Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Tuesday, May 24, 2011

ஏன் ? ஏன் ? ஏன் ?

செய்தி தாள்களை , பத்திரிக்கைகளை படிக்கும் போது , சில சம்பவங்களை பார்க்கும்போது ஏன் இப்படி என கேட்க வைக்கின்றன சில செய்திகள்..




1 முன்பெல்லாம் பத்திரிகைளில் கவிஞர் கனிமொழி என குறிப்பிட்டுவார்கள்..இப்போது கருணாநிதியின் மகள் என்றோ திமுக எம் பி என்றோ குறிப்பிடுகிறார்கள்... ஏன்?



2 ஊழல்தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என பலரும் எழுதுகிறார்கள்... இலங்கை பிரச்சினையையும் ஒரு காரணம் என யாரும் எழுதுவதில்லையே ? ஏன் ?



3 சினிமாவில் ஒரு கட்சியையோ, இயக்கத்தையோ நேரடியாக திட்டுவது போல காட்சி இருக்காது.. ஆனால் கோ படத்தில் நக்சல் இயக்கத்தை நேரடியாக பெயர் சொல்லி திட்ட அனுமதித்து இருக்கிறார்களே ? ஏன் ?



4 முன்பு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பு , இப்போது கனி மொழி கைது செய்யப்பட்ட போது ஏற்படவில்லையே ?ஏன் ?



5 சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ஸ்டீபன் ஹாவ்கிங் புத்தகத்தில் கடவுள் குறித்த கருத்துக்கள், மத நூல்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன ( நேரடியாக பார்த்தல் அவர் கடவுள் இல்லை என சொல்வது போல தோன்றினாலும் ) .. ஆன்மீக பதிவர்கள் இது குறித்து எதுவும் இன்னும் கருத்து சொல்லவில்லையே? ஏன் ?

Monday, March 7, 2011

கருணை கொலை- நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

முப்பது ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கும் நர்ஸ் அருணாவின் கருணை கொலை வழக்கில் நூதனமான தீர்ப்பு வழங்கபட்டது..

நர்சாக பணியாற்றிய வந்தவர் அருணா ஷான்பாக்.. ஒரு நாள் பணியின் போது, ஒரு மனித  மிருகம், அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்த்யது.. இதனால் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது...
சுய  நினைவு இல்லாமல் கோமா நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்..
எத்தனை நாட்களாக?
நாட்கள் இல்லை... வாரங்கள் இல்லை... மாதங்களும் இல்லை..

முப்பத்து ஆறு ஆண்டுகள் !!!!!

ஒரு மிருகத்தின் ஒரு நாள் வெறி செயல் ஒரு பெண்ணின் வாழ்வையே அழித்து விட்டது...

தன இளமை, கனவுகள், வாழ்க்கை , லட்சியம் அனைத்தையும் தொலைத்து ஒரு பொருள் போல, நாற்காலி மேஜை போல, மருத்துவ மனையில் இருக்கிறார்..

அவர் உடல் மிகவும் பலவீன ம அடைந்து விட்டது.. இனி குணம் அடைய வாய்ப்பில்லை என்ற நிலையில், அவரை கருணை கொலை செய்ய அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது..
இப்படி கருணை கொலை செய்வது இந்தியாவில் சட்ட விரோதம்...
எனவே தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத பட்டது..

சுய நினவு இல்லாமல் இருக்கும் ஒருவரை கொல்வது அயோக்கியத்தனமானது என்று ஒரு வாதம் வைக்கப்பட்ட்டது... தான் அடைந்து வரும் வேதனையை சொல்லக்கூட முடியாமல் , நினைக்க கூட முடியாமல் இருக்கும் ஒருவரை, வலி இல்லாமல் அமைதியான முறையில், கொல்வது நல்லது என வாதாடினர் சிலர்..
இந்த நிலையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது..

அவரது பரிதாப நிலையை கருத்தில் கொண்டுள்ளோம்... ஆனால் அவரை விஷ ஊசி போட்டோ, வேறு வகையிலோ கொல்ல கூடாது..  அவருக்கு வழங்கப்பட்டும் சிகிச்சையை நிறுத்தி விடுங்கள்.. மருத்துவ கண்காணிப்பில், உயிர் காக்கும் சிகிச்சையை நிறுத்து விட்டால் அவர் இறந்து விடுவார்..
இது கொலை என்பதில் வராது...

இதற்கு பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்...

அவர் வாழ்வு வேதனையாக அமைந்து விட்டது.. அவர் மரணமாவது இயற்கையாக , அமைதியாக நிகழட்டும் என்கின்றனர் ..
அனால் இனி எந்த ஒரு பெண்ணும்  மிக மிக  சிறிய அளவில் கூட, பாலியல் தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்கும் நிலையை உருவாக்குவதே , நர்ஸ் அருணாவுக்கு நாம் கொடுக்கும் நஷ்ட ஈடாக இருக்க முடியும்...

Thursday, March 3, 2011

தேர்தல் முடிவுகள் என்ன ? காங்கிரஸ் நடத்திய ஆய்வு முடிவுகள்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என காங்கிரஸ் கட்சி எடுத்த கருத்து கணிப்பு, அந்த கட்சிக்கும் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து தந்துள்ளது..

வங்கம், கேரளம், தமிழ்நாடு, பாண்டி போன்ற இடங்களில் தேர்தல் நடப்பதை ஒட்டி, அனைவரும் கல வேலைகளை ஆரம்பித்து விட்டனர்..

சற்று வேகமாக , ஆளும் கட்சி என்ற தெம்பில், காங்கிரஸ் கருத்து கணிப்பு நடத்தி பார்த்தது ...

வந்த முடிவு களிப்பையும் , கலக்கத்தையும் தந்துள்ளது..

முடிவுகள் என்ன ?

*************************************************
கேரளா ( களிப்பு )

மொத்த இடங்கள் : 140

காங்கிரஸ்    கூட்டணி      : 100
இடது சாரி கூட்டணி        : 40


மேற்கு வங்காளம் ( திருப்பு முனையா என்பது கூட்டணியை பொறுத்து )

மொத்த இடங்கள் ; 294

காங்கிரஸ் மம்தா கூட்டணி : 202

இடது சாரி                            :  89

பி ஜே பி                                 : 3

ஆனால் மம்தா கூட்டணி இல்லாவிட்டால், நிலை தலை கீழ் ஆகும்


அஸ்ஸாம் ( மெஜாரிட்டி இல்லை )

மொத்த்தம் : 126


ஏஜீபி : 39

பி ஜே பி : 26
ஏ யு டி எப் : 19
காங்கிரஸ் : 42

இதில் காங்கிரசும் , ஏ யு டி எப்பும் கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 82  இடங்களில் வெற்றி பெற்று , பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கலாம்

தமிழ்நாடு ( மாற்றம் )

மொத்தம் ; 234

காங் , தி மு க :  77
எதிர்கட்சிகள்   : 152

பி ஜே பி , மற்றவை : 5

ஆனால் , இறுதி நேர கூட்டணி , நிலையை மாற்றலாம்


பாண்டிசேரி 

மொத்தம்  30

அண்ணா திமுக : 19
தி  மு க   : 11


***********************************

இந்த அடிப்படையில் காங்கிரஸ் நிலையை கவனித்து வியுகம் அமைத்து வருகிறது









Thursday, November 25, 2010

உலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், சுரங்கத்தில் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக பலி- நியுசிலாந்து கொடூரம்

நியுசிலாந்தில், ஐந்து நாட்களாக சுரங்கத்தில் சிக்கி , உயிருக்கு போராடிய தொழிலாளர்கள் அனைவரும் (இருபத்து ஒன்பது பேர் ) , காப்பாற்ற வழியின்றி இறந்தது அந்த நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது... நாடே துக்கத்தில் மூழ்கி இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் வேதனை தெரிவித்துள்ளார்..




கடந்த வெள்ளியன்று , நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலளர்கள், மீத்தேன் வாயு வெடித்து சிதறியதால், சுரங்கத்தில் சிக்கினர்... இருவர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக தப்பினர்..



பதினேழு வயது முதல் அறுபது வயது வரையிலான தொழிலார்கள் இவர்கள்...



உடனடியாக இவர்களை காப்பாற்றுமாறு, அவர்களின் உறவினர்கள் முறையிட்டனர்..



மீண்டும் மீத்தேன் வெடிப்பு ஏற்பட கூடும் என்ற பயம் மீட்பு பணியினரின் வேலையை தாமதப்படுத்தியது...



எனவே நச்சு வாயுக்களை கண்டு பிடிக்கும் எலெக்ட்ரானிக் கருவிகளும் , ரோபோக்களும் பயன்படுத்தப்பட்டன..



சிக்கியவர்கள் காப்பாற்றுங்கள் என அழுது புரண்டனர்.. ஆனால் சிக்கியவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை... இப்போது மீட்பு படையை அனுப்ப்பினால், அவர்களும் சேர்ந்து இறக்க நேரிடும் என்று நிர்வாகம் தயங்கியது.. எனவே இழுபறி நீடித்தது..



கடைசியாக, அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து மீட்பு படை அனுப்ப முடிவு எடுக்கப்படபோது, இன்னொரு முறை மீத்தேன் வெடிப்பு நிகழ்ந்தது...



சுரங்க முதன்மை நிர்வாகி பீட்டர் விட்டால் கூறுகையில், " அனைவரும இறந்து விட்டார்கள்... இறந்த உடல்களை எடுப்பது கூட முடியாத காரியம்.. மீண்டும் விபத்து நிகழலாம் .. இரண்டாவது விபத்துக்கு முன்பே அவர்கள் இறந்து இருப்பார்கள்.. மீட்பு படையை அனுப்பி இருந்தால் அவர்களு சேர்ந்துதான் இறந்து இருப்பார்கள்.. எனவே நாங்கள் தாமதம் செய்ததாக சொல்வது தவறு " என்றார்..



இறந்தவர்களின் உறவினர்களோ , "உடனடியாக செயல்பட்டு இருந்தால் காப்பாற்றி இருக்கலாம்.. இனி உண்மை வெளிவர வாய்ப்பில்லை.. இரண்டாம் விபத்துக்கு முன் தாங்கள் உயிருடன் இருந்ததாக சாட்சி சொல்ல யார்டும் வரப்போவதில்லை " என சோகத்துடன் சொல்கின்றனர்..



நம் நாடு சிறிய நாடு... இதில் இத்தனை பேர் ஒட்டு மொத்தமாக இறந்தது , நமக்கு பெரிய இழப்பு.. நம் சகோதர்களை இழந்து நாடே சோகத்தில் மூழ்கி உள்ளது என நியுசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்..



உலகம் எங்கும் பாதிக்கப்படுவது அப்பாவி தொழிலாளர்கள் தான் போல ...

Friday, November 12, 2010

சிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செய்து நீதி நூல்களை படிக்க வைக்குமாறு கருத்து கந்தசாமிகள் கோரிக்கை

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட போலிஸ் அதிகாரிக்கு மன நிலை சிகிச்சையும், நீதி போதனையும் அளிக்க வேண்டும் என்று கருத்து கந்தசாமிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்...
ஆதரவற்ற சிறுமியின் காப்பாளர்கள் , ஈவு இரக்கமற்ற அந்த பாவிக்கு கடவுள்தான் தண்டனை கொடுக்க வேண்டும் என புலம்பினர்..

இந்த கொடூர சம்பவம் பற்றிய விபரம் ...

Tuesday, November 9, 2010

அடுத்தவர் வேதனை,வெறும் செய்திதானா?- என்கவ்ன்டரும் அறிவுஜீவி பதிவர்களும்

நான் சென்னைக்கு வந்த புதிது...
மவுன்ட் ரோடின் ஒரு இடத்தில் பயங்கர கும்பல்...
என்னவென பார்த்தால், ஒரு இளம் பெண் ரத்த வெள்ளத்தில் கிடைக்கிறார்...
மோதிய லாரி டிரைவர் எஸ்கேப்...
அரைமணி நேரம் உயிருக்கு போராடிய பின் அந்த பெண் இறந்து இருக்கிறார் என தெரிய வந்தது..

அது வரை அனைவரும்,பொறுமையாக நின்று அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக அடங்குவதை பார்த்து கொண்டு நின்று இருந்து இருக்கிறார்கள்..
அதை சீன் பை சீனாக விவரிக்க வேறு செய்தார்கள்...
கவருமண்டு சரியில்லைசார், வெளி நாட்டில் ippadi நடக்காது என்றெல்லாம் தர்க்கம் செய்து கொண்டு இருந்தார்கள்..
எனக்கு மாபெரும அதிர்ச்சியாக இருந்ததது...
கிராமங்களிலோ,. மதுரை,கோவை,திருச்சி போன்ற நகரங்களிலோ இப்படி நடக்காது.. எதாவது உதவி செய்ய முயல்வார்கள்...

நகர வாழ்க்கையும் ,படிப்பும் நம்மை வெறும் யோசிப்பு எந்திரங்களாக மாற்றி விட்டன....

கோவையில் சிறார்கள் கொடுன்செயல்லுக்கு ஆளானதும் கோவை நகரமே துக்கம் அடைந்தது..
நமது பதிவுலக அறிவு ஜீவிகளுக்கு அது வெறும் இன்டர்நெட் செய்தி மட்டுமே...
குளிரூட்டாப்பட்ட அறையில் கோக் சாப்பிட்டபடி , அந்த செய்தியை படித்தனர்... அவர்கள் டேஸ்ட்டுக்கு செய்தி இல்லாததால் அதை மறந்தும் போனார்கள்..
ஆனால் சம்பவத்தை நேரில் பார்த்த கோவை மக்களுக்கு அதை மறக்கமுடியவில்லை...
எப்படியும் கொலையாளி ஒரு அற்பமான தனடைனுயுடன் வெளி வந்து விடுவான் என அனைவருக்கும் தெரிந்தே இருந்தது..
இந்த நிலையில் கொலையாளி இறந்து விட்டான் என தெரிந்ததும், கடவுல்தனடனை கொடுத்து விட்டன என சிலரும்,இயற்கையின் பொயட்டிக் ஜஸ்டிஸ் என சிலரும் ஆறுதல் பட்டு கொண்டனர்...
அவன் என்கவுண்டரில் செத்தாநா , விபத்தில் செத்தானா என்பது அவர்களுக்கு முக்கியாமாக இல்லை..

ஆனால் இந்த எ சி அரை அறிவு ஜீவிகளுக்கு , இந்த பிரச்சினையில் எந்த லவும் உணர்வு பூர்வ தொடர்பு இல்லாத அறிவாளிகளுக்கு , சட்டம பற்றிய கவலை வந்து விட்டடது...

நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம், சட்டம் எதுக்கு இருக்கு..எதுவும் பிரசிஜர் படிதான் செய்யணும்,, சட்டத்தின் மாட்சி என்ன ஆவது என்றெல்லாம், கண்ணிருடன் , சற்று ஆறுதல் அடைந்தவர்களை கிண்டல்செய்ய தொடங்கினர்..
பேசாமல் எல்லோரையும் என்கவுண்டர் செய்து விட்டால் கோர்ட் செலவு மிஞ்சுமே என இடக்கு பேசினார்...

அய்யா அறிவு ஜீவிகளே... என்கவுண்டர் செய்ய வேண்டும் என்பது பாதிக்கப்பட்டோர் நோக்கம் இல்லை...

சட்டப்படி நீதி வேண்டும் என்பதுதான்..

அதற்கு முன் ஒரு விபத்தில் குற்றவாலி இறந்து விட்டால்,அனைவரையும் விபத்துக்கு உள்ளாக வேண்டும் என்பது அல்ல...
ஒரு மனித மிருகம் ஒழிந்தது என்ற ஆறுதல் ஏற்படும்... அவ்வளவுதான்..
இதை புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்வது,படிப்பு என்பது மனதினை பக்குவபடுதுவது அல்ல.. பதர் ஆக்குவது என்றே எண்ண வைக்கிறது...

இது உணர்ச்சி பூர்வமான நிலைதான்...

இதை அனுபவித்தவ்ர்களுத்தன் அந்த வலி தெரியும்ம்...
வழியை உணராதவர்கள்,எ சி அறையிலமர்ந்து சமஊக சீர்திருத்தம்,குர்ரவளிகளுக்கு அளிக்க வேண்டிய சலுகை என்றெல்லாம் பேசி கொண்டு இருக்க வேண்டியதுதான்...

என்னை பொறுத்தவரை,பெண்களுக்கு , சிறுவர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வேண்டும் ...
குற்றமே நடக்காத சமுதாயம் வேண்டும்ம்..
அதை நிகழ்த்தாவரை, வான் முறைக்கு ஆதரவு பெருகத்தான் செய்யும்.,.. போலிஸ் என்கவுண்டர் செய்துதான் பிரச்சினை முடிய வேண்டும் என நினைக்காமல், வன்முறை குழுக்க்களுக்கு ,மக்கள் இந்த அதிகாரத்தை கொடுக்கும்நிலை வந்தால் ஆச்சரிபடுவதற்கு இல்லை...

அப்படி ஒரு நிலை வர கூடாது...
விரைவான விசாரணை,தீர்ப்பு உறுதி செய்யப்பட வேண்டும்..

அந்த நிலை இன்று இல்லை.. எனவே பாதிக்கப்பட்டோர் இப்படி ஆருதலடைகின்றன்ர்...
இதை கிண்டல் செய்வது மனித நேயம் அல்ல...

நம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருந்தால், நமக்கும் இந்த நிகழ்வு ஆறுதலளித்து இருக்கும்...
தம்குழந்தைகள் பாதிக்கப்படாத நிலையிலேயே, பிறர் குழந்தையை தம் குழந்தையாக நினைத்த கோவை மக்களின் உணர்வை நம்மால் புரிந்து கொள்ள முடியாதுதான்..

உணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , பரிதாப பதிவுலகம்.

கூட்டமான பேருந்தில் செல்கிறோம்..

யாராவது நம் பத்து பைசா பர்சை அடித்து விட்டு தப்ப முயன்றால் என்ன செய்வோம்… ?

தர்ம அடி கொடுக்க முயல்வோமா இல்லையா?

திருடியவனின் கஷ்டம், சமூக அவலம், அவனை இப்படி ஆக்கிய சூழ் நிலை எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என கோருவோமா?

அப்படியே அவன் தப்பி விட்டாலும், அந்த நாயை பிடித்து கொல்ல வேண்டும் என துடிப்போமோ இல்லையா..

ஒரு பத்து பைசா பர்சுக்கு இந்த ஆர்ப்பாட்டம்..

இதுவே , இன்னொருவருக்கு இழப்பு என்றால் நம் பார்வை எப்படி இருக்கும்..

ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க? அடிப்பதுதான் இதற்கு தீர்வா? பிடிபட்டதால் இவனை அடிக்கிறோம்.. பிடிபடாத திருடர்களை என்ன செய்ய போகிறோம்…

சமூகத்தை சீர்திருத்துவதுதான் இதற்கு தீர்வு..

இப்படி எல்லாம் டீ கடை பானியில் வெட்டி நியாயம் பேசுவோம், பர்ஸை பறி கொடுத்தவன் அடுத்தவன் என்றால்..

இதே பாணி கருத்து வெள்ளம்தான் இப்போது பதிவுலகில் பாய்ந்து வருகிறது..

கோவை மக்கள் அன்பாக பழக கூடியவர்கள்.. சண்டை போட்டால் கூட கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த கூடியவர்கள்..

ஒரு சிறுவனும், சிறுமியும் கொடும் செயலுக்கு உள்ளான போது , தம் குடும்பத்திலேயே இழப்பு ஏற்பட்டது போல துடித்து விட்டனர்…

சென்னை போன்ற பெரு நகரங்களில் இது ஜஸ்ட் ஒரு பரபரப்பு செய்தி மட்டுமே…ஆனால் கோவையில் அப்படி இல்லை..

இந்த நிலையில் , கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.,,,,

அவர்களை கொலையாளிகள் என சொல்ல கூடாது.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என் பதிவுலக அறிவு ஜீவிகள் சட்ட நுணுக்கத்தை ஆராய்ந்த நிலையில், படிக்காதோர், சாதாரண மக்கள் , போன்றோர் , இந்த குழந்தைகளை எப்படி கொல்ல மனம் வந்தது என கதறினர்.. கொலையாளிகள் முகத்தில் காறி துப்பினர்..

புழல் சிறையில் அங்கு இருந்த கைதிகளே இவர்களை தாக்க முயன்றனர்..

அவர்களுக்கெல்லாம் பதிவுலகமோ, அறிவு பூர்வ தர்க்கங்களோ தெரி்யாது…

இந்த நிலையில் கொலையாளி ஒருவர் இறந்தது, இவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது…

இதற்கு காரணம் இருக்கிறது..

நம் ஊரில் ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கி தருவது அவ்வளவு எளிதல்ல…

டில்லியில் , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்னின் வழக்கு நடந்து ஓர் அற்பமான தண்டனை வழங்கப்பட்டது..

இன்னொரு பெண் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இன்றி வாழ்கிறார்.. வழக்கு முடியவில்லை..

தமிழ்னாட்டில், நாவரசு என்ற மாணவர் கண்ட துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.. யாருக்கும் தண்டனை இல்லை ….

ஆலடி அருணா கொலை உள்ளிட்ட பல கொலை வழக்குகளும் இப்படித்தான்..

இந்த பின்னனியில், ஏதோ ஒரு வகையில் குற்றவாளி இறந்தது, இந்த கையலாகாத சமூகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்தது,,

 

அவ்வலவுதான்.. பொங்கி எழுந்தனர் பதிவுலக மஹாத்மாக்கள்…

கொலையை கொண்டாடும் மக்கள், உணர்ச்சி வசப்பட்ட பரிதாப ஜீவன்கள் , கொலையாளியின் பரிதாபம் என கொட்டி தீர்த்து விட்டனர்..

அட ஆண்டவா,,, பாவம்,, குழந்தையை இழந்தவர்களுக்கு ஒரு அப்பாவித்தனமான ஓர் ஆறுதல்…. மீண்ட உயிர் வர போவதில்லை.. ஆனால் சிறிது காலம் கழித்து கொலையாளி சுதந்திரமாக வருவதை பார்க்கும் அவலம் இல்லாமல் , உடனே இறப்பதை பார்த்ததும், சிறிய ஆறுதல்..

இதை கொண்டாட்டம் என கொச்சைப்படுதுவது, நம் இதயம் எவ்வளவு தூரம் இறுகி இருக்கிறது என்பதை காட்டுகிறது…

இது ஒரு தீர்வு என யாரும் சொல்லவில்லை.. என்கவுண்டர் இல்லாமல் வேறு வகையில் முடிவு வந்து இருந்தாலும், இய்றகையின் நீதி என்றுதான் எடுத்து கொண்டு இருப்பார்கள்..

அதை புரிந்து கொள்ளாமல், எல்லா குற்றங்கலுக்கும் என்கவுண்டர்தான் தீர்வா என குதர்க்கம் பேசுகின்றனர்.

அய்யா, அறிவு ஜீ்விகளே… சாதாரன மனிதன் நிரந்தர தீர்வை பற்றி யோசிக்கவில்லை…

நம் குடும்பதில் ஒரு இழப்பு.. அந்த பாதிப்பை ஏற்படுதியவன் இறந்தது ஒரு வித ஆறுதலை தருகிறது ..அவ்வளவுதான்..

யாரோ ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த துக்கத்தை , தம் குடும்ப துக்கமாக நினைத்த அந்த அன்பு உள்ளங்களின், கோவை மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ..

வெட்டி நியாயம் பேசும் பதிவுலகை நினைத்து பரிதாப படுகிறேன்…

Sunday, October 17, 2010

ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்று பார்வை


ஜெர்மனி கலாச்சாரத்தை பழகி கொண்டு இருப்பதானால் இருங்கள்..இல்லையேல் வெளியேறுங்கள் . பல கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கும் தமாஷ் வேண்டாம் என்ற மன நிலை ஜெர்மனியில் தோன்றி இருப்பதை குறித்து என் கவலையை தெரிவித்து இருந்தேன்..
மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்..
செய்தியை மட்டும் படித்து நான் சொன்ன கருத்து அது.. ஆனால் அனுபவ ரீதியாக , ஆழந்த சிந்தனையுடன், பதிவர் க்க்கு – மாணிக்கம் பின்னூட்டம் இட்டு இருக்கிறார்..
அவர் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, அவரது வித்தியாசமான பார்வையை நாம் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது என்பதால் அதை தனி பதிவாக இடுகிறேன்..
இது அவரது கருத்து மட்டுமே... என் கருத்து அல்ல... அவர் கருதுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடு இல்லை.. விரிவான விவாதம் தேவை
ஒரு பின்னூட்ட்தை இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையுடன், தன் அனுபவத்தை கலந்து எழுதிய அவர் எழுத்துக்கு தலை வனங்குகிறேன் ..
இதை முரண்பாடாக எண்ணாமல் கலந்துரையாடலாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

இனி வருவது அவர் கருத்து

***********************************
கக்கு - மாணிக்கம் said...

ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று அந்நாட்டு ஆட்சியாளர் சொல்வதில் என்ன தவறு? இந்திய காலாசாரம்தான் சிறந்து என்று இந்தியர்கள் சொல்வார்கள்தானே?

இந்தியா இந்தியர்களுக்கே என்றால் கூட அதுவும் தவறா? இந்தியாவையும் ஜெர்மனியையும் இந்த தலைப்பை எடுத்துகொண்டு ஒப்பிடுவது தவறு.

சுதந்திரம் அடைந்த பின்னர் நம் நாட்டிற்கு எந்த அந்நியரும் பிற நாட்டவரும் வேலைகாகவோ அல்லது பிழைகவோ , தங்கள் நாட்டு அடக்கு முறைகள் வெறுத்து அகதிகளாகவோ கூட வரவில்லை. (இலங்கை தமிழர்களின்/அகதிகளின் நிலை வேறு.)

ஜெர்மனியில் பிற தேசத்துமக்கள் அணைவரும் வசிகின்றனர். தமிழர்களும் கூட உண்டு. அவர்கள் சிறுபான்மை எண்ணிக்கைதான். சென்ற முப்பது வருடங்களாக நிறைய அரபு நாட்டினர் அங்கு குடியேறி வசித்து வருகின்றனர்.குறிப்பாக சவூதி அரபிய நாட்டினர். அந்நாட்டு குடி உரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதற்கே உண்டான பக்க விளைவுகளும் அங்குண்டு. மசூதிகளின் எண்ணிகையும் அதிகமாகி வருகிறது. பின்னர் அந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும் சந்தர்பம் உள்ளது. இப்பவே தங்களின் மதம் சார்ந்த சட்டமான ஷரியத்தை மட்டும் பின்பற்ற அவர்கள் தீவிரமாக முயற்சி எடுகின்றனர்.

படித்துகொண்டு பகுதி நேர வேலை பார்க்கும் பல ஜெர்மானிய இளைஞர்கள் அணைவருக்கும் தற்போது அங்கு நிகழும் சூழல்கள் வெறுப்பை தந்துள்ளன. நான் முன்பு பயிற்சிக்காக சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் மாலை நேரங்களில் வந்து பணியாற்றும் பல படித்துக்கொண்டு இருக்கும் இளையவர்கள் "பிறநாட்டவர்கள் தங்களின் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்வதாக " கூறுகின்றனர்.

இதற்கு என்ன சொல்வீர்கள்? இதே நிலை இங்கு இந்தியாவில் நிலவினால் ஏற்றுகொள்வீர்களா? ஆனாலும் அதுவும் நடந்து கொண்டுள்ளது. பிற நாட்டு தெழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் அரபு நாடுகளில் அவர்கள் எல்லாம் எப்படி நடத்தபடுகிறார்கள் என்றாவது தெரியுமா?
அவர்கள் எல்லாம் தம் மதம் பரப்பவும், குடியுரிமை கேட்டும் போராட்டமா செய்கிறார்கள்? அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் ? எல்லாரும் கொண்டாடும் "நம்ம ஊர்" காஷ்மீரில் ஒரு அடி நிலம் வாங்க எந்த இந்தியனாலும் இயலுமா?
நான் சொல்லுவதெல்லாம் இதுதான்; உள்ளூர் கதையே நாறிகிடக்க, நமக்கு ஏன் ஜெர்மனி பற்றி கவலை?

இன்னுமொன்று. நாம் தான் இன்னமும் அந்த ஹிட்லரை கட்டிக்கொண்டு அழுகிறோம் வேறு வழி வழி இல்லாமல். இன்றுள்ள ஜெர்மானிய தலை முறையினர் ஹிட்லரை ஒரு மன நலம் குன்றிய மனிதனாக எண்ணியே புறம் தள்ளுகின்றனர்.

இது ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் மட்டுமே கருதப்படவேண்டும் அன்றி சண்டை போடும் முயற்சியாக இல்லாமல் இருக்க விழைகிறேன்.

ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?



வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வீண் பேச்சு.. ஜெர்மனி கலாச்சாரம்தான் சிறந்த்து என ஜெர்மன் அதிபர் அறிவித்து இருப்பது , ஜெர்மன் மீண்டும் ஹிட்லர் கால ஃபாசிச பாதைக்கு திரும்புகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
பல நம்பிக்கை, கலாச்சாரம் கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது அழகானது... ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும் என இயற்கையே இப்படி அமைத்து வைத்து இருக்கிறதோ என்று கூட தோன்றும்..
ஆனால் பாசிச வாதிகள் எல்லா இட்த்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக கிறிஸ்தவர்கள் நட்த்தும் தொழிற்சாலைகளில் கூட , மற்றவர் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து நேற்று ஆயுத பூஜை கொண்டாடினார்கள்.. அந்த் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கிறிஸ்தவ்ர்கள், தமக்கு உதவும் கருவிகள், ஆயுதங்களுக்கு மரியாதை செய்கிறோம் என அதை எடுத்து கொண்டார்கள்.. சாமி கும்பிட அவர்களை இந்துக்களும் வற்புறுத்தவில்லை.. ஆனாலும் ஒன்றாக கொண்டாடி, பிரசாதங்களை இந்துக்களும், அதை தொழிற்சாலை தரும் இனிப்பாக , உணவாக கிறிஸ்தவர்களும் எடுத்து கொண்டார்கள்..
இதே போல கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத இந்துக்களும் , கிறிஸ்துமஸில் உற்சாகமாக கலந்து கொள்வது இயல்பு..
ஆனாலும் ஒரு சிலர், எனக்கு சாமி நம்பிக்கை இல்லை.. நீயும் கும்பிட கூடாது என தம் விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பவ்ர்களும் உண்டு..ஆனால் இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பெரிய பிரச்சினைகள் இல்லை..
ஆனால் ஜெர்மனியை பொருத்தவரை, என் கலாச்சாரம்தான் சிறந்த்து..மற்றவரை கொல் எனும் ஹிட்லரின் ஃபாசிசம் பெரிய வரவேற்பு பெற்று இருந்த்தும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் பழைய கதை..
ஆனால் வரலாறு திரும்புகிறது என்ற கதையாக, வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஜெர்மனியில் தோல்வி அடைந்து விட்ட்து..மீண்டும் ஜெர்மனி ஜெர்மானியருக்கே என்ற பாதைக்கு திரும்ப வேண்டும் என அதன் அரசு தலைவர் ( நம்ம ஊர் பிரதமர் பதவிக்கு இணையான் பதவி ) அங்கீலா மேக்க்ள் (Angela Merkel) அறிவித்து இருப்பது அங்கு இருக்கும் சிறுபான்மை இன , மொழி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது..
மற்ற மக்களால் , ஜெர்மன் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்க படுகிறது என்று பரவலான கருத்து அங்கே உருவாக்கி வருகிறது- அல்லது உருவாக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது கட்சி கூட்ட்த்தில் பேசிய அவர் , “ 1960 களில் வெளி நாட்டினர் இங்கே வர அனுமதிக்க தொடங்கினோம்.. வேலை முடிந்த்தும் சென்று விடுவார்கள் என நம்மை நாமே ஏமாற்றி கொண்டோம்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. சரி, அனைத்து இன மக்களும், இணைந்து வாழ்வோம்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என எண்ணினோம்.. ஆனால் அது தோல்வி அடைந்து விட்ட்து..
இதை முறைப்படுத்த வேண்டும் என பேசி இருக்கிறார்..
பலர் இணைந்து செயல்படுவ்தால்தான், ஜெர்மனி அபார முன்னேற்றம் கண்டு வருகிறது.. எனவே வெளி நாட்டினர் குடியேறுவது ஜெர்மனிக்கு நல்லதுதான்..அதை அவரும் அறிவார்..
ஆனால் தேர்தல் வர இருப்பதால் இப்படி பேசுகிறார் என்கின்றனர் பார்வையாள்ர்கள்..
தற்காலிக லாபம் தரும் துவேஷ பேச்சுக்கள்தான், நீண்ட கால தீமையை ஏற்படுத்துகின்றன என்பதுதான் வரலாறு.
ஆனாலும் அரசியல்வாதிகள், எல்லா இட்த்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது , ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்த்தான் செய்கிறது

Wednesday, October 13, 2010

பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி ஃபைனல் – கதி கலங்கும் கர் நாடக அரசியல்

பரபரப்பான சூழ் நிலையில் , கர் நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

அதிருப்தி எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்த்தற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காத நிலையில், அவ்ரகள் இன்று ஓட்டளிக்க முடியாது.. எனவே எளிதாக வெல்ல்லாம் என பி ஜே பி நினைத்த்து..

இதில் திடீர் திருப்பமாக, வருங்காலத்தில் நாங்கள் தரும் தீர்ப்பு, இன்றைய நம்பிக்கை தீர்மான வெற்றி தோல்வியை கட்டுப்படுத்தும் என கோர்ட் அறிவித்துள்ளது..


அதாவது இன்று அரசு வெற்றி பெறாலும் கூட , தீர்ப்பை வைத்தே வெற்றி உறுதியாகும்..
ஆக, இன்று நடப்பது ஃபைனல் அல்ல... செமி ஃபைனல் தான்..

சென்ற முறை போல அல்லாமல், வாக்கு சீட்டு மூலம் வாக்களிப்பு நடக்க உள்ளது..
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன..

Friday, October 8, 2010

பெங்களூரில் காட்டுமிராண்டித்தனம் : அரசு செய்ய இருக்கும் படுகொலை

அதிகார பூர்வமாக அரசே ஒரு கொலை செய்ய போகிறது ..இந்த காட்டுமிராண்டித்தனத்துக்கு நீதி மன்றம் துணை போய் இருக்கிறது..

தன்னை நம்பி காரில் வந்த பெண்ணை , பாலியல் வன்முறை செய்து , கொலையும் செய்ததாக குற்றம் சாட்டாப்பட்டு வாகன ஓட்டுனர் உயர்திரு. சிவகுமார் அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது பெங்களூர் விரைவு நீதிமன்றம்..

ஒரு உயிரை எடுப்பதற்கு நீதி மன்றத்திற்கு யார் அதிகாரம் கொடுத்தது.. சொல்வார்களா?

இறந்த ஒருவருக்கு உயிர் கொடுக்கும ஆற்றல் நீதிமன்றத்துக்கு உண்டா?

இப்படி ஒரு காட்டு மிராண்டி தீர்ப்பை கொடுத்த பின், இது போன்ற குடர்கள் நடக்கவே நடக்காது என உறுதி கொடுக்கவாவது முடியுமா?
ஒருவரை கொன்ற சாடிஸ்ட் திருப்தி மட்டும்தான் இதனால் பலன்...

தீர்ப்பை நீதிபதி வாசித்தவுடன் திரு . சிவகுமார் கதறியது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது...
அவர் எந்த அளவு மன வேதனையை அனுபவிப்பார் என சிந்திக்க வேண்டாமா?
அவரது மனைவியும் கண்ணீர் விட்டு கதறினாரே... " என் கவவர் இறந்ததும் நானும் தற்கொலை செய்து கொள்வேன் " என்று சொல்லி இருக்கிறார்.. ஒன்றும் அறியாத ஒரு பெண்ணும் சாவதற்கு யாருக்கு என்ன தண்டனை கொடுப்பது...

தண்டனியால் குற்றம் குறைந்ததாக வரலாறு இல்லை... எனவே சிவகுமாரிடமும் அவர் மனைவியிடமும் , அவர்கள் அடைந்த மன உளைச்சலுக்கு அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்..

, உடனடியாக அவர் விடு விக்கப்பட்டு, அரசு வேலையும் , தகுந்த விருதும் வழங்கி கவுரவிக்கப்பட வேண்டும்...

( இதெல்லாம் என் கருத்து அல்ல... சில அறிவு ஜீவிகள் நாளை சொல்ல போகும் கருத்து )

*******************************************************************

ஐந்து ஆண்டுகள் கடுமையாக போராடி , இந்த நீதியை பெற்றுள்ள, இறந்த பெண்ணின் தாயார் கூறும்போது,
என் மகளுக்கு பதினைந்து வயது ஆகும்போதே என் கணவரை இழந்து விட்டேன். என் முழு அன்பை கொட்டி அவளை வளர்த்து ஆளாக்கினேன்..
என் மகளின் மரணத்துடன் என் மகிழ்ச்சி அனைத்தையும் இழந்து விட்டேன்.. இந்த தீர்ப்பு சிறிய ஆறுதலை தந்துள்ளது..

என் மகள் எனக்கு இருக்கிறாளோ தெரியவில்லை..எங்கு இருந்தாலும் அவள் ஆத்மா அமைதி அடையும் எப நினைக்கிறன் " என வானை நோக்கி கையை உயர்த்தி கண்ணிருடன் கூறினார்

Tuesday, September 28, 2010

அயோத்தி தீர்ப்பை தள்ளி போட முடியாது- கோர்ட். கிளைமேக்ஸ் 30ந்தேதி

அயோத்தி பிரச்சினையை இழுத்து கொண்டே போவதில் அர்த்தம் இல்லை.
மசூதியா , கோவிலா என முப்பதாம் தேதி தீர்ப்பு சொல்ல வேண்டும் என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் வட மா நிலங்களில் பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.
இன்று நேற்றல்ல. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பிரச்சினையில் இருக்கும் இடம்தான் இது. இப்போது கிளைமேக்ஸை நெருங்கி உள்ளது..
கிளைமேக்ஸ் வேண்டாம் என நினைத்தவர்களும் அதிகம் பேர் உண்டு. அவர்கள் தீர்ப்புக்கு தடைவரும் என எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்புக்கு இனி வேலையில்லை..

ரமேஷ் சந்திர திர்பாதி என்பவர் , தீர்ப்பு ஒத்தி போடப்பட வேண்டும்,கோர்ட்டுக்கு வெளியே பேசி முடிக்க முயல வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அதன் மேல் விசாரணை நடந்த்து..
கோர்ட்டுக்கு வெளியே முடித்து கொண்டால் நல்லத்துதான். அதற்காக சும்மா ஒத்தி போட்டுகொண்டே இருக்க முடியாது என்று முடிவுக்கு சுப்ரீம் கோர்ட் வந்து விட்ட்து. ஒரு நீதிபதி ஓய்வு பெற போகிரார் எனப்தால், உடனடியாக தீர்ப்பை வழங்குமாறு ஸ்பெஷல் பெஞ்சுக்கு கோர்ட் உத்தரவிட்ட்து..
சம்பந்தப்பட்டவர்கள் தீர்ப்பு உடனடியாக வருவதை வரவேற்கின்றனர். தீர்ப்புவந்தால் சமூக அமைதி குலையும் என பயந்தால் எந்த தீர்ர்ப்புமே வர முடியாது என அவர்கள் வாத்திற்கு வெற்றி கிடைதுள்ளது..
எனவே அலஹாபாத் உயர் நீதிமன்றம் , முப்பதாம் தேதி ( வியாழக்கிழமை) தீர்ப்பு வழங்க இருக்கிறது..
எந்த தீர்ப்பு வந்தாலும் பிரச்சினை தீரப்போவதில்லை. அப்பீல் எல்லாம் இருக்கும்.. எனவே இப்போது பொதுமக்களுக்கு ஆபத்து இல்லாமல் பார்த்து கொளவதே அரசின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்...

Friday, September 24, 2010

அய்யோ- தீ .. பிரச்சினையை பேசி தீர்க்க முயற்சிகள் ஆரம்பம்

அயோத்தி பிரச்சினையில் இன்று தீர்ப்பு வர இருந்தது..

வந்து இருந்தால் , இந்நேரம் பெரிய கலவரம் வெடித்து இருக்கும் . எந்த தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்து இருந்தாலும் , கலவரம் உறுதி...

ஆனாலும் தமிழ் நாட்டில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.. மத பிரச்சினையில் வாடா மானிலங்கள பாதிக்கப்பட்ட அளவுக்கு , வரலாற்று ரீதியாக தமிழ்நாடு பாதிக்கப்படதில்லை.. எனவேதான் இந்த பிரச்சினையின் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை...

ஆனால் வட மாநிலங்க்லின் நிலை வேறு.. அவர்கள் வலி, வேதனை, காயங்கள் எல்லாம் மறக்க கூடியவை அல்ல . எல்லா தரப்புமே வேதனையை சுமக்கும் நிலை..

இந்த நிலையில், கோர்ட்டுக்கு வெளியே பிரசினையை தீர்க்க சிலர் முயற்சியை ஆரம்பித்து உள்ளனர்... வேறு வழியில்லை... நல்லொதொரு தீர்வுக்கு இருதரப்பும் முன் வர வேண்டும்... அரசியல்வாதிலை நம்பி பயனில்லை.. கோர்ட் சொல்லும் தீர்ப்பை உணர்வு பூர்வமாக இருப்பவர்கள் ஏற்பார்களா என்பதும் சந்தேகம்..
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவர் ஒய்வு பெற இருக்கிறார்.. அகவே அடுத்த வாரம் திருப்பு வர வில்லை என்றால், புதிய நீதிபதி நியமிக்கப்பட்ட பின்தான் தீர்ப்பு வரும்.. அதற்கு மிக அதிக காலம் ஆகும் ..

இந்த நிலையில் முஸ்லிம் சட்ட வாரிய துணை தலைவர் மவுலான சாதிக், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண முடியும என நம்பிக்கை தெரிவுத்துள்ளார்.. அதற்காக சில முயற்சிகளையும் அவர் துவக்கி இருக்கிறார்.
அவருக்கு ஆதரவு இருந்தாலும், பேசி தீர்க்கும் காலம் கடந்து விட்டது என நினைப்பவர்களும் இரு தரப்பிலும் இருக்கிறார்கள்..

இது வரை பேச்சுவார்த்தை எதுவும் முழு மனதுடன் நடக்கவில்லை.. இனிமேலாவது பெரும்பாலானோர் ஆதரவுடன் பேச்சுக்கள் நடந்தால், நிச்சயம் நல்ல தீர்வு பிறக்கும் என்கின்றனர் பேச்சு வார்த்தை விரும்பிகள்.
பேச்சுவார்த்தையின் அனைத்து சாத்தியங்களையும் பார்த்து விட்டு , கடைசியில்தான் கோர்ட்டுக்கு போக வேண்டும்... இன்னும் உண்மையான பேச்சு தொடங்கவே இல்லைஎ என்பது இவர்கள் வருத்தம்..

லக்னோவில் அனைவர் கவனமும் குவிந்துள்ளது... இருபத்து எட்டாம் தேதி கோர்ட் கூடும் போது , இது நம்பிக்கை சார்ந்த விஷயம் .. கோர்ட்டுக்கு வெளியில்தான் முடிவெடுக்க வேண்டும் என சொல்பவர்களின் கைதான் ஓங்கும் வாய்ப்பு அதிகம்..

தீர்ப்பு அப்போது வரவில்லை என்றால் , இனி எப்போதுமே தீர்ப்புக்கு அவசியம் இல்லாத நிலைதான் உருவாகும் .. அப்படியே அவசியம் இருந்தாலும் , நீதிபதி ஒய்வு பெறுவதால், தீர்ப்பு வர வெகு காலம் காத்து இருக்க வேண்டும்..

Thursday, September 23, 2010

அயோத்தி தீர்ப்பு ஒத்தி வைப்பு - சுப்ரீம் கோர்ட்

நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கும்போது, புதிய பிரச்சினையாக அயோத்தி பிரச்சினை.. பழைய பிரச்சினைதான் என்றாலும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரப்போகிறது என பரபரப்பு கிளம்பியது..
என்ன தீர்ப்பு வந்தாலும் தொல்லைதான் ... மத்திய அரசு சார்பில் விளம்பரங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன,

அமைதியை காக்க , லத்திகள் வாங்க ஆர்டர் !!!!!

தொலைகாட்சி சானல்கள் எல்லாம் நிபுணர்கள் துணையுடன் தயராக இருந்தன..

வியாபாரிகள் டென்ஷனாக இருந்தனர்...

தென் இந்தியாவில் இதன் தாக்கம் குறைவுதான்.. ஆனாலும் ரெண்டு நாள் விடுமுறை கிடைக்கும் என்ற கனவில் பள்ளி மாணவர்கள் இருந்தனர்..
இந்த நிலையில், நாளை வருவதாக இருந்த தீர்ப்பு , ஒரு வாரம் தள்ளி போடப்பட்டுள்ளது..

அடுத்த வாரம் தீர்ப்பு. லெட் அஸ் வெயிட் அண்ட் சி

Tuesday, September 7, 2010

நடிகர் முரளி காலமானார்

murali


என்றும் இளமையாகவும் , கல்லூரி மாணவனாகவும் வலம் வந்த நடிகர் முரளி காலமானார்.
திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்த்து.
பூ விலங்கு படம் மூலம் அறிமுகம் ஆன அவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தார். தனக்க்கென ஓர் இட்த்தை தக்க வைத்து கொண்டு இருந்தார்
இவரை அறிமுகம் செய்த சத்ய ஜோதி ஃபில்ம்ஸ் இவர் மகனையும் அறிமுகம் செய்த்து. அந்த படம் இப்பொது ஓடிகொண்டு இருக்கிரது.
இன்னிலையில் முரளி மரணம் இயற்கை எய்தி இருக்கிறார்.
அவர் குடும்பத்துக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, April 27, 2010

போலி கம்யுனிஸ்ட்கள் அல்ல .- முத்திரை பதித்த இடதுசாரிகள் வேலை நிறுத்தம்

பொதுவுடைமை கருத்துக்களை அரசியல அரங்கில் ஒலிக்க செய்யும் கட்சிகள்தான், சி பி ஐ மற்றும் சி பி ஐ எம் ..

பல கஷ்டங்களுக்கு இடையில், கட்சி நடத்தும் இவர்களை ஆதரிக்கவிட்டலும் பரவயில்லை... கிண்டல் செய்பவர்கள் அதிகம்....

புரட்சி பேசிவிட்டு, சீட் பெற பேரம் பேசுபவர்கள், ஆடம்பர அரசியல செய்ய தெரியாதவர்கள் என பல பாமர கருத்துகள் உண்டு...

சிலர் ஒரு படி மேலே சென்று, உழைக்கும் மக்களை இவர்கள் பிரநிதுவ படுத்தவில்லை, இவர்கள் போலி கம்யூனிஸ்ட்கள் என கிண்டல் செய்வதை பார்த்து, உம்னையில் இவர்களுக்கு ஆதரவு இல்லையோ என சாமான்யர்கள் நினைபதுண்டு..

இந்நிலையில், பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.... மதுரைக்கு வில்லுக்கு அளித்ததே, இவர்கள் மேல் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது...

தமிழ் நாடு முழுதும், வேலை நிறுத்தம் வெற்றி என்றால், சி பி எம்மின் வெற்றி தனியாக தெரிந்து இருக்காது...

மென்பொருள் மக்கள் மற்றும் சண் டிவி தமிழர்கள் அதிகம் வசிக்கும் சென்னை போன்ற ஊர்களில், வேலை நிறுத்ததிற்கு அதிகம் ஆடஹர்வு இல்லை...

அனால், சி பி வலுவாக உள்ள, திருப்பூர், ஈரோடு , நகப்பிடினம் போன்ற இடங்களிலும், உழைக்கும் மக்கள் வசிக்கும் ஊர்களிலும், வேலை நிறுத்தத்திற்கு அமோக ஆதரவு..

முழு அடைப்பு செய்தால், விலைவாசி இரங்கி விடமோ என சிலர் அசட்டுத்தனமாக கேட்கலாம்.. அனால், வெட்டி பேச்சு பேசாமல், கட்டுபாடுடன் எதிர்ப்பை காட்டியதன் மூலம், இடது சாரி கட்சிகள் மக்கள் மதிப்பில் உயர்ந்துள்ளன....

ஒட்டு மொத்தமாக பந்த் பெரிய வெற்றி என சொல்ல மூடியாது... அனால், எதிர்த்தரப்பின் வாயை பந்த் செய்வதில், இடது சாரிகள் வெற்றி பெற்று உள்ளனர் என்றே நடுநிலையாளர்கள் கருதுகின்றனர் .

Monday, April 19, 2010

பிரபாகரனின் அன்னையைக்கு அனுமதி மறுப்பு. - டாக்டர் கலைஞர் மத்திய அரசுக்கு கடும் எச்சரிக்கை..



வயதான ஒரு தாயார் , திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் கடும் அதிருப்தியை மக்களிடையே ஏற்படுத்திய சூழ்நிலையில், புரட்சி தலைவியும், கலைஞரும் எதூவும் பேச வில்லை...
நேற்று அவர் தன நிலையை தெளிவு செய்தார் ...
மாண்பு மிகு கலைன்ஞர் அவர்களுக்கும் , இந்த விஷயம்,நம்மை போல தின தந்தி படித்துதான் தெரியும் என்று பரிதாபமாக குறிப்பிட்டார்..

அவரை திருப்பி அனுப்பி இருக்க கூடாது என்றும்.., மத்திய அரசுக்கு கடிதம் எழுதி போஸ்ட் செய்ய போவதாக கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

இன்று போஸ்ட் கார்ட் வாங்கி விடுவார் என தெரிகிறது.. அதை தடுக்க உளவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது...

இது பற்றி விவாதம் நடந்த போது புரட்சி தலைவியின் கட்சியினர் டீ சாப்பிட போய் விட்டனர் ....

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா