Sunday, July 1, 2012

நெய்வேலி புத்தக கண்காட்சி - ஒரு விசிட்

 நெய்வேலியில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடந்து வந்தாலும் , இதுவரை நான் சென்றதில்லை. தேவையான புத்தகங்களை சென்னையிலேயே வாங்கி கொள்ளலாமே என்ற எண்ணம் , நெய்வேலி செல்ல தடையாக இருந்தது.

ஆனால் இந்த முறை செல்ல வேண்டும் என்று தோன்றியது.  அங்கு புத்தக கண்காட்சி எப்படி நடக்கிறது என பார்க்க விரும்பினேன். நானும் ஒரு நண்பரும் ( பதிவுலகத்தில் இல்லாத நண்பர் ) செல்ல முடிவு செய்தோம்.

காலை சீக்கிரமே எழுந்து , ஏழு மணிக்கெல்லாம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தோம்.  நெய்வேலி பேருந்தில் ஏற இருந்த என்னை , நண்பர் சற்று தடுத்து நிறுத்தி , பயணத்தில் சிறு மாறுதல் செய்தார்.

நெய்வேலிக்கு , பாண்டிச்சேரி வழியாக சென்றால்தான் நல்லதாம். அவர் சதித்திட்டம் புரிந்தது.  நேரம் அதிகமாகும்தான். சரி, ஈ சி ஆர் சாலையில் ஜாலியாக செல்லும் திருப்தி எனக்கு கிடைக்கும்,..பாண்டி செல்லும் திருப்தி அவருக்கு கிடைக்கும்.. ஓகே என்றேன்.

அதன் பின் பாண்டி சென்று அவர் கடமைகளை முடித்து விட்டு நெய்வேலி சென்றபோது இரண்டு மணி. மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து , நூலக வளாகத்துக்கு பேருந்து வசதி இருக்கிறது.





சென்னையில்  நகர  நெரிசலில் புத்தக கண்காட்சியை கண்ட நமக்கு அமைதியான சூழலில் ஒரு கண்காட்சியை பார்ப்பது  புது அனுபவமாக இருந்தது.  நான் கவனித்த வகையில் சும்மா வேடிக்கை பார்க்க வந்தவர்கள் குறைவே,, உண்மையிலேயே படிப்பில் ஆர்வம் இருப்பவர்களே பெரும்பாலும் வந்து இருந்தனர். இதனால் தேவையற்ற கூட்டம் இல்லை.

மற்ற ஊர்களை விட நெய்வேலியில் வாசிப்பவர்கள் சதவிகிதம் அதிகம். அந்த ஊரின் தன்மை அப்படி.

முக்கியமான பதிப்பகங்களின் ஸ்டால்கள் இருந்தன. ஆனாலும் சில முன்னணி பதிப்பகங்களை காண முடியவில்லை. சென்னையை ஒப்பிட்டால் , ஸ்டால்களின் எண்ணிக்கை மிக குறைவுதான், ஆனாலும் புத்தகங்கள் அதே அளவுதான் இருக்கும். காரணம் சென்னையில் ஸ்டால்கள் பல இருந்தாலும் , ஒரே  வகை புத்தகங்கள்தான் பல ஸ்டால்களை பி( பீ )டித்து இருக்கும் . ஆன்மீகம் , சமையல் , அழகு குறிப்ப்புகள் , சுஜாதா , ரமணி சந்திரன் போன்றவை.

 நெய்வேலி கண்காட்சியில் இந்த பிரச்சினை இல்லை. எனவே தேவையானவ்ற்றை தேடி எடுக்க வசதியாக இருந்தது.

 தஞ்சை பல்கலை , அண்ணாமலை பல்கலை போன்றவற்றின் ஸ்டால்கள் என்னை கவர்ந்தன, பண்டைய தமிழ் நூல்களில் இரும்பின் பயன்பாடுகள் பற்றிய குறிப்புகள் இருப்பதை பற்றிய ஒரு புத்தகம் ஆச்சரியப்படுத்தியது. அதே போல பிற்கால சோழர் வரலாறு புத்தகமும் கவனிக்க வைத்தது.


 சில ஸ்டால்களில் ஆங்கில நாவல்களை மிக மலிவான விலைக்கு கொடுத்து கொண்டு இருந்தார்கள். பலர் ஆர்வமாக வாங்கி சென்றதை கவனிக்க முடிந்தது.

அதே போல ஆன்மிக ஸ்டால்களிலும் பயங்கர கூட்டம்.  இஸ்லாமிய புக் ஸ்டால்களில் , மாற்று மதத்தவர்களை அதிகம் காண முடிந்தது சந்தோஷமாக இருந்தது.

சாரு புத்தகம் ஆண்டுக்கு எட்டுதான் விற்கிறது என கணக்கு காட்டி ஏமாற்றிய பதிப்பகம் , சாருதான் தன் டிரம்ப் கார்ட் என உணர்ந்து அவர் புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து டிஸ்ப்ளே செய்து இருந்தது..

கண்காட்சிகளின் ஹீரோவான லிச்சி ஜூசும் இடம் பெற்று இருந்தது, நான் அந்த பகுதியில்தான் அதிகம் சுற்றினேன்.


ஓ ஹென்றி சிறுகதைகள்  வாங்கி பேருந்தில் சென்னை வருவதற்குள்ளாகவே படித்து விட்டேன். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் விரைவில் படிக்க வேண்டும்.

கார்ப்பரேட் சாமியார்கள் ஸ்டால்களில் வழக்கமான கூட்டம் இல்லை. சில கார்ப்பரேட் சாமியார்களின் ஸ்டால்களையே காண முடியவில்லை .
பணக்க்காரன் ஆவது எப்படி போன்ற புத்தகங்களுக்கும் முன்பு இருந்த ஆதரவு இல்லை. அதே நேரத்தில் இலக்கிய புத்தகங்களை கேட்டு வாங்குகிறார்கள்..
 நல்ல மாற்றம்தான்.

எட்டாம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது. நேரம் கிடைத்தால் போய் வாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.



1 comment:

  1. ஆர்ப்பாட்டமில்லாத அமைதின்னு சொல்லுங்க!

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா