Showing posts with label பாடல். Show all posts
Showing posts with label பாடல். Show all posts

Saturday, June 1, 2019

பெருந்தன்மையில் போட்டு போட்ட எம்ஜிஆர் , கண்ணதாசன்

அறிமுக நடிகர்களை வைத்து காதலிக்க  நேரமில்லை போன்ற ஹிட்களை கொடுத்தவர் ஸ்ரீதர்


சில பிரச்சனைகளால் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கினார்

அவருக்கு கால்ஷீட் கொடுத்து உதவ முன்வந்தார் மக்கள் திலகம்

இதற்கிடையே கண்ணதாசனிடம் பாடல்கள் எழுதச்சொல்லி வாங்கி வைத்திருந்தார் ஸ்ரீதர்

விழியே கதை எழுது பாடலை எழுதிக்கொடுத்தார் கண்ணதாசன்

இன்னொரு பாடலின் ஆரம்ப வரிகள் மட்டும் எழுதினார்

கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடி செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன் காதோடு சொல்லு

 மிச்சத்தை பிறகு எழுதுவதாக சொல்லி சென்று விட்டார்


சிலர் ஸ்ரீதரிடம் சென்று , கண்ணதாசனுக்கு எம் ஜி ஆருக்கும் ஆகாது... எனவே இந்த பாடல்கள் வேண்டாம்.. எம் ஜீ ஆர் கோபித்துக்கொள்வார் என்றார்கள்

இயக்குனருக்கோ பாடலை இழக்க மனமில்லை.. கண்ணதாசனிடமே சென்று கேட்டார்

மிச்சப்பாடல்களை வாலியை வைத்து எழுதிக்கொள்ளுங்கள்

இந்த பாடல்களுமே வாலி பெயரிலே வரட்டும் என பெருந்தன்மையாக சொல்லி விட்டார் கண்ணதாசன்

பாடல்களைக்கேட்டார் எம் ஜி ஆர்

மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்

யார் எழுதியது என்றார்

வாலி என்றார்கள்

புன்னகைத்த  எம் ஜி ஆர் சொன்னார்

இல்லை.. இது கண்ணதாசன் பாணி பாடல் என்றார்

ஆம் ,மன்னித்து விடுங்கள் என்றார் இயக்குனர்


எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாகத்தான் பிரச்சனை

அவர் பாடல்களுக்கு நான் ரசிகன்,., இந்த பாடல் அவர் பெயரிலேயே வரட்டும் என்றார் எம் ஜி ஆர்

படத்தில் கண்ணதாசன் பெயர் வரும்.. ஆனால் இசைப்பேழைகளில் வாலி பெயரில்தான் பாடல் வந்தது

 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா