Friday, October 15, 2010

என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )

 

"ஸ்டவ் வெடிச்சு கொல்றதேல்லாம் அந்த காலம்.. கார் வெடிச்சு கொல்றதுதான் இந்த காலம.. இன்னும் சில நொடிகள்ள கார் வெடிச்சு சாக போற "

அதிர்ந்தாள் ஷாலினி..

" அவசரப்படாதீங்க.. நீங்க கேட்ட வரதட்சணை பணமும், குடும்ப சொத்தான வைரத்தையும், எடுத்துட்டுதான் நானும் என் அக்கா காமினியும் வந்துகிட்டு இருக்கோம் "

" அடி போடி,... ஒவ்வொரு முறையும் உன்னை மிரட்டி காசு வாங்க போரடிச்சு போச்சு... உன்னை கொன்னுட்டு விபத்தா காட்டிட்டு, இன்சூரன்ஸ் பணத்தோட செட்டில் ஆக போறேன் "

போன் கட் ஆனது..

படுபாவி... என்னுடன் சேர்த்து காமினியும் இறந்து விட கூடாது..

தூங்கி கொண்டு இருந்த காமினியை இழுத்து கொண்டு வெளியே பாயவும் , கார் வெடிக்கவும் சரியாக இருந்தது

***************************************************************************

" ஆ, நான் எங்கு இருக்கேன் " முனகினாள் காமினி..

" கார் விபத்து மேடம்.. உங்களை காப்பாத்தி சிகிச்சை தந்து வர்றோம்.. மருத்துவ மனை ல   இருகீங்க " நர்ஸ் சொன்னாள்..

" ஷாலினி ? "

" சாரி மேடம்.. அவுங்களை காப்பாத்த முடியல..சரி மேடம்.. பேசாம இருங்க.. டாகடர் வர்றாரு "

சொல்லி விட்டு நர்ஸ் கிளம்பினாள்..

டாகடர் அருகே வந்தார்.. ரிப்போர்ட்டுகளை சரி பார்த்து விட்டு, பரிசோதனைகளை செய்தார்..

ரிப்போர்ட் எழுதி விட்டு கிளம்பினார்...

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

**************************************************************************

'' பெரியப்பா...... அந்த பாவிதான் என் அக்காவை கொன்றவன்..   அவனை சட்டம் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்க " மூச்சிரைக்க பேசிய காமினியை அன்புடன் பார்த்தார் அவளின் பெரியப்பா பரந்தாமன்..

" அது கஷ்டம்மா.. அவன் அதை எதிரிகளின் சதி மாதிரி காமிச்சுட்டான்.. அவன் சமுதாயத்துல பெரிய ஆள்.. அவனுக்கு பல எதிரிகள் இருப்பாங்க...  அதுல ஒருத்தன்தான் இதை செஞ்சு இருப்பன்னு கதையை முடிச்சுடுவாங்க "

" பெரியப்பா,, ஊர்ல இருக்குற பெரிய லாயர்ல ஒருவர் நீங்க.. எப்படியாச்சும் அவனை மடக்குங்க "

" ஒரே வழி இருக்குமா...  அவ எடுத்துட்டு போன வைரத்தை கோர்ட்ல காமிச்சு, வைரத்துக்காக அவன் சித்திரவதை செய்ததை நிருபிக்கலாம்..  இந்நேரம் அவன் விபத்தான காரை முற்றுகை இட்டு இருப்பான்..  போலீசை மீறி அவன் எடுக்க முடியாது...  அந்த கார் போலிஸ் கட்டுப்பாட்டில் இருக்கு .. தவிர, வைரத்தின் அதீத சக்தியும் அதுக்கு காவல இருக்கும்.."

" அதீத சக்தியா ..என்ன சொல்றீங்க? "

" ஆமா.. அந்த வைரத்தை ஒருவர் எடுக்கணும்னா ஒரு நிபந்தனை இருக்கு.. அந்த நிபந்தனையை மீறி எடுத்தா , உரிய இடம் கொண்டு போய் சேர்க்க முடியாது...  இதை ஷாலினி மீறியதால்தான் அந்த வைரம் உரிய இடம் போகாம பாதில இப்படி ஆகிடுச்சுனு நினைக்றேன் '

" என்ன நிபந்தனை ? ஒன்னும் புரியல ? "

" வைரம் என்பது சாதாரணம் அல்ல.. அமானுஷ்ய தன்மை கொண்டது..  அதனால்தான் பலர் அதை வைத்து இருப்பது இல்லை.. இந்த வைரத்தின் பாதுகாப்பு கருதி, சில மந்திரம்   மூலம் நிபந்தனை ஒரு சக்தி வளையமா அதை சுற்றி போடப்பட்டு இருக்கு,,, "

அந்த நிபந்தனையை அவர் சொல்ல , அதிர்ந்தாள் காமினி... 

" இல்லை.. ஷாலினி இந்த நிபந்தனைக்கு உட்பட்டவ தான்...  அவளை தப்பா சொல்லாதீங்க...  நான் உடணே போயி , என்னை கல்யாணம் செஞ்சுக்க போற சிவாவை பார்த்து , அடுத்த நடவடிக்கை பத்தி பேசணும் "

*********************************

யாருமற்ற தனி இடம்...   பறவைகள்  சத்தம் மட்டும் லேசாக கேட்டு கொண்டு இருந்தது..

" இந்த காட்டுக்கு எதுக்கு கூட்டி வந்த ? ..என்ன உடம்பெல்லாம் காயம்...எதாவது விபத்தா  " கேட்டான் சிவா..

" ஆமா.. கார் விபத்து... அதுக்கு காரணமானவனை பழி வாங்கனும்...அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் "

" என்ன பெரிய விபத்து..  லேசான காயத்துக்கு பழியா ? "

" காயம் மட்டும் இல்லை..  என் சிஸ்டர் ஷாலினி இறந்துட்டா .." கண்ணிருடன் சொன்னால் அவள்.

" ஷாலினி இறந்துடாளா.. ஐயோ..ஷாலினி......"

அவன் அலறுவதை குழப்பமாக பார்த்தாள் காமினி..ஷாலினிக்காக இப்படி ஏன் உருகுகிறான்?

" அடி பாவி,,, நானும் ஷாலினியும் , தாலி கட்டாத கணவன் மனைவியா வாழ்ந்தோம்... அவ மேல இருக்குற ஆசைலதான் , உன்னை கட்டிக்கவே சம்மதித்தேன் ..இப்படி ஆயிடுச்சே " அழுதான்..

பரந்தாமன் பெரியப்பா சொன்ன நிபந்தனை நினைவுக்கு வந்தது...

" சிவா,,,நீ இப்படி ஒரு அயோக்கியனா..,துரோகி,,இப்பவே இதை சொல்லி கல்யாணத்தை நிறுத்துறேன்.. உன் பேரை அசிங்க படுத்த போறேன்..ஷாலினி பேர் கெட்டாலும் பரவயில்லை..."

அவனை உதறி கிளம்பினால் காமினி..

'நில்லுடி ' உறுமினான் அவன்..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

************************************************************

" ஷாலினிய இப்படி செஞ்சவனை சும்மா விட கூடாது..என்ன செலவாலும் பரவாயில்லை " கதறிய ஷாலினியின் அப்பாவை ஆதரவுடன் அணைத்து கொண்டார் பரந்தாமன்..

பார்த்து பார்த்து வளர்த்த பெண்....  அம்மா இல்லாத பெண்கள் என ஷாலினியையும் , காமினியையும் பார்த்து பார்த்து வளர்த்தானே என் தம்பி ..பரந்தாமனுக்கு கண்ணீர் பொங்கியது..

அந்த வைரம் வேண்டாம் என நான் சொல்லிப்பார்த்தேன்..

" பெரியப்பா.. பெரியப்பா...  " காமினி வேகமாக வந்தாள்..கையில் வைரம்...

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"இதை வச்சு அந்த பாவியை ஜெயில்ல தள்ளிடறேன்... ஆமா, இதை சரியான இடத்துக்கு கொண்டு வரணும்னா நிபந்தனை இருக்கே.. யார் உனக்கு ஹெல்ப் செஞ்சா ? "

" நானேதான் எடுத்துட்டு வரேன் " அமைதியாக சொன்னால் காமினி..

" உளறாதே.. இதை பத்திரமா எடுத்து கொண்டு வர ரெண்டு பேரால்தான் முடியும்...  கொலை செய்யப்பட கன்னி பெண்ணின் ஆவி அல்லது கணவனுக்கு உண்மையா இருக்கிற பெண்...  உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..சோ அந்த  நிபந்தனை உனக்கு பொருந்தாது... .. நீ ஆவியும் இல்லை... சோ இரண்டாம் நிபந்தனையும்  பொருந்தாது... உனக்கு யாரோ உதவி இருக்கணும் ..'

காமினி யோசித்தாள்.. 'சிவாவை காட்டி கொடுத்து ஷாலினியின் பெயரை கெடுக்க கூடாது ...தவிர, வேண்டும் என்றே சிவாவை கோப படுத்தியது , அவனை தூண்டியது நான்தானே '

" பெரியப்பா... எனக்கு கல்யாணம் ஆகல என்பது உண்மைதான்.. ஆனா நான் ஆவி இல்லைனு எப்படி முடிவு செஞ்சீங்க ? "

தன கண் முன் சிறிது சிறிதாக காற்றில் கரையும் காமினி யை திகிலுடன் பார்த்தார் பரந்தாமன்....

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சிறுகதை )

 
               சென்னை . எக்மோரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை..
காமினிக்கு ஒரே இட்த்தில் கட்டுப்பட்டு இருப்பது பிடிக்கவில்லை.. சிறகடித்து பறக்க துடித்தாள்..
டாக்டர் செக் அப் முடித்து செல்லும் நேரம்தான் சரியான நேரம்.. வேறு யரும் இருக்க மாட்டார்கள்..
டாக்டர் வழக்கம்போல சரியான நேரத்துக்கு வந்தார்,, காமினியை சோதித்த பின் திருப்தியாக கிளம்பினார்...
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
                     சரியாக அதே நேரம் , பேய் வேகத்தில் வந்த குடி தண்ணிர் லாரி, இவள் குதித்த்தை எதிர்பார்க்கவில்லை.. பிரேக் போட அவகாசம் இல்லாமல் , அவள் மேல் ஏறி இறங்க, அழகும் , திறமையும், ஆயிரம் கனவுகளும் கொண்ட காமினி சம்பவ இட்த்திலேயே உயிர் இழந்தாள்...
*******************************************************************************
             என்னடி டென்ஷனா இருக்க? மாலதி அக்கரையோடு விசாரித்தாள்..
காமினி கோபத்தோடு நிமிர்ந்தாள்...
“ எனக்குனு கல்யாணம், காதல் , என் வேலையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை என எல்லாம் இருக்கு... யாரோ ஒரு பதிவர் கதை போட்டியில் கலந்துக்க என்னை கொல்வதை நான் எப்படி ஏத்துக்க முடியும்..
இனி அவனோட கதையில் நான் ஒரு கதாபாத்திரமா இருக்க விரும்பல.. என் கதையை நானே எழுதிக்க போறேன்.. அந்த பதிவருக்கு என்ன கேரகடர்னு தீர்மானிப்பது இனி நான்.. நான் யாருனு அவனுக்கு காட்டுறேன் “

            இந்த கதையின் ஆசிரியனான நான் , என் நண்பன் கோபாலுடன் கவலையுடன் பேசி கொண்டு இருந்தேன்..
“கடந்த சில நாளா சம்பந்தமே இல்லாம பல பிரச்சினைகள்டா... என் பார்ட்னருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்துச்சு,, வியாபாரம் நல்லபடியா போச்சு.. ஆனால் என்னவோ ஒரு கர்மா,அல்லது விதி குறுக்கிட்ட மாதிரி எனக்கும் அவனுக்கும் சண்டை... சண்டைக்கு நானோ அவனோ காரணமே இல்லை.. சண்டை வரனும்னு யாரோ தீர்மானிச்ச மாதிரி இருக்கு “ புலம்பினேன்..
அவன் பேச்சை மாற்ற விரும்பினான்,,
”கதை ஒண்ணு எழுதிகிட்டு இருந்தியே.. என்ன ஆச்சு?”
“ அது இன்னொரு சோகம்டா... எப்பவும் எழுத ஆரம்பிச்சா சீரா போகும்.. இப்ப காமினி எனும் அந்த கதாபாத்திரம் என் கட்டுப்பாடுக்குள் வரவே மறுக்குது.. அந்த பாத்திரம் உயிர் பெற்று அது இஷ்ட்த்துக்கு நடக்குற மாதிரி ஃபீலிங் . பேசாம அவள் காதலன் சிவாவை வைத்து அவள் கதைய முடிக்கலாம்னு பார்க்குறேன் “
*******************************************************
                 காமினி செல்போனில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.. சிவா அவள் அறைக்குள் வந்த்தை அவள் கவனிக்கவில்லை...
” மே ஐ கம் இன் “ இறுகிய முகத்துடன் சிவா உள்ளே வந்தான்..
” வாங்க ..வாங்க,, கவனிக்கவே இல்லை”
“ எப்படி கவனிப்ப? எவனுடனோ கொஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி கவனம் இருக்கும்”
“ சிவா.. மைண்ட் யுவர் வோர்ட்ஸ் “
“ உனக்கு என்னடி மரியாதை.. தே*** நாயே “
“ சிவா...”
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா..
எதிர்பாராத நேரத்தில் பின்னால் இருந்து ஒரு அடி விழ நிலை குலைந்தான் சிவா...
“ ராஸ்கல் ,, நீ இப்படி நடந்துக்கவேனு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதனால்தான் பாடி கார்ட் ரெடியா வச்சு இருந்தேன்... இனி என் மூஞ்சிலயே விழிக்காதே “
***********************************************************************************************
                    ” காமினி ,,, நீ ஓவரா போற... நீ நான் படைத்த ஒரு கேரகடர், அவ்வளவுதான்.. நீயா முடிவு எடுக்க்றது கூட பரவாயில்ல.. ஆனால் என் கதையை நீ எழுத முயற்சிப்பது சரி இல்லை... “
என்னை பாவமாக பார்த்தாள் காமினி..
“ உண்மையில் நாம் எல்லோருமே யாரோ ஒருவர் எழுதும் கதையில் கதாபாத்திரங்கள்தான்..இதில் நாம் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை..
என்னை ஒரு அப்பாவி பொண்ணா உருவாக்கனும்னு நீ நினச்ச.. ஆனால், நமக்கு மேல ஒரு சக்தி , என்னை தைரியமிக்க ஒரு பெண்ணா உருவாக்கிடுச்சு..
இப்ப பேசாம என் கூட வந்து என்னோட அடுத்த அதிரடிய பாரு “
உறுதியாக சொன்னாள் ..
“ என்ன செய்ய போற? “
“ சாதாரண கரி பல ஆண்டுகள் கழித்து சில இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு வைரமா மாறுது.. நம்ம விஞ்ஞானி பரந்தாமன் சார், அதே தரத்தோட செயற்கை முறைல வைரம் கண்டுபிடித்து அங்கீகாரத்துக்கு அலைஞ்சார்.. ஆனால் அரசு எந்திரம் அவரை நொறுக்கிடுச்சு.. அவருக்கு உரிய மரியாதை தரல... அந்த வைரமும் , அதை செய்யும் முறையும் அரசின் வசம்தான் இருக்கு.,.. அங்கு இருந்து பயன் இல்லை..
அதை எடுத்து வந்து உங்க கிட்ட கொடுக்குறேன்.. இதை வெளி நாட்டுக்கு வித்து அந்த காசுல நம்ம மக்களுக்கு சேவை செய்ங்கனு சொல்லி இருக்கேன் “
நான் உருவாக்கிய காமினி என்னை விட அதிகமாக சிந்திப்பதை ஆச்சர்யமாக பார்த்தேன்..
அவளை நான் உருவாக்கவில்லை... இருவரையும் உருவாக்கியது வேறு யாரோ என்ற உண்மை புரிய ஆரம்பித்த்து...
நான் என்பதும் பொய். வாழ்க்கை என்பதும் பொய்.. எல்லாம் அர்த்தம் மிக்கது.. ஆனால் அபத்தமானது என்பது புரிய தொடங்கியது..
நான் உயிருக்கு உயிராக பழகிய கீதா , ஏதோ ஒரு மொக்கை காரணம் சொல்லி பிரிந்தபோது , எல்லோரையும் வெறுத்தேன்.,.. பிரிவுக்கு உலகம்தான் காரணம்... காமினிதான் காரணம் என்றெல்லாம் புலம்பியது எவ்வளது முட்டாள்தனம் என்பது புரிந்த்து.. நடக்கும் நாடகத்தை சும்மா பார்ப்பதுதான் நம் வேலை..
எல்லை அற்ற நாடகத்தில் நாம் ஜஸ்ட் கேரகடர்கள்தான்..
**************************************************************************
                     பலத்த காவலில் இருந்த வைரத்தையும் , தயாரிப்பு ரகசியத்தையும் காமினி எடுத்து வந்த போது, அவளை கை எடுத்து கும்பிட தோன்றியது..
“யாதுமாகி நின்றாய்..காளி எங்கும் நீ நிறைந்தாய் “ பாடல் தோன்றியது..
பரந்தாமன் அலுவலகத்துக்கு , வைரத்தை ஒப்படைக்க நானும் சென்றேன்..
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
” என் கடமையைத்தான் செய்தேன் .. தேசம் என்பது மக்கள்தான்.. எனவே நாட்டுக்குத்தான் என் ஆராய்ச்சி பயன்படனும்னு நினைக்காம வெளி நாட்டுல வித்து சம்பாதிங்க.. அதை வச்சு ஏழைகளுக்கு உதவுங்க “
பேசிகொண்டு இருந்து விட்டு திரும்பினோம்...
” காமினி.. உன் கிட்ட ஒண்ணு சொல்லனும் “ மெதுவாக ஆரம்பித்தேன்.
“ எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு .. போய்ட்டு வந்துறேன்” ஸ்கூட்டியை கிளப்பினாள்.
“ அதில் போகாதே “ தடுத்தேன்..
அதில் போனால் விபத்து ஏற்படும்.. அதில் சாவாள் என்பது என் கதை.. அப்படி நடக்க கூடாது.. காமினி சாக கூடாது..
“ சரி.. உங்க டிரைவரை அனுப்புங்க.. காரில் போறேன் ..போய்ட்டு வந்து நானும் ஒரு விஷ்யம் உங்க கிட்ட பேசணும் “ புன்னகையுடன் கிளம்பினாள்..
*******************************************************************8
                     சற்று நேரத்தில் போன்..
“ சார்.. உங்க கார் விபத்தில சிக்கிருச்சு.. ”
பதறினேன்.. கதையின் முடிவை நான் தான் மாற்றி விட்டேனே..அவள் சாக கூடாது..
” காமினிக்கு என்ன ஆச்சு “
“ ஒன்னும் பிராப்ளம் இல்ல சார்.. சிகிச்சை நடந்துகிட்டு இருக்கு.. எக்மோர்ல ஒரு ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கோம்..
அவசரமாக எக்மோர் கிளம்பினேன்..
***************************
                      சென்னை . எக்மோரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை..
காமினிக்கு ஒரே இட்த்தில் கட்டுப்பட்டு இருப்பது பிடிக்கவில்லை.. சிறகடித்து பறக்க துடித்தாள்..
டாக்டர் செக் அப் முடித்து செல்லும் நேரம்தான் சரியான நேரம்.. வேறு யரும் இருக்க மாட்டார்கள்..
டாக்டர் வழக்கம்போல சரியான நேரத்துக்கு வந்தார்,, காமினியை சோதித்த பின் திருப்தியாக கிளம்பினார்...
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

Thursday, October 14, 2010

எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சையில் ஷாருக்கான்

எந்திரன் பட வாய்ப்பை இழந்த ஷாருக்கான் , அந்த படத்தின் சில காட்சிகளை காப்பி அடித்து தன படத்தில் பயன்படுத்துவதாக சர்ர்ச்சை எழுந்துள்ளது..

எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கமல்.. விறுவிறுப்பாக ஆரம்ப வேலைகள் நடந்தன.. ஆனால் தயாரிப்பளர்கள் , கமலை நம்பி முதலீடு செய்ய விரும்பாததால் , அந்த முயற்சி நிறைவேறவில்லை..
அதன் பின் ஷாருக்கான் அந்த படத்தில் நடிக்க முன் வந்தார்.. அவரே தயாரிக்கவும் தீர்மானித்தார்.. ஆனாலும் வில்லனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கதையில் மாற்றம் போன்ற சில பிரச்சினைகளால் படத்தை விட்டு விலகினார்...
வில்லனுக்கு முக்கியத்துவம அளித்தால் படம் ஓடாது என்பது அவர் கருத்து..
இந்த நிலையில் ரஜினி நடித்த எந்திரன் வட இந்தியா உட்பட இந்தியா முழுதும் மாபெரும் வெற்றி பெற்று இருப்பது ஷா ருக்கானுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது..
நல்ல கதையை விட்டுவிட்டோமே என வருந்திய அவர் , இந்திரனை மிஞ்சி காட்டா வேண்டும் என்ற வெறியுடன் ரா. ஒன் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்..

எந்திரன் கதையை ஷங்கர் இவரிடம் சொளியபோது, டிரயின் சண்டை காட்சி அவர் மனதை கவர்ந்து விட்டதாம்.. அந்த சண்டை காட்சியை அப்படியே தன படத்தில் பயன்படுத்தி வருவதாக தகவல் கசிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது...

அவர் தரப்பில் பேசுபவர்கள் " அவருக்கு டிரெயின் சண்டை காட்சிகள் எப்போதுமே பிடிக்கும்.. எனவே தன படத்தில் சிரத்தை எடுத்து இந்த காட்சியில் நடித்து வருகிறார்.. காப்பி என சொல்வது தவறு " என்றார்கள்

எந்திரன் படத்தில் பணிபுரிந்த ரசூல் பூக்குட்டி இந்த படத்திலும் பணிபுரிகிறார்..
அவர் ஒரே காட்சி அமைப்பு இரு படங்களிலும் வருவதை ஒப்புகொண்டார்..
காட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயல்வோம் என சொல்கிறார் அவர்..

ஷாருக்கானை பொறுத்தவரை, அவர் காபி அடிக்க வேண்டும் என நினைத்து அடிக்வில்லை.. ஷங்கர் சொன்ன விதம் மனதை கவர்ந்து , தற்செயலாக தன படத்தில் பயன்படுத்தி விட்டார்..
ஆனால் இந்த சர்ச்சை பெரிதாவதை அவர் விரும்பவில்லை.. எப்படியாவது வேறுபாட்டை காட்ட வேண்டும்.. காப்பி என யாரும் சொல்லி விட கூடாது என கடுமையாக உழைத்து வருகிறார்..

இப்படி கஷ்டப்படுவற்கு பதில்,. இந்த காட்சியைஎ எடுத்து விடலாமே என நீங்கள் கேட்கலாம்.. அது முடியாது..இந்த காட்சிக்கு மட்டும் அவர்கள் செய்துள்ள செலவு 3 கோடி ரூபாய்

Wednesday, October 13, 2010

பரபரப்பான சூழலில் எடியூரப்பா அரசு சந்திக்கும் செமி ஃபைனல் – கதி கலங்கும் கர் நாடக அரசியல்

பரபரப்பான சூழ் நிலையில் , கர் நாடக முதல்வர் எடியூரப்பா, இன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார்.

அதிருப்தி எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்த்தற்கு கோர்ட் இடைக்கால தடை விதிக்காத நிலையில், அவ்ரகள் இன்று ஓட்டளிக்க முடியாது.. எனவே எளிதாக வெல்ல்லாம் என பி ஜே பி நினைத்த்து..

இதில் திடீர் திருப்பமாக, வருங்காலத்தில் நாங்கள் தரும் தீர்ப்பு, இன்றைய நம்பிக்கை தீர்மான வெற்றி தோல்வியை கட்டுப்படுத்தும் என கோர்ட் அறிவித்துள்ளது..


அதாவது இன்று அரசு வெற்றி பெறாலும் கூட , தீர்ப்பை வைத்தே வெற்றி உறுதியாகும்..
ஆக, இன்று நடப்பது ஃபைனல் அல்ல... செமி ஃபைனல் தான்..

சென்ற முறை போல அல்லாமல், வாக்கு சீட்டு மூலம் வாக்களிப்பு நடக்க உள்ளது..
பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன..

Monday, October 11, 2010

எந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்பனியமும்

அறிஞர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது..
" பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என பதறுகிறீர்களே.. பிராமணர்கள் ஜனத்தொகை மிக மிக குறைவு..தேவையில்லாமல் அவர்களை என் எதிர்கிறீர்கள் ? "

அண்ணா பதில் அளித்தார்..

நான் பிராமணர்களுக்கு எதிரானவன் அல்ல.. பார்ப்பனியம் என்பதை பிராமணர்கள் மட்டும் வளர்க்கவில்லை... சில "சூத்திரகளும்" கூட , தம்மை விட பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மயக்கத்தில் இருக்கிறார்கள்.. இதைதான் பார்ப்பனியம் என்கிறோம்... பார்ப்பனியத்தை ஏற்காத பிராமணர்களும் உண்டு ... பார்ப்பனியத்தில் மூழ்கி போன "சூத்திரர்களும்" உண்டு.. இது அபாய கரமானது . காலம் காலமாக , பிராமணன் உயர்ந்தவன் என மனதில் பதிந்து விட்டத்தால் இதை மாற்றுவது எளிதல்ல " என்றார்..

யோசித்து பார்த்தால் இதில் இருக்கும் உண்மை தெரியும்.. பிராமணர்களில் பலர் கூட இயல்பாகவும், தான்தான் பெரியவன் என்ற உணர்வு இல்லாமல் இருப்பதையும் , அனால் பிராமணர்கள் அல்லாதவர்கள்தான், தேவையில்லாமல் அடிமை விசுவாசத்தை காட்டுவதையும் பார்க்க்கலாம்..

தற்போதைய எடுத்துக்காட்டு எந்திரனும் , அறிவு ஜீவிகளின் பார்ப்பனிய பார்வையும்..

சில ஆண்டுகளுக்கு முன் மருத நாயகம் படத்தை , இங்கிலாந்து ராணியை வைத்து ஆரம்பித்தார் கமல்..
ஆஹா.. அவர் உடலில் ஓடுவது கலை ரத்தம் என புல்லரித்தனர் அறிவு ஜீவிகள்..

தசவாதாரம் பட விழாவிற்கு ஜாக்கி சானை அழைத்தார் கமல்...
அவாள் திறமை யாருக்கும் வராது என சிலிர்ப்படைன்தனர் அறிவு ஜீவிகள்..

டப்பா படமான மும்பை எக்ஸ்பிரசை , சந்திர முகிக்கு எதிராக களமிறக்கி, அரசியல் பிரச்சாரம் போல ரேடியோ, தொலைகாட்சி என கமல் விளமபரம் செய்ததை பார்த்து, இந்த தொழில் நுட்பமெல்லாம் , பிறப் பிலேயே வரணும் என மனு நீதியை தூக்கி பிடித்தனர் அறிவு ஜீவிகள்..

இதே எந்திரன் படத்தில் கமல் நடித்து இருந்த்தா ல், படம் பிளாப் ஆகி இருக்கும்... ஆனால் அறிவு ஜீவிகள் பாராட்டி இருப்பார்கள்..
தமிழனுக்கு ரசிப்பு திறன் பத்தாது என பார்ப்பானிய வெறியை காட்டி இருப்பார்கள்..

இப்போது அறிவு ஜீவிகள் திட்டினாலும் மக்களுக்கு படம் பிடித்து இருக்கிறது..

பார்ப்பானியத்தை யார் ஆதரித்தாலும் தவறு.. ஆனால் அதை பிராமணர்கள் செய்தால் கூட அதை புரிந்து கொள்ள முடியும் ( ஏற்க முடியாது என்பது வேறு விஷயம் )

ஆனால் பிராமணர்கள் அல்லாதவர்கள் கூட தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் , அடிமை விசுவாசத்தை காட்டுவது வருந்த தக்கது .. அனுதாபத்துக்கு உரியது...

வெற்றி , கலை, புத்தி என்பது எல்லாம் பிராமர்களுக்கு மட்டும் உரியது அல்ல.. பிராமணர்கள் உட்பட அனைவருக்கும் இவை சொந்தம், தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை வேண்டாம் என்று சொல்ல , இன்று அண்ணா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா