Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Friday, November 9, 2012

கற்பழிப்பு கடவுள் செயலாம் - ஒபாமாவுக்கு உதவிய குடியரசு கட்சியின் லூஸ் டாக்


 தேர்தல் முடிவுகள் , பிரச்சாரத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. ஆனால் பிரச்சாரமும் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை.  நம் ஊரில் பிரச்சாரம் , அன்பளிப்புகள் , பண கவர் போன்றவை மட்டுமே தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது உண்டு.

அமெரிக்க தேர்தலில் பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவங்கள் ஓரளவு தேர்தல் போக்கை பாதித்தன.

ஆரம்பத்தில் ஒபாமா மிகவும் முன்னணியில் இருந்தார். ஆனால் ரோம்னியின் அதிரடி பிரச்சாரம் அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. ஒபாமா மிகவும் சாஃப்டாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். லேசாக  நிறவெறியையும் பிரச்சாரத்தில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவின் வேலை இல்லாத்திண்டாட்டம் , வெள்ளையர்களை அதிகம் பாதித்த நிலையில், ரோம்னியின் பிரச்சாரத்துக்கு பலன் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். விளைவாக ரோம்னிதான் வெல்வார் என்ற நிலை ஏற்பட்டது.

அப்படியே ஒபாமா வென்றாலும் கூட , மொத்த வாக்குகள் ரோம்னிக்குதான் அதிகம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது ( இப்போது கூட - ஒபாமா அதிக வாக்குகள் பெற்றாலும் கூட - இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவுதான் . )

முதல் கட்ட விவாதத்தில் அதிரடியாக பேசி தன் நிலையை மேலும் வலுவாக்கி கொண்டார் ரோம்னி.

ஆனால் அதன் பின்புதான் ரோம்னியின் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிக வாய் அவருக்கே பாதிப்பு ஏற்படுத்தியது.

குறிப்பாக பெண்களின் வெறுப்பை நன்றாக சம்பாதித்து கொண்டார். அவர் லூஸ் டாக் போதாது என அவர் கட்சியினரும் நன்றாக லூஸ் டாக் விட்டனர்.

அபார்ஷன் பற்றிய விவாதத்தில் அவர் கட்சியினரின் உளறினர். ஒருவர் உதிர்த்த பொன்மொழி “ கற்பழிப்பு கொடூரமானதுதான். ஆனால் அந்த  கொடூரத்துக்கு இடையிலும் குழ்ந்தை உருவாகிறது என்றால் அது கடவுள் செயலாகும். அந்த கருவை கலைப்பது தவறு “ என்பது போல பேச பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு மன்னிப்பு கேட்டாலும், பெயர் கெட்டது கெட்டதுதான் .

அதே போல வெள்ளையர்களை சோப் போடும் முயற்சியில் ,  மற்றவர்கள் வாக்குகளை கணிசமாக இழந்தார் ரோம்னி.

கடைசி கட்ட விவாதத்தில் ஒபாமாவின் பேச்சு அட்டகாசம். குறிப்பால , அமெரிக்காவின் கப்பல் படை ப்லம் ஒபாமா ஆட்சியில் குறைந்து விட்டது என்ற ரோம்னியின் குற்றச்சாட்டுக்கு , ஒபாமாவின் பதில் ஃபர்ஸ்ட் கிளாஸ்


ஆனாலும் போட்டி கடுமையாகவே இருந்தது. கடைசி வில்லனாக வந்ததுதான் , சாண்டி புயல். இது பிரச்சார வேகத்தை தடுத்தது. ஆனால் அதிபர் என்ற முறையில் ஒபாமா நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகள் ஒபாமாவுக்கு பெரிய ப்ளசாக அமைந்தது.


தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரிவது இதுதான்.

பெருவாரியான வெள்ளையர்கள் ரோம்னிக்குத்தான் வாக்களித்து இருக்கின்றனர். இதே டிரண்ட் எல்லா பிரிவினரிடம் இருந்து இருந்தால் , ரோம்னி அபார வெற்றி பெற்று இருப்பார்.

ஆனால்,


  • சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒபாமா அலை வீசி இருக்கிறது.
  • பெண்கள் மத்தியிலும் ஒபாமாவுக்கே அதிக ஆதரவு.
  •  நடு நிலை வாக்காளர்களும் ஒபாமாவுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.
  • இளைஞர்கள் பெருவாரியாக ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர்
  • ரோம்னி ஒரு செல்வந்தர். அவருக்கு ஏழைகளின் நிலை புரியாமல் பேசுகிறார் என்ற ஒபாமாவின் பிரச்சாரம் எடுப்பட்டுள்ளது. குறைவான வருமானம் உள்ளவர்கள் , ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா மீதான பயம் போய் விட்டது, மீண்டும் நம் பலத்தை நாம் காட்ட வேண்டும் என வெறியூட்டும் பேச்சுகளை பேசி, வெற்றி பெறும் நிலையில் இருந்தார் ரோம்னி. 

ஆனால் , சில பிரிவு மக்களிடையே வீசிய ஆதரவு அலைதான் ஒபாமாவை வெற்றி பெற வைத்துள்ளது.

   முன்பே சொன்னது போல ஒபாமாவின் வெற்றி உலக அமைதிக்கு நல்லது. 





Friday, November 2, 2012

புயல், பேரிடர்கள், போர்களும் தேர்தல் முடிவுகளும்


 சாண்டி புயல், தானே, நீலம் , யுத்தங்கள், நில நடுக்கம் போன்றவை இயல்பான வாழ்க்கையை பாதிக்க கூடியவை. தேர்தல் நேரத்தில் ஏற்பட்டால் , ஒட்டு மொத்த தேர்தல் போக்கையே மாற்றிவிட கூடும்.

தேர்தல் ஆர்வம் குறைந்து போய் , பலர் வாக்களிக்காமல் போகலாம். திடீர் பாதிப்பால் ஏற்படும் வருத்தம் , கோபமாக மாறி யார் மீதேனும் திரும்பலாம்.

பேரிடர் ஏற்பட்டால் , கண்டிப்பாக அது தேர்தல் முடிவை மாற்றும். ஆனால் யாருக்க்கு சாதகமாக மாறும் ? ஆளும் கட்சிக்கா எதிர் கட்சிக்கா?

அமெரிக்க தேர்தலில், சாண்டி புயல் யாருக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தும்?

வரலாற்றை புரட்டி பார்த்தால் , சில சுவையான விஷ்யங்கள் தென்படுகின்றன.

பிஜேபி ஆட்சியில் இருந்து , அடுத்த தேர்தலை சந்திக்க வேண்டி இருந்தது. அப்போது அவர்களுக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த சாதனையும் இல்லை. அப்போதுதான் கார்கில் யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தத்தின் விளைவுகள் , பீஜேபிக்கு சாதமாக அமைந்து , வாஜ்பாயீ மீண்டும் பிரதமர் ஆனார்.


சென்ற அதிமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள் போராட்டம் , விலைவாசி உய்ரவு என அதிமுக பிரச்சினையில் தத்தளித்தது. எதிர்தரப்பில் மிக மிக வலுவான கூட்டணி. அப்படி இருந்தும் , திமுக கோட்டையான சென்னையில் அதிமுக கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் வென்றது., காரணம் சுனாமி !!

சுனாமியில் அதிமுக மேற்கொண்ட நிவாரண பணிகள் அதற்கு சாதகமான நிலையை உண்டாக்கியது.

உலக போர் முடிந்தவுடன் சர்ச்சில் தோற்றதையும் மறக்க முடியாது.

இயற்கை இடர்கள் , போர்கள் போன்றவை ஆளும் கட்சிக்குத்தான் சாதகம் என தோன்றுகிறது.  தேர்தல் நேரத்தில் காவிரி பிரச்சினை வந்தால் , அதை வைத்தே ஆளும் கட்சி வென்று விடும் என சொல்லி தெரியவேண்டியதில்லை.

ஆனால் நீண்ட கால பஞ்சம் , போர்கள் எதிர் விளைவை ஏற்படுத்தி ஆளும் கட்சிக்கு தொந்தரவை ஏற்படுத்தும்.

உதாரணமாக கர்னாடகத்தில் எஸ் எம் கிருஷ்ணா ஆட்சியில் பெரிய அளவு கெட்ட பெயர் இல்லை. ஆனால் அவர் ஆட்சி காலத்தில் மழை பொய்த்தது,. அவர் ஆட்சியின் பெரும்பாலான கால கட்டத்தில் விவசாயம் பாதிக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் அடுத்த தேர்தலில் தோற்க இது மட்டுமே காரணமாக நிகழ்ந்தது.

இந்த நிலையில் சாண்டி புயல் யாருக்கு சாதகமாக விளைவை ஏற்படுத்தும் ?

ஆரம்பத்தில் உச்சத்தில் இருந்த ஒபாமாவின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து , ரோம்னி செல்வாக்கு உயர்ந்து வந்தது. முதல் கட்ட தொலைக்காட்சி விவாதம் , ரோம்னியின் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

ஆனால், அதன் பின் ஒபாமா சுதாரித்து கொண்டார். இருவரும் சம பலத்துடன் இருந்தனர். கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் சாண்டி புயலில் , ஒபாமாவின் துரித நடவடிக்கை அவருக்கு சாதகமாக நிலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய கருத்து கணிப்புகள் ஒபாமாவே வெல்வார் என்கின்றன.

அதிபரை முடிவு செய்ய இருக்கும் போர்க்கள மகாணங்களில் ஒபாமாவே முந்துகிறார்,

ஆனால் ரோம்னி தரப்பும் நம்பிக்கையுடன் இருக்கிறது.


ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை , ஒபாமாவையே விரும்புகின்றன, ரோம்னி வென்றால் , புஷ் பாணியில் போர் வெறி ஆட்சி நடத்துவார் என நினைக்கின்றன,

ஆனால் , வேலை வாய்ப்புக்கு சாதகமாக இருப்பார் என்ற அடிப்படையில் இந்தியர்கள் பலர் ரோம்னியை விரும்புகின்றனர்.

அமெரிக்க வாக்காளர்கள் யாரை விரும்புகின்றனர் என்பது சில தினங்களில் தெரிந்து விடும்.

இன்றைய நிலையில் ஒபாமாவையே விரும்புகின்றனர் என்பதே நிலைமை.

Tuesday, October 23, 2012

அமெரிக்காவை கலக்கும் ஒபாமாவின் பஞ்ச் லைன் - இறுதிக்கட்ட விவாதத்தின் சுவாரஸ்யங்கள்

உலகம் முழுதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட , அமெரிக்க அதிர்பர் வேட்பாளர்களுக்கிடையேயான மூன்றாவது கட்ட விவாதம் எதிர்பார்த்தபடி விறுவிறுப்புடன் நடந்தது. எதிர்பாராத சில விஷ்யங்களும் நடந்தன.

அமெரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் குறித்தான இந்த விவாதத்தில் , இரு வேட்பாளர்களுமே இந்தியாவைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் பாகிஸ்தான் , சீனா குறித்து விவாதித்தார்கள்.

கருத்து கணிப்புகளில் , ஒபாமா மற்றும் ரோம்னி ஆகிய இருவருமே 47% வாக்குகளுடன் சம நிலையில் இருந்தனர், ஆரம்ப கட்டங்களில் பின் தங்கி இருந்த ரோம்னி கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி வந்தார். முதல் விவாதத்தில் ஒபாமா சற்று சொதப்பி விட்டார். இதை பயன்படுத்தி ரோம்னி அந்த விவாதத்தின் மூலம் தன் செல்வாக்கை மேலும் அதிகரித்து கொண்டார்.

ஆனால் இரண்டாவது விவாதத்தில் ஒபாமா விழித்தெழுந்து , அதிரடியாக செயல்பட்டு தன் முத்திரையை பதித்தார். ( முதல் விவாத்த்தில் ) நன்றாக தூங்கி ஓய்வெடுத்ததால்தான் , இரண்டாவது விவாதத்தில் சிறப்பாக செயல்பட முடிந்ததாஜ ஒபாமா நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட விவாதம் நடந்தது. இதுதான் கடைசி விவாதம் என்பதால் , தம் தரப்பை எடுத்து வைக்க இரு வேட்பாளர்களும் கடும் பயிற்சிகள் , ஒத்திகை செய்து வந்தனர்.

இரண்டாம் கட்ட விவாதத்தில் லிபியாவில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது குறித்து கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த தாக்குதல் குறித்து ஒபாமா நிர்வாகம் கருத்து தெரிவிக்கவே பல நாட்கள் ஆனது என ரோம்னி கிண்டல் செய்தார், அதுதான் உடனடியாக ஒபாமா அதை கண்டித்தாரே என விவாத ஒருங்கிணைப்பாளர் எடுத்து கொடுக்க, ஆமாம் . கொஞ்சம் சத்தமாக சொல்லுங்கள் ரோம்னி கேட்கட்டும் என ஒபாமாவும் பதிலடி கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக , இதிலும் விவாதம் நடக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் , இதைப்பற்றி  பேசப்படாதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அதே போல ”வருங்கால வல்லரசு ” நாடான இந்தியாவைப் பற்றியும் இருவருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை.ஆனால் சீனாவைப் பற்றி தனியாக நேரம் ஒதுக்கி ( 15 நிமிடங்கள் )  விவாதிக்கப்பட்டது.

அதேபோல பாகிஸ்தான் குறித்தும் கொஞ்சம் பேசப்பட்டது. அணு ஆயுத வல்லமை பெற்ற அந்த நாட்டை கண்காணித்தபடி இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்தாக இருந்தது.

ஈரானை அடக்க ஒபாமா தவறி விட்டார், சிரியாவில் நிலை எல்லை மீறி செல்கிறது , அமெரிக்காவைப்பார்த்து பயப்படும் நிலை இப்போது இல்லை. இதற்கு காரணம் ஒபாமாதான் என்றெல்லாம் அடுக்கடுக்காக ரோம்னி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதற்கெல்லாம் ஒபாமா பதிலடி கொடுத்தார். வெளியுறவு கொள்கைகளைப் பொறுத்தவரை ரோம்னி ஒரு கத்துக்குட்டி என கிண்டல் செய்தார்.

பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி இராக் படையெடுப்புக்கு ஆதரவு கொடுத்தீர்கள்.. ஆனால் அங்கு ஆயுதங்கள் ஏதும் இல்லை.  நீங்களோ இராக்கில் இன்னும் நம் படைகள் இருக்க வேண்டும் என சொல்கிறீர்கள். உங்கள் கட்சி உட்பட அனைவரும் ரஷ்யாவுடன் இணக்கமாக செல்ல நினைக்கையில் , நீங்கள் ரஷ்யாதான் எங்கள் பெரிய எதிரி என்கிறீர்கள். வெளியுறவு கொள்கையில் முடிவெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்பது உண்மைதான் . ஆனால் நீங்கள் ஏதாவது கருத்து சொல்ல முயன்றால் அது தவறாகதான் முடிகிறது.

இப்படி எல்லாம் கிண்டல் செய்த ஒபாமா , ஒரு விஷ்யத்தில் அடித்த கமெண்ட்தான் இப்போது அமெரிக்காவை கலக்கி கொண்டு இருக்கிறது.

1916ல் இருந்ததை விட குறைவான போர் கப்பல்கள்தான் தற்போது அமெரிக்காவிடம் இருக்கிறது , அமெரிக்க ராணுவம் பலவீனமாகி விட்டது என்பது ரோம்னியின் குற்றச்சாட்டு.

இதற்கு ஒபாமா ஒபாமா சொன்ன பதில்தான் இப்போது ஹாட் டாபிக்காக விவாதிக்கப்படுகிறது..

1916யை விட இப்போது குறைவான கப்பல்கள்தான் இருப்பதாக சொல்கிறீர்கள். அதோடு ஏன் விட்டு விட்டீர்கள். அப்போது இருந்ததை விட , இப்போது குதிரைப் படை , கத்திச்சண்டை படை எல்லாம் பலவீனமாகிவிட்டது என சொல்ல வேண்டியதுதானே,, அட அப்பரெண்டிஸ்களா,, ராணுவம் அன்றைய நிலையில் இருந்து வெகுவாக மாறி இருக்கிறது. விமானம் தாங்கி கப்பல்கள் , நீர் மூழ்கி கப்பல்கள் என்றெல்லாம் நிறைய இருக்கின்றன. கப்பல் எண்ணிக்கையை வைத்து ராணுவ பலத்தை மதிப்பிட , இது என்ன சிறுவர்கள் விளையாடும் battleship விளையாட்டா?

ஒபாமாவின் இந்த பதிலடி நல்ல வரவேற்பை பெற்றது.ஆரம்பத்தில் இருந்தே ஒபாமா சிற்ப்பாக செயல்பட்டார்.

விவாதத்தின் முடிவில் எடுக்க்கப்பட்ட கருத்து கணிப்புகள் ஒபாமாவுக்கே ஆதரவாக அமைந்தன.

இந்த விவாதத்தில் யாருக்கு வெற்றி?

CBS news   ஒபாமா - 53 %
                   ரோம்னி - 23%
                   டிரா           - 24%
                
          CNN   - ஒபாமா - 48%
                         ரோம்னி - 40 %



இந்த விவாதத்தில் ஒபாமாவின் செயல்பாடு அவர் கட்சிக்கு உற்சாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாத முடிவு போல தேர்தல் முடிவும் அமையுமா என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.




Monday, October 22, 2012

கருத்து கணிப்பு- ஒபாமா- ரோம்னி போட்டி “டை “- யார் வென்றால் நல்லது ?


அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறந்து வரும் நிலையில், சமீபத்திய கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. NBC News/Wall Street Journal poll    நடத்திய  கருத்து கணிப்பின்படி, இருவரும் 47 சதவிகித வாக்குகள் பெற்று சம நிலையில் இருக்கிறார்கள். எனவே இது வரை முடிவு செய்யாத வாக்காளர்களின் வாக்குகள்தான் புதிய அதிபரை முடிவு செய்யப் போகின்றன.

இந்த பரபரப்பான நிலையில் , அதிபர் வேட்பாளர்களுக்கிடயேயான மூன்றாவது கட்ட விவாதம் உலகம் முழுதும் ஆர்வமாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவாதத்தின் முடிவில் எடுக்கப்படும் கருத்து கணிப்பில் , அடுத்த அதிபர் யார் என்பது ஓரளவு தெரிந்து விடும்.

அமெரிக்காவில் செய்யும் இந்தியர்கள், வேலை தேடும் இந்தியர்கள் , சீனர்கள் போன்றோருக்கு ஒபாமாவின் கொள்கைகள் எதிராக உள்ளன என்பதால் நம் மக்கள் பெரும்பாலும் ரோம்னிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

ஆனால் உலக அமைதியை கணக்கில் கொள்பவர்கள் ஒபாமா வென்றால்தான் நல்லது என்கிறார்கள்.  மற்ற நாடுகளில் மக்கள் “ அவர்களாகவே புரட்சி “ செய்து “ அமைதியான “ வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் ஃபார்முலாவை ஒபாமா பயன்படுத்துகிறாரே தவிர , முந்தைய அதிபர் ஜார்ஜ் புஷ் பாணியில் போர்களை பயன்படுத்துவதில்லை என்பதை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

ரோம்னி இதை ஒபாமாவின் பலவீனமாக சித்திரித்து பிரச்சாரம் செய்கிறார். இரானுக்கு எதிராக “ உரிய “ நடவடிக்கை எடுக்காமை , லிபியாவில் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டதற்கு “ உரிய “ பதிலடி கொடுக்காதது போன்றவற்றைத்தான் துருப்புச்சீட்டாக நம்பி வருகிறார். மூன்றாம் கட்ட விவாதத்திலும் இதைத்தான் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை அமெரிக்கர்கள் ஏற்பார்களா அல்லது தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டு , பொருளாதாரத்தை மேலும் நலிவடைய வைத்து விடக்கூடாது என நினைப்பார்களா என்பதில்தான் வெற்றி தோல்வி இருக்கிறது.


ஈராக் போரை முடிவுக்கு வந்தது , ஒசாமா பின் லேடனை கொன்றது போன்றவற்றை ஒபாமா முன் நிறுத்த இருக்கிறார்.

எனவே இந்த விவாதத்தில் சூடு பறக்கும்.

சரி, இருவரில் யார் பெற்றால் நல்லது ?


ஒபாமா வென்றால் உலகுக்கு நல்லது...
ரோம்னி வென்றால் , இந்தியாவுக்கு ( இந்தியர்களுக்கு ) நல்லது 

Saturday, October 20, 2012

ரோம்னியின் வாய் சவடால் ஒபாமாவுக்கு திருப்பு முனையா ? - அதிபர் வேட்பாளர்களின் சுவையான சில தவறுகள் !!

அமெரிக்க அதிபர் அதிபர் தேர்தலுக்கு சில தினங்களே உள்ள நிலையில் , பிரச்சாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தனது வாய் ஜாலத்தின் உதவியால் , ஒபாமாவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்திய ரோம்னி, தன் வாயாலேயே தனக்கு பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டதால் , தேர்தலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

ஒரு வேளை ரோம்னி அதிக மக்கள் வாக்குகள் பெற்றாலும் , அவை வாக்குகள் ஒபாமாவுக்குத்தான் அதிகம் கிடைக்கும் என்று பத்திரிகைகள் கருத்து தெரிவித்துள்ளன. 


அதென்ன மக்கள் வாக்குகள், அவை வாக்குகள்?

மக்கள் ஓட்டு போட்டுதான் அதிபரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்றாலும் , அமெரிக்காவில் அதிக மக்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்களோ அவர்தான் அதிபர் என்று ஒட்டு மொத்த நாட்டுக்கும் சேர்த்து கணக்கிடப்படுவதில்லை.

ஒவ்வொரு மானிலத்துக்கும் , அவை வாக்குகள் என குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒரு மானிலத்தில் , அதிக வாக்குகள் பெறும் வேட்பாளர் , அந்த மானில அவை வாக்குகள் முழுதையும் பெற்று விடுவார்.

உதாரணமாக கலிஃபோர்னியாவுக்கு 55 வாக்குகள் உண்டு. இந்த மானிலத்தில் அதிக வாக்குகள் பெறும் வேட்பாளருக்கு இந்த 55 வாக்குகள் சென்று விடும். இப்படி 270 வாக்குகள் பெற்றால் , அவர் அதிபர் ஆகிவிடலாம்.


ஒவ்வொரு மானிலத்திலும் ஒருவர் பெறும் வாக்குகளை கூட்டிப்பார்த்து , அவர் ஒட்டு மொத்தமாக அதிக வாக்குகள் பெறுகிறாரா இல்லையா என்பது பிரச்சினை இல்லை.

பொதுவாக , அவை வாக்குகள் அதிகம் பெறுபவர் அதிக மானிலங்களில் பெரும்பான்மை வாக்குகள் பெற்று இருப்பார் , எனவே ஒட்டு மொத்த வாக்குகளையும் அவர் அதிகமாகவே பெற்று இருப்பார்.

ஆனால் சில சமயங்களில் இப்படி நடக்காமல் போகலாம்., ஜார்ஜ் புஷ்ஷுடன் மோதிய அல் கோர் , ஒட்டு மொத்தமாக அதிக வாக்குகள் பெற்று இருந்தார் . ஆனால் அவை வாக்குகள் அதிகம் என்ற அடிப்படையில் புஷ் வென்றார். அதாவது , அமெரிக்கர்களில் பெரும்பான்மையினர் அல்கோருக்குத்தான் வாக்களித்து இருந்தனர். ஆனாலும் அவர் தோல்வி அடைந்தார்.

இந்த முறையும் இப்படி நடக்க கூடும் என பேசப்படுகிறது.

ஆரம்பத்தில் முன்னணியில் இருந்த ஒபாமாவை , கொஞ்சம் கொஞ்சமாக ரோம்னி நெருங்கி வந்தார். முதல் கட்ட விவாதத்தில் வாய் சவாடால் அடித்து , இன்னும் வெகுவாக நெருங்கினார்,
ஆனால் இரண்டாம் கட்ட விவாதத்தில் ஒபாமா சுதாரித்து கொண்டு விட்டார். அதே நேரத்தில் ரோம்னி லூஸ் டாக் விட்டு , பெண்களின் எதிர்ப்பை சம்பாதித்து கொண்டார், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என ஒபாமா தரப்பு மகிழ்கிறது.


தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு , சிறிய லூஸ் டாக் சக்தி வாய்ந்ததா என நீங்கள் நினைக்கலாம்.

லூஸ் டாக் அல்ல, உடல் மொழி கூட தேர்தல் முடிவை மாற்றி விடக்க்கூடும். கடந்த காலங்களில், இப்படி பல வேட்பாளர்கள் தவறு செய்துள்ளனர்.


  •  நிக்சனின் வியர்த்து போய் இருந்த முகம், படபடப்பான கண்கள் ஆகியவை அவர் நம்பத்தகுந்தவர் அல்லர் என்ற இமேஜை ஏற்படுத்தியது
  • க்ளிண்டனும் , புஷ்ஷும் மோதிய தேர்தல், புஷ்ஷிடம் கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. அவர் தன் கைக்கடிகாரத்தை பார்த்தார். இந்த ஒரு சம்பவம் அவர் செல்வாக்கை வெகுவாக பாதித்தது.
  • டுகாகிஸ் மரண தண்டனைக்கு எதிரானவர். “ உங்கள் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒருவனுக்கு மரண தண்டனை விதிப்பதை ஏற்பீர்களா ? “ என்று கேட்கப்பட்டது . “ கண்டிப்பாக மாட்டேன். எனக்கு கொள்கைதான் முக்கியம். மரண தண்டனையால் குற்றங்கள் குறைந்து விடாது என்ற என் கருத்தில் மாற்றம் இல்லை “ என்றார். கொள்கையில் உறுதி என்பதை சோதிக்க அந்த கேள்வி கேட்கப்படவில்லை. ஒரு சிக்கலான பிரச்சினையில் நாம் இருக்கும்போது , அதை எப்படி கையாள்வோம் என்பதை பார்க்கவே அந்த கேள்வி கேட்டார்கள். எந்த உணர்ச்சியும் இல்லாமல் , மெஷின் போல பதில் அளித்தது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.


 நம் ஊரில் கலைஞர் என்ன பேசுவார் , புரட்சி தலைவி என்ன பேசுவார் என்பதெல்லாம் நமக்கு முன்பே தெரியும் . எனவே பிரச்சார பேச்சு என்பது அவ்வளவு முக்கியம் அல்ல. இலவசங்கள் , கடைசி நேர பண வினியோகம் , கூட்டணி போன்றவையே வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும். ஆனால் அமெரிக்காவில் சொல்வதை செய்தாக வேண்டிய நிலை இருப்பதால், பிரச்சாரப்பேச்சுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.

எனவே இரு தரப்பும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. திங்கட் கிழமை நடக்க இருக்கும் விவாதத்தின் முடிவில் , முந்திவது யார் என ஓரளவு தெரிந்து விடும். இந்த விவாதம் இணைய தளங்களிலும் நேரடியாக ஒளிபரப்பாகிறது. 


இன்றையை நிலையில், மயிரிழையில் முன்னணியில் இருப்பது ஒபாமாதான் . அதிகம் உதார் விடாமல் , எதிரியை பேச விட்டு , வலையில் சிக்க செய்யும் யுக்தி பலன் அளிக்குமா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் 



Wednesday, October 17, 2012

அனல் பறந்த அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதம் - ஒபாமா அபாரம்


உலகெங்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நிகழ்வுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.  தொலைக்காட்சி விவாதம் , அமெரிக்க தேர்தலில் முக்கியமான ஓர் அம்சம்.

முதல் கட்ட விவாதத்தில் அதிபர் ஒபாமா அவ்வளவாக சோபிக்கவில்லை. அதுவரை கருத்து கணிப்பில் முன்னணியில் இருந்த ஒபாமாவுக்கு இது பெரிய சறுக்கலாக அமைந்து விட்டது.  ரோம்னி முகாம் உற்சாகம் அடைந்து பிரச்சாரத்தை முடிக்கி விட்டது.

ஆனால் ஒபாமாதான் முன்னணியில் இருந்தார். ஆனால் அவருக்கும் , ரோம்னிக்கும் இடையேயான இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.  இதனால் ஒபாமா தரப்பு சற்று ஆடிப்போய் விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட விவாதம் நடந்தது, இதிலும் ஒபாமா சொதப்பினால் , அவரது தேர்தல் தோல்வி கிட்டத்தட்ட உறுதி ஆகி விடும் என்றே பார்வையாளர்கள் கருதினார்கள்.

இதற்கிடையில் துணை அதிபர் போட்டியாளர்களுக்கான விவாதம் நடந்தது. இதில் ஒபாமா கட்சி வேட்பாளர் நன்றாக செயல்பட்டார். ஆனாலும் , அமெரிக்க தேர்தல்களில் , துணை ஜனாதிபதி விவாதம் ஆதிக்கம் செலுத்தியதாக வரலாறு இல்லை.

எனவே இந்த இரண்டாம் கட்ட விவாதம் உலகம் முழுதும் ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கப்பட்டது.

ஒபாமா இந்த முறை எனர்ஜிட்டாக்காக காணப்பட்டார், ரோம்னியும் முந்தைய வெற்றியின் காரணமாக உற்சாகத்துடன் காணப்பட்டார்,

விவாதத்தில் அனல் பறந்தது. கண்ணியத்தை விட்டுக்கொடுக்காமல் , ஆனால்   மற்றவரை மிரட்டும் தொனியிலும் , மிக நெருக்கமாக சென்று அச்சுறுத்தும் பாணியிலும் இருவரும் வாதம் செய்தனர்.

 நன்றாக இருந்த அமெரிக்கா, ஒபாமா ஆட்சியில் , தான் சொன்ன எதையும் செய்யவில்லை என ரோம்னி குற்றம் சாட்டினார். வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது, பொருளாதாரம் நிலை குலைந்து விட்டது என்றார்.

ஒபாமா அசரவில்லை.  தான் சொன்ன அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வருவதாகவும் , செய்ய வேண்டிய மற்றவற்றை தன் இரண்டாம் பதவிகாலத்தில் செய்து முடிப்பதாகவும் தன்னம்பிக்கையுடன் சொன்னார்.

முதல் கட்ட விவாதத்தில் பார்த்த ஒபாமாவா இது என ஆச்சர்யப்படவைத்து விட்டார்.

இதற்காகவென்றே பயிற்சியாளர்களை நியமித்து , இருவரும் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை.

ஆனாலும் , விவாத முடிவில் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் , ஒபாமாவே வென்றதாக , பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

விவாத முடிவு.

மக்களை கவர்ந்தவர் யார்.
ஒபாமா-  48 %
ரோம்னி -  46 %


கடைசி விவாதம் , வரும் திங்கட் கிழமை நடக்க இருக்கிறது.



Sunday, May 15, 2011

கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

தேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை... பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்...

சில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை...

தாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை..

இந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு வெளிவரும் சற்று முன்பு கூட நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டு இருந்தார் நக்கீரன் கோபால்..

ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது...

ஓகே...இதற்கு விளக்கம் அளிப்பாரா , அல்லது இதை அப்படியே மறந்து பத்திரிக்கை “ தர்மத்தை “ காப்பாரா என எதிர்பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி..
முதல் பக்கத்திலேயெ , நடந்த த்வறுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்..

அவரை பாராட்டுவது நம் கடமை..வேறு யாரும் இப்படி செய்து நாம் பார்த்தது இல்லை...

இதோ.. அவர் விளக்கம்

************************************

வருத்தம்

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை.. ஆனால் இந்த முறை தவறி விட்டது.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..

தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம்.. நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது..

என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளீக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.

*******************************************************

 நக்கீரனுக்கு நம் பாராட்டுக்கள்....


Wednesday, April 13, 2011

வாக்களிப்பு அதிகம் என்றால் வெற்றி யாருக்கு? - தேர்தல் அலசல்

தேர்தல் முடிந்து விட்ட நிலையில், வரலாறு காணாத ஓட்டு பதிவு கட்சிகளை குழப்பி இருக்கிறது.

வாக்களிப்பு அதிகம் என்றால் என்ன அர்த்தம் என்பது ஒவ்வொரு நாட்டுக்கும், மா நிலத்துக்கும் வித்தியாசப்படும்..

இடைத்தேர்தலில் வாக்களிப்பு அதிகம் என்றால் அது வேறு விஷயம். பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் ஆட்களை கூட்டி வந்து வாக்களிக்க செய்வார்கள் என்பதால் ஓட்டு கூடும். ஆனால் பொது தேர்தலில் அப்படி செய்ய முடியாது..

சரி,

தமிழ் நாட்டில் இது வரை வாக்களிப்பு எப்படி இருந்தது ?

அசைக்க முடியாத சக்தியாக இருந்த காங்கிரஸ் வீழ்த்தப்பட வேண்டும் என்ற அலை காரணமாக 1967ல் 76 சதவிகிதம் வாக்கு பதிவானது.

1971 ல் எந்த அலையும் இல்லை.. ஆளும் கட்சியே வென்றது... வாக்கு சதவ்கிதம் குறைந்தது ( 72 % ).. அந்த தேர்தலில் வாக்களிப்பு அதிகரித்து இருந்தால் , எதிர் கட்சி  காங்கிரஸ் வென்று இருக்கும்.

1977 ல் தி மு க அரசு கலைக்க பட்டு இருந்தது.. அலை வீசி இருந்தால், வாக்களிப்பு அதிகரித்து இருந்தால், தி மு க வென்று இருக்கும்.. ஆனால் வாக்களிப்பு குறைவு ( 61.58 % ) ..
எனவே தி மு க தோல்வி. அதிமுக வென்றது

1980ல் அதிமுக அரசு கலைக்க பட்டு  இருந்தது... வாக்களிப்பு அதிகரித்தால், அனுதாப அலை என்று பொருள்..
அதே போல வாக்களிப்பு அதிகரித்தது ( 65.42 % ) . அதிமுக வென்றது

1984 ல் இந்திராகாந்தி அனுதாப அலை வீசியது. வாக்களிப்பு கூடியது (73.47 % ) காங்கிரஸ் கூட்டணி வென்றது..

1989 ல் ,  எந்த அலையும் இல்லை..(69.79% ) அதிமுக இரண்டாக போட்டி இட்டதால், திமுக தன் வழக்கமான வாக்குகளை பெற்று வென்றது

1991ல் ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வென்றது ( 63.84 % ) இதை மீறி திமுக வெல்ல வேண்டுமானால் , திமுக கலைக்கப்ப்ட்ட அனுதாப அலை வீசி , வாக்களிப்பு அதிகரித்து இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை

1996 ல் ரஜினி வாய்ஸ் , அதிமுக எதிர்ப்பு அலை ஆகியவற்றால் ஓட்டு அதிகரித்தது ( 66.95 % ) . வழக்கமான ஓட்டு மட்டும் பதிவாகி இருந்தால் , அதிமுக - காங்கிரஸ் வென்று இருக்கும்.. ஆனால் அலை வீசியது... தி மு க வென்றது

2001 அலை எதுவும் இல்லை... வழக்கமான ஒட்டுக்கள்தான்..( 59 % _. கூட்டணி பலத்தால் அதிமுக வென்றது

2006ல் விஜயகாந்த் புதிய வாக்காளர்களை கவர்ந்து இழுத்ததால் , வாக்களிப்பு கூடியது ( 70 % ) .. அலை அற்ற தேர்தலில், கூட்டணி பலத்தால் தி முக கூட்டணி  வென்றது

****************************************

இந்த தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன. ( 76 % )
எனவே அலை வீசி இருப்பது தெரிகிறது...

கடந்த காலத்தை வைத்து பார்க்கும்போது, மாற்றத்துக்கான அறிகுறியாகவே தெரிகிறது...



ஃப்ளாஷ் நியூஸ்: யாருக்கு ஓட்டு? – ரஜினிகாந்த், சூர்யா பேட்டி


 வழக்கமாக தேர்தலில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினி, இந்த தேர்தலை பொறுத்தவரை எதுவும் பேசவில்லை..

இந்த நிலையில் தேர்தல் நடக்கும் நாளான இன்று அவர் தன் மவுனத்தை கலைத்தார்.
நிருபர்களிடன் பேசிய அவர் இந்த தேர்தலில் ஊழல்தான் முக்கிய பிரச்சினையாக இருக்கும் என்றார். அடித்த்ட்டு மக்கள் , விவசாயிகள்  ஆகியோர் இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றார்.

உங்கள் ஓட்டு யாருக்கு , எந்த கட்சி வெல்லும் போன்ற கேள்விகளுக்கு அவர்  நேரடியாக பதில் அளிக்கவில்லை.
எந்த கட்சி வெல்லும் என சொல்ல விரும்பவில்லை.. இந்த தேர்தல் தமிழ் நாட்டுக்கு மிக முக்கிய தேர்தல் என்பதை மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
ஊழலுக்கு எதிராக இயக்கம் எதுவும் ஆரம்பிக்கும் உத்தேசம் இல்லை.. அதைத்தான் அண்ணா ஹசாரே செய்கிறாரே? அதை ஆதரிக்கிறேன். அவர் உண்ணாவிரதம் இருந்த போது சந்திக்க நினைத்தேன். முடியாமல் போய் விட்ட்து என்றார்.

தமிழ் நாடு முழுதும் விறுவிறுப்பாக வாக்கு பதிவு நடந்து வருகிறது... ஏதோ ஓர் அலை வீசுவது தெளிவாக தெரிகிறது..
ஆளும் கட்சி ஆதரவு அலையா ? எதிர்ப்பு அலையா என தெரியவில்லை..
இது ஆளும் கட்சிக்கு எதிரான அலை என சீமான் தெரிவித்தார்.
மக்கள் குடும்பம் குடும்பமாக வாக்களித்து வருகின்றனர். கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் என்றார் அவர்.
நடிகர் சூர்யா பேசுகையில், ஊழல்தான் இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினை..அந்த அடிப்படையில் வாக்களித்தேன் என்றார் 

Friday, April 1, 2011

தேர்தல் வெற்றி யாருக்கு? - கருத்து கணிப்பு முடிவுகள்


இது வரை நடந்த தேர்தல்களில் விறுவிறுப்பு குறைவான தேர்தல் என்றால் அது இந்த தேர்தல்தான்...



பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என சிலர் நினைப்பதால், ஒரு தரப்பு பிரச்சாரத்தில் மந்தமாக இருப்பதால்,  எதிர் தரப்பும் மந்தமாக இருக்க வேண்டிய நிலை..


இந்த நிலையில், இந்தியா டுடே கருத்து கணிப்பு வெளியிட்டுள்ளது..


பணம் கொடுப்பது, தேர்த்தல் முடிவில் மாற்றம் ஏற்படுத்தாது என்கிறது கருத்து கணிப்பு

PROJECTIONS FOR ASSEMBLY ELECTIONS 2011
TAMIL NADU
WEST BENGAL
Alliance
Vote%
Seats
ADMK+
50
164
DMK+
45
68
Others
5
2
Total
100
234
Alliance
Vote%
Seats
LEFT
43
101
TMC+
44
182
Others
12
11
Total
100
294
KERALA
ASSAM
Alliance
Vote%
Seats
LDF
40
41
UDF
48
96
Others
12
3
Total
100
140
Alliance
Vote%
Seats
INC
32
46
AGP
25
38
BJP
12
15
AUDF
14
15
Others
16
12
Total
100
126

Wednesday, March 30, 2011

நான் அடித்தேனா?- விஜயகாந்த் பதில்






 நடிகன் என்றால் தப்பானவன், பயங்கரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். அபப்டி பார்த்தால் எம் ஜி ஆர் தவறானவரா என தே மு திக தலைவர் விஜய்காந்த லாஜிக்கலாக பிரச்சாரம் செய்தார்.

தன் கட்சி வேட்பாளரை அடித்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி சானல் செய்தி ஒளிபரப்பி வருகிறது..

இதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜயகாந்த் பேசிய விபரம்...

தர்மபுரியில் நான் பேசியபோது , மைக் கீழே விழுந்து விட்டது. அதை எடுத்து தர என் கட்சிகாரர் மேலே எழ முயன்றார்... நீ இரு,,, நானே எடுத்து கொள்கிறேன் என அவர் தலையில் கை வைத்து அமர செய்தேன்..


அந்த காட்சியை அடிக்கடி  ரிவைண்ட் செய்து , வேகப்படுத்தி  போடுவதால், நான் அவரை பலமுறை  அடிப்பது போல காட்சி அளிக்கிறது..


என் கட்சிக்காரனை, தொனடனை வழினடத்தும் உரிமை எனக்கு உண்டு.. அதை கேட்க தி மு க வுக்கு என்ன தகுதி இருக்கிறது? வேட்பாளராக இருந்தாலும், உயர் பதவியில் இருந்தாலும், கட்சி தலைவர் என்ற முரையில் என் கடமையை நான் செய்வேன்..


ஆனால் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள தி மு க , இது போன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களை என் மீது வைக்கிறது....


அவர்கள் அளவுக்கு தரம் தாழ்ந்து போகாமல் , நம் கடமையை நாம் செய்து, வெற்றி பெற வேண்டும்....

இவ்வாறு அவர் பேசினார்

Sunday, March 20, 2011

உருக்கமான காட்சிகள்.. அம்மாவை சந்திக்கும் வைகோ. புறக்கணிப்பை கைவிட கட்சிகள் வேண்டுகோள்


தேர்தலை புறக்கணிப்பது என்ற வைகோவின் முடிவு தங்களுக்கு வேதனை அளிப்பதாகவும் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் மா நில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார்.

வைகோவின் கலக்கல் முடிவு- கலக்கத்தில் ஜெ, முக - சூடு பறக்கும் மதிமுக அறிக்கை


கடந்த சில நாட்களாக  நடந்து வந்த ஊசலாட்டம் முடிவுக்கு வந்தது… இந்த தேர்தலில் போட்டி இல்லை என மதிமுக அறிவித்துள்ளது..இதன் மூலம் அடுத்த தேர்தலில் ஒரு முக்கிய சக்தியாக இருக்கும் வாய்ப்பை மதிமுக மீண்டும் பெற்றுள்ளது..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா