Thursday, June 6, 2019

கடையேழு வள்ளல்கள் -சுருக்கமான பார்வை


கடை ஏழு மன்னர்கள் பெயர்கள் என்ன?

  1 பாரி
2. வல்வில் ஓரி
3. காரி (மலையமான்)
4. பேகன்
5. அதியமான்
6. நள்ளை
7. ஆய் அண்டிரன்

 ஏன் கடை ஏழு மன்னர்கள் என்கிறார்கள்..

அன்ன சத்திரம் கட்டம் , கல்வி சாலைகள் அமைத்தல் என்றெல்லாம் வள்ளல்தன்மைகள் உண்டு.. இவற்றுக்க்கெல்லாம் ஆதாரமானது அன்புதான்..

இந்த ஏழு மன்னர்களைப்பொருத்தவரை இவர்கள் வள்ளல்தன்மையில் அன்புதான் அதிகமாக வெளிப்படுகிறது. நாம் அறிவுப்பூர்வமாக யோசித்தால் , நானாக இருந்தால் , அப்படி செய்டிருக்க மாட்டேன்.. வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி இருப்பேன் என சொல்வோம்

ஆனால் அன்பு அப்படி யோசித்து முடிவு எடுக்காது..கணக்குப்போட்டு காட்டுவது அன்பாக இருக்க இயலாது

---

பாரி..

இவன் பலருக்கு வாரி வழங்கிய வள்ளல்.. முல்லை படருவதற்கு சரியான கோல் இல்லாததால்  , தன் தேரை முல்லைக்கு அளித்தான் இவன்.. வீட்டுக்குப்போய் , யாரங்கே,, முல்லைக்கு அருகே , ஒரு கம்பை நட்டு வையுங்கள் என உத்தரவிட்டு இருக்கலாம்.. ஆனால் அன்பு மிகுதியால் தேரை அளித்து சரித்திரத்தில் இடம் பெற்றான்

ஓரி

தன்னை புகழ்ந்து பாடிய புலவர்களுக்கு தன் சிற்றரசு ஒன்றையே கொடுத்தான் இவன்...   தமிழுக்கு புலமைக்கு அரசை அளித்து புகழ் எய்தினான்

காரி

போர்களில் குதிரைச்சவாரியில் ஈடுபாடு கொண்டவன்.. தான் மதிப்பு மிக்கவை என நினைப்பதை பரிசளிப்பதே நாகரிகம.. தனக்கு தேவை அற்றதை , மிச்சமானதை , தேவை அற்றதை பரிசளிப்பது நாகரிகம் ஆகாது.. தான் மிகவும் நேசிக்கும் குதிரைகளை பரிசளிப்பது இவன் பாணி

பேகன்

மயில் ஆடுவதை பார்த்து  , குளிரால் நடுங்குகிறது என நினைத்து
 போர்வையால் போர்த்திய அன்பு பித்தன் இவன்


அதியமான்

சாகா வரம் அளிக்கும் நெல்லிக்கனியை அவ்வைக்கு அளித்து சாகா புகழ் எய்தியவன் இவன்

 நள்ளி

ஒரு நாள் இம்மன்னன் காட்டில் மாறு வேடத்தில் சென்று கொண்டிருந்தான்.. ஒரு ஏழைப்புலவன் மரத்தடியில் அமர்ந்து பாடல் புனைவதை கண்டான்.. பருக புலவனுக்கு நீர் அளித்தான் . விலங்கு ஒன்றை வேட்டையாடி , தீ மூட்டி பக்குவப்படுத்தி பசியாற்றினான்.. தான் அணிந்திருந்த சங்கிலியை பரிசாக அளித்து விடை பெற்றான்...  கையில் ஏதுமற்ற நிலையிலும் வழங்குதலில் குறை வைக்காத மன்னன்.. ஒரு முறை இவனிடம் வாங்கினால் , பிறகு யாரிடமும் வாங்கும் அவசியம் இராது

ஆய் அண்டிரன்

இவன் கடவுளுக்கே பரிசளித்த புகழ் கொண்டவன்.. அரிய மரகதமணியை பரிசாக கொடுத்தான்

---


இவர்கள் சராசரி வாழ்க்கைக்கு தேவையான ஈகைகளையும் செய்தாலும் , அன்பின் உச்சம் தொட்டு அறிவை மீறி அன்பைக்காட்டிய தருணத்தால் இன்றும் நினைக்கப்படுகிறார்கள்


2 comments:

  1. ஆய் அண்டிரன்
    .
    இவன் பெயருக்கு முன்னால் இருக்கும் ஆய் .. இப்போது நாங்கள் பயன்படுத்தும் பொருளில் தான் வழங்க பட்டதா ?

    ReplyDelete
    Replies
    1. ஆய் என்ற சொல்லுக்கு பல பொருட்கள் உண்டு. தற்போது அதன் ஒரு பொருள் மட்டுமே தெரிவதால் கேலியாக தோன்றலாம்.தமிழ் சொற்களை மீட்போம்

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா