Sunday, December 20, 2020

இயற்கை இனிதா கொடிதா ?

 பரணில் குவிக்கப்பட்ட பழைய பொருட்களை சுத்தம் செய்தல் சுவாரஸ்யமான பணி.

பழைய பொக்கிஷங்கள் , அந்தக்காலத்தில் நடத்திய கையெழுத்துப்பிரதி , கடிதங்கள் என எவ்வளவோ கிடைக்கும்

அப்படி சுத்தம் செய்தபோது திடீரென ஓர் எலியைப் பார்த்து திடுக்கிட்டேன்.  விரட்டினாலும் அது ஓடவில்லை.

கடைசியாக துரத்தியாயிற்று

பிறகுதான் அவ்வெலியி


ன் பரிதவிப்புக்கான காரணம் புரிந்தது

உள்ளே சின்னஞ்சிறு எலிக்குஞ்சுகள். வெகு மென்மை. வெகு அழகு

கதகதப்பாக ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு சுருண்டு கிடந்தன.

நடக்கவோ பார்க்கவோ முடியாத புத்தம்புது பிறவிகள்


ஏராளமான உணவுப்பொருட்களை ஆண்டுதோறும் அழிக்கின்றன , நோய்க்கிருமிகளை பரப்புகின்றன , நோய்களை உருவாக்குகின்றன என மனிதனின் எதிரியாக உள்ளன.  ஆனால் இயற்கையைப் பொருத்தவரை அதற்கும் எலியும் ஒன்றுதான்  மனிதனும் ஒன்றுதான்

மனிதனைப்படைப்பது போன்ற கவனத்துடன்தான் எலியையும் இயற்கை படைத்துள்ளது

       பறவைகள் பூனைகள் போன்றவைகளுக்கு உணவாகும் பொருட்டு படைக்கப்பட்டவை எலிகள் இன்று பறவைகள் குறைவு. கட்டட நெரிசல்களில் வாழும் எலிகளை பிற உயிரிகள் உணவாக்குவது கடினம்.

உணவுச்சங்கிலி  உடைந்து இயற்கை சமநிலை பிறழ்ந்துவிட்டது.   இதில் எலிகளின் பிழை ஏதும் இல்லை


எலிப்பொறிகள் , விஷ மருந்து என பல வகைகளில் அவை கொல்லப்படுகின்றன

மனிதன் தலையிடாதவரை இயற்கை அழகுதான்








No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா