Wednesday, July 25, 2012

சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா? - ஹாலிவுட் இயக்குனர் க்றிஸ்டோஃபர் நோலன் பேட்டி





ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோஃபர்  நோலன் பல விஷ்யங்களைப்பற்றி பேசும் சுவையான பேட்டி உங்கள் பார்வைக்கு. 



உங்களுக்கு சினிமா ஆர்வம் எப்படி ஏற்பட்டது..எப்போது ஏற்பட்டது ?

  லண்டனில் வசித்தபோது படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். அப்போது என் வயது 7 . நானும் என் சகோதரனும், தன்னுடைய சூப்பர்8 கேமிராவை பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும் அன்பு என் தந்தையிடம் இருந்தது. சிறிய சண்டைபடங்களையும் , அறிவியல் கதைகளையும் அந்த கேமிராவில் படம் பிடிப்போம். நாங்கள் எடுத்த படம் எப்ப்டி வந்து இருக்கிறது என பார்ப்பதற்கு , அது ப்ரோசஸ் ஆகி வரும் வரை இரண்டு வாரங்கள் காத்து இருக்க வேண்டும். மறக்க முடியாத இனிய நாட்கள் அவை.

சினிமா எடுக்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய விஷ்யம் / சம்பவம் நினைவு இருக்கிறதா ?

 நான் சினிமாவை காதலித்தேன் . அவ்வளவுதான். என் பெற்றோர்கள் என் ஆர்வத்தை ஊக்குவித்தனர். அவர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். என் தந்தை ஆங்கிலேயர் , என் தாய் அமெரிக்க பெண். கொஞ்ச நாட்கள் சிக்காக்கோவில் இருந்தோம். பிறகு லண்டனில் குடியேறினோம். அங்குதான் நான் படித்தேன்.

சினிமாவைப்பற்றி படித்தீர்களா?

இல்லை.ஆங்கில இலக்கியம் படித்தேன். இந்த படிப்பினால்தான் , தாம் நினைப்பதை சொல்லும் சுதந்திரத்தை பல நூற்றாண்டுகளாக எழுத்தாளர்கள் அனுபவித்து வருவது என் சிந்தனையை தொட்டது. சினிமா படைப்பாளிகளுக்கும் இந்த சுதந்திரம் கிடைக்க வேண்டும் என எனக்கு தோன்றியது. எம்மா தாமஸும் நானும் பல்கலைக்கழகத்தின் திரைப்பட கழகத்தில் உறுப்பினர்களாக இருந்தோம். அங்கு படங்கள் திரையிடப்படும். டிக்கட் விற்பனையில் கிடைத்த பணத்தில் , கோடைக்காலத்தில் 16 mm படம் எடுத்தோம். எம்மா இப்போது என் மனைவி . என் அனைத்து படங்களின் தயாரிப்பாளர் அவர்தான். 

குழந்தைப்பருவத்தில் இருந்தே சினிமாவை காதலித்து வருவதாக சொன்னீர்கள். உங்களை கவர்ந்த சில படைப்ப்பாளிகள், படைப்புகள் பற்றி சொல்லுங்களேன். 

சிலரை மட்டும் சொல்வது கடினம்.   Stanley Kubrick, Terrence Malick, Ridley Scott   மற்றும் Nicholas Roeg போன்றோரை எப்போதும் ரசித்து வருகிறேன். 2001: A Space Odyssey, Chinatown and Lawrence of ArabiaAlien   மற்றும் Blade Runner  போன்ற படங்கள் மிகவும் பிடிக்க்கும். 

சினிமாவை உங்கள் தொழிலாக எடுத்து கொள்ள எப்போது முடிவு செய்தீர்கள் என நினைவு இருக்கிறதா?

எனக்கு 12 வயது இருக்கும்போது , ஒரு இயக்குனர் என்ன செய்கிறார் என ஒரு மாதிரியாக புரிந்தது. இயக்குனர் என்று ஒரு தொழில் இருப்பதை உணர்ந்தேன். அந்த கணம்தான் , நான் இன்று இயக்குனராக இருப்பதற்கு அடித்தளம் அமைத்தது என்பேன். 
.
உங்கள் திரைப்பயணம் எப்படி தொடங்கியது?

 என் முதல் படைப்பின் பெயர் “ Following “. அது ஒரு 16 எம் எம் கறுப்பு வெள்ளை படம். ஒரு திருடனை பின்  தொடரும் எழுத்தாளனின் கதை அது. கதை , இயக்கம் எல்லாம் நான் தான். தயாரிப்பாளர்களில் ஒருவர் எம்மா. திரை விழாக்களில் அது கவனம் பெற்றது. வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டினார்கள்.  இதனால் மெமெண்டோ படம் எடுக்க தேவையான பணம் திரட்ட முடிந்தது


மெமெண்டோ ஒரு தனித்துவமான படம்? எப்படி இதற்கான கரு கிடைத்தது ?


ஜோனாவின் சிறுகதை ஒன்றின் அடிப்படையில் அமைந்தது அது. அந்த கதையை அவர் முடிக்கவில்லை. அதைப்பற்றி அவர் சொன்னபோதே , அதற்கான திரைக்கதையை நான் அமைப்பதாக சொல்லிவிட்டேன். தன் ஷார்ட் டெர்ம் மெமரியை இழந்த ஒருவனின் கதையை எப்படி சொல்வது என தீர்மானிப்பதே என் முதல் வேலையாக இருந்தது.  அது சுவையான சவாலாக இருந்தது, 


ஒரு படத்தை இயக்குவது என்பது மிகப்பெரிய அர்ப்பணிப்பு தேவைப்படும் ஒன்று. ஒரு படத்தை இயக்க எந்த அடிப்படையில் முடிவு செய்கிறீர்கள்?


  ஒரு படத்தை இயக்காவிட்டால் , அதற்காக வருந்துவேனா என என்னை நானே கேட்டு கொள்வேன்.  நான் எடுக்கப்போக்கும் இந்த படம் , பார்ப்பதற்கு கிளர்ச்சியூட்டும் படமாக எனக்கு இருக்குமா ? இந்த் கதை வருடக்கணக்கில் என் மனதில் தங்கி இருக்குமா? இது போன்ற கேள்விகளை கேட்டு கொள்வேன். 

சினிமா பொழுது போக்குவதற்கு மட்டுமா அல்லது அதற்கு மேல் ஏதாவது இருக்கிறதா ?  

சினிமாவின் முதல் மற்றும் முக்கியமான நோக்கம் பொழுது போக்குதான். ஆனால் வரலாற்றை பார்த்தால் , அனைத்து வகை பொழுது போக்குகளுமே பொழுது போக்கு என்ற கருதுகோளை கடந்து செறு இருப்பதை காண முடியும் . பொழுது போக்கு பல வகைகளில் இருக்க முடியும். சீரியசாகவும் ,அறிவு பூர்வமாகவும் இருக்க முடியும். அல்லது அன்றாட கவலைகளில் இருந்து தப்பிக்க உதவும் கருவியாகவும் இருக்கலாம். பொழுது போக்கு என்ற உலகின் சாத்தியங்கள் ஏராளம். ஆனால் நம் யுகத்தில், கதை சொல்லும் முக்கிய ஊடகம் சினிமாதான் என நினைக்கிறேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன். புத்தகங்களையும் , நாடகங்களையும்  நேசிக்கிறேன். ஆனால் நம் கால கட்டத்தில் கதைக்கான ஊடகம் சினிமாதான் என்பது என் கருத்து. 

சினிமாவின் எதிர்காலம் என்ன ? எதிர்காலத்தில் மக்கள் செல்போன்களில் , வீட்டிலேயே சினிமா பார்ப்பார்களா? 

சினிமாவின் எதிர்காலத்தில் எனக்கு அபார நம்பிக்கை உண்டு.  முன் பின் தெரியாத பலருடன் சேர்ந்து அமர்ந்து , பெரிய திரையில் ஒரு கதை நம் முன் நிகழ்வதை பார்ப்பதில் இருக்கும் சந்தோஷமே தனி . னம் கற்பனைக்கு இடம் அளித்து , வேறோர் உலகத்துக்கு அழைத்து செல்கிறது இது. உலகம் முழுமைக்கும் இது பொருந்தும் என நினைக்கிறேன். 

வெற்றியின் ரகசியம் என்ன ? 

இதற்கு எளிதான ஒரு பதிலை  சொல்ல முடியாது. ஒரு படத்தை நேசித்து அதை செய்யுங்கள் . வேறொன்றுக்கு உங்களை அழைத்து செல்லும் படிக்கல்லாக நினைத்து அதை செய்யாதீர்கள். என்ன படம் எடுக்கிறீர்கள் என்பது முக்கியம் அன்று. கதை சொல்வதை நேசித்து , அதை செய்யுங்கள்  

***********************************************************************************************

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா