Thursday, April 23, 2020

பெரியார் பட சரச்சை இளையராஜா விளக்கம்



ஒருவர் கீழ்மட்டத்தில் இருந்து முன்னேறி வநதால் அதை பலரால் ஜீரணிக்கமுடியாது
;இளையராஜா மீதான தாக்குதல்கள் இப்படிப்பட்டவையே

சில ஆண்டுகளுக்கு,முன் பெரியார் என்ற படத்துக்கு அவர் இசையமைககக மறுத்து விட்டார் என ஒரு தரப்பு புரளி"கிளப்பியது

இதை இந்துக்கள் வரவேற்கிறாரககள் என, பிஜேபி அறிவித்தது

ஆக இரு தரப்பாலும் அவருக்கு தொல்லைதான்

அது பொய்யான தகவல் என அவரே சொன்ன பின்னும் இந்துத்துவரககளும் விடவில்லை. பிறரும் விடவில்லை

ஜீ வி இதழில் இளையராஜா அளித்த விளக்கம் இதோ..

.......

ஒரு திருமணம் நடக்கிறது. அதற்கு ஒரு சமையற்காரரை ஏற்பாடு செய்து விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கல்யாண வீட்டுக் காரர் திடீரென்று பந்தியின் முன்னால் உட்கார்ந்திருப்பவர்களிடம் 'இங்கே ஒரு பிரபலமான சமையற்காரரை அழைத்திருந்தேன். அவர் வருவதற்கு மறுத்து விட்டார்.' என்று சொன்னால் அங்கே இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அந்த சமையல்காரரும் இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருப்பார். காரணம், அவரைத்தான் அந்த சமையல் வேலைக்கு அழைக்கவே இல்லையே! அது போலவே பெரியார் படத்துக்கு இசையமைக்க என்னை யாரும் முறையாக அழைக்கவும் இல்லை.எந்த ஒப்பந்தமும் செய்யவுமில்லை!...
...பாரதி படத்துக்குப் பிறகு ஞானராஜசேகரன் என்னைச் சந்தித்து சுபாஷ் சந்திர போஸ் பற்றி ஒரு படம் எடுக்கிறேன். முதல்கட்ட படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சி வருகிறது. அதற்கு நீங்கள் ஒரு பாடல் இசையமைத்து ரெக்கார்ட் செய்து தர வேண்டும் என்று கேட்டார். 'இப்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் சுபாஷ் சந்திர போஸை எந்தக் கோணத்தில் படம் எடுக்கிறீர்கள்? அரசியல் சாயம் உண்டா? சுதந்திர உணர்வு போராட்டப் படமா? இப்படி படத்தின் நிறம் என்ன என்பதைத் தெரிந்து கொண்ட பிறகுதான் இசை அமைக்க முடியும். எனவே படத்தை எடுத்துக் காட்டுங்கள். பிறகு பார்க்கலாம்' என்றேன்
அவ்வளவுதான்! அதன்பிறகு சில வருடங்கள் கழித்து, அவர் பெரியார் படம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அதற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை ஏற்பாடு செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன். ஆனால் இப்போதோ பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்துவிட்டேன் என்று வீணாக செய்தி கொடுத்துக் கொண்டிருக்கிறார்....
....நான் காங்கிரஸ்காரனாக இல்லாவிட்டாலும் காமராஜ் படத்துக்கு இசைத்தொண்டு செய்தேன். நான் ஒரு திராவிடக் கழகத்தவன் இல்லையென்றாலும் சுயமரியாதையோடு உள்ளத் தூய்மையோடு பெரியாருக்கு சேவை செய்யத் தயங்கி இருக்க மாட்டேன்.
ஆனால் இந்தப் பெரியார் படத்தை எதற்காக எடுக்கிறார்கள்? அந்தப்படம் குறித்து என்னுடைய மூன்று கேள்விகள் இவைதான்.
1. இது பெரியாரின் கொள்கை விளக்கப் படமா?
2. பெரியாரின் வரலாறா?
3. தந்தை பெரியார் கேரக்டரில் நடிக்கும் சத்யராஜின் படமா?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நியாயமான விடைகள் இந்தத் திரைப்படத்தில் அமைந்தால், இளையராஜா மட்டுமல்ல....வேறு எந்தக் கொம்பனின் இசையும் பெரியார் படத்துக்குத் தேவையே இல்லை...
....நான் ஆன்மீகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுய மரியாதையையும், தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதில் ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காக தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால் நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை பெரியார் படத்துக்கு நான் இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம் இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்..."

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா