Wednesday, May 29, 2019

ஆடாமல் ஜெயித்த கிரிக்கெட் வீரர் - கிரிக்கெட் உலக கொடுமைகள்



1983 உலக கோப்பை வெற்றியில் கபில் தேவின் ஃபைனல் கேட்ச்சை ( விவியன் ரிச்சர்ட்ஸ் விக்கெட் ) , மொஹிந்தர் அமர் நாத்தின் கடைசி ஓவர்களை யாரும் மறக்க முடியாது

அதேபோல சுனில் வால்சனுக்கும் அவரது நண்பர்கள் உறவினர்களுக்கு 1983 உ கோப்பையை மறக்க முடியாது

காரணம் அந்த போட்டியில் வென்று கோப்பையுடன் புகைப்படத்தில் காட்சி அளிப்பவர்களுள் அவரும் ஒருவர்..

ஆம்..அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீர்களில் இவரும் ஒருவர். ஆனால் ஒரு மேட்ச் சில் கூட விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை

ரோஜர் பின்னி , மதன்லால் , கபில்தேவ் போன்ற சீனியர்கள் இருக்கும்போது சின்ன பையனான எனக்கு வாய்ப்பு கிடைக்காததில் வருத்தம் இல்லை.. இப்போது நான் சீனியர் சிட்டிசனாகி விட்டேன் என்பதால் இப்போதும்கூட வருத்தம் இல்லை என்கிறார் இவர்

ஆந்திராவை சேர்ந்த வீரரான இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியின் மேனேஜராக இருக்கிறார்

அதேபோல தமிழக வீரர் வி வி குமார்.. திறமைசாலிதான்.. ஆனாலும் போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை

வாய்ப்பு கிடைத்த முதல் தொடரில் அருமையாக பந்து வீசினார்

அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடர்

முதல் இன்னின்க்சில் சிறப்பாக பந்து வீசினார்

இரண்டாம் இன்னின்க்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை

அடுத்த டெஸ்ட்டில் வாய்ப்பு தருவதாகவும் , பந்து வீசும் ஸ்டைல் ரகசியமாக இருந்தால்தால் அடுத்த டெஸ்ட்டில் எதிராளிகளை அச்சுறுத்த முடியும் என்றும் கூறி பந்து வீச வேண்டாம் என்றார் அணித்தலைவர்

ஆனால் என்ன கொடுமை என்றால் , அவர் வாழ்க்கையில் அடுத்த வாய்ப்பு என ஒன்று வரவே இல்லை

அதேபோல மதுரை வீரர் வெங்கட்ரமணா..

திறமையான பந்து வீச்சாளர்

கிரிக்கெட் உலக அரசியலால் இவருக்கும் வாய்ப்புகள் அமையவில்லை

இப்படி வாய்ப்புகள் அமையாமல் ,  காணாமல் போனோர் எண்ணிக்கை கிரிக்கெட்டில் அதிகம்.. வாழ்க்கையிலும்கூட

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா