Sunday, January 5, 2020

தமிழ் எழுத்துகளின் தரத்தில் வீழ்ச்சி. இலக்கிய சிந்தனை அமைப்பு வேதனை

இலக்கிய சிந்தனை அமைப்பு பற்றிய என் மரியாதையை பல முறை குறிப்பிட்டுள்ளேன்

பல்வேறு இதழ்களில் வரும் கதைகளில் ஒன்றை ஒவ்வொரு மாதமும் சிறந்த கதையாக தேர்ந்தெடுப்பார்கள்

12 மாதங்களில் இப்படி தேர்ந்தெடுக்கப்படும் 12 கதைகளில் ஒரு கதையாக தேர்ந்தெடுத்து அந்த எழுத்தாளருக்கு ஒரு விழாவில் பரிசளிப்பார்கள்

அந்த 12 கதைகளும் ஒரு நூலாக வெளியிடப்படும்

அந்த கதைகளின் குறை நிறைகளை சுஜாதா போன்ற ஒரு மூத்த எழுத்தாளர் அலசுவார்.

ஒவ்வோர் ஆண்டும் வெளியாகும் மதிப்புரைகளை அவ்வளவு சிறப்பாக இருக்கும்

இப்போது என்ன கொடுமை என்றால் தேர்ந்தெடுக்க தகுதியுள்ள கதைகள் தற்போது கிடைப்பதில்லை என்பதால் இந்த நிகழ்வை நிறுத்துவது குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளது இலக்கிய சிந்தனை அமைப்பு

வருத்தமளிக்கும் நிகழ்வு

இன்று தரமான இளம் எழுத்தாளர்கள் பலர் உண்டு

ஆனால் பத்திரிகைகள் பலவும் அரசியல் அக்கப்போரில் சிக்கிவிட்டன. தமிழே தெரியாதவர்கள்தான் இன்று பதிப்பாளர்கள்  , பத்திரிக்கை ஆசிரியர்கள்.

எனவே பத்திரிக்கைகளின் தரம் வீழ்ந்து விட்டது

இதை மாற்றி , தரமான தமிழ் எழுத்துகளை காப்பாற்றுவது நம் கடமை




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா