Monday, November 25, 2013

சின்ன தாதாவுடன் நடந்த சண்டை , ஆதி மூல கிருஷ்ணனின் அட்வைஸ், வெட்டி பிளாக்கர்ஸ் சிறுகதைப்போட்டி

  நான் பதிவுலகில் நுழைந்தபோது , பதிவுலகில் எனக்கு என ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது முதல்தலைமுறை பதிவர்களான பரிசல் மற்றும் ஆதி இணைந்து நடத்திய சிறுகதை போட்டிதான்.


இணைய எழுத்தின் முன்னோடிகள் பலர் நடுவர்களாக இருந்து , சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்தார்கள். அதில் எனக்கு கிடைத்த பரிசும் , எனக்கு கிடைத்த கவனிப்பும் என் பொறுப்பை அதிகரித்தன. அதுவரை தினமும் எழுதவேண்டும் என்பதற்காக எதையாவது எழுதி வந்த நான் , அதன் பின் விஷ்யம் இருந்தால் மட்டும் எழுதலானேன்.

அந்த போட்டிக்கான பரிசை தபால் மூலம் அனுப்புவதாக ஆதி சொன்னார். ஓக்கே என சொல்லி இருந்தேன். அது வரை அவருடன் எனக்கு பழக்கம் கிடையாது. அடுத்த நாள் அவரே கால் செய்து பேசினார். இரவு 9.30 இருக்கும். வாழ்த்திய அவர் , நன்றாக எழுதுகிறீர்கள் , ஆனால் சில சமயம் பரபரப்புக்காக கொஞ்சம் எல்லை மீறி எழுதுகிறீர்கள் ..அது உங்களுக்கு அப்போதைக்கு ஒரு சென்சேஷனை தருமே ஒழிய , அதை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் , உங்களுக்கே அசிங்கமாக இருக்கும். யாராவது ஓர் இலக்கியவாதியோ , ஒரு வி.அய்.பியோ த்ற்செயலாக அதை பார்க்க நேர்ந்தால் , அதன்பின் ஒரு போதும் உங்களை மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு நேரம் இல்லை..ஏதேனும் ஒன்றை படித்து விட்டு , அதன் அடிப்படையில் உங்கள் மேல் கருத்தை உருவாக்கி கொள்வார்கள்..அதன்பின் அதை  மாற்ற முடியாது என்று சொல்லி விட்டு சில அனுபவங்களையும் சொன்னார். யாரென்றே தெரியாத என் மேல் அக்கறைகொண்டு இவ்வ்ளவு தூரம் பேசியது அவர்மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தியது. எனவே அவரை சந்திக்க விரும்பினேன்.

பரிசை அனுப்பாதீர்கள். நானே வந்து வாங்கி கொள்கிறேன் என சொல்லிவிட்டு , அவருக்கு உகந்த நேரத்தில் , அவர் இல்லம் சென்று அவர் கையாலேயே பரிசு பெற்றேன். தேனீர் அருந்தபடியே அவருடன் விவாதித்த சில விஷ்யங்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன.( குட்டிப்பையனாக அன்று பார்த்த அவர் பையன் இப்போது எப்படி இருக்கிறான்? ) 

அந்த சிறுகதைப்போட்டி ஓர் இனிய நினைவாக இன்னும் நினைவில் இருக்கிறது.. வெற்றியோ தோல்வியோ முக்கியம் இல்லை... அந்த போட்டிக்காக விதம் விதமாக எழுதிப்பார்த்தது... அனுப்பியது...அதனால் கிடைத்த ஃபீட் பேக். ஆரகனைசர்களின் பொறுப்புணர்ச்சி , போட்டிக்கதைகளுடன் நம் கதையை ஒப்பிட்டு பார்த்தல், முடிவுகளுக்காக காத்திருத்தல் என எண்ணற்ற சுவாரஸ்யங்கள்.

அடுத்து இன்னொரு அனுபவம். ஒரு சிறுகதைப்போட்டியின் நடுவர்களில் ஒருவராக நான் பொறுப்பேற்றிருந்தேன். போட்டிக்கு எழுதுவதை விட நடுவராக இருப்பது டென்ஷன் மிக்கது என உணர்ந்த கால கட்டம் அது..

அதில் ஒரு சுவாரஸ்யம். யார் எழுதிய கதை என்பது நடுவர்களுக்கு தெரியாது... சக நடுவர்கள் என்ன மதிப்பெண் வழங்கினார்கள் என்றும் தெரியாது.. கடைசியில் எல்லோருடைய மதிப்பெண்களும் தெரிய வரும்போது , ஒருவித ஆர்வத்துடன்  மற்றவர்கள் வழங்கிய மதிப்பெண்களுடன் நான் வழங்கிய மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்ப்பேன். காரணம் மற்ற நடுவர்கள் எல்லோருமே எழுத்தில் கில்லாடிகள்/...  இலக்கிய புலிகள்...  அவர்கள் நல்ல மார்க் வழங்கிய கதைக்கு நான் மட்டும் குறைவாக வழங்கினாலோ , அல்லது அவர்களால் புறக்கணிக்கப்பட்ட கதைக்கு நான் மட்டும் அதிக மார்க் வழங்கினாலோ , என் ரசனையில் ஏதோ பிரச்சனை என எனக்கு குழப்பம் ஏற்பட்டு இருக்கக்கூடும். எந்த நடுவர் எத்தனை மார்க் வழங்கினார் என்பது மற்றவர்களுக்கு தெரியாது... எனவே மற்றவர்கள் எதுவும் கேட்கப்போவதில்லை.. ஆனால் எனக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்கக்கூடும். நல்லவேளையாக , எல்லா நடுவர்களின் மதிப்பீடும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது.  யாரும் பேசி வைத்துக்கொண்டு செய்யாமல் இப்படி நிகழ்ந்தது ஆச்சர்யம்தான்.. 

ஆனாலும் அந்த போட்டியில் வாக்களிப்பு முறை என ஒன்று இருந்தது... அதாவது படிப்பவர்கள் யார் வேண்டுமாலும் வாக்களிக்கலாம். அந்த வாக்களிப்பின் முடிவுகள் , நடுவர்களின் முடிவை தலைகீழாக்கியது.. அதாவது அந்த போட்டியை பொறுத்தவரை போட்டி முடிவுகள் அறிவிக்கபடும்போதுதான் நடுவர்களுக்கே முடிவுகள் தெரியும்.  நாம் தேர்ந்தெடுத்த கதைகள் பரிசு பெறுமா என்ற பதைபதைப்பு நடுவர்களுக்கும் கடைசி வரை இருந்தது. 

இந்த கால கட்டத்தில் சிறுகதைகள் , அதன் இலக்கணங்கள், அதன் நவீன போக்குகள் , நுணுக்கங்கள் பற்றிய பல புத்தகங்களை தேடித்தேடி படித்தேன், வாங்கி படித்தேன்,, வரவழைத்து படித்தேன்,,, இரவல் வாங்கி படித்தேன் ( ஞாபகமாக திருப்பி கொடுத்து விட்டேன் ) ...  அந்த போட்டி எனக்கு கற்றுக்கொடுத்தது அனேகம்... 

இதை ஆர்கனைஸ் செய்த நண்பர் சின்ன தாதாவுடன் இந்த கால கட்டத்தில் நாள்தோறும் டிஸ்க்ஸ் செய்வேன்.  நானும் அவரும் பல்வேறு விஷ்யங்களில் இருதுருவங்கள்.. நான் சாரு ரசிகன் என்றால் , அவருக்கு சாருவை பிடிக்காது... எனக்கு மாண்புமிகு வாழும் வள்ளுவர் டாக்டர் கலைஞரின் கலைச்சேவை பிடிக்கும் என் றால் , அவருக்கு மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கலைச்சேவை  பிடிக்கும்...இப்படி இருந்தாலும் எங்களுக்குள் சண்டை வந்ததில்லை .. 

ஆனால் சிறுகதை போட்டி நடந்த கால கட்டத்தில் அடிக்கடி பிரச்சனை வரும். எனக்கு லேசான மனக்கசப்புகள் ஏற்பட்ட்டதுண்டு. உதாரணமாக வாக்களிப்பு முறை, மதிப்பெண் வழங்குவதில் சில விதிமுறைகள் நடுவர்களின் சுதந்திரத்துக்கு இடையூறாக இருந்தது போன்றவற்றை திருத்த சொன்னேன்.  நான் சொல்வதில் இருக்கும் நியாயத்தை அவர் ஒப்புக்கொண்டாலும் , என் ஒருவனுக்காக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயத்தை மாற்ற முடியாது என கறாராக சொல்லி விட்டார்.. இப்படி சில மனக்கசப்புகள் இருந்தாலும் , நல்லபடியாக நடந்து முடிந்தது மன நிறைவாக இருந்தது..

அதில் இன்னொரு விஷ்யம்...

யாரெல்லாம் நடுவர்கள் என அனைவருக்கும் தெரியும் என்றாலும்கூட , ஒருவர்கூட தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தமக்கு சாதகமாக நடக்கும்படி சொல்லவில்லை என்பதை என்றென்றும் மகிழ்ச்சியுடன் நினைவுகூர்வேன். அதேபோல , சக நடுவர்கள் யாரும் தொடர்பு கொண்டு , யாரையும் பிரமோட் செய்ய முயலவும் இல்லை என்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷ்யம்... பங்கேற்றவர்கள் , சக நடுவர்கள் , ஆர்கனைஸ்கர்கள் என அனைவரும் மிக மிக கண்ணியமாக நடந்து கொண்டதை என் வாழ்னாள் முழுக்க மறக்க மாட்டேன்

பரிசு பெறுவது, பெறாதது எல்லாம் இரண்டாம் பட்சம்..இது போன்ற அனுபவங்கள்தான் முக்கியம்..

அந்த வகையில் இணைய சிறுகதை போட்டிகள் என்றால் எனக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. போட்டியாளராக , ஆர்கனைசராக , நடுவராக , மார்க் ஷீட் போடுபவனாக , ஏதேனும் எடுபிடி வேலை செய்பவனாக என ஏதோ ஒரு வகையில் இது போன்ற போட்டிகளில் இணைந்து இருப்பதை எப்போதுமே விரும்புகிறேன்..

 இந்த நிலையில் , வெட்டி பிளாக்கர் குழுமம் நடத்தும் சிறுகதைப்போட்டி மகிழ்ச்சி அளித்தது.

சீனியர் பதிவர் , ஜூனியர் பதிவர் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் இதில் கலந்து கொண்டு , இதை ஒரு பெரிய கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என கேட்டுகொள்கிறேன்..

******************************************************

வெட்டி பிளாக்கர் நண்பர்கள் நடத்தும் வலைபதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி.

அனைத்து வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் நமது ப்ளாக்கர் நண்பர்களுக்கு என்று ஒரு குழுமம் ஆரம்பிக்க வேண்டும் என்று சென்னையில் யூத் பதிவர் சந்திப்பு டிஸ்கவரி புக் பேலஸ்சில் நடைபெற்ற போது முடிவெடுக்கப்பட்டு அவ்வாறே வெட்டி பிளாக்கர் என்கின்ற பெயரில் குழு தொடங்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக நம் பதிவுகளை பகிர ஒரு திரட்டியாகவும்நம் வலையுலக நண்பர்களுக்கு ஒரு நட்பு பாலமாகவும் திகழ்ந்து வருகின்றது…!

 ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று நண்பர்களால் முடிவெடுக்கப்பட்டு நடத்தப்படுகிறது. உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள்,திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வையில் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்;வெல்லுங்கள்.
  
பரிசுத் தொகை

முதல் பரிசு ரூ 5000

இரண்டாம் பரிசு ரூ 2500

மூன்றாம் பரிசு ரூ 1500

சிறப்பு பரிசு ரூ500 ஐந்து நபர்களுக்கு

விதிமுறைகள்.

1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)

2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.

3.இதுவரை எங்கும் வெளியாக கதைகளாக இருக்க வேண்டும்

4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

5. கதைக்களம் இலக்கியம்க்ரைம்சஸ்பென்ஸ்நகைச்சுவை எதுவாகவும் இருக்கலாம். கட்டுப்பாடுகள் கிடையாது.

6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப்பிளாக்கர் அட்மின்கள் கலந்து கொள்ளக் கூடாது.


கதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்
----------------------------------------------------------------------------------------------

உங்களுடைய கதைகளை உங்கள் பெயர்வலைத்தள முகவரிஉங்கள்தொடர்பு எண்  குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 25-11-2013 லிருந்து 25-12-2013 இரவு 12.00க்குள் அனுப்பவும். 
  • கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொதுவெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும். 
  • நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்படமாட்டாது
  • போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை வெளியிடக்கூடாது.
  • கதைகள் http://vettibloggers.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்


நடுவர்கள்
முதல் சுற்று நடுவர்கள்

கே.ஆர்.பி.செந்தில்
செங்கோவி
உணவுஉலகம் சங்கரலிங்கம்
மயிலன்
சிவக்குமார்
செல்வின்
தமிழ்வாசி
சங்கவி(சங்கமேஸ்வரன்)
வீடு.சுரேஷ்குமார்
முத்தரசு
ஆருர் மூனா செந்தில்

இரண்டாம் சுற்று நடுவர்கள்

பிச்சைக்காரன் (சாரு வாசகர் வட்டம்)
ராஜராஜேந்திரன் (சாரு வாசகர் வட்டம்)
செல்வேந்திரன்(விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்)

மூன்றாம் சுற்று நடுவர்கள்

வாமுகோமு (எழுத்தாளர்)
வா.மணிகண்டன் (எழுத்தாளர்)
அதிஷா (புதியதலைமுறை நிருபர் வலைப்பதிவர்)

ஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com  என்ற முகவரிக்கு மடல் வரைக.

1 comment:

  1. "னால் சில சமயம் பரபரப்புக்காக கொஞ்சம் எல்லை மீறி எழுதுகிறீர்கள் ..அது உங்களுக்கு அப்போதைக்கு ஒரு சென்சேஷனை தருமே ஒழிய , அதை கொஞ்ச நாள் கழித்து பார்த்தால் , உங்களுக்கே அசிங்கமாக இருக்கும்."

    அவர் அறிவுரை சொல்லியும் நீங்க இன்னும் திருந்தலையே

    விமர்சகர் வட்டம்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா