Tuesday, July 8, 2014

பெண்ணின் மூன்று நிலைகள் - ஒரு கட்டுடைப்பு


 நல்ல பேச்சாற்றல் கொண்ட யாரையாவது பாராட்டும்போது , உன் நாவில் சரஸ்வதி இருக்காடா என சிலர் பேச்சு வழக்கில் சொல்வார்கள்.. உண்மையில் சரஸ்வதி என ஓர்  ஆள்  நாக்கில் இருக்க முடியாது.. கல்வியை அல்லது ஞானத்தை உருவகித்து அப்படி சொல்கிறார்கள்..

 புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன்,,,அப்படியே நித்ராதேவி எனை தழுவ , தூக்கத்தில் ஆழ்ந்தேன் என பேச்சு வாக்கில் சொல்கிறீர்கள் என்றால் , கண்ட பெண்கள் உங்களை தழுவ அனுமதித்தீர்களா என உங்கள் மனைவி சண்டை போட்டு உங்களை டைவர்ஸ் செய்ய மாட்டார்.. நித்ராதேவி என தூக்கத்தை உருவகப்படுத்தி சொல்கிறார்கள்..

அதுபோல , மத நூல்களில் இருக்கும் கவித்துவமான கருத்துகளை ரசிக்க பழக வேண்டும். ஒளி உண்டாகக்கடவது என கடவுள் சொன்னதும் ஒளி உண்டாயிற்று என சொல்கிறார்கள் என்றால் அதை வரிக்கு வரி பொருள் கொள்ளாமல் , ஆழ்ந்து யோசித்து உள்ளே போக வேண்டும்..

உபனிஷத்துகள் , சூக்தங்கள் என பல இருக்கின்றன.. அதை எல்லாம் படிக்க நேரம் இருக்காது.. பரவாயில்லை.

ஆனால் திருமண மந்திரங்கள் அவ்வப்போது கேட்கிறோம். அவ்வபோது திருமணம் செய்து கொள்கிறோம் என சொல்லவில்லை.. திருமண நிகழ்வில் கலந்து கொள்ளும்போது கேட்கிறோம் அல்லவா. அவ்ற்றின் அர்த்தங்களை ரசனையோடு ரசித்து இருக்கிறோமோ..மெய்ப்பொருள் காண முயன்று இருக்கிறோமா என்றால் இல்லை ..

மாங்கல்யம் தந்துனானே என லேசாக தெரியும்.. அதன் பின் வரும் வரிகளை கவனியுங்கள்.. இதை கட்டுடைத்து பார்ப்போம்..

சோமஹ ப்ரதமோ விவிதே 
கந்தர்வோ விவித
 உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
 துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

மணப்பெண்ணே.. சந்திரனுக்கு உரியவளாக இருந்தாய்,,,, பிறகு கந்தர்வனுக்கு உரியவனாக இருந்தாய்,,, பிறகு அக்னி உன்னை அடைந்தது... கடைசியாக மனிதனை அடைகிறாய்,..

இதற்கு என்ன அர்த்தம்? இதை எப்படி ரசிப்பது.?

பெண்ணே... முதலில் சந்திரனுக்கு உரிய குளிர்ச்சியுடன் சிறுமி என்ற நிலையில் இருந்தாய்,..விளையாட்டுத்தனம் குறும்பு போன்ற இயல்புகளுடன் இருந்தாய்,, அதன் பின் அழகு தெய்வம் உன்னை ஆட்கொண்டது.. அழகுடன் பொலிவு பெற்றாய்... அதன் பின் பெண்மைக்கே உரிய உக்கிரமான  நெருப்பு உனக்குள் குடியேறியது...  பிடித்தவரை நேசித்தல் , பிடிக்காதவனை தூக்கி எறிதல் போன்றவற்றுக்கான தைரியம் குடியேறியது.. அப்படி முழுமையான பெண்ணாக மாறியுள்ள நீ இந்த மணமகனை கைப்பிடிக்கிறாய்..

இப்படி கவிப்பூர்வமாக சொல்கிறார்கள்... அக்னி அவளுக்குள் குடியேறி விட்டதா என பயப்படாதீர்கள்...அதெல்லாம் உருவகங்கள்தான்...    

சந்திரன் , கந்தர்வன் , அக்னிதேவன் என்பதெல்லாம் பாய் ஃபிரண்டுகள் பெயர் அன்று..  சந்திரனின் குளிர்ச்சி , தேவதைகளுக்குரிய அழகு , அக்னி பிழம்பை போன்ற துணிச்சல் என அவள் இருக்கிறாள் என்பதே அதன் அர்த்தம்... வாழ்க்கையை ரசித்து வாழுங்கள்..


இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க

நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா