Saturday, February 1, 2020

வானமே எல்லை திரைப்படமும் , நிஜ ஹீரோவும்

தன் மகன்  ஒரு பெண்ணை விரும்பாத தந்தை அதிரடியாக  அவள்  தாயை மணந்து விடுகிறார்.
இப்போது காதலியின் தாய் , தனக்கும் தாய் முறை என்பதால் , காதலி தனக்கு சகோதரி முறை ஆகி விடுகிறாள் . இப்படியாக காதலை முறியடிக்கிறார் தந்தை என்பது வானமே எல்லை படத்தில் பாலச்சந்தரின் சித்தரிப்பு

தக்காளி , நீ எப்ப இவ்வளவு கேவலமா சிந்திச்சியோ இனி நீ என் அப்பா இல்லை. உன் திருமணம் என் காதலை கட்டுப்படுத்தாது என மகன் சொல்வது போல காட்சி வைத்திருந்தால் மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள்.

ஆனால்"மக்கள் அன்று ஏற்காத வேறொரு கதையை துணிச்சலாக எழுதினார் ஜெயகாந்தன் .  அவர் எழுதிய விஷயம் இன்று இயல்பாகி விட்டது.


அது போல பாலச்சந்தரின் கதைக்கு நாம் கொடுக்கும் கிளைமேக்ஸ் ஏற்கப்படும் காலம் வர வேண்டும்.

இன்றைய செய்தி தாளில் ஒரு செய்தி. மகன் காதலை அப்பா ஏற்கவில்லை. ஆனால் ஏற்பது போல நடித்து அந்த பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்துள்ளார்

நடந்ததை அறிந்த மகன் , இனியும் அந்த மிருகம் தன் தந்தை இல்லை என முடிவெடுத்து , அவனை அடி வெளுத்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளான்(ர்)

தந்தை என்ற மிருகம் செய்த இழி செயலுக்கு அவன்தான் காலம் முழுக்க அழ வேண்டும் , தன் காதலி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என தீர்மானித்து தன் காதலியை உடனடியாக மணந்துள்ளார் அந்த இளைஞர்..  ஊரே அவர்களை வாழ்த்தியது.

ஜெயகாந்தனின் எழுத்தால்தான் சமூக மாற்றம் ஏற்பட்டது என சொல்ல முடியாது.  ஆனால் அவர் எழுத்தும் ஒரு காரணம் எனலாம்

அதுபோல  எழுத்தை தவமாக நினைத்து எழுதினால்தான் நல்ல மாற்றங்களை காண முடியும்

கீழ்த்தரமான எழுத்தை எழுதலும் தீது , படித்தலும் தீது , அத்தகையோரிடம் உறவாடலும் தீது


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா