Wednesday, May 29, 2019

சாதி ரீதியாக கிருஷ்ணசாமியை அசிங்கப்படுத்திய நிருபர்- தேவை திராவிட மறுமலர்ச்சி


புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்

அப்போது அவர் , தேர்தல் தனக்கு நிறைவு அளிப்பதாக சொன்னார்

முன்பெல்லாம் தான் சார்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரிடம் மட்டுமே வாக்கு கேட்க முடியும்.. அவர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள்

ஆனால் கொஞ்சம் கொஞ்சமான நிலை மாறி வருகிறது.. திமுக கூட்டணியில் போட்டியிட்டபோது பல மாறுதல்களை பார்த்தேன்

இன்று முழுக்கவே நிலை மாறி விட்டது...  அனைத்து சமூகத்தினரும் என்னை மரியாதையுடன் பார்க்கிறார்கள்.. அனைவரும் என்னை ஏற்கிறார்கள்...இந்த மாற்றம் ஆரோக்கியமானது.. நல்லதொரு சமூக மாற்றம் நிகழ்ந்துள்ளது என்றார்

அப்போது ஒரு நிருபர். அதெல்லாம் இல்லை..  உங்களை ** , **** ( சில சாதிகளை சொன்னார் ) ஏற்கவில்லை.. அதனால்தான் தோற்றீர்கள் என்றார்

 நான் மட்டும் தோற்றிருந்தால் , அப்படி சொல்லலாம்.. ஆனால் ஒட்டு மொத்தமாக எங்கள் அணி தோற்றுள்ளது/ ஆகவே இது சாதி ரீதியான தோல்வி அல்ல..  என்றார் கிருஷ்ணசாமி

அந்த நிருபர் விடாமல் , சாதி ரீதியாக கேட்டு கிருஷ்ணசாமியை அவமானப்படுத்தினார்
கிருஷ்ண சாஇ டென்ஷனாகி , சாதி ரீதியாக தாக்குதல் நடத்தும் உன் உள் நோக்கம் புரிகிறது.. நீ என்ன சாதி என்றார்


பார்க்கும் நமக்கே வருத்தமாக இருந்தது

வளர்ந்து வரும் ஒரு சமூகம்.. அதன் தலைவரை இப்படி அசிங்கபடுத்தும் தைரியம் எப்படி வருகிறது

உட்கட்சி பூசல்களால் , திராவிட இயக்கம் சற்று சோர்ந்துள்ளதால் நடக்கும் விளைவுகள் இவை

ஓர் அண்ணாவோ , எம் ஜீ ஆரோ இருந்திருந்தால் , கண்டிப்பாக இது நடந்திருக்காது

திராவிடம் மீண்டும் உயிர்க்கட்டும்.. சாதி திமிர் ஒழியட்டும்



No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா