Monday, October 13, 2014

வாசகனின் பங்கேற்புக்கு இடம் அளிக்கிறேன் - கலை குறித்து ஓவியர் மசெ பேச்சு


ஓவிய கலை என்பது கடல் போன்ற பிரமாண்டமான ஒன்று. அதை ரசிப்பதற்கேகூட நல்ல பயிற்சி வேண்டும். நம்மில் பெரும்பாலானோருக்கு ஓவியம் என்பது பத்திரிக்கைகளில் வரும் கதைகளுக்கு போடப்படும் ஓவியம் மூலம் அறிமுகம் ஆகி இருக்கும். அந்த ஓவியங்களில் ஒவ்வொரு ஓவியருக்கும் ஒரு பாணி இருக்கும் , ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும், மில்க் பூத் என்ற டீ ஷர்ட் வாசகத்துடன் மு...மன்னிக்கவும் .. கலை அம்சத்துடன் ஒரு பெண்ணை  வரைந்த ஓவியர் இருக்கிறார்.  போட்டோபோலவே வரையும் ஓவியர்கள் இருக்கிறார்கள். ஒரு வித அமானுஷ்ய தன்மையுடன் வரைபவர்கள் இருக்கிறார்கள். இருப்பதை அப்படியே கண் முன் நிறுத்துவது ஒரு பாணி என்றால் வாசகனின் கற்பனைக்கு சற்று இடம் அளித்து , அழகியலும் கற்பனையும் சேர்த்து வரைவது மணியம் செல்வத்தின் பாணி. அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உண்டு,

என்னை பொருத்தவரை மேலே சொன்ன டீஷர்ட் ஓவியர் முதல் , போட்டோகிராஃபி ஓவியர் வரை எல்லோரையுமே ரசிப்பேன். ரசிப்பதுடன் ஆழந்து கவனிக்கவும் செய்வது மணியம் செல்வத்தின் ஓவியங்களை..

இவரது தந்தை மணியனின் ஓவியங்கள் இன்னும் பேசப்பட்டாலும் ( குறிப்பாக பொன்னியின் செல்வன் ஓவியங்கள் ) தன் தந்தையையும் விஞ்சி நிற்பவர் மணியன் செல்வம்.

அவர்தம் ஓவியங்களை மட்டும் அன்று..அவர் பேட்டிகளையும் ஆர்வமாக கவனிப்பவன் என்ற முறையில் ஞாநி மற்றும் பாஸ்கர் சக்தி  நடத்தும் கேணி கூட்டத்தில் அவர் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளித்தது.

இயற்கையான சூழலில் கேணி கூட்டத்தில் கலந்து கொள்வது எப்போதுமே இனிய அனுபவம். இம்முறை சற்று வித்தியாசமாக , அறைக்குள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் அது எனக்கு சற்று ஏமாற்றம் என்றாலும் , அறைக்குள் நடத்தியதால் , வீடீயோ காட்சிகள் மிக சிறப்பாக அமைந்திருந்தன என்பதால் மகிழ்ச்சியாக இருந்தது. அதிஷா , லக்கி யுவா போன்ற பிரபலங்கள் ஆஜர் ஆகி இருந்தனர். அவர்கள் வெற்றிக்கான காரணம் புரிந்தது. எதற்கு பிரியாரிட்டி கொடுப்பது என்பதே நம்மை உருவாக்குகிறது அல்லவா...

அரசியல் விமர்சகராக நாம் அறிந்த ஞாநி , ஓவியம் குறித்து பேசியது வியப்பாக இருந்தது,  ஓவிய மேதையான மாசெ அந்த அறிமுக உரையை ஆர்வத்துடன் கவனித்தார்.

ஞாநி பேசுகையில் , தனக்கு முதன் முதலில் மணியம் செல்வம் அறிமுகம் ஆனது வேறோரு பெயரில் என்று சொல்லி , அவரையே ஆச்சர்யப்பட வைத்தார்.  குமுதத்தில் , பிரபலங்களின் வாரிசுகளின் திறனைக்காட்டும் பகுதி ஒன்று பிரசுரிக்கப்பட்டதாம். அதில் மணியம் அவர்களின் மகன் என்ற முறையில் லோகனாதன் என்பவர் படம் வரைந்தாராம். அவர்தான் இன்றைய மசெ !!!!!   பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்ததன் ஒரு சின்ன "கால பயண மகிழ்ச்சி"  மசெ முகத்தில் தெரிந்தது.

ஞாநி தொடர்ந்து பேசினார்..

சினிமாவில் க்ளோசப் ஷாட் , லாங்க் ஷாட் , இந்த கோணம் , அந்த கோணம். மாண்டேஜ் என்றெல்லாம் இப்போது பேசுகிறோம் . அது போன்ற பேச்சுகள் இல்லாத அன்றைய கால கட்டத்தில் , இவற்றை ஓவியம் மூலம் செய்து காட்டுயவர்கள் அன்றைய ஓவியர்கள்..  தொடர்கதை , சிறுகதைகள் என பத்திரிக்கைகள் ஆதிக்கம் செய்த அன்றைய சூழலில் ஓவியர்கள் பிசியாக செயல்பட்டனர். ஒரு கட்டத்தில் திடீர் என கதைகளுக்கு இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது...அதை மசெ எப்படி எதிர்கொண்டார் என விளக்குவார் என கருதுகிறேன்.  நான் அந்த காலத்தில் இருந்தே மசெயை கவனித்து வளர்ந்து வந்தவன். அவர் போன்ற ஓவிய்ர்களை ரோல் மாடலாக கொண்டு , அவர்களைப்போலவே வரைய முயற்சி செய்தவன் நான்.. எனவேதான் என்னால் நல்ல ஓவியனாக உருவெடுக்க முடியவில்லை . யார் பாதிப்பும் இல்லாமல் நான் வரைந்த ஒரே ஓவியமான பாரதி ஓவியம் மட்டும் பிரபலமாக உள்ளது. மசெ பத்திரிக்கையில் மட்டும் வரையவில்லை. வேறு இடங்களிலும் தன் கலைத்திறனை காட்டி இருக்கிறார். பல ஆலயங்களில் வணங்கப்படும் சிலைகள் இவர் வடிவமைத்ததுதான். அவர் தன் அனுபவங்களை நம்முடம் பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்..

இவ்வாறு அவர் பேசியதும் , தொடர்ந்து மசெ பேசினார். ஓவிய துறைக்கு எப்படி வந்தார் என்பதையும் அவரது தந்தைக்கும் கல்கி அவர்களுக்கும் இடையேயான நெருக்கம் குறித்தும் பல விஷயங்கள் சொன்னார்.  டெக்னாலஜி வளராத அன்றைய காலத்தில் , அட்டைப்படம் வரைவதெல்லாம் சாதாரண விஷயம் அன்று.  வரையும் படம் , ப்ரோசஸ் எல்லாம் முடிந்து ப்ரிண்டில் எப்படி வரும் என் கணிக்க தெரிந்திருக்க வேண்டும் . அட்டையில் வரும் எழுத்துகளை சரியாக மேட்ச் செய்ய வேண்டும் .  ப்ரிண்டிங் பற்றியும் தெரிந்து இருக்க வேண்டும் .உதாரணமாக ஓவியத்தின் ஒரு பகுதியில் அதிக கருப்பு பகுதி இருந்தால் ,  மை அதிகம் செலவாகி அதன் மற்ற பகுதியின் தரத்தையும் கெடுத்து விடும்,  அதையும் கணக்கில் கொண்டு , அந்த கறுப்பு பகுதியில் வேறேனும் விஷயங்களை பொருத்தமாகவும் அழகியலுடனும் சேர்க்க வேண்டும். அதாவது கலைஞனாக இருந்தால் மட்டும் போதாது. தொழில் நுட்ப அறிவும் வேண்டும் .. அப்படித்தான் அந்த காலத்தில் ஓவிய பணியாற்றினர்.  இதற்காக பெரிய அளவில் பொருளாதார ஆதாயங்கள் கிடைக்காமல் போகலாம். அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதில் கிடைக்கும் மகிழ்ச்சியே ஓவியர்களை இயங்க வைக்கிறது.

இப்படி பேசிய அவர் சில அபூர்வ ஓவியங்கள் , அவை உருவாகும் விதம் ஆகியவை குறித்து காணொளி மூலம் விளக்கினார்.  ஒரு சிறப்பிதழுக்காக குறிப்ப்பிட்ட அட்டைப்படம் காட்டினார். அதற்கு முதலில் வரையப்பட்டு இருந்த ஓவியத்தை காட்டினார். அது செம அழகாக இருந்தது. ஆனால் ஓவியருக்கு அதில் திருப்தி இல்லை..எனவே அதை புறக்கணித்து விட்டு இன்னொரு ஓவியம் தயார் செய்தார். இரண்டையும் நாம் பார்க்கும்போது , அவர் செய்த மாற்றம் , அது தரும் அழுத்தம் , அழகு போன்றவை பளிச் என தெரிந்தன. அப்படி வரையப்பட்ட படம் , ப்ரிண்டில் எப்படி வந்துள்ளது என்பதையும் காட்டினார். வாவ்வ்வ்வ்.. ப்ரிண்டில் நாம் பார்ப்பதை , ஓவியர் ஏற்கனவே மனக்கண்ணில் பார்த்து வரைந்தாக வேண்டும்.


வரலாற்று சிறப்புமிக்க சில இடங்களுக்கு சென்று வரையப்பட்ட படங்களை காட்டினார்.

சிலர்  நாளை மற்றும் ஒரு நாளே , ஜே ஜே சில குறிப்புகள் போன்ற  ஃபேக் நாவல்களை படித்துவிட்டு வாழ்க்கையை அப்படியே பதிவு செய்து இருக்கிறது என சிலிர்ப்பார்கள் அல்லவா.. அப்படியே பதிவு செய்வது கலை அல்ல என செம அழகாக விளக்கினார். வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் , சிலைகள் ஓவியர் கைவண்ணத்தில் எப்படி உரு மாறுகிறது என விளக்கியது அட்டகாசம்


செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.அத்தகைய படைப்புகள் காலத்தை விஞ்சி நிற்கும் என்றார் மசெ.


ஒரு விஷ்யத்தை நன்றாக தெரிந்து கொண்டு விட்டு , அதன் பின் அதை மீறி செல்வது நல்லது.  எதுவுமே தெரியாமல் , வெறும் பரபரப்புக்காக மீறல்களில் ஈடுபடுவது நல்லதனறு. அந்த காலத்தில் என் நண்பர் ஒருவர் மாடர்ன் ஆர்ட் வரைந்து பல பரிசுகள் வென்றார். ஆனால் இன்று அவருக்கு ஓவிய துறையில் எந்த இடமும் இல்லை. காரணம் அவரிடம் அடிப்படை அறிவு இல்லை. நான் மாடர்ன் ஆர்ட்டுக்கு எதிரி அல்லன். ஆனால் வலுக்கட்டாயமாக அதில் இறங்குவதில்லை. எப்போது தோன்றுகிறதோ அப்போது வரைகிறேன். கார்ட்டூனும் முயற்சி செய்துள்ளேன். ஆனால் அதில் அதிகம் இறங்கினால் , இயல்பான ஸ்டைல் கெட்டு விடும் என என் தந்தை எச்சரித்ததால் , அதை விட்டு விட்டேன்.

என் தாயார் பெயர் சரஸ்வதி. அவர் துணை இல்லாமல் என் தந்தை அவ்வளவு சாதித்து இருக்க முடியாது. எல்லாவித்திலும் என் அம்மா உற்ற துணையாக இருந்தார்,

என் படங்களில் வாசகனின் கற்பனைக்கு எப்போதுமே இடம் இருக்கும். இருப்பதை அபப்டியே வரைந்து , வாசகனின் கற்பனைக்கு இடம் இன்றி செய்வதில்லை.

அறீவியல் முன்னேற்றங்களை நான் பயன்படுத்திக்கொள்கிறேன். அதில் எனக்கு தயக்கம் இல்லை. ஆனால் டெக்னாலஜி நம்மை ஆதிக்கம் செலுத்திவிட அனுமதிக்க கூடாது. தேவையான அளவு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். டெக்னாலஜி மூலம்தான் என் தந்தை ஓவியங்களை பாதுகாக்க முடிந்தது.

என்னால் அழகாக மட்டுமே வரைய முடியும் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு , தன் கதாபாத்திரங்களை அழகின் உச்சமாகத்தான் கதாசிரியர்கள் காட்டுகிறார்கள். எனவே நான் அழகாகவே வரைய வேண்டி இருக்கிறது. ஆனாலும் என் ஓவியங்கள் ஒரே மாதிரி இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

கதாசிரியர்கள் விரும்புவதை ஓவியத்தில் கொண்டு வருவது என் கடமை. ரத்தம் ஒரே நிறம் நாவலில் சுஜாதா ஒரு காட்சியில் , யானையால் மிதிக்கப்பட்டு ரத்தம் பாய்ந்து சிதறுவதை , மயில் தோகை போல ரத்தம் சிதறியது என எழுதி இருப்பார். அதை ஓவியத்தில் அப்படியே கொண்டு வருவது சவாலாக இருந்தது. பொருத்தமான கோணாத்தை யோசிக்க வேண்டி இருந்தது   அந்த கதையின் ஓவியங்கள் எப்படி வர வேண்டும் என சுஜாதா ஆர்வம் காட்டினார், எனக்கு பல தகவல்கள் தந்தார்.


கதைகளுக்கான ஓவிய தேவை குறைந்த சூழலை எப்படி எதிர்கொள்கிறேன் என ஞாநி கேட்டார். இந்த தேவை இன்னும் குறைந்து , நான் முழுமையாக விடுபட்டால் நல்லதுதான் என கருதுகிறேன். நான் பத்திரிக்கையை மட்டும் நம்பி இருக்கவில்லை. ஓவியத்துறையில் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன.

ஓவியம் படித்தால் வேலை கிடைக்குமா என கணக்குபோடாமல் , ஆர்வத்துடன் இதில் இறங்கினால் வாய்ப்பு உங்களை தேடி வரும். கண்டிப்பாக சாதிக்கலாம்.

இவ்வாறு ம செ பேசினார்..





No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா