Showing posts with label சூப்பர் ஸ்டார். Show all posts
Showing posts with label சூப்பர் ஸ்டார். Show all posts

Sunday, December 9, 2018

படையப்பாவுக்கு பிறகு ரஜினி படங்கள் - ஓர் அலசல்


படையப்பா திரைப்படம் வெளி வந்து வரலாறு காணா வெற்றி பெற்றதும் ரஜினிக்கு ஒரு தேக்க நிலை ஏற்பட்டது... அடுத்து என்ன என்ற யோசனை... வெற்றியின் உச்சத்தை பார்த்தாயிற்று... அதற்கு மேல் என்ன செய்வது என்ற நியாயமான யோசனை... வெற்றி என்பது மட்டும் போதாது..  வேறு ஏதோ ஒன்று கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.. இதனால் 1999ல் வெளிவந்த படையப்பாவுக்கு பின் இரண்டு ஆண்டுகள் ரஜினி படம் ஏதும் வரவில்லை..

2000த்துக்கு பின்புதான் அவர் படங்கள் வரலாயின... அந்த படங்கள் படையப்பாவின் வெற்றியை மிஞ்சினவா..  ஓர் அலசல்

----

2002 - பாபா...

  சினிமா வரலாற்றில் அதிக பட்ச எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம்.. சினிமா பத்திரிக்கைகள் மட்டும் அல்ல.. அரசியல் , ஆன்மிகம் , கில்மா , குடும்பம் , விளையாட்டு என எந்த பத்திரிக்கையை எடுத்தாலும் அதில் பாபா குறித்து ஏதேனும் செய்தி வந்து விடும்... 

ஆனால் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை...  ஆனால் பாபா என்ற மகான் குறித்து பரவலாக மக்கள் அறிந்தார்கள்... அப்போதையை எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லையே தவிர இன்றும் பார்க்கும்படி இருக்கிறது... வியாபார ரீதியாக பண இழப்பு ஏற்பட்டு இருக்கலாம்...  ஆனால் ரஜினிக்கு பெருமை சேர்க்கும் படம்


2005 - சந்திரமுகி

அவ்வளவுதான் ரஜினி என பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் இருந்தே அவ்வப்போது ஏதாவது பிரச்சனைகளின்போது சிலர் சொல்வதும் ரஜினி மீண்டு எழுவதும் வரலாறு...  என்னைப்பத்தி ஆயிரம் பேரு , என்னென்ன சொன்னாங்க.. இப்பென்ன செய்வாங்க.. என ரஜினிக்காக கண்ணதாசன் எழுதி இருப்பார்... அந்த வரலாற்று தருணங்களை பலர் படித்திருப்பார்கள்.. நேரில் அனுபவித்து இருக்க மாட்டார்கள்...

2005ல் வர்லாறு மீண்டும் படைக்கப்பட்டது... ரஜினி அவ்வளவுதான் என்று சொல்லப்பட்ட சூழலில் 2005ல் சந்திரமுகி வெளியானது.. அதே தினத்தன்று கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ்.. விஜயின் சச்சின்.. வெளியாகின.. அஜித்தின் வரலாறு ( காட் ஃபாதர் ) படமும் அதே தினத்தன்று திட்டமிடப்பட்டு பிறகு ஒத்தி வைக்கப்பட்டது

ஆக , ஒரு உச்சகட்ட மோதல் அன்று நிகழ்ந்தது....  ஆனந்த விகடன் விமர்சனத்தில் மும்பை எக்ஸ்பிரஸ் , சச்சின் ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்தான் சந்திரமுகிக்கு கொடுத்தனர்

ஆனால் மக்கள் சந்திரமுகி படத்துக்குதான் முதல் இடம் கொடுத்தனர்.. முதல் இடம் மட்டும் அல்ல...முதல் மூன்று இடங்களையுமே சந்திரமுகி பெற்றது.. அன்றும் இன்றும் என்றும் ரஜினியே முதலிடம் என நிரூபித்த சந்திரமுகி ரஜினிக்கு பெருமை சேர்த்த படம்

2007 , சிவாஜி

ஜெண்டில்மேன் , இந்தியன் ,  முதல்வன் உட்பட பல பட்ங்களை ரஜினியை மனதில் வைத்தே ஷ்ங்கர் எழுதினாலும் அந்த காம்பினேஷன் சில காரணங்களால் உருப்பெறவில்லை... சிவாஜி படத்தில் இந்த ஷங்கர- ரஜினி காம்பினேஷன் உருவானது சிவாஜி த பாஸ் என்ற விளம்பரமே அதிரடியாக இருந்தது...   ஒரு வித்தியாசமான அனுபவத்தை ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்த வெற்றிப்படம் என்ற வகையில் இது ஒரு முக்கியமான படம்

2008  குசேலன்

ரஜினி கவுரவ வேடத்தில் நடித்த படம் என்றாலும் ரஜினி படம் என்றே அறியப்பட்டது.. எனவே ரஜினி படமாகவும் இல்லாமல் , ரஜினி பொறுப்பேற்கும் குழப்பமான சூழல் உருவானது

ரஜினிக்கு பெருமை சேர்க்காத படம்.. தவிர்த்திருக்கலாம்

2010  எந்திரன்

ஒரு டிரண்ட் செட்டர்...    அதிரடி வெற்றியையும் மீறி ஒரு டிரண்ட் செட்டர் என்ற வகையில் பெருமை சேர்க்கும் படம்.. இதன் வெற்றி அடுத்த பாகத்துக்கும் வழி வகுத்தது.. 8 ஆண்டுகள் கழித்து அடுத்த பாகம் வந்தாலும் இந்த படத்தை நினைவு வைத்து ரசிகர்கள் இதன் ரெஃபர்னஸ் காட்சிகளை ரசித்ததே இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு சான்று

2014 கோச்சடையான்

இனி வெற்றி மட்டும் வேண்டாம்.. புதிதாக முயல்வோம் என நினைத்து அனிமேஷன் டெக்னாலஜியை முயன்ற படம் இது... அந்த முயற்சி சிறப்பாக அமையவில்லை... முயலை குறி வைத்து வெல்வதை விட யானையை குறி வைத்து குறி தவறுவது மேல் என்பதைபோல் நல்ல முயற்சி என்பதில் பெருமைப்படலாம்

2014    லிங்கா

அவசரமாக எடுக்கப்பட்ட படம்...  தவிர்த்திருக்க வேண்டிய படம்.. எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை...


2016 கபாலி

வழக்கமான மசலாக்களில் இருந்து விடுபட்டு ஐரோப்பிய பாணியில் எடுக்கப்பட அழகான படம்.. நல்ல வெற்றி... ஜானி , முள்ளும் மலரும் பட வரிசையில் வைக்கத்தக்க பெருமைப்படத்தக்க படம்

2017  காலா

தேவர் மகன் என்றெல்லாம் ஆதிக்க சாதி பெருமை பேசிய படங்கள் மத்தியில் முதன் முறையாக நம் மண் குறித்த நம் மக்கள் பெருமை பேசிய படம்.. அதுவும் சொந்தப்படம்...  என்றென்றும் பெருமையாக சொல்லிக்கொள்ளும் படம்

2018  2.0

வயதாகி விடட்து என்பது மட்டுமே இப்போதெல்லாம் ரஜினி மீது வைக்க்கப்படும் “ குற்றச்சாட்டு “ எல்லோருக்கும் வயதாகும்.. ஓய்வெடுப்பார்கள்..ஆனால் இந்த வயதிலும் இப்படி ஒரு ஹிட்.. அதுவும் உலக அளவில் ஒரு ஹிட்,,,, நம்ப முடியாத ஓர் அற்புதம்

மொத்ததில் நடிப்பு வாழ்வின் இந்த கால கட்டத்தில் தொடர்ந்து நல்ல படங்களையே ( இரண்டு மட்டும் விதிவிலக்குகள்)  வெற்றி படங்களையே தந்து வருவதில் ரஜினிக்கு நிகர் ரஜினிதான் என்று தோன்றுகிறது 






Sunday, November 11, 2018

சூப்பர் ஸ்டாரை பேட்டி கண்ட சூப்பர் ஸ்டார்- ரஜினி அசத்தல்


 அந்த காலத்தில் அரசு தொலைக்காட்சிகளும் , அரசு வானொலிகளும்தான் கோலோச்சி வந்தன...

   அவர்கள் சிறப்பான சேவை செய்து வந்தாலும் , அவர்கள் வரம்புக்குட்பட்ட முறையிதான் பேச முடியும் என்பதால் இயல்புத்தன்மை குறைவாக இருப்பதாக சிலர் கருதினர்

அந்த சூழலில்தான் தனியார் தொலைக்காட்சிகள் பிரபலமாகின.. வாய்ப்புகள் தேடிக்கொண்டிந்த பல திறமைசாலிகள் வெளிச்சத்துக்கு வந்தனர், அவர்களுள் முக்கியமானவர் அர்ச்சனா.. சன் டிவியில் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தன..

அதன்  பின்வணிகமயமாகி விட்ட ஊடக சூழலில் தனித்துவம் மிக்கவர்கள் அரிதாகிப்போனார்கள்.. ஆங்கிலம் கலந்து பேசுவது , மேக் அப் , ஈர்ப்பான ஆடைகள் போன்றவற்றையே பலர் நம்ப ஆரம்பித்தனர்

இந்த சூழலில் ரஜினியை அர்ச்சனா பேட்டி காண்கிறார் என்பது மிகுந்த ஆர்வம் ஏற்படுத்தியது,, சினிமாவில் ரஜினி சூப்பர் ஸ்டார் என்றால் தொகாவில் அர்ச்சனா சூப்பர் ஸ்டார்தான்.. சூப்பர்ஸ்டாரை , சூப்பர் ஸ்டார் பேட்டி எடுப்பது அரிதான் ஒரு நிகழ்வு என்பதால் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியாக இது இருந்தது

 நிகழ்ச்சி , எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்றே சொல்ல வேண்டும்.. பேட்டி எடுப்பவர் , கொடுப்பவர் என இருவருமே இயல்பாகவும் மனதில் இருந்தும் பேசினர்

   மாறுவேடத்தில் சென்று கொண்டிருந்தபோது யாரோ ஒருவர் தலைவா என அழைத்ததை கேட்டு பதறி விட்டேன்... எப்படி கண்டு பிடித்தார் என குழப்பமாக இருந்தது.. கடைசியில் பார்த்தால் அவர் என்னை அழைக்கவில்லை ..யாரோ ஒருவரை தலைவா என அழைத்திருக்கார்.. ஹாஹா.. என வெகு இயல்பாக பேசியது ரஜினிக்கே உரித்தான எளிமை


எம் ஜி ஆர் சிவாஜி காலத்தில் நடிக்க வந்திருந்தால் நான் முன்னுக்கு வந்திருக்க முடியாது,,, கமலுடன் முதன் முறை காரில் பயணித்தபோது அதை நம்ப முடியாமல் கைகளை கிள்ளிப்பார்த்துக் கொண்டேன் என்றெல்லாம் வெகு தன்னடக்கமாக பேசினார்

கனவில் இருக்கும் சந்தோஷம்  நிஜத்தில் இருக்காது.. கல்யாணம் உட்பட.. ஹாஹா ஹா.. என ஒரு சராசரி மனிதர்களில் ஒருவராக தன்னைக்காட்டிக்கொண்டார்
ஆனால் என்னதான் அவர் சராசரி மனிதனாக தன்னைக்காட்டிக்கொண்டாலும் அறிவார்ந்த நூல்களைப் படிக்கும் உணர்வே பேட்டியில் வெளிப்பட்டது

அவுட்லையர்ஸ் என்றொரு புத்தகம்... மனிதனின் வெற்றிக்கு அவன் பிறந்த சூழல் , பிறந்த கால கட்டம் என பல விஷ்யங்கள் காரணிகளாக இருக்கின்றன என்பது புத்தகத்தின் செய்தி

அதை ரஜினி சுட்டிக்காட்டினார்.. வெற்றி பெற ஆரம்பித்த ஆரம்ப கால கட்டத்தில் தான் ஒரு தனி பிறவியோ என்றெல்லாம் நினைத்ததாகவும் , பிறகுதான் எல்லாம் ஒரு காலம் என்ற தெளிவு ஏற்பட்டதாகவும் கூறியது வேறு லெவல்

அதே போல எளிமை குறித்த பார்வையும் அபாரம்...  எளிமை என்பது மனம் சார்ந்தது...  சில நேரங்களில் சில சூழலில் ஏஸி என்பது இன்றியமையாத தேவையாக இருக்கும்.. ஏஸி என்பது ஆடம்பரமாக இருப்பதும் உண்டு.. எனவே ஒருவர் பயன்படுத்தும் பொருட்களை மட்டும் வைத்து எளிமையை வரையறுத்து விட முடியாது என்ற பார்வை ஜே கிருஷ்ணமூர்த்தியை ஒத்திருந்தது


ஃபடாபட் ஜெயலட்சுமியை ராதிகாவை குறிப்பிட்டு கூறியது சிறப்பாக இருந்தது

 அர்ச்சனாவின் துணைக்கேள்விகளும் எதிர் வினைகளும் அழகு... 

மொத்தத்தில் வெகு சிறப்பான நிகழ்ச்சி




Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா