Monday, April 2, 2012

அதிர வைத்த சார்த்தர் புத்தகம்

எனக்கு வாழ்க்கை வரலாற்று வரலாற்று புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். இலக்கிய மேதை சார்த்தரையும் மிகவும் பிடிக்கும்.

ஆனால் அவர் வாழ்க்கை வரலாற்று புத்தகமான சொற்கள் நூலை வெகு நாளாக படிக்காமலேயே வைத்து இருந்தேன் .. ஏன்?

இந்த சொற்கள் நூல் அவரது சிறு வயது ஆண்டுகளைப் ப்ற்றியது என்பது எனக்கு சற்று ஏமாற்றம்தான்.. சிறு வயது சம்பவங்கள் அனைவருக்கும் பிடிக்கும் தான். ஆனால் ஒரு ஹீரோவைப் பற்றி படிக்க நினைப்பவர்கள் அவரது , திறமைகள் பளிச்சிடக்கூடிய , சவால்கள் நிறைந்த இளமை மற்றும் பின் இளமை பருவம் பற்றித்தானே படிக்க நினைப்பார்கள்.. மழ்லை வயது அனுபவங்களில் என்ன கிக் இருக்கிறது .

இந்த எண்ணங்களால் அந்த நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை..

சென்ற வாரம் கொஞ்சம் நேரம் கிடைத்தது.. ஆனால் படிக்க வேறு புத்தகங்கள் கையில் இல்லை. எனவே சொற்கள் நூலை புரட்டினேன்..

மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன், பால் குடித்தேன், பசங்களுடன் விளையாடினேன் என சம்ப்வங்களின் அடுக்காக இருக்கும் என நினைத்து படிக்க ஆரம்பித்த எனக்கு இனிய அதிர்ச்சி.. உலகின் உன்னதாமான புத்தகங்கள் ஒன்றை படித்து கொண்டு இருக்கிறோம் என்பது புரிய ஆரம்பித்தது..

ஒருவர் தன் குழந்தை பருவத்தை , 20 வயதில் நினைத்து பார்ப்பது வேறு, ஆனால் இந்த புத்தகத்தை சார்த்தர் தன் 59ஆவது வயதில் எழுதி இருக்கிறார்.. ஆகவே இது குழந்தைத்தனமான எழுத்தல்ல... ஒருவர் தன் உன்னத கால கட்டத்தில் இருக்கும்போது படைத்த உன்னத எழுத்து..

 சில இடங்களில் அவரது நேர்மையான எழுத்து திடுக்கிட செய்கிறது. உண்மைக்கு மிக அருகே செல்லும்போது ஏற்படும் படபடப்பு அது..

சில பகுதிகளில் , அந்த குழந்தை பருவத்திலேயே  நாம் வாழ்கிறோம். சில இடங்களில் பழைய சம்ப்வங்களை நினைத்து பார்ப்பது போல உணர்கிறோம்.. சோ ஸ்வீட்...


காதலியை ரசிப்பது போல , புத்தகத்தை ரசிப்பது தொட்டு பார்ப்பது , முதன் முதலில் வாசிக்க தெரிந்தவுடன் ஏற்படும் மகிழ்ச்சி என பிரத்தியேக உணர்வுகளை சுட்டி காட்டி இருக்கிறார் சார்த்தர்..

************************************************************

என்னை அதிர வைத்த் வரிகள் சில


  • உலகில் நல்ல தந்தையர்களே கிடையாது.. என் தந்தை உயிரோடு இருந்து இருந்தால் என்னை ஒரு வழி ஆக்கி இருப்பார் 
  • எல்லா குழந்தைகளும் மரணத்தின் கண்ணாடிகள்
  • தூசி தட்டுவதற்கு தவிர புத்தகங்களை தொட தடை விதிக்கப்பட்டு இருந்தது. வாசிக்க க்ற்கும் முன்பே நான் அந்த நிற்கும் கற்களை “செங்கற்களை “ வணங்கினேன்
  • என்னை பொருத்தவரை  நான் ஒருத்திக்கு சகோதரனாக இருந்து இருந்தால், எங்களுக்குள் தகாத உறவு ஏற்பட்டு இருக்கும்
  • பூச்சிகளை கொன்ற நான் , அவற்றின் இடத்தை பிடித்து கொள்கிறேன். நானே பூச்சியாக மாறி விடுகிறேன்’
**************************************************************



வெர்டிக்ட் _    சொற்கள்:-    சோ ஸ்வீட் 


வெளியீடு - தோழமை பதிப்பகம் 

1 comment:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா