Saturday, December 8, 2012

என்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்கள்



தமிழ் சினிமாவை அழிக்கும் நோக்கில் கமல் செயல்படுவதாலும், அதை தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்கள் பூணூல் பாசத்தால் அமைதி காப்பதாலும்,   கமலை கண்டித்து எழுத வேண்டிய அவசியம் மாற்று ஊடகமான வலைப்பூக்களுக்கு ஏற்ப்பட்டது.

டி டி எச் முறைப்படி தயாரிப்பாளருக்கு உறுதியான லாபம் - வினியோகஸ்தர்களுக்கு படத்தின் தரத்தை பொறுத்து லாபம் என்ற நியாயமற்ற வியாபாரத்தை கண்டித்து எழுதியதை வைத்து , சிலர் கமலை நான் கண் மூடித்தனமாக எதிர்ப்பதாக நினைக்கிறார்கள்.

அதுதான் இல்லை.  நான் சினிமாவுக்கு செல்ல ஆரம்பித்த பள்ளி நாட்களிலிருந்து , இன்று வரை வெளியான அனைத்து கமல் படங்களையும் நான் மிஸ் செய்யாமல் பார்த்து வருகிறேன்.

சாரு சொன்னதுபோல , கமல் ஒரு நிகழ மறுக்கும் அற்புதம் என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு அற்புதம் என்றேனும் ஒரு நாள் நிகழும் என உறுதியாக நினைக்கிறேன்.

அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் , ஒரு சராசரி ரசிகனாக என்னை கவர்ந்த டாப் ஃபைவ் கமல் படங்களை பட்டியிலிட விரும்புகிறேன்.



5  கல்யாண ராமன் 

இப்போது வழக்கொழிந்து விட்ட ஒரு பழக்கம் முன்பெல்லாம் இருந்தது. அதுதான் சினிமா கதை சொல்வது. டைட்டில் முதல் எண்ட் கார்ட் வரை , வரிசையாக காட்சி வாரியாக சினிமா கதை சொல்லும் கில்லாடிகள் அன்று இருப்பார்கள்.

கேபிள் டிவி , சிடி இல்லாத அன்றைய காலத்தில் இந்த கில்லாடிகளுக்கு பெரிய மதிப்பு.  கல்யாணராமன் வெளிவந்த போது நான் சின்னப்பையனாக இருந்திருப்பேன் என நினைக்கிறேன்.  பெரிய பையன்கள் கதை சொல்லும்போது கேட்டு இருக்கிறேன். பேய் கமல் காட்சிக்ளை சுவையாக சொல்வார்கள் , இப்படி கதை கேட்டு கேட்டே , அந்த படம் மீது ஈர்ப்பு வந்தது.  பிறகு படம் பார்க்கும்போதும் சுவையாகவே இருந்தது. பாடல்கள் அபாரம்.


4 மகா நதி 

  பொழுதுபோக்குக்காக சினிமா பார்ப்போம். ஆனால் ஒரு படத்தை பார்த்து , மனம் கமக்க வெளியே வரும் படங்கள் வெகு குறைவே. அந்த வகையில், ரசிகர்களால் மறக்க முடியாத படம் மகா நதி.

இதில் வரும் எந்த ஒரு கேரக்டரையும் நம்மால் மறக்க முடியாது. தேவையற்ற காட்சிகளோ , கேரக்டர்களோ படத்தில் இருக்காது என்பது சிறப்பம்சங்கள்

 நீண்ட நாட்களாக பிரிந்த மகளை , கமல் மீட்பார். தூக்கத்தில் அவள் உளறுவதை கேட்டு , கமல் அடையும் வேதனை, அனைவர் மனதையும் கனக்க செய்யும்.

3 இந்தியன் 

வழக்கமாக ஷங்கர் படங்களில் காமெடி அவ்வளவாக சோபிக்காது.  ஆனால் இந்த படத்தில் , சீரியசான கதை என்றாலும் , படம் முழுக்க காமெடிக்கு குறைவிருக்காது.  எல்லா காட்சிகளையும் கமலே டாமினேட் செய்யாமல் , கவுண்டமணி- செந்திலுக்கும் ஸ்கோப் இருக்கும். கமல் படங்களில் இது அபூர்வம்.


இரு கமல்களுக்கும் ஏற்படும் மோதல்கள், மகன் கமல் தந்தையை தகாத வார்த்தையில் திட்டும்போது , தந்தையின் அதிர்ச்சி , வயதானவர்களின் மேனரிசத்தை சரியாக செய்திருப்பது என பல காட்சிகளை ரசிக்கலாம்.

2 மூன்றாம் பிறை 

கவியரசு கண்ணதாசன் கடைசியாக இந்த படத்துக்குத்தான் பாடல் எழுதினார் என்ற சிறப்பு இந்த படத்துக்கு உண்டு. பிரிவை இதை விட சோகமான சொன்ன படம் ஏதும் இல்லை. அந்த அளவுக்கு இயல்பாக , இரக்கம் இல்லாமல் பிரிவு நிகழும்.

பிரிதல் என்பது முடிவாகிவிட்டால் , அதற்கு முன் இருந்த உறவு எந்த விதத்திலும் அந்த பிரிவை தடுக்க இயலாது. அந்த வகையில், அந்த உறவுக்கு அர்த்தமே இல்லை. ஆனால் அந்த உறவு , சம்பந்தப்பட்ட ஒருவர் பார்வையில் உன்னதமானது.
கிளைமேக்ஸ் காட்சியை , யாராலும் மறக்க முடியாது.

1. நாயகன் 


எழுத்து சித்தரின் அபார வசனம் முத்திரை பதித்த படம் இது.  பல வசனங்கள் , பலமுறை பலரால் பயன்படுத்தப்பட்டு விட்டன. ( உதாரணம் - நல்லவனா கெட்டவனா, நாலு பேரு நல்லா இருக்கணும்னா, நான் அடிச்சா செத்துடுவ )

இசை ஞானியும் பட்டையை கிளப்பி இருந்தார். ஆனால் , சமீபத்திய பேட்டியில் நாயகன் குறித்து பேசுகையில் , இளையராஜா பெயரை ஏனோ தவிர்த்து விட்டார்.

இந்த படம் வரும்போது , போட்டியாக  ரிலீஸ் ஆன படம் ரஜினியின் மனிதன், அது ஒரு சாதாரண மசாலா படம் என்றாலும் , நாயகனை விட அதுதான் நன்றாக ஓடியது.

அதுவரை ரஜினிக்கு போட்டியாக மசாலா படங்களில் நடித்து வந்த கமலுக்கு , இந்த படம் மூலம் வேறோர் பாதையை காட்டினார் மணிரத்தினம். அந்த வகையில், கமலுக்கு திருப்பு முனையாக அமைந்த படம்தான் நாயகன்.


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா