Wednesday, March 1, 2023

கலைஞர் ஜெயகாந்தன் சந்திப்பு பாகம் 1



ஜூலை 10 செவ்வாய் காலை 10 மணி 1979,


திரு. மு.கருணாநிதி அவர்களை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்திப்பதென்று முதல் yநாள் மாலைதான் உறுதியாயிற்று. இந்தச் சந்திப்பு ஏற்கனவே சுல்பனாவில் அறிவிக்கப்பட்டதுதான். எனினும் இது குறித்து வியப்பு அடங்காத எனது வாசகர்களும் திராவிட இயக்கத் தொண்டர்களும் ஏராளம் இருப்பர்.


இவரைச் சந்திக்க வருவது இரண்டாவது அனுபவம். முதல் அனுபவத்தைப் பற்றிய நினைவுகள், இப்போது எண்ணினாலும் சோர்வு ஏற்படுத்துகின்றது.


அப்போது திமுகழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளி யேற்றப் பட்டிருந்தார். தமிழகத்து வீதிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஒட்டிக் கொள்ளாத கார்களோ வாகனங்களோ திரிய முடியாத நிலை. அப்படிப் பட்ட கார்களில் இழிவான மொழிகளில் கருணாநிதியை எதிர்த்து எழுதப்பட்ட வாசகங்கள். ஊரெங்கும் பகைமையும் வெறுப்பும் பரவி வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்ந்து ஒரு கட்சியின்திமுகழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். வெளி யேற்றப் பட்டிருந்தார். தமிழகத்து வீதிகளில் எம்.ஜி.ஆரின் படத்தை ஒட்டிக் கொள்ளாத கார்களோ வாகனங்களோ திரிய முடியாத நிலை. அப்படிப் பட்ட கார்களில் இழிவான மொழிகளில் கருணாநிதியை எதிர்த்து எழுதப்பட்ட வாசகங்கள். ஊரெங்கும் பகைமையும் வெறுப்பும் பரவி வன்முறைகளும் கலவரங்களும் நிகழ்ந்து ஒரு கட்சியின்


உள்விவகாரம் தெருப் பிரச்சினையானபோது, தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த இவரை ஒரு பிரஜை என்கிற முறையில் உரிமையோடு சந்திக்கப் போனேன். அவரோடு நான் பேசியது அவரது குறித்துத்தாள். எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கை சுட்சியின் உள்விவகாரம் குறித்து என் யோசனைகளை அவர் குறித்துக் கொண்டார். எனினும் அவற்றை இவர் நிறைவேற்றப் போவதில்லை என்ற அவநம்பிக்கைதான் அன்றைய முக்கால் மணி நேரச் சந்திப்பில் எனக்கு உருவாயிற்று.


அந்தச் சந்திப்புக்கு முன்னாலும் பின்னாலும் திரு. கருணாநிதி அவர்களை அரசியல் ரீதியிலும், ஏன் தனிப்பட்ட முறையிலும் கூட நான் மிகமிகக் கடுமையான சொற்களின் மூலம் விமர்சித்துப் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். அந்தச் சொற்களும் தோரணைகளும் எவ்வளவு தவறானவையாக இருந்த போதிலும் அவற்றின் உள்ளடக்கத்துக்காகவும் எனது நேர்மை உணர்ச்சிக்காகவும் நான் இப்போது வருந்தத் தேவையில்லைதான். ஆயினும் அது குறித்து ஏதேனும் ஒரு சமயத்தில் இந்த மனிதரின் மனம் புண்பட்டிருக்கலாமே என்கிற உறுத்தலும் என்னுள் ஏற்படுகிறது. அவர் ஒரு முறை சொன்னார்: 'சிலரின் பேச்சுக்களால் என் மனம் புண்படுகிறபோது அவர்களது எழுத்துக்களைப் படித்து அப்புண்களை கொள்கிறேன்'' என்று. அப்படிப்பட்ட பேச்சுக்களைப் பேசியுமிருக்கிறேன். அத்தகு எழுத்துக்களையும் எழுதி யுமிருக்கிறேன். 


வழக்கம்போல் பத்து நிமிஷம் தாமதித்தே செல்கிறேன். மேலே குறிப்பிட்ட எண்ணங்களினாலும் இப்போது ஏற்பட்ட தாமதத்தினாலும்  அவரை ஏதிர்ப்பட்ட்ட மாத்திரத்தில்  இரு கரங்களையும் கூப்பி "மன்னிக்க வேண்டும்" என்ற வார்த்தைகளோடு எங்கள் இரண்டாவது

சந்திப்பைத் தொடங்குகிறேன்.


சந்திப்பின்போது என்னுடன் வந்திருந்த 'சுல்பனா' பதிப்பாசிரியர் திரு. கிருஷ்ணையாவைக் கலைஞருக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.


அவரை மொட்டையாகத் திரு. 'கருணாநிதி' என்று அழைப் பதா, திரு. மு.க என்று சொந்தத்தோடு குறிப்பிடுவதா என்கிற தடுமாற்றம் என்னுள் ஏற்படுகிறது. பொதுவாக இவரை மக்கள் 'கலைஞர்' என்றே குறிப்பிடுகின்றனர். ஒருவர் பெயரோ பட்டமோ ஒருவருக்குப் பொருந்திவர இதைவிடத் தகுந்த காரணம் தேவையில்லை. மேலும் கலைப்பணியில் இடையறாது இவரும் இவரது குடும்பத்தி னரும் ஈடுபட்டிருக்கின்றனர். இவரது தந்தையார்கூட ஒரு கலைஞரே.


ஏதோ ஒப்புக்காகப் பேசியதாக இல்லாமல் நான் அவரிடம் உளமார்ந்த மன்னிப்புக் கேட்டதற்கான காரணத்தையும் விளக்குகிறேன். திரு.மு.க. மனம் திறந்த சிரிப்போடு. இதையெல்லாம் பொருட்படுத்தினால் பொதுவாழ்வில் உயிர் தரித்து உலவ முடியுமா என்று சொல்லாமற் சொல்லி வரவேற்கிறார்.எனது கடுமையான விமர்சனங்கருக்காக மனம் புண்பட்ட தி.க. தோழர்களிடம் ஒரு முறை பெரியார் அவ்விதம் சொன்னதை நான் இப்போது எண்ணிக் கொள்கிறேன்.


திரு.முக சொல்கிறார்: 'அப்படியெல்லாம் நான் யார் மனமும் புண்படும்படி தனிப்பட்ட முறையில் பேசியதில்லை. கவிஞர் கண்ணதாசன்கூட என்னைப்பற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறார். அரசியல் ரீதியானவற்றைத் தவிர பிறவற்றுக்கு நான் ஏதும் சொன்னதில்லை. 

இப்போதுகூட நமது முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எனது இரண்டாவது மனைவியைப்பற்றி, தனிப்பட்ட முறையில் என்னைப் இழிவாக பேசியிருப்பதை அவரது பத்திரி கையிலேயே படித்திருப்பீர்கள்.''

ஜெ.கா: அவற்றையெல்லாம் நான் படிப்பதில்லை. மனம் புண்படுவதென்றால், தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனைப் பழிப்பதாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரு காலத்தில் நீங்கள் தமிழ் நாட்டு பிராமணர்களை மனம் புண்படப் பேசியிருக்கிறீர்கள். இது குறித்த உறுத்தலினால் அந்த விஷயத்தில் உங்கள் போக்கு மாறியும் இருக்கிறதே.


மு.க: பிராமணியத்தைத் தான் தாக்கியிருக்கிறோம். தனிப்பட்டவர்களை நான் தரக்குறைவாகப் பேசியதில்லை. தனிப்பட்ட முறையில் தாக்குவதால் ஏற்படுகிற தீம்பு என்னவென்றால், மாற்று அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு விடுகிற மோதல்களும் கலகங்களும்தான்.


ஜெ.கா: அது மிகவும் வருந்தத்தக்கதே. நாமாவது தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட கி முறையில் நமக்குள்ளே எந்தவித வெறுப்போ பகைமையோ இல்லை என்று சந்திக்கிற சந்தர்ப்பங்கள் கிடைக்கிறபோது அவர்களிடம் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதை  நான் ஒரு மரபாகக் கைக் கொள்கிறேன். சரி உங்களைப் பற்றி சொல்லுங்கள்.


மு.க.: நான் 1924 ல் அதாவது இப்போது அதிகமா அடிபடுகிறதே தமிழ்நாடு - கர்னாடக காவிரி நீர் ஒப்பந்தம்

அது கையெழுத்தான ஆண்டில் தஞ்சை மாவட்டம் திருக்குவளையில் பிறந்தேன். என் தகப்பனார் பெயர் முத்துவேல்.


ஜெ.கா: (குறுக்கிட்டு) முத்துவேல் பிள்ளை என்று சொல்லுங்கள். அதிலெல்லாம் நமக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அவர்கள் அதில் நம்பிக்கையையும் மரியாதை மரபையும் ஏற்படுத்தியவர்கள் இல்லையா? உதாரணமாக சாதிப் பேர்களை ஒழிப்பது என்ற பெயரால் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை என்னும் பெயரை மனோன்மணியம் சுந்தரம் என்று சொல்வது எவ்வளவு மரியாதைக் குறைவாகத் தொனிக்கும்? மரபு கெட்ட காரியமாக இருக்கும்?


மு.க.(சிரித்து): (எம்.ஜி.ஆரை நினைத்தார் போலும்): தமிழர் மரபுகளை அறியாதோரே இப்படிப்பட்ட தவறுகளைச் செய்வார்கள். என் தந்தை முத்துவேல் பிள்ளை மிகச் சிறந்த நாதசுரக் கலைஞர். அது மட்டுமல்லாமல் வேறு பல இசைக்கருவிகளையும் திறமையுடன் வாசிப்பார். தமிழிலும் சிறந்த புலமை உடையவர். என்னை இசைத் துறையில் இழுத்து விடவே அவர் பெரிதும் விரும்பினார்.


எங்களுக்குத் திருக்குவளையில் கோயில் மான்யமாகக் கிடைத்த நிலத்தில் உழவும், என் உறவினரிடம் இசையும் நான் இளம் பருவத்தில் பயின்றேன்.


ஜெ.கா: பள்ளிக்கூடத்தில் நீங்கள் கெட்டிக்கார மாணவராக இருந்தீர்கள் என்று நினைக்கிறீர்களா?


மு.க: ஆரம்பத்தில் நாள் நிறைய மார்க் வாங்கி மாவட்டத்திலேயே முதல் மாணவனாய் பெயர் எடுத்திருந்தேன். ஆனால் மிக இளம் வயதிலேயே சமூக

( தொடரும்)



.




.




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா