Monday, June 1, 2020

மேதைகளின் மோதல் .. சிவாஜி , டிஎம்எஸ் , சீர்காழி, அகிலன்


அந்த காலத்தில் சிவாஜி , எம்ஜிஆருக்கு டிஎம் எஸ்தான் பாடுவார்
இருவருக்கும் ஏற்றமாதிரி வேறுபட்ட பாணிகளில் பாடுவார்

இந்த சூழலில் குங்குமம் படத்தில் சின்னஞ்சிறிய வண்ணப் பறவை என்றொரு பாடல்.. வழக்கம்போல டிஎம் எஸ் சை அணுகினர்

இசை அமைப்பாளர் சொன்ன மெட்டை கேட்ட டிஎம்ஸ் இது எனக்கு செட் ஆகாது .உணர்வுடன் , baவத்துடன் பாடுவது என் பாணி. இந்த பாடல் ராகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாடல். பிருகாக்கள் அழகாக இடம் பெற்றுள்ளன. இதைப்பாட நான் தகுதியானவன் அல்லன்.  சீர்காழி கோவிந்தராஜன் இது போன்ற பிருகாக்களை துல்லியமாக தன் குரலில் கொண்டு வருவபவர். அவரைப் அணுகுங்கள் என்றார்

அதன்படி சீர்காழியை பாட வைத்தனர்

பாடலை கேட்ட சிவாஜி , பாடல் அற்புதம். ஆனால் நான் பாடுவது போல இல்லை. உணர்வு இல்லை.  டி எம் எஸ் ஸையேபாட வையுங்கள் பாட வையுங்கள் என்றார்
அதன்பின் பாடலின் ராக அம்சங்களை நீர்த்துப்போகச்செய்து ஜனரஞ்சகப்படுத்தி டிஎம்எஸ்ஸை பாட வைத்தனர்.  சீர்காழி பாடிய வெர்ஷனை தன்னால் பாடியிருக்க முடியாது என டிஎம்எஸ் பல மேடைகளில் பெருந்தன்மையாக தன்னை தாழ்த்திக் கொண்டு பேசியிருக்கிறார்.ஆனால் சீர்காழிக்கு சிவாஜி மேல் வருத்தம்தான்

பிறருக்கு விருந்து சாப்பாடு போடுங்கள் . வேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் என் எச்சில் இலையில் பிறரை சப்பிட வைக்காதீர்கள் என அவரிடமே தன் கோபத்தை நேரடியாக காட்டினார்

ஆனாலும் சிவாஜி சீர்காழி மேல் கோபப்படவில்லை.
சிவாஜி படங்களில் பிற பாத்திரங்களுக்கோ , அசரீரியாகவோ அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன

இதுபோல இன்னொரு சம்பவம்

பாவை விளக்கு படத்தில் காவியமா நெஞ்சின் ஓவியமா என்ற பாடல் தாஜ்மகாலில் படமாக்கப்பட்டது.

கதாசிரியர் அகிலனுக்கு பிடிக்கவில்லை. இயக்குனர் காரணம் கேட்டார்.
சிவாஜி சில்க் ஜிப்பா அணிந்திருப்பது கதாபாத்திர இயல்பையோ உணர்வையோ பிரதிபலிக்கவில்லை. நான் எழுதியபடி கதர்ச்சட்டைதான் பொருத்தமாக இருக்கும் என்றார்

சிவாஜியிடம் இந்த பிரச்சனை சென்றது
அவர் அகிலனை தனியாக அழைத்துச் சென்று பேசினார்
கதையை நீங்கள் அழகாக படைத்து விட்டீர்கள். அந்த உணர்வை காட்சி வடிவால் எப்படி கொண்டுவருவது என இயக்குனர் , ஒளிப்பதிவாளர் என பலர் யோசிக்கிறார்கள். நானும் என் பங்கை ஆற்றுகிறேன். சில்க் ஜிப்பா காற்றில் அசைகையில் அது ஒரு ஃபீல் உருவாக்கும்.  நீங்கள் சித்தரித்த உணர்வு காட்சி வடிவில் வந்து விடும். அதை செயல்படுத்ததான் அனைவரும் உழைக்கிறோம் என்றார் சிவாஜி

இதைக்கேட்ட அகிலன் , கதாசிரியன் அன்ற எல்லையை தாண்டி நான் பேசி இருந்தால் வருந்துகிறேன். இது ஒரு கூட்டு முயற்சி என்பதை ஏற்கிறேன் என்றார்

அடடா..  இதற்கு ஏன் வருத்தம் ? நீங்கள் கோட்டும் ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சிதான். அதனால்தானே கதாசிரியரான உங்களை படப்பிடிப்புக்கு அழைத்து வந்திருக்கிறோம். உங்கள் கலுத்துகளை சொல்ல தயங்காதீர்கள். என சொன்னார் சிவாஜி.
இருவரும் கட்டிஅணைத்துக் கொண்டனர்
ஒரு அழகான நட்பு உருவாகி கடைசி வரை நீடித்தது

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா