Tuesday, April 20, 2010

ஊருக்கு உழைப்பவன்

எல்லோர்க்கும் நன்மை செய்கிறேன்,,
என்னை புரிந்து கொள்ளத்தான் ஆள் இல்லை
***

இறைவன் இல்லை என
இங்கிலாந்து தெருக்களில்
பிட் நோட்டிஸ் விநியோகித்தேன்,,,

என்னப்பா செய்கிறாய்..
கேட்டார் பெரியார்..

உங்கள் பாணியில் சமூக சேவை செய்கிறேன் அய்யா
என்றேன் நான்...

வெங்காயம்... உன் தாய் நாட்டில், அவதி படுவோர் ஆயிரம்..
அவர்களை நினை...ஆண்டவனை மற...

நான் சொன்னதை வெறும் சடங்காக்கி
என் கொள்கைகளை முடக்காதே என்றார்...

*********

ஆண்டவனை நினைத்து தியானம் செய்தேன்...
என்னப்பா செய்கிறாய்...என்றான் இறைவன்...

இறை நிலை அடைய , தவம் செய்கிறேன் என்றேன்...

துன்ப படும் உயிர்களுக்கு , அன்பு காட்டு
இன்ப நிலை தானே வந்தெய்தும் என்றார் அவர்...

******
பெண் உரிமையை நிலை நாட்ட வேண்டும் ,

பெண் அவயங்களை எழுதி காட்டு,
தலைவர்களையும் இழிவு படுத்து...

பெண் விடுதலை வந்து விடும் என்றேன் நான்..

அட மூடனே ....
கிராமங்களில் பெண் படும் துயர் அநேகம்...
முடிந்தால் எதாவது நன்மை செய்..
இல்லை மூடி கொண்டு இரு...

என்னை விலகி சென்றாள் என் தோழி

*******
எல்லோர்க்கும் நன்மை செய்கிறேன்,,
என்னை புரிந்து கொள்ளத்தான் ஆள் இல்லை

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா