Showing posts with label பாலா. Show all posts
Showing posts with label பாலா. Show all posts

Wednesday, February 13, 2019

பாக்யராஜின் துரோகமும் பாலா சந்தித்த துரோகமும்


இட ஒதுக்கீடு என்பது நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்று,, அதன் நோக்கம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது

ஆனால் சில பொதுப்பிரிவினர்  தம் சான்றிதழ்களில் ஃபிராடு செய்து , தம்மை இட ஒதுக்கீட்டின் பலன்களை பெற முயல்வதும் , பிறகு மாட்டிக்கொள்வதும் அவ்வப்போது நடப்பதுதான்

பாக்யராஜ் இங்குதான் ஒரு மாற்று சிந்தனையை பயன்படுத்தி ஒரு கதை எழுதினார்..  வேலையில்லாத ஒருவன் , தன்னை பிராமணன் என காட்டிக்கொண்டு வேலை பெறுவதாக ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத கதை

முடிந்த அளவு பெண்களையும் பிராமணர்களையும் இழிவு படுத்துவது போன்ற கதைப்போக்கு..

கண்டிப்பாக தனக்கு புரட்சியாளன் இமேஜ் கிடைக்கும். படம் ஓடும் என்பதை அவர் சரியாக கணக்கிட்டார்.. ஆனால் பிராமணரக்ளை இப்படி நேரடியாக இழிவு செய்தால் , அவர்கள் கோபத்துக்கு ஆளாவோம் என்ற ஒரு பயம் இருந்தது

எனவே ஒரு பலியாட்டை தேடினார்.. நல்ல சினிமாவுக்கான முயற்சியில் இருந்த பாலகுமாரன் சிக்கினார்..  ஓர் அனுபவத்துக்காக இயக்குனர் முயற்சியில் இருந்த அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதாக பாக்யராஜ் சொன்னதை அப்பாவித்தனமாக நம்பினார் பாலகுமாரன்

ஆனால் உண்மையில் அது ஒரு வாய்ப்பல்ல.. பெயர் மட்டும் பாலகுமாரனுடையது.. அதில் கொட்டப்படும் விஷமெல்லாம் பாக்ராஜை சேர்ந்தது..

படம் ஓடியது..லாபம் அவருக்கு ,, கெட்ட பெயர் பாலகுமாரனுக்கு

சினிமாவின் சூதுவாது தெரியாமல் ஏமாந்தது என் பிழை அல்ல... இந்த தந்திரம் ரொம்ப நாள் வேலை செய்யாது என வயிறு எரிந்து பேட்டி அளித்தார்

அந்த 7 நாட்கள் , தூறல் நின்னு போச்சு , முந்தானை முடிச்சு என வெற்றிகளை குவித்த பாக்யராஜுக்கு , மேற்சொன்ன படம்தான் அவர் வாழ்வின் கடைசி ஹிட் படம்

அதன் பின் வரிசையாக தோல்விகளை சந்தித்து முடங்கினார்

துரோகமும் தந்திரங்களும் தற்காலிக வெற்றியை தரலாம்.. ஆனால் நிரந்தரம் அல்ல

அதுபோல இயக்குனர் பாலாவுக்கு துரோகம் செய்தவர்களை இயற்கை நிதி மன்னிக்கப்போவதில்லை

எப்பேற்பட்ட இயக்குனர்.. அவர் இயக்கம் சரியில்லை என சொல்லி அவமானப்படுத்தியவர்கள் வெல்லப்போவது இல்லை

Sunday, February 10, 2019

துரோகத்தை சந்திப்பினும் பெருந்தன்மையை கைவிடாத இயக்குனர் பாலா


பாலா எப்போதுமே தன்னிச்சையாக செயல்படும் படைப்பாளி என்பது தெரிந்த விஷயம்தான்

இது தெரிந்துதான் வர்மா படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

விக்ரமுக்கு எப்படி ஒரு திருப்பு முனை படம் கொடுத்தாரோ அதே போல அவர் மகனுக்கும் ஒரு திருப்பு முனையை கொடுப்பதுதான் அவர் மனதில் இருந்தது

சூர்யா , ஆர்யா என அவர் படத்தில் நடித்த அனைவருக்குமே அந்த படங்கள் பெருமை சேர்க்கும் படங்களாகத்தான் அமைந்தன

இந்த நிலையில் , அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிட முயன்றது தயாரிப்பாளர் நிறுவனம்

பாலா அதற்கு இடம் கொடுக்கவில்லை

வேண்டுமென்றால் நான் விலகிக்கொள்கிறேன்.. எடுத்த படத்தை உங்களிடம் கொடுத்து விடுகிறேன்.. விருப்பம்ப்போல காட்சிகளை சேர்ப்பது , நீக்குவது உங்கள் விருப்பம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. என் பெயரை எங்கும் பயன்படுத்தக்கூடாது என்றார்

இது தெளிவாக டைப் செய்யப்பட்டு ஜனவரி 2019 மாதம் கை எழுத்து இடப்பட்டது

 உண்மை இவ்வாறு இருக்க  , பட நிறுவனம் திடீரென ஓர் அறிவிப்பு வெளியிட்டது

எடுத்த வரையில் படம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்றும் புதிதாக எடுக்கப்போகிறோம் என்றும் அறிக்கை வெளியிட்டனர்

இது நடு நிலையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

படத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன் என அவர் சென்ற மாதமே சொல்லி விட்ட பிறகு இந்த அறிக்கை என்பது பாலாவை அவமானப்படுத்தும் செயல்தான்


விக்ரமும் பாலாவும் இது குறித்து பேசவில்லை

ஆனால் பாலா தன் அமைதிக்கு காரணம் விக்ரம் மகனின் எதிர் காலம் என்கிறார்.. இது அவரது பெருந்தன்மை

விக்ரம் அமைதியோ நேர்மையற்றதாகும்


ஏறிய ஏணியை உதைப்பது வெகு எளிது..ஆனால் அது நல்லதல்ல என யாரேனும் விக்ரமுக்கு சொல்ல வேண்டும்
 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா