Saturday, December 14, 2013

இவன் வேற மாதிரி- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்கு அண்ணன்

இவன் வேற  மாதிரி - worthless but watchable

 நடிப்பு        - விக்ரம் பிரபு , சுரபி , வம்சி கிருஷ்ணா , 
 இயக்கம் - எம் சரவணன்
 இசை        - சத்யா 

கதை - சட்ட அமைச்சரை பழி வாங்கும்பொருட்டு அவர் தம்பியை கடத்துகிறான் கதா நாயகன் ( தன் முகம் காட்டாமல் )...  இதன் மூலம் அமைச்சரை பதவி இழக்க செய்கிறான்.தன்னை கடத்தியவனை பழி வாங்க அந்த தம்பி முயல்கிறான்.. அவன் கையில் சிக்கிய நாயகியை காப்பாற்ற நாயகன் முயல்கிறான்... வென்றது யார் என்பதே கதை

******************************************************************

ஒரு காப்பி பேஸ்ட் படம் ( ஊடகங்கள் பில்ட் அப் கொடுத்த ) படம் பார்க்க போய் இருந்தேன்...வெகு நேரம் டிக்கட் தரவே இல்லை... என்னை சேர்த்து எட்டு பேர் மட்டுமே இருந்தனர்... ஷோ கேன்சல் சார்...வேணும்னா வேற படம் டிக்கட் தரவா என்றார்கள்... வேறு படம் பார்த்தேன்,.

இப்படிப்பட்ட நிலையில் , இ வே மா பார்க்க போனபோது இன்ப அதிர்ச்சி... செகண்ட் ஷோவுக்கே செம கூட்டம்..அனைவருக்கும் படம் பிடித்து இருந்தது..அதற்கு சில காரணங்கள்..

1. வக்கிரமான காட்சிகள் இல்லை
2/ஆபாச காமெடி இல்லை
3அதீத வன்முறை இல்லை
4 காப்பி பேஸ்ட் விவகாரம் இல்லை

ஒரு சாதாரண படம் வந்தாலே இப்போதெல்லாம் வித்தியாசமாக இருக்கிறது...இசை , பாடல்கள் , நடிப்பு உறுத்தாமல் இருக்கிறது.. கண்டிப்பாக படம் ஹிட் தான்..
ஹிட் , ஃபிளாப் என்பதை மறந்து விட்டு படம் எப்படி என அலசலாம்...

சர்வ வல்லமை பொருந்திய சட்ட அமைச்சர் , கல்லூரியில் அவரே போய் சீட் கேட்கிறாராம்...இல்லை என்றதும் சம்பந்தப்பட்ட்டவரை ஒன்றும் செய்யாமல் சுமமா ஒரு கலவரத்தை உண்டாக்குக்கிறார்... அதனால் அவர் என்ன சாதித்தார் என்ன புரியவில்லை..

அவர் வளர்ச்சிக்கு காரணமான தம்பி சிறைத்தண்டனை பெறுகிறானாம்..இந்தியாவில் இது நடக்காது....அப்படியே நடந்தாலும் , அவனை எப்படியாவது தப்ப வைக்கத்தானே முயல்வார்.. இவர் அப்படி செய்வதில்லை... 14 நாள் பரொலில் அவனை விடுவிக்கிறாராம் ..அதுவும் அவரே ஜாமீன் கை எழுத்து போடுகிறார்... அவ்வளவு பெரிய ஆள் தன் தம்பிக்கு செய்யும் பெரிய உபகாரம் இதுதானாம்..

சரி... அவன் பெரிய தண்டனை பெற்று 15 நாள் கிரேஸ் டைம் கிடைத்தால் எப்படியேல்லாம் எஞ்சாய் செய்வான்..அல்லது பதட்டமாக இரும்பான்..இவனோ வெகு கேஷுவலாக காலேஜ் ஸ்டூடண்ட் போல ஊர் சுற்றிகொண்டும் , சில்லறை குற்றங்கள் செய்து கொண்டும் இருக்கிறான்...ஜிம்முக்கு போய் பொறுப்பாக உடற்பயிற்சி செய்கிறான்..பெண்ணை பார்த்து சும்மா விசில் அடிக்கிறான்... அவன் சைக்காலஜி புரியவே இல்லை...

அவனை நாயகன் கடத்தி ஐந்து நாட்கள் தனியாக அடைத்து வைக்கிறான்.. நமக்கெல்லாம் ஒரு நாளிலேயே மீசை தாடி வளர்ந்து விடும்..அவனோ ஒரு வாரமும் அன்றலர்ந்த மலர் போல ஃபிரஷாகவும் எனர்ஜெடிக்காகவும் இருக்கிறான்..

ஹீரோ பஸ்சில் போகும்போது ஒவ்வொரு முறையும் ஹீரோயின் அதே பஸ்சிலேயே எப்படியோ வந்து விடுகிறார்.. ஒவ்வொரு முறையும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் ந்டக்கிறது..இயக்குனர் பஸ்சிலேயே போய் இருக்க மாட்டார் என நினைக்கிறேன்...வெகு செயற்கையான காட்சிகள்... கொஞ்சம் கவி நயத்தோடு , ரசனையோடு அந்த காட்சிகளை அமைத்து இருக்கலாம்...காதல் மனதில் ஒட்டவே இல்லை....

ஓனாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் , ஓ நாய் கேரக்டர் மேல்தான் வில்லன் கோஷ்டிக்கு கோபம்.. ஓனாய் கேரக்டர் போலீசில் சரண் அடைந்து இருந்தாலோ , தற்கொலை செய்து கொண்டு இருந்தாலோ , அல்லது வில்லனிடன் சரண் அரைந்து இருந்தாலோ மற்றவர்கள் அனைவரும் தப்பித்து இருப்பார்கள்..ஆனால் அவனோ தானும் அழிந்து தனக்கு வேண்டியவர்களையும் அழிக்கிறான்...

இந்த படத்தில் எல்லோருமே அந்த ஓனாயை விட முட்டாள்தனமாக  நடந்து கொள்கின்றனர்...     வில்லனும் , நாயகனும் ஒருவரை ஒருவர் பிடிக்க முயல்கின்றனர்...ஆனால் இருவரும் புத்திசாலித்தனமாக எதுவும் செய்வதில்லை...தற்செயலாக இருவரும் சந்திக்கின்றனர்..

சரி....அப்படியே சந்தித்தால் , ஹீரோ என்ன செய்ய வேண்டும்...பின்னாடியே போலீஸ் வருகிறார்கள்...அவர்களிடன் ஒப்படைப்பதில்லை...எங்கோ அவனை அழைத்து செல்கிறான்...

இப்படி எல்லாம் இருந்தும் , தற்போதைய படங்களை ஒப்பிட்டால் , பார்க்கும்படியான படம் தான்...

ஒரு வாட்டி பார்க்கலாம்..

இவன் வேற  மாதிரி- ரோல் மாடல் அன்று






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா