Friday, December 18, 2015

சில உன்னத கவிதைகள் - சீன, ஜப்பான் , இந்திய தத்துவ பார்வைகள்

1 சீனா

மனம் இல்லை   புத்தர் இல்லை

இருத்தல் இல்லை

சிதறிக்கிடப்பவை சூனியத்தி எலும்புகள்

இந்த பொன் சிங்கம்

ஏன் தேடி செல்ல வேண்டும்

அந்த நரிக் குகைக்கு



நீர் பறவை

வருகிறது செல்கிறது

ஆனால் விட்டுச்செல்வதில்லை

ஒரு காலடி சுவடி

அதற்கு தேவையும் இல்லை

ஒரு வழி காட்டி


72 ஆண்டுகள் அடக்கி வைத்திருந்தேன்

அந்த எருதை மிக கடுமையாக

இன்று

மீண்டும் பிளம் மலர் பூத்திருக்க

பனிப்பொழிவில் அலையவிட்டேன்

அதை

ஜப்பான்
----------------------------------------------------------------------------------------------

 இரவில் திருடசெல்பவன்

நிலவொளியில் சற்று நிற்கிறான்

ஹைக்கூ பாட

--------------------------------------------------------------------------
இந்தியா

எனக்கு ஞாபகமுள்ள பௌர்ணமிகள் நான்கு
ஒன்று
எதிர்விட்டு அம்மாளின்
துஷ்டிக்கு
சுடுகாடு சென்று
திரும்புகையில் பார்த்தது.
நள்ளிரவில்
பஸ் கிடைக்காமல்
லாரி டாப்பில்
பிரயாணம் செய்கையில்
பிரகாசித்தது.
ஐந்து நட்சத்திர ஹோட்டல் வாசலில்
அரசு அதிகாரி ஒருவரைக் காண
காத்திருக்கையில் கண்டது.
இண்டு இடுக்கு
மாடிக் குடித்தனத்தில்
மின்வெட்டு இருள்வேளையில்
ஜன்னல் வழியே
வந்து விழுந்தது.
*- தேவதச்சன்

1 comment:

  1. ஜென் பற்றி நிறைய எழுதுங்க ஸார்

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா