Thursday, July 29, 2010

ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??

பாரதியார் பற்றி பேசும் பொது அவர் வர்ணாசிரம கொள்கையை தூக்கி பிடிக்கிறார் என குற்றம் சாட்டுவது சிலரது வழக்கம்..

வர்ணம் என்றால் என்ன என அறிந்து கொள்ளும் ஆவலை இது ஏற்படுத்தியது...

ஆதரிப்பது எதிர்ப்பது என்பது வேறு..ஆனால் அது என்ன தெரிந்து கொள்வதும் அவசியம்...

நான்கு வர்ணக்களை படைத்தது நான்தான் என்கிறார் கிருஷ்ணர்.. கீதையில்...

படித்தும் நமக்கு என்ன தோன்றுகிறது... ? ஜாதிகளை கடவுள்தான் படைத்தார்.... ஜாதி அமைப்பை கடவுள் ஏற்கயார் என நினைக்கிறோம்.. அவர் உயர்ந்த ஜாதி, இவர் ஜாதி என்பதை கீதை வலியுறுத்துகிறது என் தோன்றும்..

ஆனால், சற்று கவனித்து பார்த்தல் அதில் சொல்லப்படுவது ஜாதி அல்ல... நான்கு வித தொழில்கள் அடிப்படையில் உலகம் பிரிக்கப்பட்டு இருக்கிறது... நான்குமே உலக இயக்கத்துக்கு அவசியம்..

நடை முறையில் பார்த்தால், நான்கில் ஒரு இயல்பு மட்டுமே இருந்தால் வேலைக்கு ஆகாது... நான்கும் கலந்துதான் இருக்கும்.. அனால் சில வேளைகளில், சில இயல்புகள் மேலோங்கி இருக்கும்...

மென்பொருள் பணி, எழுத்து, வடிவமைப்பு போன்றவற்றில் மூளை வேலை அதிகளவு இருக்கும்..

ராணுவம், காவல் துறை போன்றவை துணிச்சல், சண்டை என்ற வகையில் இருக்கும்..

சந்தை படுத்தும் வேலை, சேல்ஸ் மார்கெட்டிங் போன்றவை வியாபார அடிப்படையில் உள்ளவை...

பிளம்பிங், இயந்திரவியல், கட்டுமானம் , வாகன இயக்கம், போன்றவை உடல் உழைப்பு சார்ந்தது...


நான்கில் இது உயன்ர்ந்தது தாழ்ந்து என்பது இல்லை...

ஆனால், பிறப்பின் அடிப்படையில் இந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதுதான் தவறு....
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என கீதை சொன்னதாக தெரியவில்லை..
அதே போல, திருநெல்வேலி பிள்ளை, நாகர்கோயில் பிள்ளை என ஜாதிகளை படித்தேன் என சொன்னதாகவும் தெரியவில்லை..
நான்கு வித இயல்புகள்தான் சொல்லபடுகின்றன
வர்ணாசிரம தர்மா என்பது நாம் எந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறோமோ அதை உருப்படியாகவும், பெருமித உணர்வோடு செய்வதுதான்...

இந்த அடிப்படையில்தான் பாரதியார் , நான்கு வகுப்பும் இங்கு ஒன்றே என பாடி இருப்பார் என தோன்றுகிறது..

என்றாலும், இதை பற்றி விரிவாக படித்து விட்டு , பகிர்ந்து கொள்வேன்...

3 comments:

  1. பார்வை நன்றாக இருக்கிறது.

    இன்று சாதி என்பது சண்டைகளுக்குத்தான் மிகுதியாக பயன்பட்டு வருகிறது.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா