Tuesday, January 14, 2020

பாட்ஷா , தர்பார் ..விமர்சகர்களின் அறியாமை

இலக்கியம் குறித்து எழுத விரும்புகிறேன். தர்பார்  பற்றி எழுத விரும்பவில்லை. ஆனாலும் எழுதுவதற்கு காரணம் இருக்கிறது.


பாட்ஷா படத்தை முதல்நாள் பார்த்தபோதே இது வேறு லெவல் படம் என புரிந்து விட்டது. திரைக்கதை இசை வசனம் நடிப்பு என எல்லாம் பிரமாதம். நண்பர்களுக்கெல்லாம் சொன்னேன். நானே பலரை அழைத்துச் சென்றேன்

சரி பத்திரிக்கைகளில் என்ன எழுதியிருக்கிறார்கள் என ஆவலுடன் பார்த்தால் மிதமான ஏமாற்றம்.

வழக்கமான ரஜினி படம் , அவருக்காக ஓடும் என எழுதியிருந்தார்கள்

தேவா இசை இன்றும் நிற்கிறது. ஆனால் அதை மட்டம் எழுதியிருந்தது ஒரு பத்திரிக்கை. தேவா இதை வருத்தமுடன் சொல்லி வருகிறார்.

இன்று கல்ட் ஸ்டேடஸை அடைந்த மக்களால் கொண்டாடப்படும் படம் குறித்து அன்றைய விமர்சகர்கள் என்ன எழுதினார்கள் என பார்த்தால் விமர்சகர்களின் அறியாமையும் காழ்ப்பும் தெரியும்.


தர்பார் படம் கண்டிப்பாக வரலாற்றில் நிற்கும். இன்றைய விமர்சனங்களை,வருங்காலத்தில் பார்ப்பவர்கள் எள்ளி நகையாடுவார்கள்

வில்லன் சுனில் ஷெட்டி அதிக நேரம் வருவதில்லை. போதுமான கொடுமைகள் செய்வதில்லை என்பதை,ஒரு குறையாக ரஜினி ரசிகர்கள் உட்பட பலர் சொல்கிறாரககள்

வில்லனை அப்படி காட்டுவது பழங்கால யுக்தி. subtle ஆக அவன் பலத்தை காட்ட வேண்டும்.  தர்பாரில் வில்லன் நேரடியாக வருவதில்லை. அவன் மீதான பயம்தான் பலரை இயக்குகிறது. அவன் யார் என்பது நமக்கு தெரியும். ஆனால் ஹீரோவுக்குத் தெரியாது என்பதுதான் திரைக்கதை யுக்தி.

ரஜினி படங்களில் அவ்வளவாக நாம் பார்த்திராத திரைக்கதை மாயாஜாலங்கள் படத்தின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது

ஆண்டவன் சொல்றான் என்பது,போன்ற ரஜினியிச வசனங்களோ அலுத்துப்போன பஞ்ச் டயலாக்குகளோ இன்றி தரமான படம் தந்த முருகதாஸ் கண்டிப்பாக திரைக்கதை மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா