Saturday, July 27, 2013

ஒரு மரணம் , ஒரு மனோதத்துவம்

இது சிறுகதை அல்ல ..சின்னஞ்சிறு கதை . சிறிய முடிச்சை வைத்து குறைந்த பட்ச வரிகளுடன் எழுதப்படுவது.படிமம் , குறியீடு , அக தரிசனம், அறச்சீற்றம் என எதுவும் இருக்காது. வெறும் பொழுதுபோக்குக்காக எழுதப்படுவது..

**************************

காலிங் பெல் அடித்து கொஞ்ச நேரம் கழித்துதான் கதவு திறந்தது, பொறுமையாக காத்து இருந்தேன். பொறுமை அனைவருக்கும் அவசியம் என்றாலும்  மருத்துவருக்கு , அதுவும் மன நல மருத்துவருக்கு மிக அவசியம்.
எனக்கு முப்பது வயது என்றாலும் ஐம்பது வயதுக்கான பொறுமை இருப்பதற்கு காரணம் என் குரு டாக்டர் ஜோசப். மருத்துவம் ஒரு தொழில் அல்ல..அது ஒரு சேவை..அது ஒரு தவம் என போதித்தவர் அவர்.

கதவை திறந்தவனுக்கு 25 வயது இருக்கலாம்.

“ வாங்க டாக்டர் “ என்றான்.

இவ்வளவு பணிவாக இங்கிதம் தெரிந்தவனாக இருக்கிறானே...இவனுக்கா பிரச்சினை..ம்ம்ம்.. மருத்துவ விந்தைகள் !
அவன் மனைவியும் புன்னகையுடன் கண்களால் வரவேற்றாள்.

அவளுக்கு 22 வயது இருக்க கூடும் என கணித்தேன்.

காஃபீ சாப்பிட்டவுடன் நேரடியாக விஷயத்துக்கு வந்தேன்,

” என்னிடம் தயக்கம் இல்லாம பேசலாம்..சொல்லுங்க //என்ன பிரச்சினை? “

அவன் முகம் சற்று மாறியது.

“பிரச்சனையா...எனக்கா...என்ன”  மனைவி இடைமறித்தாள்.

“ நான் பேசிக்கிறேன்..சும்மா இருங்க...”

அவன் அடங்கினான்

“ டாக்டர்///அவர்  நல்லாத்தான் இருந்தார்... ஆனால் கொஞ்ச நாளாத்தான் பிரச்சினை//  இல்லாத விஷ்யங்களை இருப்பதா கற்பனை செஞ்சுக்குறார்”

ம்ம்...இது நான் எதிர்பார்த்ததுதான். வொர்க் ஸ்ட்ரஸ் , சமூக அழுத்தம். உரிய அங்கீகாரம் கிடைக்காமை இதில்தான் முடியும்.

” மேடம் .கவலைப்படாதீங்க... இதுக்கு மருந்து தேவை இல்லை....அவர் நினைப்பு தவறு என்பதை செயலால் காட்டினால் போதும். இப்ப பாருங்க”

அவளிடம் சொல்லி விட்டு அவனிடம் திரும்பினேன்.

சார் இது என்ன ? “

அவனிடம் கண்ணாடி டம்ப்ளரை காட்டினேன்.

கொஞ்ச நேரம் திகைத்து போய் பார்த்தான். மனைவியை பார்த்தான்.

” சொல்லுங்க “ உற்சாகப்படுத்தினேன்.

“ டாக்டர்...கையில் ஏன் ரோஜா பூங்கொத்தை வச்சு இருக்கீங்க? எனக்கு வாழ்த்து சொல்ல வந்தீங்களா? “

நான் சிரித்தேன்.

“இது கண்ணாடி கிளாஸ் “

“ இல்லை டாக்டர்...மலர்களின் வாசம் என் நாசியை தொடுது... இப்படி பொய் சொல்றீங்களே”

மனைவியோ செய்வதறியாமல் நின்றாள்.

இது கண்ணாடிதான் என எவ்வளவுதான் சொன்னாலும் சரிப்படாது.இது கண்ணாடி இது கண்ணாடி என அவனை மீண்டும் மீண்டும் சொல்ல வைக்கும் ஆட்டோ சஜஷன் எல்லாம் வேலைக்கே ஆகாது.

” சார் கடசியா கேட்கிறேன். இது கண்ணாடியா ,மலர் கொத்தா ?”

அவன் பொறுமை இழந்து கத்தினான்

“ இது மலர் கொத்து ,,மலர் கொத்து ..மலர் கொத்து “

 நான் சட் என கோபமாக முகத்தை மாற்றிக்கொண்டேன்.

“ ஷட் அப்...இது கண்ணாடி “

கோயிலில் சிதறி தேங்காய் உடைப்பது போல , ஓங்கி தரையில் அடித்தேன். கண்ணாடி சிதறியது. மனைவி வீல் என அலறினாள். ஒரு துண்டு அவன் உதட்டில் மோதி ரத்தம் கசிந்தது.

“ சாரி மேடம்..இந்த மாதிரி ஷாக் ட்ரீட்மெண்ட்தான் அவர் ஆழ் மனதில் பதிந்து , அவர் கற்பனைகளை அழிக்கும்...மன்னிச்சுடுங்க... இன்னும் ஒரு ட்ரீட்மெண்ட்தான்..சரி ஆகிடும் “

அவன் முகத்தில் கலவரத்தோடு கைக்குட்டையால் உதட்டு ரத்தம் துடைத்தான்.

வெளியே அழைத்து வந்தேன்.

தோட்டத்தை காட்டினேன்..

“ இது என்ன ?”

அவன் முன்பு போல திகைத்தான்..

“ இது ஆழ்ந்த பள்ளத்தாக்கு.. நாம் மலை உச்சியில் நிற்கிறோம் “

சிரித்தேன்,

“இல்லை.. நாம் சமதளத்தில் நிற்கிறோம் “

“ இல்லை டாக்டர்... நாம் இருப்பது மலை உச்சி..விழுந்துடப்போறீங்க..இப்படி வாங்க”

“ ஹாஹா...இது சமதளம்...ம்ம்..சரி நான் முன்னாடி நடந்து காட்டுறேன்..என் பின்னாடி வாங்க”

“ நோ...பள்ளத்தாக்கு டாக்டர்... விழுந்து செத்துடாதீங்க... ’ பதறினான்.

புன்னகையுடன் நடக்க ஆரம்பித்தேன்.

**************************************************************

கீழ்தள கதவை காலிங் பெல் அடித்து திறக்கும் அவரை பொறுமை இல்லாமல் உள்ளே நுழைந்தார்கள்.

” நான் சொன்னபடி அவன் வந்தானா? தன்னை மன நல மருத்துவர் என சொல்லி இருப்பானே”

பெரியவர் சோம்பலாக பார்த்தார்.

“ ஆமாம் சார் ,..வந்தான் .. நீங்க சொன்னபடி.ஏதாச்சும் பேச்சு கொடுத்து உட்கார வைக்க பார்த்தேன்...அவனோ தன் பேஷண்டை பார்க்க போறேனு லிஃப்ட் ஏறி டாப் ஃப்லோர் போயிட்டான்..”

“சார்..என்ன சார்..இப்ப்படி செஞ்சுட்டீங்க... அவருக்கு மன நலம் சரியில்லை.. எப்படியோ தப்பிச்சி வந்துட்டார்.. பத்திரமா பார்த்துக்கோங்க போன் செஞ்சும் உச்சி மாடிக்கு போக விட்டுட்டீங்களே.. அந்த வீட்டு பொண்ணு ஒருத்தி மரணத்துக்கு இவர் தெரிஞ்சோ தெரியாமையோ காரணம் ஆகிட்டார்.. இங்கேதான் வருவார்னு தெரியும்.. பார்த்துக்குவீங்கனு போன் செஞ்சுட்டு நாங்க வரதுக்கு லேட் ஆகிப்ப்போச்சே .. “

பதட்டத்துடன் அவர்கள் எழுவதற்குள் பெரிய சத்தத்துடன் அவன் கீழே விழுந்து சிதறினான்.

********************************************

மேல் தளத்தில் அந்த மனைவியும் , ” மன நோய் “ கணவனும் புன்னகைத்து கொண்டனர். அவன் கைகள் மருத்துவ கவன குறைவால் இறந்து போன த்ன் த்ங்கை போட்டாவை வருடின

**********************************************




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா