Friday, December 21, 2012

விஸ்வரூபம் படத்தை திரையிடமாட்டோம்- திரையரங்க உரிமையாளர்கள் திட்டவட்டம்


கமல் ஹாசனின் விஸ்வரூபம் படத்தை திரையிட முடியாது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக , திரையரங்குகிற்கே வராத விஸ்வரூபம் படத்தை நேரடியாக தொலைக்காட்சிகளிலேயே ரிலீஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
            விஸ்வரூபம் படத்தை எடுத்து முடித்து பல மாதங்கள் ஆகியும் , படம் விற்பனை ஆகவில்லை. காரணம் எதிர்பார்த்த அளவுக்கு அவுட்புட் இல்லை என கூறப்படுகிறது.  படத்தில் பல புதிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால்  ஒரு ரசிகனைப் பொருத்த வரை , end product எப்படி இருக்கிறது என்பதே முக்கியம். அதை எப்படி தயாரித்தார்கள் என்பது அவனுக்கு தேவை இல்லாத ஒன்று. எனவே என்னதான் கஷ்டப்பட்டு அந்த படத்தை எடுத்திருந்தாலும், படம் சரியாக வரவில்லை என்பதால் , படத்தை அடிமாட்டு வில்லைக்கு கேட்பதாக கூறப்படுகிறது.
இதனால் எரிச்சல் அடைந்த கமல் , நேரடியாக டிடிஎச் மூலம் ஒளிபரப்பும் உரிமையை விற்று , அதன் மூலம் கிடைக்கும் காசுடன் பாதுகாப்பாக இருந்து கொள்ள முடிவு செய்து விட்டாராம். எப்படியும் படம் ஓடப்போவதில்லை என்பதால், திருட்டு விசிடி குறித்து கவலைப்படவில்லையாம்.
இந்த நிலையில் , தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய கூட்டு கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தியேட்டர் அதிபர்கள் சங்க தலைவர் ஆர்.எம்.எம்.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், பொருளாளர் ஹரிகோவிந்த், இணை செயலாளர் ஸ்ரீதர், வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தலைவர் எல்.சுரேஷ், மற்றும் மதுரை அன்பு செழியன், செல்வின்ராஜ், அருள்பதி உள்பட ஏராளமான தியேட்டர் அதிபர்களும், வினியோகஸ்தர்களும் கலந்து கொண்டார்கள்.
அறிக்கை
கூட்டத்தின் முடிவில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டு கூட்டம் நடந்தது. அதில், திரைக்கு வருவதற்கு முன்பே டி.டி.எச். அல்லது வேறு எந்த தொழில்நுட்பம் மூலமாக வெளியிடும் எந்த படத்தையும், திரைப்பட அரங்குகளில் வெளியிட ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து வரும் தமிழ்நாடு வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பு மற்றும் அபிராமி ராமநாதனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.’’ இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா