Saturday, May 18, 2019

சினிமா உலகம் கண்டு வரும் மாற்றம்



எழுபதுகளில் வெளியான பாடல்கள் வரவேற்பு பெறாததற்கான காரணங்களை அலசினோம் அல்லவா...

எம் எஸ் வி , கே வி மகாதேவன் போன்றோர் எழுபதுகளில் சூப்பரான பாடல்கள் கொடுத்திருந்தாலும் பெரும்பாலான பாடல்கள் பிரபலமாகவில்லை

அதே போல பல எழுதுபதுகள் நாயகர்களும் பெரிய் அளவில் சோபிக்கவில்லை

என்ன ட்விஸ்ட் என்றால் விஜயகுமார் சிவகுமார் போன்றார் எழுதுபதுகளில் எண்பதுகளில் சோபிக்காவிட்டாலும் , பிற்கால வாழ்க்கையில் பிரபலத்துவம் எய்தினார்கள்... குறிப்பாக விஜயகுமார் தந்தை வேடங்கள் , வில்லன் வேடங்கள் என ஸ்டார் அந்தஸ்து பெற்றார்..

சிவகுமாரோ சினிமாவை தாண்டி புகழ் பெற்றார்

ஜெய்கணேஷ் தொலைக்காட்சியில் பிரபலமாக இருந்தார்

முத்துராமனுக்கு இந்த வாய்ப்பெல்லாம் கிடைக்கவில்லை... சீக்கிரமே இறந்து விட்டார்...

அவர் மகன் கார்த்திக் ,  தந்தையை மிஞ்சி புகழ் பெற்றார்.. ஆனால் , தந்தைக்கு பெருமை சேர்க்காத வகையில் அவரது பிற்கால செயல்பாடுகள் அமைந்து வருகின்றன


எண்பதுகளில் ரஜினி கமல் சத்யராஜ் விஜயகாந்த் பிரபு கார்த்திக் ஆகிய சிலரே ஆதிக்கம் செலுத்தினர்..

ஆனால் இன்று இன்னிலை மாறி ஆரோக்கியமான சூழல் உள்ளது

ரஜினி , கமல் , அஜித் , விஜய் , சிம்பு  , தனுஷ் , ஆர்யா , சூர்யா , கார்த்தி , ஜெயம்ரவி என எல்லோருக்குமே ஸ்டார் அந்தஸ்து இருப்பது ஆச்சர்யம்,

குறிப்பிட்ட சிலர் கைகளில் பட உலகு சிக்காமல் எல்லோரும் வாழ்வது நல்லது

 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா