Friday, March 29, 2013

பரதேசி, லிங்கன், ஜாங்கோ அன்செயிண்ட்- எது டாப்?


பரதேசி படத்தை விட அதற்கான எதிர் வினைகள் சுவாரஸ்யமாக இருந்தன.

ஒப்பற்ற படைப்பு,  தமிழ் சினிமாவின் விடி வெள்ளி  போன்ற கருத்துகள் ஒரு புறம்.

நாவலை ஏன் அப்படியே எடுக்கவில்லை, 40 நாள் நடக்கையில் தாடி வளர்கிறது - முடி ஏன் வளரவில்லை , ஜாதிப் பெயர்களை ஏன் சொல்லவில்லை என்பது போன்ற விமர்சனங்கள் ஒரு புறம்.

படத்தில் என்ன இருக்கிறது , என்ன இல்லை என தெளிவாக நேர்மையாக சொன்னது சாரு நிவேதிதா மட்டுமே.. அந்த வகையில் அவர் கட்டுரைகள்தான் ஆறுதலாக இருந்தன .

எடுத்துக்கொண்ட கதையை எப்படி பிரசண்ட் செய்து இருக்கிறார் என்பதுதான் முக்கியம் என்ற அடிப்படையில் படத்தை அலசி இருந்தார் சாரு.. சினிமா விமர்சனம் என்றால் என்ன என்பதற்கு உதாரணமாக சாருவின் விமர்சனம் இருந்தது.

     பரதேசியை அவர் நிராகரித்தாலும் , அந்த படம் ஏன் பாராட்டப்படுகிறது என்பதையும் அவரே சொல்லி இருந்தார்.

       தமிழில் வேறு நல்ல படங்கள் இல்லாத நிலையில் , ஓரளவு வித்தியாசமாக வந்தால்கூட அது வியப்பாக பார்க்கப்படும் சூழலை சொல்லி இருந்தார்.

அது உண்மைதான்.

எனவே பரதேசி படத்தை சராசரி தமிழ் படங்களுடன் ஒப்பிடாமல் , வேறு சில நல்ல படங்களோடு ஒப்பிட்டு பார்க்க விரும்பினேன்.

    லிங்கன் , Django Unchained , பரதேசி - இந்த மூன்றும் வெவ்வேறு வகையான படங்கள், வெவ்வேறு கதை அம்சம் கொண்டவை.

ஆனால் மூன்றுக்கும் ஒரு பொது தன்மை உண்டு. அடிமைமுறை , ஆதிக்கம் போன்றவை மூன்று படங்களிலும் உண்டு.

இந்த பொதுத்தன்மையை மட்டும் வைத்து கொண்டு மூன்றையும் ஒப்பிடுவது நியாயமில்லைதான்.  மூன்று படங்களையும் பார்த்து முடித்த பின் , எது மனதில் ஆழ்ந்த பாதிப்பை செலுத்துகிறது என்ற ஒற்றை அம்சத்தை மட்டும் பார்ப்பதே சரியாக இருக்கும்.

முதலில் மூன்று படங்களை பற்றிய ஒரு வரியில் சுருக்கமாக பார்க்கலாம்.

சிலரது சுகபோகத்துக்காக , அப்பாவிகளை கொத்தடிமைகளாக்கி அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குவதை ஆவணப்படுத்துகிறது பரதேசி..


அமெரிக்காவில் நிலவிய அடிமை முறையை நீக்குவதற்கான சட்ட திருத்தத்தை லிங்கன் தன் சாதுர்யத்தால் , வாக்கு வன்மையால், ஆளுமை திறத்தால் எப்படி சாதித்தார் என சொல்கிறது லிங்கன் படம்.


அடிமை முறை நிலவிய அமெரிக்காவில் , அடிமை ஒருவனுக்கு கிடைக்கும் எதிர்பாராத விடுதலை , தான் மட்டும் தப்பித்தால் போதாது என தன் காதலி விடுதலைகாகவும் சாகசங்கள் மேற்கொள்வது பற்றிய ஒரு ஃபேண்டசி ஜான்கோ அன்செயிண்ட்.


மூன்றுமே அடிமை நிலையை பற்றி சொன்னாலும், இதில் ஒரு படத்தை ரசித்து கொண்டும் , சிரித்து கொண்டும் கைதட்டி கொண்டும் பார்க்கலாம். அதுதான் ஜாங்கோ அன்செயிண்ட்.


கண்ணீர் சிந்த வைக்கும் அடிமை முறை பின்னணியில் ஒரு சாகச படம் என்பதே ஒரு ஆச்சர்யம், ஆனால் க்வெண்டின் டொரண்டினோ பற்றி தெரிந்தவர்களுக்கு மனிதர் வழ்க்கம் போல பட்டையை கிள்ளப்பி விட்டார் என்ற நிறைவுதான் ஏற்படும்.

ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கலாம்.

Django அடிமையாக இருந்தவன். அவனை தன் வேலையின் பொருட்டு டாக்டர் கிங் அழைத்து செல்கிறார். பிறகு அவன் செய்த உதவிக்காக , அவன் விரும்புவது அவனுக்கு கிடைக்க முயற்சி செய்கிறார்.

இதில் ஒரு கட்டத்தில் நடக்கும் காட்சியை பாருங்கள். ஒருவனை தேடி செல்கிறார்கள் .அப்போது நடக்கும் உரையாடல்.

டாக்டர்  King Schultz : எல்லீஸ் எங்கே?

ஜாங்கோ : அதோ, அங்கே இருக்கிறானே ..அவன் தான்.

டாக்டர்  King Schultz :  நல்லா தெரியுமா? 

ஜான்கோ : ஆமா


  1. டாக்டர்  King Schultz: Positive?

  2. Django:  தெரியலையே..

  3. Dr. King Schultz: You don't know if you're positive?

  4. Django:  பாசிடிவ்னா என்னனு தெரியலை..

  1. Dr. King Schultz: It means you're sure.

  1. Django: ஆமா..

  2. Dr. King Schultz: Yes, what?

  1. Django: Yes I'm sure it is Ellis Brittle...  ( அவனை சுட்டு கொல்கிறான் ..)  I'm positive he dead.


இந்த காட்சியில் கைதட்டாமல் யாராலும் இருக்க முடியாது..


இன்னொரு காட்சி..

டாக்டரும் , கதானாயகனும் ஒரு புதிய ஊருக்கு போய் இருப்பார்கள்.  ஷெரிஃபை பார்க்க வேண்டும் . அழைத்து வாருங்கள் என்பார் டாக்டர். மார்ஷலை அழைத்து விடாதீர்கள். ஷெரீஃப்தான் வேண்டும் என வலியுறுத்தி சொல்வார்.

ஷெரீஃப் வந்து பேசுவார். வாக்குவாதம் முற்றி செரீஃபை கொன்று விடுவார் டாக்டர், அனைவரும் கோபமாக வருவார்கள். டாக்டர் அலட்டி கொள்ளாமல் கூலாக சொல்வார் “ இப்போது மார்ஷலை கூப்பிடுங்கள் “


டாக்டர் கதாபாத்திரம் மிக அட்டகாசமாக இருக்கும். ஓவர் மேக் அப், கதறி அழ வைக்கும் நடிப்பு, மாறு வேடம் போட்டு பல வேடங்களில் நடிப்பது போன்றவைதான் நம் ஊரில் சிறந்த நடிப்பால கருத்தப்படுகிறது.

ஆனால் இது எதுவுமே இல்லாமல், மிக மிக இயல்பான ஒரு பாத்திரத்தை உருவாக்கி நம் மனதில் பதிய வைக்கிறார் என்றால் அதுதான் இயக்குனரின் திறமை.


அதே போல வில்லனாக வரும் டீ காப்ரியோ.. பார்த்தால் ஹீரோ போல இருபபார். மண்டை ஓட்டை வைத்து அறிவியல் விளக்கம் சொல்வார். ஆனால் பயங்கரமான வேலைகளை செய்வார்.

அதெ போல விசுவாசமான வேலையாளாக வரும் சாமுவேல் ஜாக்சன்.ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக இவர் நடந்து கொள்வது நடுங்க வைக்கும்.

இப்படி ஒவ்வொரு கேரக்டர்களையும் , ஒவ்வ்வொரு காட்சியையும் மறக்க முடியாது..

ஆனால் பரதேசி படத்தை பொருத்தவரை , நல்லவன் -கெட்டவன் என்ற ஒற்றை பார்வையில் படம் இருப்பதை யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். விளைவாக பழைய கால செண்டிமெண்ட் படம் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

சரி, இந்த இரண்டு படங்களை ஒப்பிட்டால் மனதை நெகிழ வைக்கும் படம் எது என்று பார்த்தால் , பரதேசிதான்.

பரதேசி படத்தின் ஹீரோவுக்கு கடைசியில் வீரம் வந்து , வில்லனை கொன்று விட்டு தன் மனைவியுடன் தப்பிப்பதாக காட்சி வைத்து இருந்தால் , கைதட்டி ரசித்து இருக்க கூடும். ஆனால் அது யதார்த்தத்தை பாதித்து இருக்கும்.

யதார்த்தம் என்ற வகையில் , பரதேசி மனதில் நிற்கிறது.

சரி..பரதேசியையும் லிங்கனையும் ஒப்பிடலாம்.

லிங்கன் படமும் யதார்த்தத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட படம்தான். அதீத ஹீரோயிசம் , திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. ஆனால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை.

அடிமை முறையை ஒழிக்கும் சட்ட திருத்தத்திற்கு தேவைப்படும் வாக்குகளை திரட்டுவதில் காட்டப்படும் முனைப்பு, யுக்திகள் என நம் ஊர் அரசியல் போல பரபரப்பாக செல்கிறது.

லிங்கன் எடுத்து கொண்ட பணி உன்னதமானது என்றாலும் அதை அடைய கையாளும் வழி உன்னதமானது என சொல்ல இயலாது. சில குறுக்கு வழிகளும் கையாளப்படுகின்றன.

தந்திரம் , குறுக்கு வழி போன்றவையெல்லாம் நம் ஊரை பொருத்தவரை பணம் சம்பாதிக்கும்  வழியாகவே கருதப்படுகிறது. ஆனால் இது போன்ற யுக்திகளை மக்கள் நலனுக்காக பயன்படுத்தினால் அதுவே ராஜ தந்திரம் ஆகிறது.

புத்திசாலித்தனமும் , நல்ல மனமும் ஒருங்கே கொண்ட ஒரு தலைவனை நம் ஊரில் பார்ப்பது அரிது. லிங்கன் இப்படிப்பட்ட ஒரு தலைவர்.

நம் காந்தி லிங்கன் வழி முறைகளை ஏற்றிருப்பாரா என்பது சந்தேகம்தான்.

இது மட்டுமன்றி லிங்கனது குடும்ப வாழ்க்கை , ஆளுமைத்திறன் , நா வன்மை, தலைமைப் பண்பு , டீம் ஸ்பிரிட்    என பலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.

லிங்கன் மட்டுமன்றி அவர் சகாக்களும் முனைப்புடன் செயலாற்றுவார்கள். அவர்கள் லிங்கன் மீது பெரிய மரியாதை வைத்து இருப்பார்கள். அதேபோல லிங்கனும் அவர்கள் மேல் அபார நம்பிக்கை வைத்து இருப்பார்.

விவாதத்தின் போது ஒரு கட்டத்தில் , நீக்ரோக்களும் வெள்ளையர்களும் சமம் என்பதுதான் உங்கள் கருத்தா என எதிர்கட்சியினர் கேட்பார்கள்.

ஆம், சமம் என்று சொன்னால் வெள்ளையர்கள் கோபம் அடைந்து தீர்மானத்தை தோல்வியுற செய்வார்கள். சமம் இல்லை என்று சொன்னால் தீர்மானத்திற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும்.

இதை ஸ்டீவன்ஸ் எப்படி சமாளிக்கப்போகிறார் என அவர் கட்சியினர் பயத்துடன் பார்த்து கொண்டு இருப்பார்கள். நிருபர்கள் பேனாவை திறந்து வைத்து கொண்டு அவர் பதிலை பதிவு செய்ய காத்து இருப்பார்கள். வெகு வெகு சாதுர்யமாக பதில் அளித்து தீர்மானத்துக்கு சாதகமான சூழ்னிலையை உருவாக்குவார் ஸ்ட்டிவன்ஸ், இப்படி சுவையான பல காட்சிகள்.

வாக்களிப்பு நடக்கும் போது , சபானாயகர் தானும் வாக்களிப்போவதாக சொல்வார், எதிர்கட்சியினர் ஆட்சேபிப்பார்கள்.

இப்படி இது வரை யாரும் செய்தததில்லை என்பார்கள். இப்படி நடந்ததே இல்லை என்பார்கள்.. இப்படி நடந்தது இல்லை என சொல்லாதீர்கள். ஒரு வரலாறு படைக்கப்படுகிறது என சொல்லுங்கள் என்பார் அவர்.

வரலாற்று படம் என்றால்உண்மையை அப்படி சொன்னால் , டிரையாக இருக்க வேண்டும் , அதில் பரபரப்பு இருக்க முடியாது என்று இல்லாமல் , உண்மைத்தன்மையையும் விட்டு கொடுக்க்காமல், விறுவிறுப்பையும் விட்டு கொடுக்காமல் அற்புதமாக வந்துள்ள படம் லிங்கன்.

உள் நாட்டு போரையும் , இந்த தீர்மானத்தையும் சம்பந்தப்படுத்தி குற்றச்சாட்டு எழும். பேச்சு வார்த்தைக்கு யாரும் வரவில்லை என லிங்கன் சொன்னால்தான் நமக்கு நல்லது என ஆலோசனை வழங்கப்படும்.

ஆனால் அப்படி சொல்வது பொய்யாக இருக்கும். லிங்கன் என்ன செய்யப்போகிறார் ..என யோசிப்போம்..சாதுர்யமாக அதை சமாளிப்பார்.

இப்படி ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைத்து இருப்பார் இயக்குனர்.

கணிதவியலில் வரும் ஒரு தத்துவத்தை சமூகவியலுக்கு ஒப்பிட்டு பேசுவார் லிங்கன்..அட என சொல்ல வைக்கும்.

ஏதேனும் இரண்டு , ஏதாவது ஒன்றுடன் சமமாக இருக்கும் பட்சத்தில் , அந்த இரண்டும் ஒன்றுகொன்று சமமாக இருக்கும்  என்று மென்மையான குரலில் லிங்கன் சொல்வார்.. அந்த ஒரு டயலாக் டெலிவரிக்காகவே ப்டத்தை பல முறை பார்க்க்லாம்.

ஆக , கூட்டி கழித்து பார்த்தால் , இந்த மூன்று படங்களில் மனதை கவர்வது லிங்கன் தான்.

இதில் இருக்கும் நம்பிக்கை கீற்று, பன் முக தன்மை, நேர்மை என பல விஷயங்கள் பரதேசியில் இல்லை.

ஆனால் இந்த அளவுக்கு உண்மை தன்மையுடன் தமிழில் படம் வரும் சூழல் இருக்கிறதா என்பதும் கேள்வி குறியே




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா