Wednesday, March 4, 2020

சுஜாதா , இளையராஜா.அனைவருடனும் மோதிய சு.சமுத்திரம்

சு. சமுத்திரம் அவர்களின் நாவல் ஒன்று திரைப்படமாக்கப்பட்டது.

அதற்கு இசை இளையராஜா.

சமுத்திரம் பற்றிக் கேள்விப்பட்டிருந்த இளையராஜா , அவரை சந்திக்க விரும்பினார். சந்திப்பு ஏற்பாடானது;
வெறும் பத்துப் பிரதிகள் விற்கும் பத்திரிக்கையில் எழுத வாய்ப்பு அல்லது டிவி வாய்ப்பு போன்ற அல்ப லாபங்களுக்காக சமரசங்கள் செய்வது அதற்கேற்ற அரசியல் நிலைப்பாடுகள் எடுக்கும் மக்களைப் பார்ப்பவர்கள் நான்

சமுத்திரத்திற்கு சினிமாவில் பாட்டெழுத ஆர்வம் இருந்தது.  அவர் மட்டும் சற்று நீக்குப்போக்காக இணைய மொண்ணைகள் பார்முலாவை பயன்படுத்தி இருந்தால் அவர் இளையராஜா இசையில் பாடல் வாய்ப்பு பெற்றிருக்கலாம்.

ஆனால் அவர் இளையராஜாவுக்கு ஜால்ரா அடிக்கவில்லை. கலை என்பது கலைக்காகவே என்ற ராஜாவின் பார்வையை எதிர்த்து வாதிட்டார். அடித்தட்டு மக்களுக்குப் போராட தான் எழுத்தை பயன்படுத்துவதுபோல ராஜா இசையை பயன்படுத்த வேண்டும் என்றார். கலையின் நோக்கம் பிரச்சாரம் அல்ல என்றார் ராஜா. அந்த விதம் கடும் சண்டையாக மாறி , பிறர் வந்து சமாதானப்படுத்த வேண்டியதாயிற்று;

அந்த அளவுக்கு தன் கொள்கையில் உறுதியாக இருந்தவர் அவர்

அதனால்தான் அவரால் விமர்சிக்கப்பட்ட கலைஞர் , அவர் நூலை வெளியிட்டுப் பேச ஒப்புக் கொண்டார்.

சமுத்திரம் என்னை முழுமையாக ஆதரிப்பவர் அல்லர். ஆனால் அவர் எழுத்தை மதிக்கும்பொருட்டு இதில் கலந்து கொள்கிறேன் என்றார்;

சமுத்திரத்தின் சோற்றுப்பட்டாளம் , வாடாமல்லி போன்ற பல நாவல்கள் புகழ் பெற்றவை

என்னளவில் அவர் நூல்களில் எனக்குப் பிடித்தது அவரது  " எனது கதைகளின் கதை " என்ற நூல்

கதைக்கான கருக்கள் எப்படி கிடைக்கின்றன ,  அவை எப்படி கதையாக மாறுகின்றன என அழகாக விவரிக்கிறார்

இண்டர்நெட்டிதேடி , உலகப்படங்கள் பார்த்து கதைக்கருவை பிடிக்கும் தேவை அவருக்கு இருந்ததில்லை. அவர் வகித்த"உயரிய பதவி , ஓய்வு பெற்ற பின்னும் அவர் ஈடுபட்ட சமூக சேவை ஆகியவற்றாலும் அவரது முன்கோபம்", சமசரசமற்ற தன்மையாலும் ஏராளமான நேரடி அனுபவங்கள் பெற்றார். அவற்றை இந்நூலில் பகிர்கிறார்

குடித்து விட்டு மனைவியை கொடுமைப்படுத்துகிறவனை கண்டிக்கிறார். குடியை கைவிட்டால் தொழில் ரீதியாக உதவுவதாக சொல்கிறார். அவன் ஏற்கிறான். கொஞ்ச நாள் கழித்து அவன் குடிப்பதை பார்த்து,அதிர்கிறார். விசாரித்தால் அவனை குடிக்கச்,சொன்னது மனைவிதான். ஏன் என்பது சுவாரஸ்யம்

தான் கறுப்பு என்ற தாழ்வு மனப்பான்மையில் இருப்பவரை , செல்லமாக " மூஞ்சியப்பாரு . " என"கேலியாக சொல்கிறாள் ஒரு பெண். அதில் இருக்கும் காதலை புரிந்து கொள்ளாமல் அவளை இழந்து விட்டதை பிற்கால சந்திப்பில் உணர்கிறார்
ஒரு ஏழைத்தாய் கிடைக்கும் உணவை குழந்தைக்கு தராமல் தானே உண்கிறாள். ஏன் என்பது மனதை உருக்குகிறது

அவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்ததை கணையாழி கேலியாக எழுதியது.

அது சாதிய வெறி என விட்டுவிடலாம். ஆனால் சுஜாதாவுமேகூட கேலியாக எழுதினார். சுஜாதாவின் அந்த காழ்புணர்ச்சிக்கு என்ன காரணம் என்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது இப்படி பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்யம்.

படியுங்கள்

பிகு...  சமுத்திரத்தை கேலி செய்த சுஜாதா அதே கட்டுரையில் ஜெயமோகனையும் சீண்டியிருந்தார்






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா