Showing posts with label பெண் உரிமை. Show all posts
Showing posts with label பெண் உரிமை. Show all posts

Tuesday, January 1, 2013

கண்ணியமாக உடை அணிய சொல்வது அவ்வளவு பெரிய குற்றமா.


   இது ஒரு முட்டாள் சமுதாயம் என நான் சொன்னதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.  பாரத பண்பாடு, கல் தோன்றி மண் தோன்றாத... என்றெல்லாம் சொன்னார்கள்.

         நம் நாட்டை விமர்சிப்பது அதை அசிங்கப்படுத்தவதற்கு அல்ல.. இது தற்போதைய இழிவு நிலையில்  இருந்து  தப்பிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்..

       ஒரு வெளி நாட்டுக்காரர்  நம் நாட்டுக்கு ஒரு முறை வந்து பார்த்தால் போதும் , நம் நாட்டைப்பற்றிய கேவலமான மனச்சித்திரம்  பதீவாகி விடும். டிராபிக்கை மதிக்காத  வாகன ஓட்டிகள், நடு ரோட்டில் மல ஜலம் கழிக்கும் படித்த சமுதாயம், அடித்து பிடித்து பேருந்தில் ஏறும்  காட்டுமிராண்டித்தனம் , ப்ளூ ஃபில்ம் போன்ற டிவி நிகழ்ச்சிகள் , மஞ்சள் பத்திரிக்கைகள் போன்ற வார இதழ்கள் போன்றவற்றை பார்க்கும் புதிய்வர் யாருக்கும் இது ஒரு காட்டு மிராண்டி தேசம் என்ற எண்ணமே தோன்றும்.

    நம் ஆட்களை வெளி நாட்டிற்கு செல்லும்போது இளக்காரமாக பார்ப்பதற்கு காரணம் இதுதான்.  சில நாடுகள் வெளிப்படையாக காறித்துப்புகின்றன. சில நாடுகள் நாகரிகம் காரணமாக அப்படி செய்வதில்லை.

 நம் ஆள் ஒருவன் அவர்களை பார்க்க சென்றால் கூல் ட்ரிங் சாப்பிடுங்கள் , ஏதாவது சாப்பிடுங்கள் என அவன் உபசரிப்பான். அட்டா... நமக்கு என்ன மரியாதை என நம் ஆள் புளகாங்கிதம் அடைவான்.

  உண்மையில் அவன் நோக்கம் உபசரிப்பு இல்லை.. இந்தியன் என்றால் நாற்றம் எடுத்தவன் என அவன் மனதில் பதிந்து இருக்கிறது. அதை மறைக்கவே வாசனையாக எதையாவது நம் ஆளை சாப்பிட வைக்கிறான்.

 நம் ஆள் புத்திசாலிதான் , நாற்றம் இல்லாதவன் தான்.. ஆனால் இந்தியாவின் சமூக நிலை அவனை அப்படி நினைக்க வைக்கிறது..

    இன்றைய தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியில் , நேரில் வந்து பார்த்துதான் இந்தியாவின் அசிங்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஒரு செகண்டில் உலகம் முழுதும் செய்தி போய் விடுகிறது.

   டெல்லியில் ஒரு பெண்ணுக்கு நிக்ழந்த அவலம்தான் , பிபிசி சிஎன் என் போன்ற வலைத்தளங்களில் தலைப்பு செய்தி  ஆக இருந்தது..  இந்தியா என்பது ஒரு காட்டுமிராண்டி  நாடு என்பது உலகம் முழுதும் தெரிந்து விட்டது.

     இதில் தமிழ் நாடு தனி முத்திரையை பதித்தது என்பது நமக்கு பெருமை சேர்க்கும் விஷ்யம்..


  •      இலங்கையில் தமிழர்கள் படு கொலை நடந்த போது இங்கு எந்த வித சலனமும் இல்லை . சில இயக்கங்கள் பதறினவே தவிர , பெரும்பான்மை சமூகம் சலனம் இன்றி இருந்தது.
  • அங்கு பாலியல் கொடுமைகள் நடந்ததாக செய்தி வெளியாகி உலகமே பதைபதைத்து போனது.. ஆனால் தமிழகம் டீவியில் சினிமா டான்ஸ்  பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தது.
  • விக்டன் குழுமத்தில் இருந்து , ஓர் ஆபாச பத்திரிக்கை வெளியாவதை ஞாநி போன்றோர் கண்டித்தனர். அச்சு விபச்சாரம் என்றார்கள்.. ஆனால் பொது மக்களிடையே எந்த சலனமும் இல்லை.
  • மீனவர்கள் இலங்கை கப்பல் படையால் பெரும் துன்பத்துக்கு ஆளானார்கள் . ஒரு சலனமும் இல்லை.
  • பெண்களை போகப் பொருட்களாக காட்டும் விளம்பரங்கள் , தொலைக்காட்சி விளம்பரங்கள் வெளிவந்த போதும் எந்த சலனமும் காட்டவில்லை.
  • டெல்லியில் ஒரு சகோதரி பாதிக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. வேதனைக்குரியது.. அதற்காக அந்த ஊரில் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டியது அவர்களின் சுரணை உணர்வை காட்டியது. ஆனால் அதே கால கட்டத்தில் இங்கு அது போல பல சம்பவங்கள் நடந்தன / நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நம் மக்களுக்கு அதெல்லாம்கூட கோபம் ஏற்படுத்தவில்லை.
இப்படி பொறுமையின் சிகரமாக இருந்த நம் மக்கள் , ஒரு விஷ்யத்தில் சீறி எழுந்தார்கள். பெரும் போராட்டம் , கேலி சித்திரங்கள் , கடும் கண்டனங்கள் ..

மேற்கண்ட விஷ்யங்களை எல்லாம் விட கொடுமையான விஷ்யம் என்ன நடந்து விட்டது.

பெண்கள் , இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக உடை அணிந்தால் நல்லது என ஒருவர் சொல்லி விட்டாராம். இதற்குத்தான் இவ்வளவு களேபரங்களும்..

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு இடத்திலும் தினம் தோறும்  விதம் விதமாக அ நீதி நடந்து வருகிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இதற்கு எதிராக கிளர்ந்து எழும் மக்கள்.. 

     எங்கே போய் முட்டிக்கொள்வது ? 

 இதற்கு மாற்றாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று சொன்னால் மதப்பிரச்சாரம் என தவறாக என்னை சித்திரிக்க முயல்கிறார்கள்... 

பேசாமல் நானும் கவர்ச்சிப்படம் , அடல்ட்ஸ் ஜோக், சினிமா கிசு கிசு என எழுதி விட்டு, ஆடை சுதந்திரத்தில்தான் பெண் சுதந்திரம் இருக்கிறது என எழுதி பெண்ணூரிமை காவலான மாறி விடலாமா என யோசிக்கிறேன். 

 


Saturday, June 25, 2011

அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார்- உரையாடல் தொகுப்பு

இது ஒரு கற்பனை உரையாடல்...  

" பெண்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் திறமைகள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன. இந்த நிலையில் இப்படி சில நிக்ழ்ச்சிகள் நடப்பது அவர்களை மீண்டும் கூண்டுக்குள் அடைத்து விடுமோ என அஞ்சுகிறேன் “

  “ ஏன் சகோதரி ? என்ன நடந்தது ? “

  “  ஓர் இளம்பெண்ணாகிய என்னிடம்  எழுத்தாளர் ஒருவர் தவறாக நடந்து கொண்டு என்னை  மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் . ஆபாசமாக பேசி தர குறைவாக நடந்து கொண்டு விட்டார் “

 “  என்ன சொல்றீங்க ? இது உண்மை என்றால் பெரிய குற்றமாயிற்றே. பெண் என்று அல்ல.. ஆணாக இருந்தாலும் கூட அவருக்கு விருப்பம் இல்லாத வகையில் அவருடன் பேசுவது குற்றம். 


முன் பின் தெரியாத பெண் மேல் பேருந்தில் அத்து மீறுவது, தன்னுடன் இணக்கமாக நடந்து கொண்டால்தான் வேலை/ மதிப்பெண் என்றெல்லாம் மிரட்டுவது என பல வகைகளில் குற்றங்கள் நடக்கின்றன. இதை எல்லாம் தடுப்பது நம் கடமை ... சொல்லுங்க... என்ன நடந்தது..  ? “


“ எழுத்தாளர் என்ற முறையில் அவருடன் பேச ஆரம்பித்தேன் “

“ ஓஹோ... அவர் புத்தகங்கள் எல்லாம் படித்து இருக்கிறீர்களா? “

 “  படித்தது இல்லை.. இருந்தாலும் சும்மா பேச ஆரம்பித்தேன் ..

" அதாவது அவர் எழுத்தால் கவரப்பட்டு அவருடன் பேசவில்லை.. சரி சொல்லுங்கள்

ஆரம்பத்தில் நார்மலாக பேசிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக உரிமை எடுத்து கொண்டு பேச ஆரபித்தார் .. அவர் என் அப்பா வயது உடையவர்... ஆனாலும் உரிமை எடுத்து கொண்டு அவர் பெயர் சொல்லி அழைத்து பேச ஆரம்பித்தேன்... என்ன ஓர் அதிர்ச்சி!!!.. அவரும் உரிமை எடுத்து கொண்டு பேச ஆரம்பித்து விட்டார் “

“ இதை சரி , தவறு என நான் சொல்ல முடியாது..  நீங்கள்தான் முடிவு எடுத்து இருக்க வேண்டும்..  அவர் பேசியது பிடித்து இருந்தால், தொடர்ந்து இருக்க வேண்டும்.. இல்லை என்றால் அவரை இக்னோர் செய்து இருக்க வேண்டும்.. நீங்கள் என்ன செய்தீர்கள் ? “

“ அவர் நல்லவர் என நம்பி புகைப்படம் அனுப்பினேன்... நான் அழகாக இருப்பதாக அவர் சொல்லி விட்டார்..எனக்கு வருத்தமாக இருந்தது ? “

“ அட கடவுளே... உங்களை திருட்டு தனமாக புகைப்படம் எடுத்து இருந்தால் பெரிய குற்றமாயிற்றே... அதை கமெண்ட் வேறு அடித்தால் பெரிய தவறுதான்.. ஆனால் நீங்களே படம் அனுப்பினேன் என்கிறீர்கள் .. சரி,.. அப்புறம் .. ‘’


“ அவர் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீறி சாட் செய்ய  ஆரம்பித்தார்..  அவர் எவ்வளவு தூரம் போவார் என பார்ப்பதற்காக  நானும் சாட் செய்தேன் “

“ இப்போது புரிகிறது... அவர் தன்னை புனிதமான மனிதர் என சொல்லி கொள்பவர்.. அதை தவறு என நிரூபிப்பதற்காக இப்படி பேசுவது போல நடித்தீர்கள்.. ரைட் ? “

 “ இல்லை...அவர் தன்னை புனிதமானவர் என சொல்லி கொள்பவர் இல்லை “

"பிறகு ஏன் அவருடன் இப்படி பேசினீர்கள் ? “

யாராவது அவருடன் கிளுகிளுப்பாக பேசினால், அவரும் கிளுகிளுப்பாக பேசுவார் என உலகுக்கு நிரூபிக்கும் கடமை நமக்கு இருக்கிறது என ஒருவர் போதனை செய்தார்.. எனவேதான் இந்த ஆப்பரேஷனை திட்டமிட்டோம்

இது ஒரு கடமை. இதற்கு ஓர் ஆப்பரேஷனா? என்னிடம் கேட்டு இருந்தால் நானே சொல்லித் தொலைத்து இருப்பேனே...  

சற்று ஓவராக போகிறோம் என எனக்கே தோன்றி விட்டது ..

“ சரி..அத்துடன் நிறுத்துவதுதானே..இதில்  என்ன பிரச்சினை ? ..“:

“ பொது இடங்களில் தவறாக  னடந்து கொள்ளும் ஆணை உடனடியாக எதிர்க்க முடியாது... சற்று தாமதமாகத்தான் பதிலடி கொடுக்க முடியும்... அதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டுவதா? “

“ இந்த உதாரணத்தில் அந்த ஆண் செய்தது அயோக்கியத்தனம்... ஆனால் தன் இல்லத்தில் தன் விருப்படி இருக்கும் ஆணுடன் வலுக்கட்டாயமாக பேசி விட்டு, அவன் திரும்ப பேசினால் , தவறு என்பது வேறு விஷ்யம்... ”

“ அப்ப நான் என்னதான் செய்வது? “

உண்மையிலேயே பாவப்பட்ட பெண்கள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களுக்காக போராட வேண்டிய நிலையில், இது போன்ற விளம்பர குற்றச்சாட்டுக்கள், உண்மையான போராட்டத்தை வலுவிழக்க செய்து விடும்... 
நீங்கள் எல்லாம் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே போதும்.. பெண்கள் நிலை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறும்...


இது போன்ற போக்குகளை பார்த்தால் , உரையாடலின் ஆரம்ப வரிகள் உண்மையாகி விடுமோ என பயமாக இருக்கிறது ‘ 


"  நான் உங்கள் சகோதரியாக இருந்தாலும் இப்படித்தான் பேசுவீர்களா? “

“ உங்களை சகோதரி என எண்ணுவதால்தான் உங்கள் மீது கொண்ட அன்பால் இப்படி பேசுகிறேன்... ஆனால் உங்களை அன்னியர் என நினைக்கும் சிலர் உங்களை தூண்டி விட்டு தம்மை பெண்ணின காவலர் என நிரூபிக்க முயலக்கூடும்...அவர்களுக்கு விளம்பரம்.உங்களுக்கு மன உளைச்சல் ”


“    நான் யாரைத்தான் நம்புவது ? “


” தாம் பெண் என்பதற்காக அல்ல... தமது எழுத்துக்களுக்காக, கற்பனைத்திறனுக்காக, நகைச்சுவை உணர்ச்சிக்காக, சமூக அக்கறைக்காக ரசிக்கப்படும் பெண் பதிவர்கள் பலர் இருக்கிறார்கள்.. அவர்களிடம் விவாதியுங்கள்...  ஆண், பெண் என்பதை மறந்து , பொது வெளியில் இயங்குவது குறித்து  அவர்கள் சொல்லி தருவார்கள்... 


இதே எழுத்தாளருடன் இலக்கிய விவாதம் செய்யும் அளவுக்கு படிக்க , தன்னம்பிக்கை பெற அவர்கள் உதவுவார்கள்... 


ஊரில் இருக்கும் பகுத்தறிவுவாதிகள், இடதுசாரிகள் என பலரையும்  இந்த காமெடியில் இறக்கி விட்ட நீங்கள் இதை உங்கள் வெற்றியாக நினைத்தால் நான் சொல்வது உங்களுக்கு தேவை அற்றது.. அல்லது உண்மையில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தால், ஒரு சகோதரனாக என் வேண்டுகோளை மதித்து , பதிவுலகில் இருக்கும் என் அன்னைமார்களை , சகோதரிகளை , தோழிகளை தொடர்பு கொண்டு விவாதியுங்கள்... 

Saturday, March 20, 2010

ஆண்களின் வீக் பாயிண்ட்

இரவு வீடு திரும்ப நேரமாகி விட்டது.... நடக்கும் அலுப்பு தெரியாமல் இருக்க, ஒரு நமீதா பாடல் ஒன்றை , மனதில் ஓட விட்டபடி, அந்த பிராதன சாலை வழி வந்து கொண்டு இருந்தேன்...
பகலில், பர பரப்பாக இருக்கும் சாலை, இரவில் அமைதியாக இருந்தது... திடீர் என கை வளையல் குலுங்கும் சத்தம்.... அட என ஆர்வத்துடன் பார்த்தல், ஒரு பெண் நிற்பது தெரிந்தது.... சாலை ஓரத்தில் நின்ற அந்த பெண், என்னை கண்டதும் மீண்டும் , வளையல் சப்தம் எழுப்பினாள்... பவுடர், லிப் ஸ்டிக், இரவு எல்லாம் சேர்ந்து அவள் யார், எதற்காக அழைக்கிறாள் என புரிய வைத்தது...
அனால், அவரை பார்த்து எனக்கு பால் உணர்சி ஏறபடவில்லை.... பாவம் என தோன்றியது....
பண கஷ்டம், அவரை அந்த குளிரில் இப்படி கஷ்ட பட வைகிறது..... என்னிடம் அவர் எதிர் பார்ப்பது சுகம் அல்ல... சிறிது பணம்.... இப்படி கஷ்ட படுபவர் கள் பலர்... கஷ்டதிருக்கு ஆட்படுதியவர்கள், ஆண்களாகத்தான் இருக்க முடியும்...
அவர்களுக்கு தேவை , நமது பரிவு... ஆதரவு....

ஆனால், சுகத்திற்காக , பொழுது போக்கிற்காக இப்படி செய்பவர்களும் இருக்கிறர்கள்... அவர்கள், இப்படி குளிர் கஷ்ட படுவதில்லை... எ சி கார், பங்களா என அசத்து வார்கள்...
சும்மா ஒரு கிளு கிளுப்பாக இதை செய்பவர்களும் இருக்கிறார்கள்....
ஊர் சுற்றி விட்டு, குஜால் செய்து விட்டு , பிறகு டா டா காட்டி செல்வது இன்னொரு ரகம்...

அவர்களில் ஒரு பெண்,, அவளது தோழியிடம் கேட்பதாக , இந்த தமிழ் பாடல்... கொஞ்சம் படித்து பாருங்கள்..

உன்னையோர் உண்மை கேட்பேன்.. உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்
என்னையோ புணருவார்கள் , எனக்குமோர் இன்பம் நல்கி
பொன்னையும் கொடுத்து , பாத போதினில் வீழ்வதேனோ....

- விவேக சிந்தாமணி

சுகத்துக்கு ஆசை பட்டுத்தான் நான் இதை செய்கிறேன்... என்னைதிருப்தியும் படுத்தி,
இ சி ஆர் , ஹோட்டல் என்றெல்லாம் செலவும் செய்து, என் காலடியில் விழுந்து கிடக்கிறார்களே.. இந்த ஆண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்.... ஆராய்ந்து பதில் சொல் ..
என்பதுதான் பாடல்....

உண்மையான காதல் என்பது வேறு.... ஆனால் சும்மா ஊர் சுத்துவதில்., இரு பாலருக்கும் தான் குஜால்... இதில் ஆண் மட்டும் என் செலவழிக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையை இந்த பாடல் , தூண்டுகிறது.....


சரி, இந்த பாடலுக்கு பதில் என்ன? பதில் பாடல் இருக்கிறது... ஆனால் அது அன்ன்மிக, பகுத்தறிவு, பெண் உரிமை , ஆண் உரிமை, என எல்லா தரப்பையும் கோப படுத்தும் என்பதால், அதை நீங்களே தேடி படிக்குமாறு கேட்டு கொள்கிறேன் ...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா