Saturday, May 25, 2019

ராஜிவ் நினைவகமும் ராகுல் விலகலும்

காங்கிரஸ் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் பதவி விலக நினைப்பது சரி என தோன்றவில்லை..

அவர் மிகவும் ஆக்கப்பூர்வமான பிரச்சாரத்தையே முன்னெடுத்தார்...

ஆனால் கூட இருந்தவர்களின் பொறுப்பற்ற பேச்சுகள் , அதீத இந்து எதிர்ப்பு பிரச்சாரத்தால் , இந்து ஓட்டுகளை வலுக்கட்டயமாக மோடி பக்கம் தள்ளியது , மூன்றாவது அணி என்ற பெயரில் சில கட்சிகள் ஓட்டை பிரித்தது போன்றவையே தோல்விக்கு காரணமாகும்

வழக்கமாக காங்கிர்ஸ் மீது பரிவு கொண்ட கேரளா , தமிழ் நாட்டில் காங்க்ரஸ் கூட்டணி வென்றுள்ளது

தெலுங்கானா பிரிப்பு விவகாரம் காரணமாக ஆந்திர மக்கள் காங் மீது கோபமாக இருப்பதால் , அங்கு வெல்ல முடியவில்லை

தெலுங்கானாவை பிரித்து கொடுத்த நன்றியை அவர்கள் காங்கிரஸ் மீது காட்டுவதை விட டிஆர் எஸ் மீது காட்டுவதால் அங்கும் தோல்வியே


இதை எல்லாம் காங்கிரஸ் மாற்ற வேண்டும்

மற்றபடி , காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முதல் வாக்கு வங்கி கொண்ட காங்கிர்ஸ் மீண்டும் எழும் என்பது உறுதி


காங்கிர்ஸ்காரர்கள் மட்டுமல்லாது அனைவருமே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவகம் செல்ல வேண்டும்


அழகான , அமைதியான , பாதுகாப்பான இடம்...


ராஜிவ் காந்தியின் தியாகம் வீண் போகக்கூடாது

மதச்சார்பின்மை , அறிவியல் வளர்ச்சி , கல்வி போன்ற அவர் கனவுகள் மெய்ப்பட உழைக்க வேண்டும் .. ராகுல் இதை உறுதி செய்ய வேண்டும்













No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா