Friday, June 18, 2021

சிவ சங்கர் பாபா சர்ச்சை− என் பார்வை

 விருப்பு வெறுப்பின்றி அனைத்து மத அனைத்து வகை ஆன்மிக அமைப்புகளுக்கு செல்பவன் என்ற முறையில் சிவசங்கர் பாபா குறித்து உங்கள் அனுபவம் என்ன என கேட்பவர்களுக்காக இந்த பதிவு

சில மாணவிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு சரி அல்லது தவறு என சிபிசிஐடி விசாரணைதான் ஒரு தெளிவைத்தரும்.  அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை


இருபது ஆண்டுகள் செயல்படும் பள்ளியில் திடீரென ஏன் இப்போது ஏன் குற்றச்சாட்டு என்பது தெரியவில்லை.  ஆனாலும் உண்மை எப்போது வெளிவந்தாலும் நல்லதுதான்


சுஜாதா இந்தப்பள்ளிக்கு சென்று , விகடனில் உயர்வாக எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம்

வலம்புரிஜான் , மாலன் , சுதாங்கன் என பலரும் உயர்வாகவே தமது  பதிவு செய்துள்ளனர்.

அப்படி ஒரு கருத்துதான் எனக்கும்.  நானும் அந்த ஆஸ்ரமத்தை சென்று பார்த்துள்ளேன்.  


ஆனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மோசமான அனுபவங்கள் கிடைத்திருக்க்கூடும். அதை என் போன்ற வழிப்போக்கர்கள் ஊர்ஜிதப்படுத்தவோ மறுக்கவோ முடியாது;

     சிவசங்கர் பாபா தப்பி ஓட முயற்சிக்கவில்லை.   இதய நோயாளியான அவரால் தப்பி ஓடி ஒளிய முடியாது.  விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம் என பள்ளி நிர்வாகம் கூறுகிறது.

விசாரணையில் உண்மை வெளி வரும்வரை காத்திருப்போம்

யார் வேண்டுமானாலும் எப்போதும் செல்லலாம் ,  காணிக்கைகள் இல்லை , அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள் என பிரகாசித்த சம்ரட்சணா அமைப்பும் சுஷில் ஹரி பள்ளியும் வீழுமா அல்லது இந்த திடீர் வெளிச்சத்தால் மேலும் புகழடையுமா என்பதெல்லாம் விசாரணை முடிவில்தான் தெரியும். 

உண்மை வெல்லட்டும்


இதில் ஒரு சுவாரஸ்யம்

மஞ்சள் பத்திரிக்கைகளும் , இணைய ஊடகங்களும் அவர் மீது எந்த ஆதாரமும் இன்றி சேற்றை வாரி இறைத்தன

சன் டிவி விவாதத்தில் யாகவா முனிவர் , சிவசங்கர் பாபாவை செருப்பால் அடித்தார் என்றெல்லாம் அடித்து விட்டனர்

சம்ரட்சணா மீது எதிர்கருத்து கொண்டிருக்கும் சன் டிவி , அந்த விவாதத்தை தன் கரூவூலத்தில் இருந்து ஒளி பரப்பியது.

சன் டிவி நினைத்திருந்தால் ,  பாபா பேச்சை எடிட் செய்து விட்டு , யாகவா முனிவர் பேச்சைமட்டும் வெளியிட்டு ,  சிவசங்கர் பாபா இமேஜை காலி செய்திருக்கலாம்.

ஆனால் அவர்கள் நடுநிலையாக விவாதத்தை முழுமையாக − சிவசங்கர் பாபாவின் பண்பான விளக்கம் உட்பட − ஒளிபரப்பினர்

அந்த கால,கட்டத்திலக , யாகவா vs சிவசஙகர்  பாபா.  வென்றவர்,யார் என்ற கேள்விக்கு ,  தனது பண்பால் வென்றவர் பாபா என பதிலளித்து இருந்தார் லேனா தமிழ்வாணன் ( கல்கண்டு )

எந்த பொறுப்பும் ஏற்காமல் வெறும் ஹிட்ஸ்களுக்கான பொய்களைப்பரப்பும் இணைய ஊடகங்களை நம்பி அச்சு இதழ்களையும் ,  தொலைக்காட்சி சானல்களையும் அழிய விட்டுவிடக்கூடாது



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா