Showing posts with label இலக்கியம் ஈழம் saanthan. Show all posts
Showing posts with label இலக்கியம் ஈழம் saanthan. Show all posts

Wednesday, December 25, 2024

பிரிப்பு - சாந்தன் சிறுகதை ...

 பிரிப்பு  - சாந்தன் சிறுகதை 

...

க ல்யாண வீட்டிற்குத் தென்னங் குருத்து அலங்காரஞ் செய்யக் கூடாதென்றுதான், பெரியவர்கள் எல்லோ ரும் வாது பண்ணினார்கள். திரு, ‘அதெல்லாம் முட்- டாள் தனம்' என்று சண்டை போட்டு, பச்சை ஓலைத் தோர ணங்கள் கட்ட வழி பார்த்தான். தனது கல்யாணத்திற் கென்றே மினைக்கெட்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டுத் தென்னிலங்கையிலிருந்து வந்த தன் கூட்டாளிமாரின் அலங் காரத் திறமையை - யாழ்ப்பாணத்திற்கு அவ்வளவு அறி முகமில்லாத - சிகரம் போன்று வாசலை அணைத்து எழுகிற- தென்னோலைத் தோரண வாயிலை, இந்தச் சந்தர்ப்பத்தைச் காட்டி, இங்கு கட்டுவது அவன் ஆசையாயிருந்தது.


பொன் உருக்குவதிலிருந்து, கோவிலில் தாலிகட்டு முடிந்து, புதுத் தம்பதிகள் வீடு திரும்புவது வரை விதவித மான ஃபோட்டோக்கள். திரு தான் அவற்றில் எவ்வளவு கம்பீரமாக நிற்கிறான்! முகங்கொள்ளாத மகிழ்ச்சி. பக்கத் தில் அதேபோலக் கமலாவும்.


கொழும்பிலிருந்து வந்த நண்பர்கள்தான் பந்தலையே பார்த்துக் கொண்டார்கள். தோரணம் பின்னுவதிலிருந்து, காகிதப் பூச்சரங் கட்டுவதுவரை அவர்கள் கவனித்த எல்லா வேலைகளையும், தம்பி ஒவ்வொன்றாகத் தன் 'கமரா' வுக்குள் அடக்கியிருந்தான். அந்தப் படங்களுங்கூட, இந்தப் படத்தொகுப்பில்—‘அல்ப’த்தில் தான் இருக்கின்றன.


சில்வாவும், அவர் மனைவியும் ஒரு குழந்தையின் ஆர்வம் முகமெல்லாம் வழிய, ஒவ்வொரு படமாக இரசித் துக்கொண்டிருந்தார்கள். படங்களை விளக்குவதற்கு, ஒரு தமிழ்-இந்துத் திருமணத்தின் சடங்குகள், தாற்பரியங்கள் எல்லாவற்றையும் விளக்க வேண்டியிருந்தது, திருவுக்கு. சில்வா ஏற்கெனவே ஓரளவு அறிந்து வைத்திருந்தாலும், அவர் மனைவிக்கு இவை யெல்லாம் மிகவும் புதிய விஷயங்கள்.


ஏழெட்டு ஆண்டுக்கால கொழும்பு வாழ்வைவிட்டு இந்த இடத்திற்கு மாற்றலாகி, திரு வந்தபோது, புதிய அலுவலகத்தில் சில்வாவைச் சந்தித்தான். தன் நண்பர் களின் ‘உள்ளுடனை’ இவரினுள்ளும் அவன் கண்டதானது, இப்புது நட்புக்கு அடிகோலி வேரூன்ற வைத்தது. இன்று, இந்த மத்தியான விருந்துக்கு அவர்கள் அழைக்கப்பட்ட வேளையில், அல்பத்தைக் காட்டுவதும், உபசாரங்களில் ஒன்றா யமைந்தது.


சோடனைகளின் போது மட்டுமல்ல; மாப்பிள்ளை வீட் டின் பலவிதமான சடங்குகளின் போதுங்கூட-இதோ இந்தத் திருமதி சில்வாவின் ஆர்வத்தையொத்த, அதே துடிப்புடன் - எல்லோருக்கும் முன்னால் துருத்திக்கொண்டு வந்து, மாப்பிள்ளையின் பின்னால்--தோளுக்கு மேலால் எத் தனை இடங்களில் நிற்கிறார்கள், அவன் நண்பர்கள்.


‘இவர்களெல்லாம் என் சிங்கள நண்பர்கள்’ இப்படி அந்தப் படங்களைக் காட்டி, சில்வாவுக்குச் -சொன்னால், அவர் வியப்பும், தன்மேல் மதிப்பும், மகிழ்வுங் கொள்ளக் கூடும் என்கிற எண்ணம்-ஆசை-அவனுள் எழுந்தது.


‘நண்பர்கள்’ என்கின்றபோது, 'சிங்கள நண்பர்கள்’ என்று சொல்வது எந்தளவு அசட்டுத்தனம் என்கிற உண் மையும் அடுத்த கணத்திற்குள்ளேயே அவனுக்கு உறைத் தது. ‘...இதில் பெருமைப்படவோ குறிப்பிட்டுச் சொல் லவோ ஒன்றுமிருக்கக் கூடாது. இந்தக் குட்டி நாட்டுக்குள் இருந்து கொண்டு, பரஸ்பரம் இப்படியான உறவுகளில்லா மல் இருப்பது தான் புதுமையாக இருக்க வேண்டும். இப்படி இருப்பதையும், அப்படிச் சொல்லிக் காட்டப்போய், அதனா லேயே அந்தப் பிரிவு அநாவசியமாய் உணர்த்தப் படக் கூடாது .........


தோரணங்களை நண்பர்கள் கட்டுகிற ஒரு படத்தைக் காட்டி; “உங்கள் நண்பர்கள்தான் அலங்காரங்கள் எல் லாம் செய்கிறார்கள் -போலிருக்கிறதே?''-என்று சில்வா. கேட்டபோது, அவன் மகிழ்ச்சியுடன் புன்முறுவல் செய்த வாறே, “ஆமாம்” என்று மட்டுந்தான் சொன்னான்.


...

1974 மல்லிகை இதழ் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா