Tuesday, January 22, 2019

அஜித் படம் இயக்க விஜயிடம் அனுமதி - இயக்குனர் அனுபவம்


வசூலில் விஞ்சி நிற்பது பேட்டயா விஸ்வாசமா என விவாதம் அனல் பறக்கிறது,,,   டீனேஜ் பருவத்தில் இது சுவையான விவாதமாகும்..  வரவேற்கத்தக்கதும் கூட.. காரணம் எல்லோருமே இதை கடந்துதான் வந்திருப்போம்

ஆனால் சில வியாபாரிகள் இந்த விவாதத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது தவறு...

காரணம் இதில் எல்லாம் கற்றுக்கொள்ள ஒன்றும் இல்லை,, வசூல் வெற்றி என்பது படத்துக்கு பெருமையோ சிறுமையோ அல்ல

உதாரணமாக நாயகன் படத்தை விட மனிதன் படம்தான் அதிக வசூலைப் பெற்றது.,,,,அதனால் நாயகன் படத்தின் பெருமை குறைந்து விட்டதா என்ன? இரண்டு படங்களையும் விட விஜய்காந்தின் உழவன் மகன் பல இடங்களில் நல்ல வசூல்...  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் மனிதன் மாபெரும் வெற்றிப் படம்.. நாயகன் என்றும் நினைவுகூரப்படத்தக்க முக்கியமான படம் ....

அவ்வளவு ஏன் ? தளபதி குணா ஆகிய படங்களை விட சில இடங்களில் “ தாலாட்டு கேட்குதம்மா “ “ பிரம்மா “ படங்களின் வசூல் அதிகம்,,  ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் தளபதி மெகா ஹிட்... குணா மிகச்சிறந்த கிளாசிக்

அவ்வளவு ஏன் ? பல சந்தர்ப்பங்களில் ராமராஜன் படம் அப்போதைய முன்னணி நாயகர்கள் அனைவரையுமே வசூலில் மிஞ்சியதும் உண்டு... எனவே வசூல் அக்கப்போர்கள் எல்லாம்  நீண்ட கால நோக்கில் எந்த முக்கியத்துவமும் அற்றவை.. ஆனால் அவை தவறு என்பதல்ல.. சின்ன வயதில் அது சிறந்த பொழுதுபோக்குதான்

ரசிகர்கள் இப்படி சண்டையிட்டாலும் கலைஞர்கள் அப்படி இருப்பதில்லை.

இயக்குனர் பேரரசு எழுதிய ” என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள் “ என்ற நூல் படித்தேன்..   ரஜினி , கமல் , அஜித் , விஜய் , எம் ஜி ஆர் , கலைஞர் , ராஜேஷ் , மனோரமா , பாரதிராஜா , பாக்யராஜ் உட்பட பலர் குறித்து எழுதியுள்ளார்.


கமல் , ரஜினியை இயக்கிய எஸ் பி எம் போல விஜய் அஜித் என பணிபுரிந்தவர் அவர்..  அவரிடம் நிறைய எதிர்பார்த்தோம் .. ஆனால் குடும்ப பிரச்சனைகள் அவர் வளர்ச்சிக்கு தடை போட்டன,,  மீண்டு வருவார் என எதிர்பார்ப்போம்...


அந்த புத்தகத்தில் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக உள்ளன...


இவர் எழுதிய சிறுகதை ஒன்றை தாய் இதழில் படித்துதான் ராம நாராயணன் இவரை தன் உதவியாளராக சேர்த்துக்கொண்டு திரைப்பயணத்தை ஆரம்பித்து வைத்தார்

அதன் பின் தனியா பிரிந்த பின்னும் கூட , ஏதேனும் பிரச்சனை என்றால் என்னிடம் மீண்டும் வா என் அன்பாக கூறி அனுப்பிய அன்புள்ளம் கொண்டவர் ராம நாராயணன்.. ஏன் எப்போதும் மிருகங்களை வைத்து எடுக்கிறீர்கள்.. சமுதாய சிந்த்னைகளை காட்டலாமே என்று கேட்டதற்கு “ சோறு “ என்றொரு நல்ல படம் எடுத்து பல மாதங்கள் சோற்றுக்கு கஷ்டப்பட்ட கதையை சொன்னாராம் அவர்


நடிகர் விஜய் பல நல்ல இயக்குனர்களை உருவாக்கியுள்ளார்.. எந்த சிபாரிசும் இல்லாமல் , தான் சொன்ன கதையை மட்டுமே நம்பி தனக்கு திருப்பாச்சி பட வாய்ப்பை  அளித்ததை நன்றியுடன் பதிவு செய்துள்ளார்..  அடுத்து சிவகாசி பட வாய்ப்பும் அளித்து , படம் வென்றதும் கார் ஒன்றை பரிசளித்ததையும் சொல்லி இருக்கிறார்



அப்போது ஏ வி எம் நிறுவனம் இவரை அழைத்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது... விஜயால் அறிமுகம் ஆன தன்னை அஜித் ஏற்பாரா என அச்சத்துடன் ,  நான் தான் இயக்குனர் என அஜித்திடம் சொன்னீர்களா என கேட்டார்,.,, ஆமாம் ..,,சொன்னோம்.. அவருக்கும் மகிழ்ச்சிதான் என்றது ஏவி எம் நிறுவனம்


எதற்கும் விஜயிடம் இதை சொல்லிவிடுவோம் என அவரிடம் சொன்னதற்கு “ ரொம்ப மகிழ்ச்சினா.,,, நல்ல விஷ்யம்.... இதை எல்லாம் என்னிடம் சொல்லி அனுமதி வாங்க வேண்டியதில்லை... எனக்கு சந்தோஷம்தான் “ என சொன்னது மட்டும் அன்றி , பட பூஜைக்கு வந்து வாழ்த்தினார் விஜய்..

அஜித் வீட்டுக்கு பல முறை டிவி எஸ் 50யில் சென்றிருக்கிறார் பேரரசு,,, ஷாமிலி குழந்தை நட்சத்திரமாக ராம நாராயாணன் படத்தில் நடித்தபோது பழக்கம் என்பதால் ஒரு துணை இயக்குனராக குடும்ப நண்பராக சென்றிருக்கிறார்... இப்போது இயக்குனராக , அவரிடம் கதை சொல்வதற்கு அவர் வீட்டுக்கு விஜய் பரிசளித்த காரில் சென்றதை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்


பாரதிராஜாவை கிரக பிரவேசத்துக்கு அழைத்தபோது அன்றைய தேதியில் பிசி என்றார் பாரதிராஜா... உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று கேட்டு அந்த தேதியில் கிரகபிரவேசத்தை வைத்தார் பேர்ரசு..

பாரதிராஜா வந்து பார்த்தபோது வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் வேறு விருந்தினர்கள் யாரும் இல்லை... என் விழாவுக்கு நீங்கள் மட்டும் வந்தால்போதும் என்பதால்தான் இந்த ஏற்பாடு.,,காரணம் உங்களைப் பார்த்து உருவானவன் நான் என சொல்லி அவரை நெகிழச்செய்திருக்கிறார் பேர்ரசு

ரஜினி ரசிகனான இவர் சின்ன வயதில் 60 கிமீ சைக்கிள் மிதித்து மதுரையில் ரஜினி படம் பார்த்தவர்

அப்படிப்பட்ட ரஜினி இவர் படங்க்ளை பார்த்து விட்டு ( திருப்பாச்சி , சிவகாசி ) போன் செய்து பாராட்டியதை பெருமையாக நினைக்கிறார்.,,  ரஜினிக்கு பிரத்யேகயமாக திருப்பதி படம் திரையிட்டப்பட்டு அவருடம் படம் பார்த்ததையும் சொல்லி இருக்கிறார்


வாலி , வைரமுத்து போன்றோருடனான அனுபவம் , இவர் பாடால் குறித்து விஜ்யின் கமெண்ட்,,,  நெகிழ வைத்த எஸ் பி எம்  , ஆச்சர்ய்படுத்திய மணிர்த்னம் என பல தகவல்கள்’

கண்டிப்பாக படியுங்கள்


என்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள் - இயக்குநர் பேரரசு
பக்.160; ரூ.110; 
கற்பகம் புத்தகாலயம்

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா