Friday, September 24, 2010

அய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆரம்பம்

அயோத்தி பிரச்சினையில் இன்று தீர்ப்பு வர இருந்தது..

வந்து இருந்தால் , இந்நேரம் பெரிய கலவரம் வெடித்து இருக்கும் . எந்த தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து இருந்தாலும் , கலவரம் உறுதி...

ஆனாலும் தமிழ் நாட்டில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.. மத பிரச்சினையில் வாடா மானிலங்கள பாதிக்கப்பட்ட அளவுக்கு , வரலாற்று ரீதியாக தமிழ்நாடு பாதிக்கப்படதில்லை.. எனவேதான் இந்த பிரச்சினையின் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை...

ஆனால் வட மாநிலங்க்லின் நிலை வேறு.. அவர்கள் வலி, வேதனை, காயங்கள் எல்லாம் மறக்க கூடியவை அல்ல . எல்லா தரப்புமே வேதனையை சுமக்கும் நிலை..

இந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே பிரசினையை தீர்க்க சிலர் முயற்சியை ஆரம்பித்து உள்ளனர்... வேறு வழியில்லை... நல்லொதொரு தீர்வுக்கு இருதரப்பும் முன் வர வேண்டும்... அரசியல்வாதிலை நம்பி பயனில்லை.. கோர்ட் சொல்லும் தீர்ப்பை உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் ஏற்பார்களா என்பதும் சந்தேகம்..
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் ஒய்வு பெற இருக்கிறார்.. அகவே அடுத்த வாரம் திருப்பு வர வில்லை என்றால், புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பின்தான் தீர்ப்பு வரும்.. அதற்கு மிக அதிக காலம் ஆகும் ..

இந்த நிலையில் முஸ்லிம் சட்ட வாரிய துணை தலைவர் மவுலான சாதிக், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும என நம்பிக்கை தெரிவுத்துள்ளார்.. அதற்காக சில முயற்சிகளையும் அவர் துவக்கி இருக்கிறார்.
அவருக்கு ஆதரவு இருந்தாலும், பேசி தீர்க்கும் காலம் கடந்து விட்டது என நினைப்பவர்களும் இரு தரப்பிலும் இருக்கிறார்கள்..

இது வரை பேச்சுவார்த்தை எதுவும் முழு மனதுடன் நடக்கவில்லை.. இனிமேலாவது பெரும்பாலானோர் ஆதரவுடன் பேச்சுக்கள் நடந்தால், நிச்சயம் நல்ல தீர்வு பிறக்கும் என்கின்றனர் பேச்சு வார்த்தை விரும்பிகள்.
பேச்சுவார்த்தையின் அனைத்து சாத்தியங்களையும் பார்த்து விட்டு , கடைசியில்தான் கோர்ட்டுக்கு போக வேண்டும்... இன்னும் உண்மையான பேச்சு தொடங்கவே இல்லைஎ என்பது இவர்கள் வருத்தம்..

லக்னோவில் அனைவர் கவனமும் குவிந்துள்ளது... இருபத்து எட்டாம் தேதி கோர்ட் கூடும் போது , இது நம்பிக்கை சார்ந்த விஷயம் .. கோர்ட்டுக்கு வெளியில்தான் முடிவெடுக்க வேண்டும் என சொல்பவர்களின் கைதான் ஓங்கும் வாய்ப்பு அதிகம்..

தீர்ப்பு அப்போது வரவில்லை என்றால் , இனி எப்போதுமே தீர்ப்புக்கு அவசியம் இல்லாத நிலைதான் உருவாகும் .. அப்படியே அவசியம் இருந்தாலும் , நீதிபதி ஒய்வு பெறுவதால், தீர்ப்பு வர வெகு காலம் காத்து இருக்க வேண்டும்..

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா