Sunday, May 23, 2021

மறக்க முடியாத பிரார்த்தனை


 கடவுள் என ஒருவர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாத ஒன்று


ஆனால் பிரார்த்தனைகள் நிகழ்த்தும் அதிசயங்களை அவ்வப்போது கேட்கிறேன் ,  நானும் அனுபவிக்கிறேன்


என் சிறுவயதில் , ஒரு முறை உறவினர் வீடு ஒன்றில் மொட்டை மாடியின் மேல் தளத்தில் சிமெண்ட் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.  திடீரென மழை மேகங்கள் சூழ்ந்தன.

மழை பெய்து சிமெண்ட் அடித்து செல்லப்பட்டால் அவருக்கு தாங்கவே முடியாத,நஷ்டம் ஏற்படும்

மழை பெய்தால்  இப்படி சேதம் ஏற்படும் சூழல் பிற்காலத்தில் வந்தபோது பெரிய பாலித்தீன் ஷீட்டுகளை உடனே வாங்கி"வந்து போர்த்தி விட்டு சேதத்தை தவிர்த்த அனுபவம் எனக்குண்டு;

ஆனால்  நான் சொல்லும் சம்பவம் நடந்த இடம் ஒரு கிராமம்.  பாலித்தீன் ஷீட்டுகளோ வேறு  ஏற்பாடுகளோ செய்ய முடியாத சூழல்


அப்படி ஒரு கையறு நிலையில், பிராரத்தனையையே"அவர் நம்பினார்

பிரார்த்தனை என்பது இயல்பான ஒன்று. ஆனால் இந்த சம்பவம் ஏன் மனதில் நிற்கிறது என்றால் அவர் யாரிடம் பிரார்த்தனை செய்தார் என்பதால்தான்;

அவர் திருநீறுடன் காட்சி அளிக்கும் ஹிந்து  ஆனால்  அவர்,பிராரத்தனை செய்தது மேரி மாதாவிடம்;

என்ன ஆச்சர்யம் என்றால் மழை மேகங்கள் விரைவிலேயே கலைந்து விட்டன   நிம்மதிப் பெருமூச்சு விட்டார்

இரண்டு நாட்கள் கழித்து மழை அடித்துக்கொட்டி மேலும் நன்மையை செய்தது

அவர் தன் நன்றிக்கடனை செலுத்தியது புளியால் பெரியநாயகி  தேவாலயத்தில்.

அந்த ஊர் மாதாவின் பெயர்தான் பெரியநாயகி..

புளியால்  என்ற ஊர் காரைக்குடியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது

அந்த சம்பவத்துக்குப்பிறகு நானும் சிலமுறைகள் சென்றுள்ளேன்

அவரவர் இறையவர் குறைவிலர்


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா