Monday, March 16, 2020

டால்ஸ்டாயின் பாதிரியாரும் ஜெமோ−வின் மருத்துவரும்

டால்ஸ்டாயின் கதை ஒன்று

ஒரு பாதிரியார் ஒரு தீவில் வாழ்ந்து வரும் மூவரைப்பற்றிக் கேள்விப்பட்டு அவர்களுக்கு ஆன்மிகம் போதிக்கும் பொருட்டு அவர்களை பார்க்கச் செல்கிறார்
எங்களுக்கு ஆன்மிகமெல்லாம் தெரியாது
நீங்களும் மூவர். நாங்களும் மூவர். கருணை காட்டுங்கள் என பிரார்த்திப்போம் . அவ்வளவுதான் என்றார்கள் அவர்கள்
அவர்கள் நல்லெண்ணத்தை புரிந்து கொண்ட பாதிரியார் , சரியான பிரார்த்தனை மந்திரங்களை கற்றுக்கொடுத்து விட்டு , ஒரு படகில் அங்கிருந்து கிளம்புகிறார்
பாதி வழியில் யாரோ பின் தொடர்வதை உணர்கிறார்
ஒளி வெள்ளம். அந்த மூவரும் நதியின் மீது ஓடி வருகிறார்கள்
அவர்கள் முகத்திலும் தாடியிலும் அப்படி ஒரு பிரகாசம்
" நீங்கள் கற்பித்த மந்திரம் மறந்து விட்டது. மீண்டும் கற்பியுங்கள் " என்றனர்

" உங்களது தூய இதயத்தை கடவுள் புரிந்து கொண்டார். உங்களுக்கு நான் கற்றுத்தர எதுவுமில்லை. வழக்கம்போல உங்களது எளிய பிரார்த்தனையையே தொடருங்கள். எனக்காகவும் சேர்த்து வேண்டிக் கொள்ளுங்கள் " என,சொல்லி விட்டு கிளம்புகிறார் பாதிரியார்

ஜெயமோகனின் சர்வபூதேஷு கதையை படிக்க எனக்கு முதலில் பிடிக்கவில்லை.

யாதேவி என்ற மகத்தான வாசிப்பனுவத்தை அதன் தொடர்ச்சி பாதித்து விடுமோ என அஞ்சினேன்.

படித்தபின் இது வேறு ஒரு தளம் என புரிந்தது

பிரஞ்ஞை என்பது தோன்றாத நிலை , பிரஞ்ஞை மட்டும் உருவாகி மனம் தோன்றாத நிலை , மனம் தோன்றி ,விழிப்புணர்வு பெற்ற நிலை , மனம் கடந்த நிலை என்பதில் பல்வேறு யோசனைகளும் அறச்சிக்கல்களும் நேர்வது மூன்றாவது நிலையில்தான்

டால்ஸ்டாய் கதையில் அந்த பாதிரியார் இருப்பது மூன்றாவது நிலையில். அவர் மனப்பூர்வமாக நல்லது செய்ய நினைக்கிறார். அதை உயர்நிலை ஒன்று உண்டு என்ற அறிதல் அந்த கதையின் உச்சம்
ஆனால் சர்வபூதேஷு கதை சற்றே சிக்கலானது
சர்வபூதேஷு கதையின் உச்ச கணத்தை படிப்பவர்களின் மனப்பக்குவம்தான் முடிவு செய்ய முடியும்

ஶ்ரீதரன் , எல்லா , மாத்தன் என்ற மூன்று கதாபாத்திரங்களுமே டிரான்ஸ்பார்ம் ஆகி விடுகினறன மனதளவில் ஆன்மிக ரீதியான திறப்பு மூவரிலும் நிகழ்கிறது.

குறிப்பிட்ட ஒருவரை மையமாக்கிப்படித்தால் , ஒரு விதமாகவும் , வேறொருவரை மையமாக்கினால் வேறு விதமாகவும் தோன்றும் கதை. மையமற்ற வாசிப்புதான் பொருத்தமான வாசிப்பாக இருக்கும் என நினைக்கிறேன்

வேறோரு கட்டுரையில் ஜெயமோகன் இப்படி எழுதியிருப்பார்

கல்பற்றா நாராயணனுடம் ஒரு சின்னப் பயணம் சென்றிருந்தேன். ஒருவர் முழுப்போதையில் சாக்கடை வழியாக நடந்து கொண்டிருந்தார். புன்னகையுடன் கல்பற்றா சொன்னார். “அப்படியும் ஒரு வழி இருக்கலாமே ”

இந்த தற்செயலான வரியை கதையுடன் பொருத்திப்பார்த்தால் , குருகுல வாசம் கட்டுப்பாடுகள் போன்றவை ஒரு வழி என்றால் கட்டற்ற பாலியல் , கட்டற்ற வாழ்க்கை போன்றவையும் சிலருக்கு வழிகளாக இருந்தது நினைவுக்கு வந்தது


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா