Sunday, January 19, 2020

ஜெயகாந்தன் எழுத்துலகின் ஒரு துளி

ஜெயகாந்தனின் புனைவு ஒன்று

ஒருவன் 35 வயது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை , பெற்றோர் கோரிக்கையை நிராகரித்து விட்டு

எனக்கு திருமணம் வேண்டாம். அவ்வப்போது பாலியல் தொழிலாளிகளிடம் உடல் இச்சையை தீர்த்துக் கொள்வேன்  அது போதும் என தன் நண்பர்களிடம் சொல்கிறான்.

காசு இருக்கும்வரை நன்றாகத்தான் இருக்கும். காசில்லாதவனை எந்த வேசியும் மதிக்க மாட்டாள் என்கிறார் நண்பர் , பேச்சு வாக்கில்

ஓகேயா..   ? ஒரு நாள் ஒரு விலைமாது வீட்டுக்கு செல்கிறான். அவள் வரவேற்கிறாள்..

அப்போதுதான் காசு கொண்டு வர மறந்துவிட்டது என உணர்கிறான். கிளம்ப எத்தனிக்கிறான்.

பரவாயில்லை. கொஞ்ச நேரம் பேசி விட்டு செல்லலாம் , உங்களுக்கு ஆட்சேபம் இல்லாவிட்டால் என பண்புடன் கூறுகிறாள் அவள். அந்த நட்பை ஏற்று அமர்கிறான்.
சரி ஆடை மாற்றி விட்டு வருகிறேன் என,தன் அறைக்கு சென்று கதவை அடைக்கிறாள் அவள்

அந்த கேரக்டரை எப்படி உயர்த்திக் காட்டுகிறார் என வியப்பாக இருந்தது.

அறுபதுகளில் இப்படி ஒரு சித்தரிப்பு

செலவுக்கு ஏதும் காசு வேண்டுமா என,அவள் கேட்பதை மறுத்து,விட்டு அவள் கைகளால்  சாப்பிட்டுவிட்டு கிளம்புகிறான்

அந்த கதை இதற்கு மேல் எப்படி செல்கிறது என்பது,வேறு.

ஆனால் அதன் உச்ச கணம் இங்கேயே நிகழ்கிறது

காசில்லாவிட்டால் வேசி மதிக்க மாட்டாள் என நண்பர் சொன்னது நினைவுக்கு வருகிறது

ஆனால்,நீ சொன்னது தவறாகி விட்டது என மேற்படி சம்பவத்தை உதாரணமாக சொல்ல அவன் மனம் இடமளிக்கவில்லை

நல்ல எழுத்தை , மனவோட்டத்தை படித்த மகிழ்ச்சி கிடைத்தது

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா