது என்பதால் பலருக்கும் முதலில் அவர் எழுத்து அதிர்ச்சியையே தரும்..


Friday, January 14, 2011

ஒரே நாளில் 900 பேருடன் ஜல்சா செய்த பெண் - பலான சாதனைகள் பத்து-அடல்ட்ஸ் ஒன்லீ

ப கூ ப- படிக்க கூடாத பக்கம்

அவ்வப்போது பலான பதிவிட வேண்டும் என்பதற்காக பொது நலன் கருதி இதை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது , பிச்சைக்காரன் டாட் பிலாக்ஸ்பாட் டாட் காம்...

தயவு செய்து சிறுவர்களும், நல்லவர்களும் இந்த கோட்டை தாண்டி வர வேண்டாம்
 __________________________________________________


1. உலகிலேயே அதிக நீளமான *** , 13.5 இன்ச் ... அதாவது 34 செ மீ... 340 மி மீ..

இதை கண்டுபித்து உலகிற்கு சொன்னவர் பெயரில் சுவாரஸ்யம் இருக்கிறது..

அவர் பெயர் டாக்டர் ராபர்ட்  டிக்கின்சன்

- கண்டு பிடித்து என்ன செய்தார்? 

2 உலகிலேயே அதிக அகலமான **** கொண்டவர் பெயர் அன்னா ஸ்வன்னா..

ஸ்காட்லாந்தை சேர்ந்தவர் இவர்..

19 வயதிலேயே எட்டு  அடி உயரம் வளர்ந்து விட்டார்..

அவரது அந்த உறுப்பின் அகலம் 19 இன்ச்...

World's Largest Vagina – 19 in


-ஜாடிக்கு ஏத்த மூடி 



3 உலகிலேயே அதிக அளவு குழந்தைகள் பெற்றவர் , ஃபியோதர் வெசில்யேவ்..

63 குழந்தைகள் பெற்றவர் இவர்
Livia Ionce, 44, holds her newborn daughter, Abigail

-ஒரே கணவன் அல்ல... 

4 ஹார்ஸ் சுல்ட்ஸ் செய்த சாதனை என்ன தெரியுமா?

6 மீட்டர் தூரத்துக்கு அதை பீய்ச்சி அடித்ததுதான்

- எதில் அடித்தார் என தெரியவில்லை 


5 தைபே நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தன் எண்பதாம் வயதிலும் “அந்த “ தொழில் செய்து வருவது உலக சாதனையாக கருத படுகிறது..

சிலர் அனுபவம்தான் சிறந்தது என அவரை நாடுகிறார்களாம்
- அனுபவி ராணி அனுபவி 

6 ஒரே இடத்தில், ஒரே அறையில் 250 ஜோடிகளை “ அதை “ செய்யவைத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளனர் ஜப்பானில்..

ஒரு பலான  நிறுவனம் ஒன்று இதற்கு ஏற்பாடு செய்தது

- இந்த டிவிடீ சென்னையில் கிடைக்கிறது 

7 இந்த பெண்ணின் பெயர் லிசா ஸ்பார்க்ஸ் .. செய்த சாதனை ஒரே நாளில் 918 பேருடன் ஜல்சா செய்தது
Lisa Sparxxx

- ஓவர் டைம் பார்த்த களைப்பு படத்தில் தெரியலையே?! 

8 மசன்பூ சடா என்பவர் சான் பிராஸிஸ்கோவை சேர்ந்தவர் ..செய்த சாதனை பத்து மணி நேரம் நான் ஸ்டாப்பாக , தனியாக ****த்தது....
Thumbnail image for sato.jpg

- யாரை நம்பியும் இவர் இல்லை...

9 டடியாடா கொசனிகோவா என்ற பெண் 14 கிலோ எடையை தூக்கியது உலக சாதனை...

இதில் என்ன சாதனை..

இந்த எடையை கையால் தூக்கவில்லை.. ***யை பயன் படுத்தி தூக்கினார்

- ஸ்ஸ்ஸ்ஸ்

10 இந்த சாதனையை செய்தவர் இந்தியர்..

 நானுராம் ஜோகி என்பவர் 90 வயதில் தந்தை ஆனது சாதனை

- இந்தியன்

Thursday, January 13, 2011

முயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்

 

எல்லோருக்கும் தெரிந்த முயல் ஆமை கதையை சில எழுத்தாளர்கள் பாணியில் வெளியிட்டு இருந்தேன்..

நண்பர் நிர்மல் தன் பாணியில் அந்த கதையை எழுதி இருக்கிறார்… சில திருத்தங்களுடன் அதை இங்கு வெளியிடுகிறேன்..

படித்து பாருங்கள்…

*********************************************************************

 

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் – நிர்மல்

 

இளம்பெண்கள் நால்வர் காய்கறி கடை சென்றனர். சமையலுக்கு தேவையான காய்கறிகள் ஒவ்வொன்றாக வாங்கினர்...

”நாலு கேரட் கொடுங்க”

கடைக்காரர் தராசில் கேரட்டை வைத்து பார்த்தார்..

“ ஐந்து நிக்குதுமா. பேக் செய்யவா?”

“ நாலு போதும்,.. அஞ்சு எதுக்கு? வேஸ்ட் ஆயிடும் “

இன்னொரு பெண் குறுக்கிட்டாள்.

” பரவாயில்லைப்பா.. அந்த எக்ஸ்ட்ரா கேரட்டை சமையலுக்கு யூஸ் பண்ணிக்கலாம் “

கடைக்காரர் குழம்பினார்.. ”ஒன்றுதான் சமையலுக்கு என்றால் மற்ற நாலு எதுக்கு ?

- ஆல்வின் சொன்ன கதைகளில் ஒன்று

 

ச்சை பசேல் என்ற வயல்

அது ஒரு காரட் தோட்டம்,
வெளிகள் இல்லாமல் காவலில்லாமல் ஆடுகளுக்கு மாடுகளுக்கு எங்களுக்கு என்று தனி தனி காரட் தோட்டம் .

இந்த தோட்டம் யாருக்கு சொந்தம்.

ஆனால் எங்களுக்கு என்று ஒரு தோட்டம் .எங்கள் பசிக்கு இது உணவு, உணவு அங்கு அவரவர் உழைப்பிற்கு ஏற்றவாறு
கிடைக்கிறது.

இந்த தோட்டம் ஒன்றும் உடனடியாக வரவில்லை, பல போரட்டங்கள், சோதனைகள், பலரின் இரத்தம் சிந்தப்பட்டு உருவான தோட்டம். இதற்கு முன்பு இந்த தோட்டங்கள் மிக சிலர் கையில் இருந்தன, அவர்களது சொத்தாய் இருந்தன .

அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒப்பந்தத்திற்கு ஏற்ப காரட் வழங்கினார்கள் . இப்பமெல்லாம் அப்படீல்லை.

இப்போது உழைக்கமுடியாதவர்களுக்கும் உணவு கிடைகிறது.

இங்கு உழைப்பது எங்களது விருப்பமான செயலாக மாறிவிட்டது.

எங்களது தோட்டம் எங்களை நம்பியுள்ள முதியவர்கள் என முடியாதவர்களுக்காகவும் நாங்கள் உழைக்கிறோம்.

சில நூற்றாண்டுக்கு முன்பு எங்கள் முதாதையர் தங்களுக்காகவும் தங்கள்
குடும்பதினருக்காகவும் மட்டும் உழைத்தார்களாம்.அதுவும் இன்னொருவரின் தோட்டத்தில்.
நினைத்து பார்க்க கேவலமாகவும் அதிசயமாகவும் இருக்கு. சில மணி நேர உழைப்பு..
அனைவருக்கும் வேலை, நாளைக்கு தேவை என்று எதுவும் இல்லை, இந்த தோட்டத்தில் விளையும் காரட்களை சுவைத்து கொண்டிருக்கிறேன்.

அதன் சுவை, அதன் நிறம், மணம் என்று நறுகென்று கடித்தேன் அந்த காரட்டை. சுவையாய் இருந்தது வயிறும் நிறைந்தது.
காரட்டுகள் என்றாலே எனக்கு எனது கல்லூரி நண்பன் ஆல்வின், அவன்
எங்களுக்காக எழுதி கொடுக்கும் செக்ஸ் கதைகள் நினைவுக்கு வரும்.

ஆமாம் .முதன்முதலில் அவன்தான் செக்ஸ் புக்குகளை எங்களுக்கு வாங்கி வந்து கொடுத்தவன்.பின்பு என்ன நினைத்தானோ தெரியல்லை , எல மக்கா சும்மா காச கரைக்க வேண்டாம்ப்ளே, நானே எழுதிதன்றம்ப்ளே என்று அவனே எழுதி தர ஆரம்பித்தான் அந்த அசைவ கதையில் வரும் சில
சைவ காய்கறிகளில் இந்த காரட்டும் ஒன்று. அது என்னவோ தெரியலா எங்க கல்லூரி
விடுதியில் வெள்ளிகிழமையில் போடும் காரட் பொரியலை ஆல்வின் சாப்பிடுவதே இல்லை.
இந்த காரட்டை வேஸ்ட் பண்ணிட்டாங்கனு நினைப்போனோ என்னவோ.
ரகோஷம் சப்தம் அளவுக்கு மீறியதாக இருந்தது.சட்டென்று நினைவுக்கு
வந்தான்.

நினைவுக்கு வந்தது . தனது முன்பிருந்த அந்த தங்க கோப்பையை, அவன் இந்த பந்தயத்தில் வெற்றிபெற்ற ஆமைக்கு வழங்கினான்.

பகல் கனவில் மிதந்து தனது வெற்றியை பறிகொடுத்த முயல் ஏதாவது போராட்டம் அல்லது வேலைநிறுத்தம் செய்வேன் என்று தனது தோழர்களோடு ஆலோசனை செய்து கண்டன அறிக்கை விட்டுகொண்டிருந்தது.

Wednesday, January 12, 2011

கேபிள் சங்கருக்கு கிடைத்த அதிர்ச்சி- புத்தக கண்காட்சியில் பரபரப்பு

புத்தக கண்காட்சி என்றால், அனைவரும் புத்தகம் படித்து அறிவை வளர்ப்பதற்காக அங்கே செல்கிறார்கள் என நினைக்கிறோம்..

ஆனால் அங்கு நடக்கும் சுவையான சம்பவங்களை பார்த்தால் , வேறு பல விஷ்யங்களும் நடப்பது புரிந்தது,,

 அனைவரும் அங்கு வர முடியாது என்பதால், வராதவர்களும் பயன்பெறும் வகையில், சில சம்பவங்களை தொகுத்து தருவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமை படுகிறது..

Tuesday, January 11, 2011

கத்தியை தீட்டாதே !! - நிர்மல்

கத்தியை தீட்டாதே என்ற கதையை  நம் வலைதளத்தில் படித்து இருப்பீர்கள்.. 


அதே கதையை சற்று மாற்றி நிர்மல் எனக்கு அனுப்பினார்...

அவர் ஆர்வத்தை பாராட்டும்விதமாக அதை இங்கே தருகிறேன்

*************************************************



எனக்கு முடிவு எடுக்க நேரம் ஆகும். ஆனால் முடிவு எடுத்து விட்டால் விரைவாக செயலாற்ற தொடங்குவேன்.ரம்யாவை காதலிக்கும் முன்பு கூட மிகவும் யோசித்தே முடிவு செய்தேன்.மிகவும் யோசித்த பின் ஒரு பூங்காவில்தான் என் சம்மதம் சொன்னேன்.அப்போது அவள் கண்களில் தோன்றிய மலர்ச்சி, பூங்காக்களின் பூக்களை விட ஒளி மிகுந்ததாக தோன்றியது.. 

நேற்று எதிர்பாராத விதமாக கீதா வீட்டுக்கு வந்தாள்
- என்ன திடீர்னு ? குழப்பம் கலந்து கேட்டேன்
- உங்க முடிவை தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன்
- யோசித்து பார்த்தேன், எப்போதும் யோசித்து முடிவுயேக்கும் நான் எப்படி உடனே  ஓகே சொன்னேன்!!!!
அவள் பாய்ந்து வந்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
இரவு என் வீட்டிலேயே தங்கினாள்..
இதோ நான் கொல்ல கிளம்பும்போது அவள் நிம்மதியாக தூங்கி கொண்டு இருக்கிறாள்..
-எப்படி கொல்வது? படுக்கை மீது ஒரு கூர்மையான கத்தி கிடந்தது. அழகாய் இருந்தது, அதில் Towell  என்று எழுதியருந்தது. இது போதும்..இதில் விஷம் தடவி, லேசாக கீறினால் போதும்.. அதிக சத்தமோ , ரத்தமோ இன்றி வேலை முடியும்..  நான் கெமிக்கல் எஞ்சினியர்.. எந்த விஷம் இதற்கு சரியாக இருக்கும் என எனக்கு தெரியும்.
 
 
போன வாரம், ஒரு நாள்  காலை எதிர்பாராத விதமாக ரம்யா போன் செய்தாள்

 -  என்ன ஆச்சு?
லேசாக அழும் குரல் கேட்டது 

- சாரி.. நாம் பிரியும் நேரம் வந்து விட்டது.. என் வீட்டுல வேற மாப்பிள்ளை பார்த்துட்டாங்க.. என்னால தடுக்க முடியல..

அதிர்ந்தேன்..  
-என்ன இவ்வளவு கூலா சொல்ற? எதிர்ப்பு வரத்தான் செய்யும்.. சந்தித்துதான் ஆகணும் 

- இல்லை… நான் காதலிச்சது தப்புனு இப்ப உணர்றேன். சாரி.. என்னை மன்னிச்சுடுங்க 

கோபம் தலைக்கேறியது… 
 
ரம்யா அலுவலகம் சென்றேன்…என்னை யாரும் பார்த்து விடாமல் கவனமாக இருந்தேன்..
யாரும் இல்லை…அவள் தன் அறையில் , மேஜையில் தலை சாய்ந்து கண் மூடி இருந்தாள்..
கத்தியை கைரேகை பதியாமல் எடுத்தேன்..லேசாக ஒரு கீறு..லேசாக ஒரு அதிர்வு தெரிந்தது..
-போதும்.. இனி அசைவு இருக்காது..

யாரோ வருவது போல இருந்தது…மின்னலாக பாய்ந்து கிளம்பினேன்..
 
வீட்டுக்கு வந்தவன் அதிர்ந்தேன்..போலீஸ்…- இவர்கள் எப்படி இங்கே? அதற்குள்? 

- வாங்க சார்..இந்த பொண்ணு வீட்ல ஏதோ பிரச்சினையாம்.. அதான் விசாரிக்க வந்தோம்… கீதாவை தேடி வந்து இருக்கிறார்கள்.. அவள் அப்பாவும் வந்து இருந்தார்.. 

- முதல் முறை உங்களிடம் லவ்வை சொன்னப்ப நீங்க பாசிடிவா எதுவும் சொல்லல.. பிறகுதான் நீங்க இன்னொரு பொண்ணை லவ் பண்றதா கேள்விப்பட்டு மனம் உடைஞ்சு போனேன்.
உங்களை பார்த்துட்டு தற்கொலை செய்து கொள்ளலாம்னு லெட்டர் எழுதி வச்சுட்டு வந்தேன்.. அதான் பதட்டமாகி தேடி வந்து இருக்காங்க… இனி தற்கொலைக்கு அவசியம் இல்லை..
புன்னகைத்தாள்..- 

-ஆமா சார்.. நானும் உங்க பொண்ணை காதலிக்கிறேன்.. தேவை இல்லாம போலீஸ் அது இதுனு தொல்லை ஆனதுக்கு சாரி சார்

 - பரவாயில்லை தம்பி.. சரிமா கீதா.. வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த கத்தி எங்கே? 6 வருடம் காத்திருந்து வாங்கிய அந்த dwight  Towell  கத்திஎங்கே?
 
 
அந்த கத்தியைபற்றி  Police இன்டர்நெட்டில் தேடிகொண்டிருந்தர்கள்
Dwight Towell is one of the world best  Knife maker who is living in Idaho, people wait for 5 -  6 years to buy one Towell knife. The Towell knife is engraved with gold on blued steel.   http://www.rehobothcustomknives.com/KDTW001.htm 
  • ரம்யாவின் தோழி கீதா.. ரம்யாவை விட, ரம்யா ரோஷினியவிட  அழகி.. பணக்காரி.,
 
"    அலுவலகம் ஒன்றில் பெண் கொலை செய்யப்பட்டார்.. கொலையாளி யாரென தெரியவில்லை… கொலை செய்த கருவி முக்கிய ஆதாரமாக கிடைத்துள்ளது"

Sunday, January 9, 2011

பாலகுமாரன் , எட்கர் ஆலன் போ , புஷ்பா தங்கதுரை எழுத்தில் முயல்-ஆமை கதை

முயல் ஆமை ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டதும், ஆமை வென்றதும் உங்களுக்கு தெரியும்.

இந்த கதையை வேறு சில எழுத்தாளர்கள்  எழுதி இருந்தால் எப்படி இருந்திருக்கும் ..

முதல் கட்டமாக மூன்று எழுத்தாளர்கள் பாணியில் அந்த கதையை பொது நலன் கருதி வெளியிடுவதில் , பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமை படுகிறது 

Saturday, January 8, 2011

புத்தக கண்காட்சியில் கேபிள் சங்கர் அராஜகம்- படத்துடன் நேரடி ரிப்போர்ட்

புத்தக கண்காட்சி என்றால் புத்தகங்களை பார்ப்பதை விட பதிவர்களை பார்ப்பது தனி சுவாரஸ்யம்..

எழுத்தின் மூலம் பதிவர்களை பற்றி ஒரு பிம்பம் மனதில் உருவாகி இருக்கும்.. நேரில் பார்க்கும்போது  கிடைக்கும் அனுபவம் வேறு.

Friday, January 7, 2011

பெண்ணை கைவிட்டு தன்னை காதலித்த ஆண்- நிர்மல் வழங்கும் சுவையான கட்டுரை

 

வித்தியாசமான தகவல்களை வித்தியாசமான கோணத்தில் எழுதுபவர் நண்வர் நிர்மல்..

எக்கோ என்ற வார்த்தைக்கு பின் இருக்கும் சுவையான விஷ்யங்களை தனக்கே உரித்தான பாணியில் விளக்குகிறார்..

படித்து பாருங்கள்..

- பிச்சைக்காரன்.பிளாக்ஸ்பாட்.காம்

*************************************************************************************************

சுயபுராணமும், சுய புத்தி இல்லாமையும் – நிர்மல்

Echo  என்றால் என்ன என்பது எல்லோருக்கும் தெரியும் -

எதிரொலி

  அதாவது ஒரு வாக்கியத்தின் கடைசி சில சொற்களை மட்டும் மீண்டும் ஒலிக்கும் ஒரு செயல். இந்த எதிரொலியை  ஆங்கிலத்தில் Echo என்று எதற்காக அழைக்கிறார்கள்?

 

இந்த Echo என்ற வார்த்தைக்கு ஒரு கதை இருக்கிறதாம்.

கிரேக்க புராணத்தில் Echo என்பது ஒரு  தேவதையின் பெயர். மிகவும் இனிமையாக பாடவும், இசைக் கருவிகளை இயக்கவும் வல்லமை பெற்றவள் இந்த Echo.  இந்த தேவதை Zeus என்ற தலைமை கடவுளின் மனைவி .

Hera என்ற பெண் தெய்வத்தால் சபிக்கபடுகிறாள், அந்த சாபத்தின்  விழைவால் Echo என்ற தேவதையால்  சுயமாக எதுவும் பேச முடியாமல் போகிறாள் . அவளால் பேச முடிவது ஒன்று மட்டும் தான்.

யாராவது பேசினால் அந்த பேச்சின் முடிவில் வரும் சில சொற்களை மீண்டும் பேசமுடியும், அவ்வளவுதான். இந்த சாபத்தால் மிகவும் கஷ்டப்படுகிறாள், ஓர் அழகான வாலிபனை காதலிக்க முயன்று தோற்கிறாள், அவளது காதலை சொல்லமுடியாமால், தனிமையில் தவித்து கல்லாகி சிதறிப் போகிறாள்.

இந்த சிதறிய கற்களில் உள்ள  அவளது ஆன்மாதான் இன்றுவரை  எதிரொலியாக ஒலிகின்றதாம்.    

இந்த Echo என்ற வார்த்தையை எதிரொலி என்று நேரடியாக அர்த்தம் கொள்ளலாம் அல்லது சித்திக்காமல் சொன்னதை திரும்ப சொல்லும் எதற்கும் சொல்லலாம்.

இந்த Echo வை பற்றி தெரிந்துகொள்ளும்போது அவளது காதலனை பற்றியும் நமக்கு  தெரிந்துவிடுகிறது, அந்த அழகான வாலிபன் பெயர் Narcissus , இவன்  தனது அழகினால் மிகவும் தலைக்கனம் பிடித்தவனாக இருகிறான், அவனை காதலிக்கும் பல பெண்களை உதாசீனப்படுதுகிறான், Echo வை உதாசீனபடுத்தியது போல.

இப்படியாக வாழ்ந்துவந்த இவன் ஒருநாள் ஒரு ஆற்றின் ஓடும் தண்ணீரை பருக குனிகிறான் .அந்த ஆற்றின் நீரில் தெரியும் தனது பிம்பத்தின் மீது காதல் கொள்கிறான்.அவனை அடைய முயன்று தோற்கிறான், இறந்து விடுகின்றான்.

  இந்த Narcissus என்ற பெயரில் இருந்துதான் Narcissam என்ற வார்த்தை வந்தது, இப்போது இந்த Narcissam  என்ற சொல் ஒரு தனிநபரோ, அல்லது  சமூகமோ சுயபுராணம் பாடிக்கொண்டு, தங்கள் மதம், தங்கள் சாதி, தங்கள் திறமை, தங்கள் கலாச்சாரம், தங்கள் கருத்து, தங்கள் கொள்கை,  தங்கள் மொழி என பெருமை மட்டும் கொண்டு  வாழ்பவர்களை  குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

  இந்த Echo மாதிரி நாமும் பல நேரங்களில் சிந்தனை செய்யமுடியாமல் யாராவது சொன்னதை திரும்ப  திரும்ப சொல்லுவோம், இந்த Narcissus போலவும் இருப்போம். இந்த இரு குணங்களின் கோர விளைவு மனித அழிவு. 

எங்காவது ஒரு தனிநபரின் / ஒரு சமுகத்தின்   நர்சிஸ்ஸ குணத்தால் , மனித படுகொலை நடந்துகொண்டிருக்கும் நாம் Echo மாதிரி " படுகொலை நடக்குதாம், படுகொலை நடக்குதாம்,படுகொலை நடக்குதாம்" என்று இருப்போம் அல்லது நாம் நமது    நர்சிஸ்ஸ குணத்தால் மத்தவரை  வதைப்போம்...........

_ Mrinzo Nirmal

Wednesday, January 5, 2011

கத்தியை தீட்டாதே !!

” அவள் உயிருடன் இருக்க கூடாது “ முடிவு செய்த பின் , நான் என்ன செய்ய வேண்டும் என திட்டமிட தொடங்கினேன்.
எனக்கு முடிவு எடுக்க நேரம் ஆகும். ஆனால் முடிவு எடுத்து விட்டால் விரைவாக செயலாற்ற தொடங்குவேன்.
ரம்யாவை காதலிக்கும் முன்பு கூட மிகவும் யோசித்தே முடிவு செய்தேன்.
அவள் அழகு, அறிவு, இளமை என்ற கூட்டணிக்குள் இடம்பிடிக்க யாராக இருந்தாலும் முயல்வார்கள்.


Monday, January 3, 2011

உண்மையான உ.தமிழன் யார்? அதிர்ச்சி சம்பவம் !!!!!!

இந்த கதையில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே...

***************************************************************


- அவர் எனக்கு நல்லா தெரிஞ்சவரு.. தைரியமா பொண்ணு கொடுக்கலாம் “ என் குரலில் அபார நம்பிக்கை...
என்னை நம்பிக்கையுடன் பார்த்தார் பெண்ணின் தந்தை .

Sunday, January 2, 2011

தமிழ் மணம் டாப் 20 பதிவர்களில் என்னை கவர்ந்த இடுகைகள்/ பஞ்ச் வரிகள்

 
2010 கடைசி வாரத்தின் டாப் 20 பதிவர்களை தமிழ் மணம் வரிசை படுத்தி இருக்கிறது..
   இதை தவிரவும் பல பதிவுகளை படிக்கிறேன்,. ரசிக்கிறேன் ..
அனைத்டு பதிவுகளிலும் நான் ரசித்த விஷ்யங்களை ஒரே பதிவில் சொல்ல முடியாது..
ஆனால் சொல்ல விரும்புகிறேன்.
அதில் முதல் கட்டமாக இந்த வார டாப் 20 பதிவர்களின் இடுகைகளில் நான் ரசித்த வரிகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
வருடம் முடிவதால், நான் ரசித்த வரிகள் ஒட்டு மொத்த வருடத்தின் பார்வையாக இருக்கும்.

Saturday, January 1, 2011

2011- டாப் டென் அச்சங்கள்

புத்தாண்டு பிறந்ததை பலர் மகிழ்ச்சியோடு வரவேற்றாலும், அந்த மகிழ்ச்சிக்குள் ஒரு பயம் ஒளிந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது..
எத்தனையோ வகை பயங்களை மனதில் பதுக்கி வைத்துக் கொண்டு , ஹேப்பி நியூ இயர் என சிரித்த படி சொல்லும் கலை நம்மவர்களுக்கு மட்டுமே வரும்..
நமக்கு சந்தோஷம் இல்லாவிட்டாலும், அடுத்தவர்கள் தவறாக நினைக்க கூடாது என்பதற்காக நாமும் சிரித்தபடி வாழ்த்துவோம்..
அனைத்து பயங்களையும் இங்கே பட்டியல் இட முடியாது..
2011ம் ஆண்டை பற்றிய டாப்10 பயங்களை மட்டும் பார்க்கலாம்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா