Tuesday, December 15, 2015

ராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம்



இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக பலர் நினைக்கிறார்கள்... மின்சாரம் , நெட் , டிவி என சிலருக்கு கிடைப்பதால் அதை மட்டும் வைத்துக்கொண்டு எல்லோரும் சுகம் என நினைக்கிறார்கள்.. ஆனால் இதை பதிவிடும் 15.12.2015  நிலவரப்படி இன்னமும்கூட நீரில் மூழ்கி இருக்கும் இல்லங்கள் ஏராளம் , தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது...சாலைகள் சீரடையாத சூழலும் பல இடங்களில் உள்ளது

-----------------------------------------------------

என்னதான் கடைகளில் காய்கறி வாங்கி சாப்பிட்டாலும் நாமே நம் வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு உண்டால் அதன் சுவையே தனிதான்.. அதேபோல நம் வாகனங்களை சர்வீஸ் செய்ய விடுவதை விட , நாமே அதை கழுவி , பாகங்களை பிரித்து , உயவுப்பொருட்கள் தேவைப்படும் இடங்களில் அதை சேர்த்து மீண்டும் சரியாக பொருத்தி சரியாக வேலை செய்ய வைத்தால் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.. வாகனம் என்பது சைக்கிளாக இருக்கலாம். அல்லது காராக இருக்கலாம்.  எதுவாக இருப்பினும் அனுபவம் ஒன்றுதான்

----------------------------

மின்சாரம் இல்லாத சென்னை ஒரு வித்தியாசமான அனுபவம் தந்தது. எங்கும் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு , மையிருட்டு என்றெல்லாம் சொல்வார்களே...அதை அனுபவிக்க முடிந்தது, கண் மூடினால் எப்படி இருக்குமோ அதேபோலவே கண்ணை மூடினாலும் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.  நெட் , டிவி , மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சுகத்தை அனுபவித்தபின் மீண்டும் இவற்றை பயன்படுத்த மனம் வரவில்லை... தேவைப்படும் குறைந்த பட்ச மின்சாரம் , குறைந்தபட்ச நெட் , குறைந்தபட்ச டிவி என்பது எனக்கு பழக்கமாகி விட்டது

---------------------------------------------


அதுவரை அக்கம்பக்கத்தினர் யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் , மின்சாரம் இல்லாமல் டிவி பார்க்க முடியாமல் , மொட்டை மாடி மீட்டிங் நடத்தி டொனால்ட் டிரம்ப் முதல் செம்பரம்பாக்கம் ஏரி வரை சகல விஷ்யங்களையும் அலசினர். என்னவோ ரொம்ப நாள் பழகிய மாதிரி கொஞ்சி குலவினர். மீண்டும் மின்சாரம் வந்ததும் மீண்டும் வீட்டிலேயே பம்ம ஆரம்பித்து விட்டனர்..

------------------------------------------------------


சில படங்களை ரசித்து பார்த்திருப்போம். நாயகர்களை போற்றி இருப்போம். அதே நாயகர்கள் மார்க்கெட் போன பின்பு சாதாரண படங்களில் நடிக்கையில் சற்று வருத்தமாக இருக்கும். உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களில் நடித்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் வில்லனாக நடித்து சின்ன சின்ன நடிகர்களிடம் அடி வாங்கியதுபோல நடித்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது...

ஒரு காலத்தில் ரஜினி , கமலுக்கே டஃப் ஃபைட் கொடுத்த  ராமராஜன் , இப்படி சாதாரண வேடங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளித்தது . ராமராஜன் என்றால் கரகாட்டக்காரன் நினைவு வந்தால்போதும்.


----------------------------------------------

3 comments:

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா