Thursday, January 24, 2019

அராத்துவின் பொண்டாட்டியில் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா , ராஜேஷ்குமார்


 சில மாதங்களுக்கு முன்பு , திமுக பேச்சாளர் ஒருவர் நடத்தும் இலக்கிய ( ? !! ) பத்திரிக்கையில் ஒரு சிறுகதை வெளிவந்தது... மதுரைப் பகுதியை சார்ந்த ஒரு நாட்டுப்புற கலைஞரின் தனிப்பட்ட வாழ்வு அவர் பெயரைக் குறிப்பிட்டு , அவரது அந்தரங்க விஷ்யங்கள் கதை என்ற பெயரில் வெளி வந்திரிந்தது...இது அந்தப் பகுதி மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது...

இலக்கிய வட்டாரமே வெட்கி தலை குனிந்தது,,, மஞ்சள் பத்திரிக்கைகளில்கூட , கிசுகிசு பாணியில் ஒளிவு முறைவாகத்தான் எழுதுவார்கள்... இப்படி நேரடியாக ஒரு கலைஞனை இழிவு படுத்தி ஊடக அறத்தை மீறி இருந்தது அந்த இதழ்,,,


   பிரபலங்கள் பெயரை இப்படி நேரடியாக குறிப்பிட்டு தனிப்பட்ட விஷ்யங்ககளை எழுதுவது இலக்கியமாகாது


   இப்படி நிஜத்தை அப்பட்டமாக எழுதுவது தவறு என்றால் , தமது பகல் கனவுகளை பிரபலங்கள் பெயரில் எழுதுவதும் தவறுதான்

   அல்லது சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்காக பிரபலங்கள் பெயரையும் தன் பெயரையும் கதாபாத்திரங்களுக்கு வைப்பவர்கள் இருக்கிறார்கள்..

இப்படி எதுவும் இல்லாமல் , கலாப்பூர்வமாக தமது படைப்புகளில் நிஜ மனிதர்களை உலவ விடுபவர்கள் பலர் உண்டு.. இப்படி வெற்றி அடைந்த படைப்புகளும் பல உண்டு


அந்த வெற்றிகரமான படைப்புகளில் ஒன்றாக சேர்கிறது அராத்துவின் பொண்டாட்டி நாவல்


பல பெயர்களை குறியீட்டு ரீதியாக பயன்படுத்தி இருக்கிறார்... கற்பனைக்கும் நிஜத்துக்கும் நடுவில் அழகாக கையாண்டு இருக்கிறார்...கொஞ்சம் பிசகி இருந்தாலும் காமெடி ஆகி இருக்கும்...அல்லது ஆரம்பத்தில் சொன்னதுப்போல வக்கிரம் ஆகி இருக்கும்


சரி ..கதையில் வரும் சில பாத்திரங்களையும் அவற்றின் குறியீட்டு முக்கியத்துவத்தையும் பார்ப்போம்

பொண்டாட்டி நாவலின் சில பாத்திரங்கள்

1. ஜெயமோகன்

சில உள் நோக்கங்கள் இருந்தாலும் மிகச்சிறந்த புத்திசாலி... விபரம் தெரிந்தவன்   அவனுடைய கிளாஸ் யாருக்கும் வராது..

2 சாரு நிவேதிதா

மகாபாரதத்தில் இளவரசர்களின்  போரிடும் திறமை குறித்த கண்காட்சி ஒன்று நடக்கும்...அர்ச்சுனனின் திறமையை பார்த்து அனைவரும் அசந்து போய் நிற்பார்கள்..இவனை விட திறமைசாலி உலகிலேயே இல்லை என நடுவர் அறிவிப்பார்... ஏன் இல்லை என ஒரு குரல் கேட்கும்... யார் என அனைவரும் பார்ப்பார்கள்..அங்கே கர்ணன் வந்து கொண்டு இருப்பான்...அர்ச்சுனனை மிஞ்சிக் காட்டுவான் கர்ணன்

அதுபோல நாவலில் பல பாத்திரங்கள் வந்து போகும்...கடைசி நேரத்தில் எண்டர் கொடுக்கும் சாரு கேரக்டர் அதுவரை உச்சத்தில் இருந்த ஜெயமோகன் கேரக்டரையே அசைத்துப்பார்க்கும்... 

ஜெயமோகன் கேரக்டரின் எதிர் துருவம் இந்த கேரக்டர்..

3 எஸ் ராமகிருஷ்ணன்

இரண்டு கேரக்டர்களின் சம நிலை இந்த பாத்திரம்

4 ராஜேஷ்குமார்


மேற்சொன்ன மூவரும் என்னதான் அப்பாடக்கர்கள் என்றாலும் நடைமுறை புத்திசாலி இந்த கேரக்டர்தான்


5 செல்வகுமார் கணேசன்

கண்ணியம் கடமை கட்டுப்பாட்டுக்கு ஓர் உதாரணம்


6 கருப்பு

வெளிப்படையான தன்மை

7 கணேசன் அன்பு

passion


இப்படி ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொன்றை பிரதிபலிக்கின்றன




இந்த நாவலில் பல வரிகளை ரசித்தேன்

1 சூரியனைப் பார்த்ததும் குளத்தில் இருந்த தாமரைகள் மீண்டும் தாமரைகள் ஆகின

2 பத்து நிமிடம் முன்புதான் சிறு நீர் கழித்திருந்தாலும் மீண்டும் சிறு நீர் கழிக்க கிளம்பினான்..அந்த அதிகாலையில் செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது

2 மலர் மலர்வதை எப்படி காண முடியாதோ அதே போல , கொண்டiைக்கடலை கொண்டக்கடலை என கூக்குரல் எப்போது ஒக்கேனக்கல் என மாறுகிறது என்பதையும் காண முடியாது




No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா