Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts
Showing posts with label சாரு நிவேதிதா. Show all posts

Saturday, July 4, 2020

வண்ண மயமான பழுப்பு நிற்ப் பக்கங்கள்




என்னதான் இணையம் , kindle , ஆடியோ புத்தகங்கள் என வந்து விட்டாலும் பேப்பர் வடிவில் புத்தகங்களை படிப்பது தனி சுவைதான். வசதிகள் என்பது நவீன வடிவங்களில் அதிகம். ஆனால் அச்சு பிரதியில் தொடு உணர்ச்சி என்ற கூடுதல் கவர்ச்சி உண்டு.

சாருவின் பழுப்பு நிறப்பக்கங்கள் – 3 கைக்கு கிடைத்ததும் அந்த  பார்சலை பிரிக்காமல் வெகு நேரம் பார்த்தும் தொட்டும் முகர்ந்தும் மகிழ்ந்தேன். அதன் பிறகு வெகு மெதுவாக நிதானமாக பிரித்து புத்தகத்தை எடுத்தேன். புத்தகத்தை முதன் முறையாக  கண்ணில் பட்ட அந்த கணம் !!!

கடின அட்டையுடன் கூடிய புத்தகம் என்பது கூடுதல் அழகு.

அதன் பின் மெல்ல ஒரு வரலாற்று பயணத்துக்குள் - காலம் இடம் கடந்து , இலக்கிய முன்னோர்கள் பாதச்சுவடுகளை பின்பற்றி – செல்லலானேன்.

பழுப்பு நிறப் பக்கங்கள் வரிசையின் முதல் இரண்டு புத்தகங்கள் மிகவும் சிறப்பானவை என்றாலும் இந்த மூன்றாவது புத்தகம் எனக்கு தனிப்பட்ட முறையில் வித்தியாசமான ஒன்று.

காரணம் சி சு செல்லப்பா…    சு ரா … கு ப ரா…  சா கந்தசாமி…  ம முத்துசாமி ப சிங்காரம் எனும் சம்பந்தமற்ற ஆளுமைகளின் தொகுப்பாக எனக்கு தோன்றியது..

எனவே இதை படிக்கும்போது ஒட்டு மொத்த இலக்கிய வரலாற்றின் ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் மனதில் தோன்றியது.



இதை இலக்கிய விமர்சன நூல் வரையறுப்பதா … ஆளுமைகளின் வரலாறு என்பதா.. அல்லது ஆளுமைகளுடனான ஒரு சம காலப்படைப்பாளியின் சொந்த அனுபவ பகிர்வா.. அல்லது ஓர் அறிமுகமா என சொல்லி விட முடியாத அளவுக்கு ஒரு பன்முக குணாதிசயத்தை இந்த நூல் கொண்டுள்ளது.. அதாவது கறுப்புக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட ஒரு வண்ணம்.. அதனால்தான் இது பழுப்பு நிறப் பக்கங்கள் ஆனதோ J

வண்ணம் என சொல்கையில் ஒரு விஷ்யம் நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை விரைவாக மீள் வாசிக்கும் பொருட்டு பல்வேறு வண்ணங்களில் வரிகளை ஒளிர்விப்பது என் வழக்கம்.

அழகான மொழியாளுமைகளுக்கு ,  ஒப்பு நோக்க வேண்டிய புத்தக / ஆளுமைகள் பெயர்களுக்கு  ரசிக்கும் வரிகளுக்கு சுவையான சம்பவங்களுக்கு என ஒவ்வொரு வண்ணத்தை பயன்படுத்துவேன். இப்படி படித்து முடித்து விட்டு , ஒரு குறிப்பிட்ட பக்கத்தை பார்த்து திகைத்தேன். அந்த பக்கம் முழுமையும் , எல்லா வரிகளுமே , ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த பக்கமே வண்ணமயமாக ஜொலித்தது. கலர்ஃபுல்லாக ஓர் இலக்கிய நூலை எழுதுவது என்பதே ஒரு வியப்புதான்
பின் நவீனத்துவம் என்பதற்கு குறிப்பிட்ட யுக்தி எதுவும் இல்லை.. மூன்றடியில் எழுதி ஒரு காட்சியை சொன்னால் ஹைக்கூ , செப்பலோசை பயின்று வந்தால் வெண்பா. அகவலோசை வந்தால் ஆசிரியப்பா என்று ஃபார்முலா எதுவும் இல்லை.. ஆனாலும் பலர் பின் நவீனத்துவ ஃபார்முலா என எதையாவது நினைத்துக்கொண்டு குழந்தைத்தனமாக எழுவதுண்டு.

பின் நவீனத்துவ படைப்பு என்பது இயல்பாக நிகழ்வது. பின் நவீனத்துவ கட்டடங்கள் , பின் நவீனத்துவ இசை என இப்படி அமைந்தவை உண்டு,  அந்த வகையில் பின் நவீனத்துவ கூறுகளை இந்த நூலில் காண முடிகிறது.

இந்த நூலில் இன்னொரு சுவையான விஷயம் , ஒரு விஷயத்தை சொல்லாதே .. அதைக் காட்டு என்ற யுக்தி திறம்பட செயல்பட்டுள்ளது.  கு ப ரா எழுத்தை தவமாக பயின்றதன்  மூலம் அதன் சிறந்த ஒரு பகுதியை – ஒரு மாதிரியாக தேர்ந்தெடுத்து – அதை அப்படியே கொடுத்து குபராவை இது வரை படிக்காதவர்கள் கூட அவர் குறித்து புரிந்து கொள்ள உதவுவது ஒரு நல்ல யுக்தி. ஆனால் அப்படி கொடுக்கும் பகுதி அவர் எழுத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிகப்பெரிய உழைப்பும் புரிதலும் ஆழ்ந்த வாசிப்பும் தேவை. இதை சாரு சிறப்பாக செய்துள்ளார்.

இந்த நூலில் பேசப்பட்டுள்ள அறுவர் குறித்தும் ஒரு தெளிவான பார்வை நமக்கு கிடைக்கிறது.

இது ஆளுமைகளை வியந்தோதும் பாராட்டுரைகளின் தொகுப்பன்று. சுருக்கமாக ஓர் ஆளுமையின் முழு பரிமாணத்தை 360 டிகிரியில் பார்க்கும் ஒரு பார்வையை தருவதுதான் நூலின் நோக்கம்.

தன் ஆளுமையை உருவாக்கியவர் என ஒரு குரு இடத்தில் வைத்து சுந்தர ராமசாமியை போற்றினாலும் அவர் படைப்புகளை தயவு தாட்சண்யமின்றி நிராகரிப்பது , சி சு செல்லப்பா படைப்புகளையும் அவர் வாழ்க்கையையும் அவர் குணங்களையும் அவ்வளவு தூரம் பாராட்டி விட்டு , தமிழில் விமர்சனத்துறை என்பது தனி நபர் வசையாக உருவெடுக்க ஆரம்ப புள்ளி அவர்தான் என்று சுட்டிக்காட்டுவது என விருப்பு வெறுப்பற்ற ஒரு பார்வையை வைக்கிறார் சாரு.

இந்த புத்தகத்தின் நாயகர்களான இந்த அறுவர் தவிர அசோகமித்திரன் ஜி கே செஸ்டர்ட்டன் தி ஜா  எஸ் வைதீஸ்வரன் வெங்கட சாமி நாதன் ஜெயமோகன் சார்த்தர் ஃப்லௌபர்  ஜார்ஜ் ஜோசஃப் என எண்ணற்ற  ஆளுமைகள் பக்கங்கள் தோறும் வந்து கொண்டே இருக்கின்றனர், வெறும் பெயர்களாக அன்று. ரத்தமும் சதையுமாக நம்முள் நடமாடுகின்றனர் .

இன்னொரு சுவையான அம்சம் .

இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் பல விஷயங்களுக்கு இந்த புத்தகமே – இதன் நூலாசியரே - உதாரணம் ஆகி விடுவது சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்று.

போலிகளை சுட்டிக்காட்டுவதில் எந்த தயக்கமும் கூடாது என்பதை சுந்தர ராமியிடன் கற்றேன் என்கிறார் நூலாசிரியர்,   அதே சுந்தர ராமசாமியின் நாவல் ஒரு ஃபேக் என தன் கைக்காசை செலவிட்டு மனைவியின்  நகைகளை அடகு வைத்து எழுதி நூலாக்கியவர் சாரு . அதாவது தான் கற்றதற்கு உதாரணமாக சுந்தர சாமி சம்பந்தப்பட்ட ஒன்றையே சொல்ல முடியும்

பாரதியார் ஒரு பன்முக கவிஞர். ஆனால் அவரது தேசிய கவிதைகள் பெற்ற பிராபல்யம் காரணமாக அவர் தேசிய கவி என சுருக்கப்பட்டு விட்டார் என்று பேசுகிறார் கு ப ரா

இந்த நூலின் இன்னோர் இடத்தில் சாரு பேசுகிறார் – என்னை நல்ல கட்டுரையாளன் என மக்கள் பாராட்டும்போது எனக்கு அவமானமாக இருக்கும்

அதாவது அவரது கட்டுரை பெற்றுள்ள வரவேற்பால் அவரது மற்ற சிறப்பம்சங்கள் மறக்கடிக்கப்படுவது அவருக்கு வருத்தம். இதைதான் குபரா நூலின் இன்னொரு பக்கத்தில் சொல்கிறார்


இதில் இன்னொரு ட்விஸ்ட் என்ன  என்றால் , சாரு மனதில் அவருக்கு இருக்கும் நாவல் மீதான காதலால் தன்னை சிறந்த நாவலாசியர் என்று மட்டுமே நினைத்துக்கொள்கிறார். அவர் மிகச்சிறந்த சிறுகதைகளை படைத்தவர்,.. மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட, அந்த காலத்தில் அவர் எழுதிய லத்தீன் அமெரிக்க திரைப்பட புத்தகமெல்லாம் வரலாற்று பொக்கிஷம்,  சமீபத்தில் அவர் கு ப ரா குறித்து வழங்கிய உரைவீச்சு தமிழ் சொற்பொழிவுகளில் முக்கியமான ஒன்று. ஆனால் இவற்றை எல்லாம் மறந்து விட்டு தன்னை ஒரு நாவலாசிரியர் என்ற அளவில் சுருக்கிக்கொள்கிறார். அதாவது இந்த புத்தகம் சுட்டிக்காட்டும் தவறை அவரும் செய்கிறார்

இப்படி இந்த நூலே இந்த நூலுக்கு ஒரு ரெஃபரன்ஸ் ஆகி விடுவது சுவாரஸ்யம்.

தமிழின் பல சொற்களின் பயன்பாடுகள் அருகி வருகின்றன. இலக்கியவாதிகளால் மட்டுமே பல சொற்கள் புழக்கத்தில் உள்ளன என பேசுகிறது இந்த நூல் ,. இந்த நூலே அதற்கு உதாரணமாகவும் உள்ளது.
எத்தனை எத்தனை அழகான சொற்கள் !!      

நாம் எதை ரசிக்கிறோம் என்பதுதான் நம்மை உருவாக்குகிறது. சாருவை கவர்ந்த சொல்லாடல்கள் பலவற்றை இதில் சாரு சுட்டிக் காட்டியிருக்கிறார். அதே அளவுக்கு அவரது சொல்லாடல்கள் நம் சிந்தையைக் கவர்கிறது , ஒரு கவிதையைப் போல.. ஓர் ஆப்த வாக்கியம் போல.



உதாரணமாக சில பளிச் வரிகளை பாருங்கள்.. இவற்றில் சில சாருவின் சிந்தனை.. சில சாரு மேற்கோள் காட்டும் ஆளுமைகளின் சிந்தனை…

  • இவர் தமிழ் மொழியின் பொக்கிஷம் என பாரதி குறித்து காந்தி கூறினார். காந்தியிடம் ராஜாஜி சொல்லி இருக்க வேண்டிய வார்த்தைகளை ராஜாஜியிடம் காந்தி சொன்னார்
  • ஆசிரியப்பா , கலிப்பா போன்று இப்போது ஒரு புதிய பா தோன்றி இருக்கிறது . அதுதான் செல்லப்பா
  • உலகத்தில் வேறு எங்கும் நடக்காத ஓர் அதிசயம் இங்கு நடந்தது . அதாவது அதிசயத்தையே அறிந்து கொள்ளாத அதிசயம்
  • அசோகமித்திரன் எனக்கு இலக்கியம் கற்பித்தார். சுந்தர ராமசாமி இலக்கியத்தை விட மேலான வாழ்வின் அறத்தை கற்பித்தார்
  • அபிப்பிராயங்களை அழுத்தமாக உறுதியாகச் சொல்வார்.  நகைச்சுவையுடன் சொல்வார், புண்படுத்தாமல் சொல்வார்
  • கிராமங்களில் மனிதர்களையும் விலங்குகளையும்போல தெய்வங்களும் பேய் பிசாசுகளும்கூட வாழ்ந்து வந்தன. தெய்வங்கள் மனிதர்களுக்கு நம்பிக்கையையும் பேய்கள் அச்சத்தையும் விலங்குகள் உணவையும் அளித்து வந்தன

ஏன் இலக்கியம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. இன்றைய சூழலில் இலக்கிய பரிச்சயம் என்பது ஓர் அடிப்படைத்தேவையாக இருக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை.

ஒரு முறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு நடிகர் ராஜேஷ் தன் குடும்பத்துடன் சென்றிருந்தார். பேசி விட்டு கிளம்பியவர் தன் கார் இஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பதையும் , ஏசி ஆன் செய்து இருப்பதையும் கண்டு ஆத்திரம் அடைந்தார் . இவ்வளவு  நேரம் வீணாக ஓடிக்கொண்டிருப்பது ஏன் என ஓட்டுனரைக் கடிந்து கொண்டார். அதற்கு ஓட்டுனர் பதில் சொன்னார் “ முதல்வர்தான் ஏசியை இயக்கத்தில் வைத்திருக்கச்சொன்னார். அப்போதுதான் நீங்கள் கிளம்பும்போது வசதியாக இருக்குமாம் “

ஒரு வி ஐ பி வருகிறார் என்றால் அவர் வருவதற்கு முன்பே அவருக்கான அறையில் ஏசியை இயங்க வைத்து அவரது வசதியை பேணுவது வழக்கம். இந்த உதாரணத்தில் ஒரு முதல்வர் , ஒரு நடிகருக்காக யோசித்தது ராஜேஷை மட்டும் அல்ல… திமுக அனுதாபியான ஓட்டுனரையும் பிரமிக்க வைத்தது… இப்படி பிறருக்கான யோசிக்கும் தன்மை வாசிப்பால் மட்டுமே வரும்.

இலக்கியப்பரிச்சயம் உங்கள் வாழ்வை செழிப்புறச்செய்யும் என்கிறார் சாரு.. இது முற்றிலும் உண்மை..   ஒருவர் மருத்துவராக , எழுத்தாளராக , பொறியாளராக , ஓட்டுனராக , விவசாயியாக , பேருந்து ஓட்டுனராக என என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்..  யாராக இருந்தாலும் சரி, இலக்கியப்பரிச்சயம் இருந்தால் , அவர்கள் செய்வது கலாப்பூர்வமாக மாறும்..அவர்கள் பிரஞ்ஞையில் ஒரு மாற்றம் ஏற்படும்.
பழுப்பு நிறப்பக்கங்கள் இந்த மாற்றத்துக்கான ஒரு சாவி எனலாம்.


Monday, February 17, 2020

சாரு , பெருமாள் முருகன் , மனுஷ்ய புத்திரன்

பெருமாள் முருகனையும் சாருவையும் ஒப்பிட்டு தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்திருந்தது

பெருமாள் முருகன் தமிழர்களின் சாதி உணர்வை சீண்டியதால் எதிர்ப்பை சந்தித்தார்.  சாருவின் நாவல்களில் வரும் பாத்திரங்கள் குறிப்பிட்ட அடையாளங்கள் அற்றவை எனவே அவை பாதுகாப்பான இடத்தில் இருக்கின்றன என்பது அந்த கட்டுரையின் சாரம்

உண்மையில் இலக்கியம் என்பதே திரளுக்கு எதிரானது. பொதுவான மானுடனுத்துடன் உரையாடுவது. வெண்ணிற இரவுகளின் கனவுலகவாசி ஒரு ரஷ்யன் அல்லன். தமிழனாகிய எனக்கும் சொந்தமானவன். என்னைப்போன்ற ஒருவன் சூதாடியின் நாயகன் நான்தான்.. யாரோ ஒரு,ரஷ்யன் அல்லன்
யாயும் ஞாயும் யாராகியரோ என்ற உணர்வை உலகில் இருக்கும் எல்லா தேசத்தவனும் தன்னுடன் அடையாளப்படுத்திக் கொள்ள இயலும்


உலக இலக்கியங்கள் அனைத்தும் பொதுவான மனிதத்தைப் பேசினாலும் அவை அந்தந்த நாடுகளில் பெரும் சலனத்தை ஏற்படுத்துகின்றன. தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை

அதற்குகாரணம் வாசிப்பு என்பதோ இயல்பான உணர்வெழுச்சிகளோ இங்கு கிடையாது.

சமீபத்தில் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளர் இந்தி தெரியாமல் ழக்கள் இருப்பது வெட்கக்கேடு என்றார். இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்கா விசா மறுத்தது. இவையெல்லாம் யார் கவனத்துக்கும் வராமல் கடந்தன.

யாரேனும் தூண்டிவிட்டால் அனைவருமே உணர்வெழுச்சி பெறுவார்கள். ஏதோ கண்காணா சக்தியின் பொம்மைகளாத்தான் இருக்கிறோம்

பெருமாள் முருகன் நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு இயல்பாக எழுந்ததன்று. குறிப்பிட்ட சாதி தலைவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக தூண்டிவிட்ட எதிர்ப்பு அது

நம் சமூகம் அறிவுப்பூர்வமான சமூகமாக மாறும்போது , இதுபோன்ற பொம்மலாட்ட எதிர்ப்புகள் மறையும்.

பேரிலக்கியங்கள் கடும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகும்

சாருவின் நாடகத்துக்கு , சில உரைகளுக்கு அவர் சந்திக்க நேர்ந்த எதிர்ப்புகளெல்லாம் இது போன்றவை அல்ல

திரள்களை நோக்கிப் பேசி உடனடி கவனம் பெறுவது ஒப்பீட்டளவில் எளிது. மனுஷ்யபுத்திரன் போன்ற முன்னாள் இலக்கியவாதிகள் , அரசியல்வாதி அவதாரம் எடுப்பதெல்லாம் உடனடி வெகுமதியைப் பெற்றுத்தரலாம். ஆனால் மானுடத்தை நோக்கிப்பேசும் எழுத்துகளே இலக்கிய வரலாற்றில் நிற்கும்





Wednesday, February 5, 2020

வண்ணதாசனுக்கு சாதீய அணுகுமுறை தேவை

பிற தேச நூல்களைப் பார்ப்பதற்கே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

தமிழில் ஏன் அந்த தரத்தை எட்ட முடியவில்லை என்பது ஆரம்ப நிலை வாசகனுக்கு ஒரு ஏக்கமாக இருக்கும்

அதற்கு முக்கிய காரணம் விற்பனைதான்.  நூறு ரூபாய்க்கு விற்கப்படும் நூலை ஆயிரம் ரூபாயக்கு வாங்க வாசகன் தயார் என்றால் உயர் ரகம் சாத்தியம். அல்லது லட்சக்கணக்கில் −குறைந்தது ஆயிரக்கணக்கில் − விற்றாலும் உயர் ரகம் சாத்தியமே.

இதைத்தான் சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார்.  கலாப்ரியாவின் வேனல் நாவல் உள்ளடக்கம்தான் இலக்கிய மதிப்பை தீர்மானிக்கும். ஆனால் வடிவமைப்பும் நன்றாக இருந்திருக்க வேண்டும். அதற்கு அதிகம் விற்பனை ஆக வேண்டும் என நூலுக்கு ஆக்கப்பூர்வமான அறிமுகம் கொடுத்தார்.அதிகளவில் வாசகர்கள் வாங்கினால் சாதாரண விலைக்கே செம்பதிப்புகள் கிடைக்கும் சூழல் உருவாகும்


சாருவின் ஜீரோ டிகிரி நாவலும்கூட மலிவுவிலைப்பதிவு வந்துள்ளது.  அதன்பிறகு சிறப்புபதிப்பும் வெளிவந்துள்ளது.  ஜெயமோகனின் வெண்முரசு மலிவுப்பதிப்பாக கிடைத்தாலும் விலைகூடுதலாக இருந்திலும் செம்பதிப்பை தேடிச் சென்று வாங்குவோர் பலர்

கெட்டி அட்டை , தரமான தாள் , வண்ணப்படங்கள் என செம்பதிப்பின் அனுகூலங்கள் ஏராளம்.

ஒரு வாசகனின் பார்வையிலும் , எழுத்தாளனை கவுரவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சாரு சொன்னது கலாப்ரியாவுக்கு சாதகமானதுதான் என்பதை வண்ணதாசன் உணர வேண்டும்.


சில பதிப்பகங்கள் எழுத்தாளர்களை உரிய கவுரவத்துடன் நடத்தாததாலும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ராயல்ட்டியை கேட்டால் , அவர்களை பிச்சைக்காரர்கள் போல நடத்துவதாலும் எழுத்தாளர்கள் அந்த பதிப்பகங்களை விட்டு விலகுகின்றன். இதனால் அந்த பதிப்பகங்கள், வாட்சப் வீரர்களின் மெசேஜ்கள் , முகநூல் பதிவுகள் , முதிர்ச்சி அற்ற எழுத்துகள் போன்றவற்றை எந்த பிழை திருத்தமும் இன்றி வெளியிட்டு இலக்கியப்பணி ஆற்றுகின்றன. இவற்றை அவரவர்களின் நண்பர்கள் வாங்கிப் படிக்கின்றனர்

பொதுவான வாசகன் , இளைஞன் இதனால் மனவிலக்கம் அடைந்து ஆங்கில நூல்கள்பால் செல்கிறான். அவர்கள் எதிர்பார்க்கும் தரம் தமிழில் இருப்பதில்லை. உள்ளடக்கத்தை விடுங்கள்.. பிழையற்ற வாக்கியத்தைக் காண்பதே துர்லபமாக இருக்கிறது

தமிழ் வாசிப்பு என்பது நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களின் வழக்கம் என்றாகி வருகிறது.  வணிக இதழ்களைக்கூட இன்றைய பள்ளி , கல்லூரி மாணவன் சீந்துவதில்லை

அராத்து போன்ற சில எழுத்தாளர்கள் தமது நூல்களை எழுதுவதற்கு செலவிடும் நேரத்தை விட , அவற்றை செப்பனிட அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஈகோ பாராமல் மெனக்கெடுகிறார்கள். ஜீரோ டிகிரி பதிப்பகம் போன்ற சிலர் தரமான கட்டமைப்பில் நூல்களை வெளியிடுகின்றனர்.  ராயல்ட்டியில் வெளிப்படைத்தன்மையை மேற்கொள்கின்றனர்.
இவர்களின் நூல்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும்

இணையகூச்சல்களுக்கிடையே வேனல் போன்ற தரமான ஆக்கங்கள் இளைஞனை எட்டுவதில்லை. அப்படி அனைவரையும் அடைவது தமிழுக்கு நல்லது என்பதைத்தான் சாரு சொன்னார்; அதற்கு நூலில் கட்டுமானமும் அவசியம்.  நூலில் இலக்கிய மதிப்புக்கு அதன் உள்ளடக்கமே போதும். ஆனால் பரவலாக வாசகனை அடைய நூல்,வடிவமும் முக்கியம்
இதில் ,வண்ணதாசன் சாதீய நிலைப்பாடு எடுத்திருப்பது நல்லதுதான்.

தமிழ்ச்சாதி , எழுத்தாளன் சாதி என்ற சாதீய சார்பு எடுத்து , சாருவுடன் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதே வாசகர்களின் விருப்பம்






Saturday, January 18, 2020

சாருவிடம் கலை உருவாகாதா ? ஜெயமோகன் பேச்சுக்கு சாரு பதிலடி

என்னப்பா புத்தக கண்காட்சி போகலையா என அலுவலகத்தில் ஜுனியர் பையனிடம் கேட்டேன்

அறிவார்ந்த வகையில் பேசுவான் , அறிவு தேடல் கொண்டவன் என்பதால் கேட்டேன்

அதுதான் எல்லாமே நெட்ல யூட்யூப்ல கிடைக்குதே சார். எதுக்கு புக் படிக்கணும் , அப்படியே படிச்சாலும் புக்ஃபேர் ஏன் போகணும் என்றான் .

தம்பி , புத்தகங்கள் குவிந்திருக்கும் இடத்தில் நிற்பதும் அறிவாரந்த பேச்சுகள் காதில் விழுவதும் தனி அனுபவம் , வந்து பார் என இளைய சமுதாயத்திடம் என்னால் சொல்ல முடியவில்லை.

காரணம் அங்கு மேடைகளில் காதில் விழுபவை எல்லாம் , ஏய் மோடியே , உனக்கு சவால் விடுகிறேன்.  துண்டுச்சீட்டு ஸ்டாலின் , இந்து மதமே உயரந்தது என்பவை போன்ற தெரு முனைப் பேச்சுகள்தான்.

இலக்கிய இயக்கமாக உருவாக வேண்டிய ஒன்று அரசியல் சக்திகளிடம் சிக்கி மக்களை விட்டு தொலைதூரம் போகும் அவல சூழல்




இந்த சூழலில் இலக்கியத்துக்கு ஆக்சிஜன் கொடுப்பதுபோல வெகு சிறப்பாக நடந்தது சாரு நிவேதிதாவின் இலக்கிய அமர்வு

நிற்கக்கூட இடமில்லாத பெருந்திரளான வருகையில் அரங்கு தளும்பியது

கலை என்பதன் அவசியம் , ப்ளஷர் ஆப் டெக்ஸ்ட் , மீறல் என்பது எப்படி கலையாகிறது , எப்படி போர்னோவில் இருந்து மாறுபடுகிறது , பித்து நிலையும் எழுத்தும் என்பது போன்ற பல விஷயங்களை வெகு அழகாக தொட்டுச் சென்றது அமர்வு

ஒரு பேராசிரியர் வகுப்பெடுப்பது போல, குரு சீடனுக்கு ஞானம் வழங்குவது வெகு அழகாக பேசினார் சாரு.  அரசியல் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அரசியல் மேடை ஆக்கிவிடக்கூடாது என வெகு கவனமாக இருந்தார்

இங்கெல்லாம் குழந்தைகளை அழைத்து வரலாமா என அவர் கோபமாக கேட்டது இலக்கிய நிகழ்வில் அபூர்வமான ஒரு தருணம்.

ஒரு கல்லூரி மாணவனை மாணவியை சாரு நூல் படிக்க விடாமல் செய்வது , குழந்தைகளை அழைத்து வருவது என்பதன் அபத்தத்தை சுட்டிக்காட்டினார்

சாரு அ. மார்க்ஸ் ஆகியோரிடம் இருந்தால் கலையை கற்க முடியாது என்ற ஜெயமோகனின் கருத்தை இந்த இருவரால் உருவான ஜெயமோகன் உட்பட பலரால் ஏற்கப்பட்ட ஷோபா சக்தி உதாரணம் மூலம் மறுத்தார்

பிற வகை சிந்தனைகளை இப்படி மறுப்பதுதான் பாசிசம் , என்னைப் பொருத்த வரை ஜெயமோகனை வேறு வகை சிந்தனைப்பள்ளி என சொல்வேனே தவிர அவரை ஒட்டு மொத்தமாக மறுதலிக்க மாட்டேன் என்றார்  சாருவின் உரை காணொளி

நேசமித்ரன் உரை வெகு ஆழமாக அமைந்திருந்தது. சங்க இலக்கியங்கள் தி ஜா , கோபிகிருஷ்ணன் , தஞ்சை பிரகாஷ் என்பது போன்ற ஒரு மரபில் சாருவின் இடத்தை அழகாக தொட்டுக்காட்டினார்.. அவரது காத்திரமான அந்த உரை யூ-ட்யூபில் வரும்போது அனைவரும் அதை பல முறை கேட்க வேண்டும் . விவாதிக்க வேண்டும் என சாரு கேட்டுக் கொண்டார். அந்த அளவு ஓர் அற்புதம் அந்த உரை

அப்படி இல்லாமல் சம கால இலக்கியவாதிகளிடையே சாரு எப்படி மாறுபடுகிறார் என தன் பாணியில் பேசினார் அராத்து

பொது வெளிகளில் பேசிக் கேட்டிராத அவந்திகா அவர்களின் பேச்சு இன்றைய நிகழ்வின் எதிர்பாரா போனஸ்

தமிழை ஒழிக்காமல் விட மாட்டார்கள் போலயே என துவண்டிருந்த மனஙகளுக்கு மருந்து போடுவது போல இந்நிகழ்வு அமைந்திருந்தது

Tuesday, December 2, 2014

எழுத்தின் மாயாஜாலம் - அனல் பறக்கும் எக்சைல் முன் பதிவு


ரஜினி படத்தின் முதல் நாள் முதல் ஷோவுக்கு டிக்கட் வாங்குவது சாருவின் எக்சைல் நாவலுக்கு ஏற்பட்ட பரபரப்பு உண்மையிலேயே ஆச்சர்யப்பட வைத்தது. ஒவ்வொருவரும் இரன்டு அல்லது மூன்று புத்தகங்கள் ஆர்டர் செய்ததை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன் ..

சமீபத்தில் நிர்மல் சென்னை வந்திருந்தார் . புத்தகம் வரும் முன்பே அதன் சில பகுதிகளை படித்து விட்ட அதிர்ஷ்டசாலிகளில் அவரும் ஒருவர்.  இப்படி ஒரு புக் தமிழில் வந்ததே இல்லை என்றார் அவர். ஒரு விஷுவல் ட்ரீட் காத்திருக்கிறது என்றார்..  தக்காளி, இதென்ன சினிமாவா?  இதில் என்ன விஷுவல் என கேட்டேன்..  தமிழின் முதல் விஷுவல் நாவலாக இது இருக்கக்கூடும்.... அதுதான் எழுத்தின் ரச்வாதம் என்றார்..    அவர் சொல்லும்போது அவர் அடைந்த பரவசத்த்தை வார்த்தையில் வடிக்க முடியாது...  நாம் எப்ப வாசிக்க போகிறோம் என ஏங்க வைத்து விட்டார்.

இது வரை இல்லாத அளவுக்கு அதிரடி தள்ளுபடியில் முன் பதிவு என்ற திட்டம் தமிழ் இலக்கியத்தின் முக்கிய நிகழ்வாகும்..  லாபம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என இப்படி ஒரு திட்டத்தை முன்னெடுக்க ஒப்புக்கொன்ட கிழக்கு பதிப்பகத்துக்கு நன்றி.. கிழக்கு பதிப்பக வரலாற்ரில் இல்லாத அளவுக்கு முன் பதிவு ஆர்டர்கள் குவிகின்றன என கேள்விப்பட்டது மன நிறைவு ஏற்படுத்தியது..

நாவல் குறித்து நிர்மல்


சாருவின் எக்ஸைலை எப்படி வாசிக்க வேண்டும்;

மற்ற நாவல்களைப் போல கோடிட்டுக் கொள்ள உங்களுக்கு பிடித்த வரிகள் எதுவும் இருக்காது.

மனதை பிசைய வைக்கும்

நெஞ்சை பிழியும் வார்த்தை ஜாலம் கிடையாது.

கதாபாத்திரங்கள் தனக்கு தானே பேசி தங்களை உங்களுக்கு புரிய வைத்தல் இருக்காது,

எங்காவது நாவலில் உங்களை திவை திருப்பி ஒருவித சஸ்பென்ஸ் இருக்காது.

இதுவரை யாருக்கும் புரியாத தமிழில் இருக்காது,

உங்களுக்கு அட்வைஸ் எதும் கிடைக்காது

திருப்புமுனைகள் என எதுவும் இருக்காது.

ஒவ்வரு பக்கத்தையும் ஒரு சினிமா பார்ப்பது போல இருக்கும்




 நாவல் குறித்து லக்கி யுவா 






சாருவின் ’புதிய எக்ஸைல்’, தமிழ் ஹிந்துவில் ஒரு பகுதி வாசித்தேன்.

கலக்கி விட்டார்.

ஃப்ளோரான்களை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பின்நவீன நகர வாழ்வியல் சூழல். வளர்ப்பவளின் பெயர் அறுபதுகளின் அரதப்பழசான ‘பெருந்தேவி’. நவீனத்துக்கும், பின்நவீனத்துக்குமான முரண், போர், இணைப்பு என்று தொடரும் சாருவின் சலிக்காத முயற்சிகளில் அடுத்த மைல்கல்.


தனித்துவ மொழிக்காக அவர் நிரம்ப மெனக்கெடுவதில்லை. அதுவே சரளமாக வந்து விழுகிறது. அதை அடுக்குவதில் சாரு காட்டும் கச்சிதம்தான் அவரது அடையாளம்.

இந்த பகுதியை வாசித்தவரை சாரு மேஜிக் மீண்டும் நிகழ்ந்திருப்பதாகவே படுகிறது. வாழ்த்துகள்!

//நட்சத்திரங்களின் குளிர்மை, காற்று, மண்ணின் மணம், மரம், மகரந்தத் துகள், கடல், வானம், எரிமலை, பிரபஞ்ச வெளி, மேகம், மலையின் தனிமை, புல்லாங்குழலின் இசை, குழந்தையின் முதல் குரல், மரணமடைந்தவனைத் தன்னுள் இழுத்துக் கொள்ளும் எரிதழல், சூரிய ரேகை, நீரோடையின் சலன சங்கீதம், மழை, பூரண நிலவு, பசுவின் குரல், தவளைச் சத்தம், எரிந்து தணிந்த வனம், ஆலம் விழுது, அரச இலை, உறைபனி, அகல்விளக்கு, மலர், தென்றல்...//

சாருவின் மொழி அமரத்துவத்தை எட்டிவிட்டது. அதற்கு சாவே இல்லை.




____________________________________________________________________

 நாவல் ஆர்டர் செய்ய 

1.) கிழக்கு : https://www.nhm.in/shop/978-93-5135-191-7.html
தொடர்புக்கு: 9445901234, 9445979797
2.) Namma Books:
http://nammabooks.com/Buy-Charu-Nivedhi…/exile-new-pre-order
தொடர்புக்கு: 9843931463
3.) Chennai Shopping:http://www.chennaishopping.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%…/…/
தொடர்புக்கு: 044-43559493
4.) We Can Shopping:
http://www.wecanshopping.com/…/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%…
தொடர்புக்கு: 9003267399





Tuesday, July 2, 2013

சர்வதேச விருதை குறி வைக்கும் சாருவின் நாவல்- வரலாற்று தருணத்தில் தமிழ் படைப்புலகம்


  உலக அளவிலான நாவல்களுடன் போட்டியிட்டு , கடைசி சுற்றுக்கு முன்னேறி, கிட்டத்தட்ட 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள சுவிஸ் இலக்கிய விருது கிட்டத்தட்ட கிடைத்துவிட்டது என்ற நிலையில் சாரு நிவேதிதா இருப்பது தமிழ் இலக்கிய உலகில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் , நடுனிலை  இலக்கியவாதிகள் , ஒரு தமிழ் எழுத்தாளனின் நாவல் உலக அரங்க்குக்கு செல்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.



உலக அளவில் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுத்து ஸ்விஸ் நாட்டின் Jan Michalski விருது ஒவ்வொரு ஆண்டும் வ்ழங்கப்படுகிறது.


தகுதி வாய்ந்த நடுவர்கள் சிறந்த படைப்புகளை தேர்ந்தெடுப்பார்கள்.


முதல் மூன்று இடம் பிடிக்கும் எழுத்தாளர்கள் , சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்ப்பட்டு ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள இலக்கிய வீடு Maison de l’Ecriture எனும் பிரமாண்ட நகரத்தில் மூன்று மாதங்கள் தங்க வைக்கப்படுவார்கள்.




இந்த நகரம் எழுத்தாளர்களுக்காக சகல வசதிகளுடன் உருவாக்கப்பட்டபகுதியாகும். வசதியான அறைகள் , உணவகம் , நூலகம் , கண்காட்சியகம் என எல்லாமே இதில் இருக்கும்.


நவம்பரில் முடிவு அறிவிக்கபடும், வெல்வோர் முப்பது லடசம் ரூபாய்களை பரிசாக பெறுவார்.


இந்த் ஆண்டுக்கான போட்டியியில் 11 புத்தகங்கள் இறுதி சுற்றில் உள்ளன.


இறுதி சுற்றுக்கு வந்த புத்தகங்களில் சாருவின் ஜீரோ டிகிரியும் ஒன்று.


இதில் மற்றவை அனைத்தும் ஒரே ஃபார்மேட்டில் இருக்கும் நிலையில் ஓர் உன்னதமான பின் நவீனத்துவமான படைப்பான சீரோ டிகிரி மிக மிக வேறுபட்டு இருப்பதால் அதற்கே பரிசு கிடைக்கும் என இப்போதே பேசப்பட்டு வருகிறது.

மற்ற புத்தகங்களை சாதாரணமாக மதிப்பிட்டு விட முடியாது. கறாராக பரீசிலித்துதான் ஷார்ட் லிஸ்ட் செய்து இருக்கிறார்கள். சீரோ டிகிரி களத்தில் இல்லாவிட்டால், ஒவ்வொரு புத்தகமுமே முதல் பரிசுக்கு தகுதியானவைதான். ஆனால் சீரோ டிகிரி களத்தில் இருப்பதால் , இப்போதே பரிசி உறுதி என்கிறார்கள் நடு நிலையாளர்கள்.

எனக்கும் சீரோ டிகிரிக்கும் இடையேயான தொடர்பு இன்று நேற்றல்ல. பல காலமாக நீடித்து வருகிறது. என் வாழ்வின் பல்வேறு காலகட்டங்களில் படித்து இருக்கிறேன் . வாழ்வின் கஷ்ட நஷ்டங்களை அறியாத பருவம்.,வேலையில்லாமல் கஷ்டப்பட்ட காலகட்டம்., மகிழ்ச்சியான கால கட்டம், இலக்கிய பரிச்சயம் ஏற்பட்ட கால கட்டம் என ஒவ்வொரு நிலையிலும் படிக்கும்போது ஒவ்வொரு உணர்வை தந்து கொண்டு இருக்கிறது சீரோ டிகிரி.

அதனால்தான் இன்னும் அதைப்படித்து கொண்டே இருக்கிறேன். என்னால் என்றுமே முடிக்க முடியாத நாவல் இதுதான்.

என்னிடம் சீரோ டிகிரி பிரதிகள் எத்தனை இருக்கின்றன என எனக்கே தெரியாது. வெவ்வேறு இடங்களில் , வெவ்வேறு சூழ்னிலைகளில் சீரோ டிகிரி காப்பிகளை வாங்கிப்படிப்பது என் வழக்கமாக இருந்து இருக்கிறது.

இத்தனைக்கும் சாரு எழுத்தில் எனக்கு பிடித்தது எக்சைல்தான். அதற்கு பிறகு ராசலீலா. ஆனால் அவை எல்லாம் ஒரு காப்பிதான் இருக்கின்றன. சீரோ டிகிரியில் மற்ற புத்தகங்களில் இல்லாத  வேறு ஏதோ ஒன்று , வரையரை செய்ய முடியாத ஒன்று இருக்கிறது.

என்சைக்களோபீடியாகவாக , கவிதை நூலாக, சிறுகதை தொகுப்பாக , நாவலாக என விதம் விதமாக ரசித்து படித்தாலும் இதை இன்னும் படிக்க முடிக்க முடியவில்லை.

எத்தனையோ வரிகளை மீண்டும் மீண்டும் படித்து கொண்டே இருக்கலாம்.

  • பூனைக்குட்டிகளை யாராவது வெறுக்க முடியுமா என்ன? கறுப்பு பூனைக்குட்டி , வெள்ளை பூனைக்குட்டி, பழுப்பு பூனைக்குட்டி. பூனைக்குட்டிக்ளை நான் ஆராதிக்கிறேன். முத்தமிடுகிறேன். பூனைக்குட்டிகள் மிகவும் ருசியானவை.
  • ஊசிமுனை வழியே யானையை இழுத்து செல்லும் செப்படி வித்தை - எழுத்து
  • எழுத்து வாழ்க்கையை பற்றியதல்ல, எழுத்து எழுத்தைப் பற்றியது
  • தேசிய கீதத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க?   “ நான் அதைப் பிரதியாக பார்க்கிறேன். இலக்கியப்பிரதியாக “   -இந்த பதிலுக்காகவே உங்களுக்கு நோபல் பரிசு கொடுக்கணும். என்ன பதிலு சார். எப்படித்தான் உங்க மூளைல இப்படியெல்லாம் உதிக்குதோ. ம்ம். நானும் அந்த காலத்துல இப்படி இருந்தவன் தான்.
  • தமிழ் மொழி என்பது எத்தனை இனக்குழுக்களின் மொழிகளை ஒழித்துக்கட்டி விட்டு உருவானதென்பது உத்தம தமிழ் எழுத்தாளனுக்கு தெரியுமா?
  • கைக்குள் சிக்கவில்லை
           இருந்தும்
          
            தன் முதல் கவிதையை எழுதிக்கொண்டிருக்கிறது

             மொழி

  • சூன்ய மொழி 
          சீழ் பிடிக்க
         ஒற்றைக் கண்ணில் இருந்து
         ஒழுகியது
         கவிதை

  • இப்படித்தான் இது தோன்றியது எனில் இத்தோற்றங்களின் தோற்றம் எப்படி இருந்தது?

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

 நான் ரசித்து படித்த நாவல் உலக அளவில் கவனம் பெற்று இருப்பது மட்டுமே என் மகிழ்ச்சிக்கு காரணம் அல்ல/

இதன் மூலம்  உலக அரங்கில் தமிழும் கவனம் பெறுவது ஒட்டு மொத்த தமிழ் இலக்கியத்துக்கே நல்லது என்ற வகையில் , இதை தமிழ் எழுத்துலக வரலாற்றின் திருப்பு முனையாகவே கருதுகிறேன்.

             ***************

 நான் கருதுவதெல்லாம் இருக்கட்டும். கவிஞர் றியாஸ் குரானா இது குறித்து என்ன சொல்கிறார்?


எனது நேர்காணலில் சாருவுக்கு புக்கர் பரிசு கிடைக்கும் என்று சொன்ன ஞாபகம் வருகிறது. சீரோ டிகிரிக்கு விருது கிடைக்க வாய்ப்புள்ளது. எனது இனிய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

1. காப்பி அடிப்பவர், எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலை செய்பவர் என பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிNவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.

2.கவரச்சிகரமான எழுத்து - நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்கள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்கள் உள்ள ஒரு வியாபார நிலையத்தைப்போல, இங்குமங்குமாக பலவகையான பொருட்களை பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர் களுக்குமான சாமான்கள் அங்கு கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவைகள் தொடங்கி உயர்தரமானவைகள் என கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்கு சந்திக்க செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச்சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதை தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவைகளும் சிறிதளவிலேனும் அங்கு கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.

3.உலகத்தரம் - எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் என பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே - உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.

4.சூப்பர் மாக்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப்போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்கு தோன்றுகிறது.

5.பெறுமதி - பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தை தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.மற்றப்படி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தை தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடனவைதான். அதை நான் எனது நேர்காணலில் சொல்லியிருக்கிறேன்.





Saturday, October 6, 2012

அஜீத்தை எனக்கு மிகவும் பிடிக்கும்- சாரு நிவேதிதா

படிமை விழா ரிப்போர்ட் - பார்ட்1: ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்



பார்ட் 2 

ஆங்கில அறிவின் அவசியம் குறித்தும் , வெளி நாட்டு படங்கள் பார்ப்பதன் முக்கியத்துவம் குறித்தும் சொன்னேன். ஆனால் அது மட்டுமே போதாது. வாழ்கையை இண்டென்சாக வாழ வேண்டும். நீங்களே கிட்டத்தட்ட ஒரு ஃபிலாசபராக இருந்தால்தான் , உங்களிடம் இருந்து நல்ல படங்க்ள் வரும்.

சினிமா தொழில் நுட்பங்களை கற்று கொள்வதில்தான் நம் ஊரில் ஆர்வம் காட்டுகிறார்கள் . டெக்னிக்கலாக படம் நன்றாக இருந்தால்மட்டும் போதாது. ஓர் இயக்குனருக்கு இசை , ஓவியம் , சிற்பம் என பல துறைகளில் பரிச்சயம் இருக்க வேண்டும். பாணா காத்தாடி படத்துக்கு இசை அமைத்த யுவன் சங்கர்தான் , ஆரண்ய காண்டத்துக்கும் இசை அமைத்து இருக்கிறார். ஆனால் இரண்டிலும் இசை வெவ்வேறு தரத்தில் இருக்கிறது. காரணம் சம்பந்தப்பட்ட இயக்குனர்களின் இசை அறிவும் , இசை அமைப்பாளர்களிடம் வேலை வாங்கும் தன்மையும்.

தொழில் அறிவு இல்லாமல் இயக்குனர்கள் இருப்பதால்தான் , அவரை பலரும் ஏமாற்ற முடிகிறது. புடவைகளில் கலர் கலராக புடவைகள் தொங்குவதுபோல கலர் கலராக காட்சிகள் அமைத்து விட்டு , ஒளி ஓவியம் என்கிறார்கள். இங்கே என்ன நடக்கிறது?

தமிழ் நாடு என்பது mediocre சமூகம் என சொல்லி வந்து இருக்கிறேன். சராசரிகளிலேயே வாழ்ந்து , சராசரிகளில்யே மகிழக்கூடிய சமூகம் . எனவேதான் சராசரிகளையே போற்றுகிறது.

வீடு மாற்றும்போது, சீனர்களாக இருந்தால், ஒரு ஆள் இரண்டு சுமைகளை ஒரு மூங்கிலில் கட்டி அதன்  நடு பகுதியை தங்கள் தோளில் வைத்து கொள்வான். அதாவது சுமை இரண்டு- ஆள் ஒன்று


இந்தியராக இருந்தால் , மூங்கிலின் நடுவில் ஒரு சுமையை கட்டி அதை இருவர் எடுத்து செல்வார்கள் . உழைக்க சோம்பேறித்தனம். அதை பெருமையாக நினைக்கும் குணம். சுமை ஒன்று - ஆள் இரண்டு

சிலர் என்னிடம் வந்து கேட்பார்கள். நான் இலக்கியம் படிக்க விரும்புகிறேன். உங்கள் புத்தகங்களில் எதில் இருந்து படிக்க ஆரம்பிக்கலாம்.

உங்களுக்கு தேவையானது எது என்பதைக்கூட தேர்ந்தெடுக்க தெரியாத நீங்கள் என் வாசகராக இருக்க முடியாது. என் எழுத்து எதையும் படிக்க வேண்டாம் என சொல்லி அனுப்பி விடுவேன் .

நம்மை இந்த அள்வுக்கு கெடுத்து வைத்து இருப்பது நம் அம்மாக்கள் . சின்ன வயதில் இருந்தே ஊட்டி ஊட்டி வளர்த்து , எதற்கும் யாரையும் சார்ந்து இருக்கும் குணத்தை ஏற்படுத்தி விட்டார்கள்.உழைக்க பயப்படுவர்கள் சினிமா துறைக்கு வர வேண்டாம்.


கலைகளில் பல பிரிவுகளில் உண்டு. அதில் ஒன்றான எழுத்து துறையில் முட்டாள்கள் இருக்க முடியாது. அயோக்கியர்கள் , தந்திரசாலிகள் இருக்கலாம், ஆனால் இந்த தந்திரத்துக்கும் புத்திசாலித்தனம் தேவைப்படுமே. எனவே முட்டாள்கள் என யாரும் எழுத்து துறையில் இல்லை.

ஆனால் சினிமா துறையில் முட்டாள்தனம் அதிகம் காணப்படுகிறது. ஓவியம் , இசை , எழுத்து என பல கலைகள் சேர்ந்தது சினிமா. அதீதமான புத்திசாலித்தனமும் , சென்சிபிலிட்டியும் தேவைப்படும் துறை. ஆனால் முட்டாள்தனம்தான் அதிகம் இருக்கிறது.

தமிழைப் பொருத்தவரை கமர்சியல் படங்கள் மட்டுமே தம் துறையில் சிறப்பாக செயல்படுகின்றன. உலகப்படங்கள் பார்த்து விட்டு , இலக்கியம் படித்து விட்டு , எடுக்கப்படும் படங்கள் குப்பையாக உள்ளன.

எனக்கு லிங்கு சாமியின் படங்கள் பிடிக்கும். அவரோ பாலாஜி சக்திவேலை பெரிதாக நினைப்பார். காரணம் பாலாஜி சக்திவேலுக்கு இலக்கிய பரிச்சயம் உண்டு. உண்மையில் இலக்கியவாதிகளுடன் தொடர்பு இல்லாத இயக்குனர்கள்தான் நல்ல படங்கள் எடுக்கிறார்கள்.

ஆனால் கமர்சியல் படங்கள் சில , போரடிக்கின்றன. பெண்கள்தான் கதா நாயகனுக்காக ஏங்குவதாக எடுக்கிறார்கள் . நடை முறையில் இப்படி இருப்பதில்லை. எனவேதான் , தன்னை காதலிக்காத பெண் மீது ஆசிட் வீசும் செய்திகளை தினமும் படிக்க வேண்டி இருக்கிறது.

 நான் ஒரு பொறுக்கி , என்னை ஏன் காதலித்தாய் என நாயகன் கேட்கிறான். நீதான் என்னை “ டீ “ போட்டு அழைத்தாய், அதில் மயங்கி விட்டேன் என்கிறாள் நாயகி . இப்படி ஒரு படம்.

ஓர் அரசியல்வாதி நடித்த படம். ஸ்கூட்டியில் செல்லும் பெண்ணை நாயகன் சைட் அடிக்கிறான். அவள் முகத்தை பார்த்ததும் காறி துப்பி விட்டு செல்கிறான். அழகாக இல்லை என்றால் காறி துப்புவீர்களா ? இது சமூக விரோதம் இல்லையா ?

அஜீத் நல்ல மனிதர், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் , நல்ல நடிகரும்கூட. வரலாறு படத்தில் செமையாக நடித்து இருப்பார். ஆனால் அவர் தொடர்ந்து ஏன் , தவறான படங்களையே தேர்ந்து எடுக்கிறார் என தெரியவில்லை.

கவுதம் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா அட்டகாசமாக இருந்தது , அடுத்த படமான நடு நிசி நாய்களில் நம்மை நன்றாக பழி வாங்கி விட்டார்.

கமல் ஹாசன் காட் ஃபாதர் படத்தை நூறு முறையாவது பார்த்து இருப்பார் என நினைக்கிறேன். முகபாவனை , கைகால்களை அசைப்பது என அப்பட்டமாக காப்பி அடித்து நாயகனில் நடித்து இருப்பார். காப்பி அடிப்பது தவறு என சொல்லவில்லை. தாராளமாக காப்பி அடியுங்கள். ஆனால் உலக நாயகன் என சொல்லி கொள்ளாதீர்கள்.

எந்த வேலையிலும் சராசரித்தன்மையே தமிழ் நாட்டில் இருக்கிறது. யாருக்கும் எந்த வேலையும் முழுமையாக தெரியவில்லை. என் வீட்டில் சமையலுக்கு ஒருவரை  நியமித்தேன் . அவருக்கோ கேஸ் ஸ்டவை ஆன் செய்வது என்பதே தெரியவில்லை. கேஸ் ஸ்டவுக்கு பதில் வீட்டை கொளுத்திவிடப்போகிறார் என பயந்து விட்டேன்.

உன்னதத்தை நாம் தேடுவதே இல்லை. இளையராஜா என்ன பாட்டு கொடுத்தாலும் , இயக்குனர்கள் தமக்கு அவர் ஏதோ பிச்சை போட்டு விட்டதாக நினைத்து மகிழ்ந்து கொள்கிறார்கள். இசை அமைப்பாளர் நம்முடன் சேர்ந்து வேலை செய்பவர். அவரை மற்றவர்களைப்போல வேலை வாங்க தெரிய வேண்டும்.
இசை முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள். ஆங்கிலமும் முக்கியம். நான் இயக்குனராக இருந்தால் , ஆங்கிலம் தெரியாத துணைஇயக்குனர்களை சேர்த்து கொள்ள மாட்டேன்.

உலகளவில் சினிமாவை எடுத்து கொண்டால் , ஹாலிவுட் பாணி படங்கள் , அய்ரோப்பிய பாணி படங்கள் என சில பாணிகள் உள்ளன.  உன்னத படங்கள் இந்த பாணிகளில் வந்துள்ளன.

நீங்கள் முயன்றால் , நம் மண்ணுக்கேற்ற புதிய திரை மொழியை , புதிய பாணியை உருவாக்க முடியும் .   வாழ்த்துகள்.


( பிரத்தியேக படங்கள், வீடியோ , கலந்துரையாடல் பற்றிய ரிப்போர்ட் , ச்மஸ்கிருதம் யாருடைய மொழி , டொரண்டினோவை ஏன் பிடிக்கவில்லை , சினிமாவில் கருத்து சொல்வது தவறா, கட்டுக்கோப்பான ஜெர்மனியில் இருந்து கலைஞர்கள் எப்படி உருவாகிறார்கள் , ஸ்பீடாக படிப்பது எப்படி , சுவாரஸ்யமாக இல்லாவிட்டால் , அது நல்ல படைப்பு ஆகாதா , சினிமாவாக எடுக்க வேண்டிய நாவல்கள்,  அடுத்த இடுகையில் )

- தொடரும் 


Sunday, September 30, 2012

பிரச்சினையை திசை திருப்பாதீர்கள் - சாரு உருக்கமான வேண்டுகோள்

 நேர்மை, தெளிவு , துணிவு  ,சமூகத்தின் மீது அன்பு / அக்கறை .  இந்த காம்பினேஷனில் ஒரு மனிதரை காண்பது அரிது . மற்ற துறைகளில் ஓரளவு இந்த காம்பினேஷனுடன் சிலர் இருக்கிறார்கள் . ஆனால் சம கால எழுத்தாளர்களில் இந்த பண்புகளை ஒரு சேர காண்பது மிகவும் கடினம்.

இந்த பண்புக்ளை ஒரு சேர பெற்ற , வாராது வந்த மாமணி போல , தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் சாரு என்பது பலரது கருத்து. இந்த கருத்தை வலுப்படுத்துவது போல சாருவின் இன்றைய பேச்சு அமைந்து இருந்தது.

ஜெய் பீம் காம்ரேட் ஆவண படம் குறித்து விண் தொலைக் காட்சியில் பேசினார். இன்ன்னும் ஒரு மாதத்துக்குள் இந்த படம் பார்க்காதவர்கள் , தன் நண்பர்களாக நீடிக்க முடியாது என ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். அந்த அளவுக்கு இந்த படத்தையும் , அது சொல்லும் செய்தியையும் , உணர்வுகளையும் சாரு நேசிக்கிறார்.


சக மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் வாழ்வதன் அவலத்தை சுட்டிக்காட்டினார். இந்த படத்தை பார்ப்பது வரலாற்று கடமை என்றார்.

மனிதன் கழிவை மனிதன் சுமக்கும் அவலத்துக்கு எதிரான சட்டம் 1993ல் கொண்டு வரப்பட்டது , ஆனாலும் இந்த இழி நிலை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மலம் என்ற வார்த்தையை சொன்னாலே பலருக்கு வாந்தி வந்து விடும். ஆனால் இந்த கழிவுகளை சுமப்பதையே வேலையாக சிலர் செய்கிறார்களே.. அவர்களது நிலையை நாம் எண்ணி பார்த்தோமோ என்றெல்லாம் சாட்டையால் விளாசினார்.


இந்த நிலையில் இருந்து அவர்கள் வெளி வர வேண்டும் என்றால் அதை கல்விதான் சாதிக்கும் என்று சொன்னவர் தன் வாழ்க்கையை உதாரணமாக காட்டினார்.

இந்த விளிம்பு நிலை மக்களுடன் தான் , சாருவின் இளமைக் காலம் கழிந்து இருக்கிறது. மலம் அள்ளும்போது கூட சென்று இருக்கிறார் ( தேகம் நாவலில் இதை உருக்கமாக சொல்லி இருப்பார் ) மலத்தின் மீது சாம்பலை தூவி , அதை அள்ளி கொண்டு சென்று வாகனத்தில் ஏற்றுவது அவர்கள் பணி. குடிக்காமல் இந்த வேலையை செய்ய முடியாது. காலப் போக்கில் குடிக்கு அடிமையாகி விடுவார்கள்.


கல்விதான் தன்னை இதில் இருந்து காப்பாற்றும் என உணர்ந்த சாரு , வெறித்தனமாக படிக்க ஆரம்பித்து , வேறு ட்ராக்கிற்கு வந்து விட்டார். ஆனால் , அவர் தம்பிக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் , அதிலேயே சிக்கி கொண்டார். 40 வயதிலேயே இறந்து விட்டார்.  


சாருவுக்கு இந்த படத்தின் மீதான உணர்வு பூர்வமான நெருக்கத்துக்கு , இதுதான் காரணம் போலும்.

இந்த படம் 13 ஆண்டுகளாக எடுக்கப்பட்டது என்ற தகவலையும் சொன்னார். இப்படியெல்லாம் பாராட்டிபேசிய சாரு ,மாற்று கருத்தையும் முன் வைத்தார்.

மதம்தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது தவறு என ஆதாரபூர்வமாக சுட்டி காட்டினார். அமெரிக்காவில் நிலவிய இன வெறி கொள்கைக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என கேட்டார். எல்லோரும் சேர்ந்து இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமே தவிர , ஹீரோ வில்லன் சண்டையாக இதை மாற்ற கூடாது என உணர்ச்சி பூர்வமாக சொன்னார்.


தமிழ் பொது புத்தி பொறுப்பை தட்டி கழிப்பதற்கு பேர் போனது. பிரச்சினைக்கு நீயோ , நானோ காரணம் இல்லை ,. ம்தம்தான் எல்லா பிரச்சினைகளுக்கு காரணம் என சொல்லி விட்டு , மானாட மயிலாட பார்க்க சென்று விடுவோம் . ஆனால் , இதற்கு காரணம் நீதான் , மதம் காரணம் இல்லை என்று சொல்ல அசாத்திய துணிச்சல் வேண்டும். சாருவுக்கு அந்த துணிச்சல் இருக்கிறது. 



இதோ , அவர் பேச்சின் இணைப்பு. 


Thursday, June 28, 2012

படித்தும் பதர்களாக போவது ஏன்? சாரு பேட்டியின் வீடியோ தொகுப்பு

இணையத்தில் தற்போது நடந்து வரும் எழுத்து தீவிரவாத தாக்குதல் அனைவருக்கும் தெரியும். படிப்பே ஓர் ஆயுதமாக மாறுவதை திகைப்புடன் அனைவரும் கவனித்து வருகிறார்கள்.

இந்த பிரச்சினை வருவதற்கு முன்பே , சாரு இதைப்பற்றி எச்சரித்தார் என்பது ஒரு சுவாரஸ்ய தகவல். சிறுமலை சந்திப்பின் போது அளித்த சிறப்பு பேட்டியில், சரியான முறையில் படிக்காவிட்டால் , படிப்பே ஆபத்தாகி விடும் என எச்சரித்தார். அந்த பேட்டியின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

 நண்பர் நிர்மல்தான் இதை எடிட் செய்தவர். அவருக்கு நன்றி..

இதோ ..அந்த பேட்டிக்கான சுட்டி ..
http://youtu.be/VwvqEpdoZJA

Sunday, June 24, 2012

உங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்- ஒழுக்கலாறு எழுத்தாளர் பற்றி சாரு நிவேதிதா நச் கமெண்ட் !!



தினம் தோறும் படித்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் சாரு நிவேதிதா சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ள வாசகர் வட்ட சந்திப்புக்கு சம்மதித்தார். ஆனால் சென்ற சந்திப்பின்போது, லேப்டாப்பும் கையுமாக வந்து இருந்தார். எழுத்து வேலையில் பிசியாக இருந்தார்.

இந்த முறை எந்த வேலையையும் கொண்டு வரவில்லை. ஆனால் வாசகர்களும் நண்பர்களும் அவரை ஒரு நொடி கூட சும்மா இருக்க விடவில்லை. கிரிக்கெட், அரட்டை,  மது, இலக்கிய விவாதம், உலக சினிமா , லோக்கல் சினிமா, வாக்கிங் என அவரை ஆளுக்கு ஒரு புறம் இழுத்து கொண்டு இருந்தனர்.

இந்த நேர நெருக்கடியிலும் , சந்திப்புக்கு வர இயலாத சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒப்புக்கொண்டார்.

அவருடன் பேசுவது ஒரு உன்னத அனுபவம். அறிவுப்பூர்மாக பேசாமல் உணர்வு பூர்வமாக பேசுவார். தெளிவாக தன் கருத்துகளை எடுத்து வைப்பார். அவருடன் பேசியதில் இருந்து......


***************************************************************8

1.     யார்ழ் பத்தேல் செக்ஸுக்கும் மரணத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக் சொல்கிறார், உங்கள் படைப்புகளிலும் இதை காண  முடிகிறது, அதை பற்றி ?

ஜ ஜனன மரணம் . செக்சோட அடிப்படை என்ன ? ஓர் உயிரை உருவாக்குவது. ஆனா அந்த உயிர் உருவாகும்போது , மற்ற உயிர் அணுக்களை அழித்து விட்டுதான் பிறக்கிறது. நானோ சிறுகதையில் எழுதியது போல.   இன்னொன்று , ஜனனம்  என்றாலே அதற்கு அடுத்து மரணம். காஸ் அண்ட் எஃபெக்ட் போல.  மரணத்துக்கு பின் என்ன ? யாருக்கும் தெரியாது . அதே போல பிறப்புக்கு முன் ? யாருக்கும் தெரியாது. பெரும் சூனியம்.
ச் செக்ஸ் எனும் செயலின்போது , தியானம் போல தூக்கம் போல நம்மை மறக்கிறோம். மரணத்தின் போது நாம் இல்லாமல் போகிறோம். அதே போல செக்சின் போதும் இல்லாமல் போகிறோம். என்வேதான் செக்சை சிறிய மரணம் என்கிறார்கள்.
ம மரணமும் உயிர்ப்பும் எப்படி ஒரே இடத்தில் ??
இ இவை இரண்டு பாம்புகள் மாதிரி. ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதுதான ஜனன மரணம். ரோலண்ட் பார்த் கூட இதைப்பற்றி பேசி இருக்கிறார்.
ந்

    நேற்று வாசகர் ஒருவர் , இளைய சமுதாயம் பற்றி சொன்னார். உங்கள் கருத்து ?

    எந்த இளைய சமுதாயம் என்ற கேள்வி வருகிறது. இந்திய இளைய சமுதாயமா? இணையம் வந்த பின் , எல்லா இளைஞர்களும் ஒரே வார்ப்பில் வார்க்கப்படது போல ஆகி விட்டது . பெரு  நாட்டு இளைஞனின் கனவும் , இந்திய இளைஞனின் கனவும் ஒன்றுதான். பணம் ஈட்டுவது. ஒரு பொலிவிய நாட்டு இளைஞனுக்கு தன் நாட்டின் வரலாறு பற்றி கவலை இல்லை. அமெரிக்கா செல்வதுதான் அவன் கனவு. ஐரோப்பியாவில் மட்டும்தான் இளைஞர்கள் கரப்ட் ஆகவில்லை என்பது என் கருத்து.

இலக்கியத்தில் மொராக்கோ மற்ற நாடுகளை முந்தி செல்வதாக சொன்னீர்களே?

       இலக்கியத்தை பொருத்தவரை இது உண்மைதான்.  வறுமை நிலை இருந்தாலும் , இலக்கியம் இருந்து கொண்டே இருக்கிறது.  நோபல் பரிசு பெறும் தகுதி உடைய பதினைந்து பேரை என்னால் சொல்ல முடியும் . எல்லோரும் இலக்கியம் படிப்பதாக நான் சொல்லவில்லை. படித்த வர்க்கத்தினருக்கு இலக்கியம் தெரிந்து இருக்கிறது. நம் நாடு இங்குதான் பின் தங்கி இருக்கிறது. நம் நாட்டில் படித்தவர்கள் , அதிகார வர்க்கத்தினர், வசதியானவர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை. பாமரனுக்கு இலக்கியம் தெரியவில்லை என்பதை ஒரு குறையாக நான் சொல்லவே இல்லை. அவனுக்கு உணவு கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு தலைமுறையே டாஸ்மாக்கினால் வீணாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். விஷ சாராயத்தினால் உடம்பும் , மனமும் பாழாகிறது.
  
   மதுவுக்கு அடிமையாவதை இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்.. நீங்கள் கடும் உழைப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உங்களிடம் இருந்து மதுவை மட்டும் சிலர் கற்க விரும்புகிறார்களே ?
      அதுதானே ஈசியாக இருக்கிறது. எனக்கு குடி என்பது ஒரு கொண்டாட்டம். எப்போதாவது குடிப்பேன். தினமும் குடித்தால் எழுத முடியாது. எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் குடிப்பதையே சிலர் முழு நேர தொழிலாக வைத்து கொண்டுள்ளனர். இதுதான் தவறு .

உ உங்கள் எழுத்தில் பாலுணர்வுதான் அதிகம் இருப்பதாக , படிக்காத சிலர் சொல்கிறார்கள். ஆனால் படித்தவர்களுக்குதான் உங்கள் எழுத்தின் உன்னதம் புரியும். சீரோ டிகிரி வெளி வந்த கால கட்டத்தை விட இன்றுதான் அதிகம் கொண்டாடப்படுகிறது. ஆக , மக்களிடம் இலக்கிய விழிப்புணர்வு வந்து விட்டதாக நினைக்கிறீர்களா? 
     
           ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். சீரோ டிகிரியை அந்த காலத்தில் நானேதான் பதிப்பித்தேன். இன்று பரவாயில்லை. சில பதிப்பகங்கள் பதிப்பிகிறார்கள். ஒரு பத்தாயிரம் பேர் படிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு ஜன தொகை கொண்ட நாட்டில் பத்தாயிரம் என்பது மிக குறைவு.

      இன்றைய இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது? தேக்க நிலையிலா அல்லது ஆரோக்கியமான பாதையிலா ?
மி
     ஜப்பானில் மிக சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன . ஈரான் போன்ற நாடுகளிலும்கூட. அரேபிய   இலக்கியம் செழிப்பாக இருக்கிறது. ஐரோப்பிய இலக்கியம் , லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை எல்லாம் கடந்து சென்று விட்டது. ஃபிரான்ஸில் எல்லாம் , கூட்டமான ரயில் வண்டிகளில் கூட ஆயிரம் பக்க புத்தகங்களை படித்து கொண்டு செல்வதை பார்க்க முடியும்.  நம் நாட்டில் வாசிப்பு மிக குறைவு.

    நம் நாட்டில் இலக்கியம் தெரியவில்லை என வருத்தப்படுகிறீர்களே..தமிழே தெரியவில்லை என்ற நிலை உருவாகி வருகிறதே..

        உருவாகி வரவில்லை..ஏற்கனவே உருவாகி விட்டது . பல பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம். தமிழ் பேசினால் அவமானம் என்ற மோசமான நிலையை உருவாக்கி வருகிறார்கள். இலக்கியம் தெரியாது என்பது கூட கொடூரம் அல்ல. டாஸ்மாக்கும் , தமிழ் தெரியாது என்ற நிலையும்தான் அபாயகரமானது.


      அதிகாரத்தை எப்போதும் எதிர்த்து வருகிறீர்கள். ஆனால் எழுத்தாளர்களிலேயே பலர் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முனைகிறார்கள் . வாசகர் சந்திப்புக்கு வருபவர்கள் குடிக்க கூடாது. அதிகாலையில் எழ வேண்டும். ஒழுக்கலாறு ஓம்பல் வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார்கள்.  எனவே படிப்பால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறதே?

     என் எழுத்து எப்போதுமே அதிகாரத்துக்கு எதிரானது. அதிகாரம் என்பது அரசாங்கம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.  நம் ஒவ்வொரிடமும் பயங்கரமான அதிகார வெறி இருக்கிறது. ஒரு தந்தையாக நம் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். கணவனாக மனைவியை அடக்கி ஆள்அ நினைக்கிறோம். எழுத்தாளனாக வாசகர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். இப்படி அனைத்து அதிகாரத்தையும் ஒழித்து விட்டு , சமதுவமாக வாழ வேண்டும் என்பதே என் எழுத்துகளின் அண்டர் கரண்ட். அப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் ஒன்று, ஃப்ரீடம் என வரும்போது இன்னொன்றும் இருக்க வேண்டும் . ரெஸ்பான்சிபிலிட்டி. பொறுப்பு இல்லாத ஃப்ரீடம் மிகவும் பயங்கரமாக போய் விடும். அந்த ஃப்ரீடத்தை நான் சொல்லவே இல்லை. உங்கள் சுதந்திரம் மற்றவர்களை கஷ்டப்படுத்த கூடாது. 
   
       ரயிலில் கத்தி பேசுவது, சாலை விதிகளை மதிக்காத்தது போன்றவற்றை நாம் பொருட்படுத்துவதில்லை. தனி மனித ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டுமே என நம் ஊரில் நினைக்கிறார்களே? 
        என் எழுத்து வாழ்க்கையில் நாம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதே இல்லை. இதைத்தான் ஒழுக்கம் என்கிறேன். ஒரு காலத்தில் பல தார மணம் , பால்ய விவாகம் போன்றவை இயல்பாக இருந்தது. இன்று அவை ஒழுக்கம் கெட்ட செயல். இதெல்லாம் மாறக்கூடியது. தேசத்துக்கு தேசம் இந்த ஒழுக்க விதிகள் மாறும்.
     ஆனால் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத நேர்மை , மற்றவர்களை துன்புறுத்தாமை போன்றவைகளை நான் ஒழுக்கம் என நினக்கிறேன்.   உயிர்மையில் நான் எழுதிய கறாரான சினிமா விமர்சனங்களால் , பல எதிரிகளை சம்பாதித்தேன். நேர்மைக்கு எனக்கு கிடைத்த பரிசு வறுமை. ஆனாலும் நேர்மையாக வாழ்கிறேன். இதுதான் ஒழுக்கம்.


     வாழ்க்கையை கொண்டாடுதல் , ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தல் போன்ற மன நிலை உங்களுக்கு எப்படி வந்தது ?
       தெரியவில்லை ,. எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்லலாம். இலக்கியம் நிறைய படித்தால் இப்படி ஆகலாமோ என தோன்றுகிறது. ஆனால் படித்தும் பயங்கரவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். படிப்பையே ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். படிப்பை knowledge ஆக எடுத்து கொள்கிறீர்களா . wisdom ஆக எடுத்து கொள்கிறீர்களா என்பதே முக்கியம். நான் விஸ்டமாக எடுத்து கொண்டேன். அதனால்தான் விஸ்டத்துடன் இருக்கிறேன். நீங்கள் டெக்னிக்கலாக , அறிவு பூர்வமாக படித்தால் உங்கள் படிப்பு ஆயுதமாகி விடும் , மற்றவர்களை அதிகாரம் செய்ய முனைந்து விடுவீர்கள்.

     படித்தே ஆக வேண்டிய புத்தகம் என ஒரு புத்தகத்தை அடிக்கடி சொல்வீர்கள் ..அதைப்பற்றி ?


         Zorba the greek என்ற கஸான்காகிஸின் நாவலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தால் கூட போதும். படிக்கலாம், அனைவரும் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை படித்தால் உங்கள் வாழ்வே மாறி விடும்.

        பார்த்தே ஆக வேண்டிய சினிமா ?

          கிம் கி டுக்கின் , ஸ்பிரிங் சம்மர் ஆட்டம் என்ற படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் , இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  உங்களை ஒரு ஞானி ஆக்கும் ஸ்டஃப் படத்தில் உண்டு.


******************************************************

         பின் குறிப்பு - இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் வீடீயோ வடிவம் விரைவில் வெளியிடப்படும். 


               





















டு






























Tuesday, June 19, 2012

அராத்துவை வெட்கப்பட வைத்த கிசு கிசு - இறைவனுடன் இரண்டு நாட்கள் - பார்ட் 2

வாசகர் வட்ட சந்திப்பில் சாருவின் பேச்சு , இலக்கிய விவாதம் போன்ற ஆழமான விஷ்யங்களை பார்க்கும் முன்பு, ஹை லைட்ஸ்
***************************************


இலக்கிய மணமும் , மலர்களின் மணமும்

செடியின் புன்னகை மலரோ !!

இலக்கியத்தை நோக்கி வளைந்து நெளிந்து செல்லும் பாதை

காரசாரமான விவாதத்துக்கு போட்டியா?

தண்ணியில் மிதக்கலாம் :)

அறிவுப் பசியில்... 

இங்கிவனை யான் பெறவே , என்ன தவம் செய்து விட்டேன்

தளபதிகள்....

ஆண்டவனை விட ஆதவனே மேல் என்பேன் - பிரபுராஜ்

தீராத விளையாட்டு பிள்ளை

சத்தாண உணவு 
  • கலந்துரையாடலின் போது சாம் பேசுகையில், சாரு பரிந்துரைந்த உலக திரைப் படங்கள் அனைத்தையும் தான் பார்த்து விட்டதாக சொல்லி , பட்டியலிட்டார். நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த புத்திசாலி வாசகர்கள் நைசாக இடத்தை காலி செய்தனர்.  அவர் பேச்சில் கவரப்பட்ட சாரு, “  இவர் விபரம் தெரிந்த வாசகராக இருக்கிறாரே..உங்களில் எத்தனை பேர் அவர் சொன்ன படங்களை பார்த்து இருக்கிறீர்கள் ? “ என்றார்.  அதிர்ச்சி அடைந்த பலர் ( நான் உட்பட ) பரிதாபமாக விழித்தனர். டென்ஷன் ஆன சாரு “  படிக்கத்தான் மாட்டேன் என்கிறீர்கள் . சினிமா பார்ப்பதில் என்ன சிரமம்... அடுத்த முறை இந்த படங்களை பார்த்து இருக்க வேண்டும் “ என அசைன்மெண்ட் கொடுத்து விட்டார்.
  • அராத்து தனக்கே உரிய நையாண்டி பேச்சால் பலரை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார். அவ்வப்போது வெட்கப்பட வைத்து கொண்டு இருந்தார். ஆனால் அவரையே வெட்கப்பட வைத்து விட்டார் இரு நண்பர். அவர் யார் என சொன்னால் , அவருக்கு  பிரச்சினைகள் வரும் என்பதால் விஷ்யத்தை மட்டும் சொல்கிறேன்.  காசு போட்டால் காண்டம் வரும் மெஷின் இருக்கிறது அல்லவா? அது போல நடிகைகளின் பெயரை சொன்னால் , உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட கிசு கிசு சொல்லக்கூடியவர் இவர். அந்த கிசுகிசு எந்த பத்திரிக்கையிலும் இது வரை வந்திராத , ஒரிஜினல் மேட்டராக இருக்கும். ஒரு நடிகையை , ஒரு இயக்குனர் கஷ்டப்பட்டு ஒத்துழைக்க வைத்தாராம். முக்கியமான நேரத்தில் இயக்குனருக்கு கடும் அதிர்ச்சியாம். அவர் ஏன் அதிர்ச்சியானார் என்பதைக் கேட்டு அராத்து வெட்கப்பட்டார் பாருங்கள்.. அடடா.. காண கண் கோடி வேண்டும்.
  • கலந்துரையாடலின் கட்டுப்பாட்டு அதிகாரி ப்ரியமுடன் துரோகி, கடும் நிபந்தனைகள் விதித்து , கறாராக அமல் படுத்தினார். பலரும் முணுமுணுத்தனர். பவர் கரப்ட்ஸ் என சாரு சொன்னதை நினைவு படுத்திய அராத்து , துரோகி தன் அதிகாரத்தை தவ்றாக பயன்படுத்துவாக முறையிட்டு பார்த்தார்..ம்ஹூம் ,, பலனில்லை.
  • ஒரு கட்டத்தில் சாருவிடமே மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.  “ யாரும் கெட்ட வார்த்தைகள் பேச கூடாது. அன்பு மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு சாருவை அவன் இவன் என்றெல்லாம் பேசக் கூடாது. ” என்பது துரோகியின் கண்டிஷன். உடனே மைக்கை வாங்கி ( பறித்து ? ) பேசிய சாரு , ” நான் காதலிக்கும் எழுத்தாளனை அவன் இவன் என்றுதான் செல்லமாக அழைப்பேன். அதே போல கெட்ட வார்த்தை என எதுவும் இல்லை. என் ஊரான நாகூரில் , சாதாரணமாக ஒருவரிடம் பெயர் கேட்பதாக இருந்தாலும் , ஒ***  ***** , உன் பெயர் என்ன ? “ என்போம், அவர் “ங்க்**   ** , என் பெயர் ** “ என்பார்..இதையெல்லாம் தவறாக அங்கு யாரும் நினைப்பதில்லை “ என்றார்.   இதற்கு பதில் சொன்ன துரோகி “ சாரு.. நீங்கள் பேசலாம்.. மற்றவர்கள் பேச கூடாது.. ஏனென்றால் அவர்கள் சாரு அல்ல “ இந்த நச் பதிலால் , துரோகியின் ஆதிக்கம் கடைசி வரை நீடித்தது.
  • கலந்துரையாடலின் போது , சாருவுக்கு அருகில் நான் அமர்ந்து இருந்தேன். சாருவுக்கு ஒரு தட்டில் சிக்கன் வைத்து கொடுத்தார்கள். ஒரு லெக் பீஸ் எடுத்து கொள்ள அவரிடம் அனுமதி கேட்டேன், சிரித்தபடி அனுமதித்தார். அதன் பின் அனுமதி கேட்காமலேயே அவர் ப்ளேட்டில் பாதியை சாப்பிட்டவன் நான் என்பது யாருக்கும் தெரியாது.
  • ஒவ்வொரு வாசகர் பேசும்போதும் ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்டார் சாரு. தேவைப்பட்டால் உடனடியாக விளக்கமும் அளித்தார். 
  • வருண் என்ற வாசகர் பேசும்போது அந்த வாசகரின் ஆங்கில அறிவை நினைவு வைத்து இருந்து பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது.
  • ”எனக்கு டீ ஷர்ட் ஒன்று தேவைப்பட்டது. வாங்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்த போது , இந்த வாசகர் பரிசளித்தார். மிக்க நன்றி “ என நினைவு வைத்து நன்றி சொன்ன போது , அந்த வாசகர் முகத்தில் பரவசம் , மகிழ்ச்சி.
  • இனிமையாக பழக கூடியவரான பிரபு ராஜிடம் இவ்வளவு இலக்கிய வெறி இருப்பதை அன்றுதான் கவனித்தேன். ஆதவன் , நகுலன் போன்றோர் மீதான காதலை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ளவே இயலவில்ல்லை. தன்னிலை மற்ந்து உணர்ச்சி பெருக்கில் , உன்னத ஒரு மன நிலையில் இருந்த அவர் ஆன்மீக உச்சத்தை தொட்டு விட்டார் என்பதை உணர முடிந்தது . 
  • எல்லோரும் தண்ணி அடித்தால் உளறுவார்கள். ஆனால் அராத்து தண்ணி அடித்தபின்புதான் நிதானமாக பேசினார். விளையாட்டுப்பிள்ளையாக காட்சி அளிக்கும் அவர் , சீரியசாக பேசியதை வியப்புடன் கவனித்தேன் . “ mind attitude - not the mind aptitude- determines man's altitude என்பார்கள். என் மனப்போக்கை மாற்றியவர் சாரு. சாருவிடம் பேசினால் , வாழ்க்கை குறித்த உங்கள் பார்வையே மாறி விடும் . சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டாடினாலும் , பொறுப்புணர்வு தவறாதவர் சாரு.  சிலர் தாம் படுக்கையை அப்படி அப்படியே போட்டு விட்டு சென்று விடுவார்கள்.. சாரு பொறுப்பாக அதை மடித்து அதன் இடத்தில் வைத்து விட்டு செல்வார்.  வாழ்க்கை குறித்த அவர் பார்வையை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை “ சாருவை பற்றி அவர் பேசுகையில் , அவர் கண் கலங்குவதை பார்த்து என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.
  • ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டும் சார்ந்ததல்ல. கட்டுப்பாடுதான் மிகப்பெரிய கொண்டாட்டம் என்றார் சாரு.. உடனே கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.. : இந்த விழா முடியும்வரை,. நாம் யாரும் குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது. இயற்கையை சீர் குலைக்க கூடாது “ கடைசி வரை இந்த கட்டுப்ப்பாட்டுடன் நடந்து கொண்டனர் வாசகர்கள். 
  • கூட்டத்தில் பதிவர் பிச்சைக்காரன் பேசியவதாவது:
                 இலக்கியம் படைக்க பலரால் முடியலாம்.
              ஆனால் இலக்கியமாகவே வாழ உன்னால் மட்டுமே முடியும்.
              நீ சரித்திரம் படிக்கும் எழுத்தாளன் அல்ல. 
              சரித்திரம் படைக்கும் எழுத்தாளன் .
              கவியரசர்  தமிழ் நாட்டுக்கு இல்லை எனும் பழி பாரதியால் தீர்ந்தது
             எழுத்தரசர் இல்லை எனும் பழி உன்னால் தீர்ந்தது
               இலக்கியம் எனும் அமுது அளிக்கும், 
                பாலூட்டும் தாயானாய்..
             நான் வாலாட்டும் நாயானேன் ..
  • இதில் ஒரு வரியை சாரு குறிப்பிட்டு பதில் அளித்தார். விரிவாக பிறகு.


       

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா