Monday, May 20, 2019

ராஜிவ் காந்தியும் மண்டல் கமிஷனும்

இன்று ராஜிவ் காந்தியின் நினைவு தினம்.. அதையொட்டி , அவர் குறித்து கம்யூனிஸ்ட் தலைலவர்களில் ஒருவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான தா . பாண்டியன் அவர்கள் நூலில் இருந்து ஒரு பகுதி

----

அப்போது விபி சிங் பிரதமர். ராஜிவ் எதிர்க்கட்சி தலைவர்.. நான் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று அவர்கள் உதவியால் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன்

மண்டல் கமிஷன் குறித்து விவாதம் நடந்து கொண்டு இருந்தது

ராஜிவ் அழுத்தமாக உரையாற்றிக்கொண்டு இருந்தார்

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல் படுத்துவதில் இருந்த தன் கருத்து வேற்றுமைகளை பேசினார்

எனக்கோ பயங்கர அதிர்ச்சி.. கருத்தியல் ரீதியாக கொள்கை  ரீதியாக காங்கிரஸ் கட்சி மண்டலுக்கு ஆதரவானதுதானே, இப்போதுமேகூட அவர் ஆதரவாக பேசினாலும் , எதிர்த்து பேசுவது போலத்தானே வார்த்தைகள் அமைந்துள்ளன... இது சமூக நீதிக்கு எதிரானனவராக அவரை தோன்றச்செய்யுமே என்றெல்லாம் எனக்கு குழப்பம்

கூட்டம் முடிந்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடினார்..அனைவருமே அவர் பேச்சை பாராட்டினார்

- பாண்டியன் ஜி..உங்க கருத்தை சொல்லுங்க என்றார்

- சொன்னால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்களே என்றேன்

- சொல்லுங்க.. நானாகத்தானே கேட்கிறேன் என்றார்

- மண்டல் கமிஷனை எதிர்ப்பதுபோல உங்கள் பேச்சு இருந்தது...இது தவறு என்றேன்

- இல்லையே.. அந்த கமிஷன் அறிக்கை எனக்கு உடன்பாடுதான்.. ஆனால் அது இப்போது அது கொண்டு வரப்பட்ட நோக்கம்.. கொண்டு வரப்பட்ட விதம் தவறு... நடைமுறைச்சிக்கல்களைத்தானே பேசினேன் என்றார் அவர்

- இருக்கலாம்.. ஆனால் அதை நீங்கள்  எதிர்ப்பதாகத்தான் செய்தி வெளியாகும்...  முதன் முதலாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது இட ஒதுக்கீடுகாகத்தான்... அதை செய்தவர் உங்கள் தாத்தா நேரு.. மண்டல் கமிஷன் உருவாக்கப்பட்ட்து மொரார்ஜி காலத்தில் என்றாலும் அதை முறைப்படுத்தி துரிதப்படுத்தி மண்டல் அறிக்கையை பெற்றவர் உங்கள் என்னை இந்திரா காந்தி...  இப்படி சமூக நீதியில் அக்கறை கொண்ட பாரம்பரியத்தில் வந்த உங்களை சமூக நீதிக்கு எதிரானவராக சித்தரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி விடாதீர்கள் என்றேன்

- ஆம்.. தவறு நடந்து விட்டது.. திருத்திக்கொள்கிறேன் என்றார் அவர்

அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் என்னை பாராட்டினர்

இதை நீங்களே சொல்லி இருக்கலாமே என்றேன் நரசிம்ம ராவிடம்

- காங்கிரஸ் கலாச்சாரம் உனக்கு தெரியாது என்றார் அவர் சிரித்தபடியே

தன் கட்சி தயவால் எம் பி ஆனவன் என நினைக்காமல் , எளியவனான என் பேச்சை மதித்த ராஜிவை என்னால் மறக்க முடியாது

---

பிகு....

மண்டல் கமிஷனுக்கு உரிமை கோர வேண்டிய காங்கிரஸ் அதை ம்றந்து விட்டது...  உண்மையான அக்கறையுடன் மண்டல் கமிஷனை அமைத்தவர்கள் மொரார்ஜியும் பிறகு இந்திராவும்.. ஆனால் அரசியல் காரணங்களுக்காக விபி சிங் தான் மண்டல் கமிஷனுக்காக  நினைவுகூரப்படுகிறார்’


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா