Friday, April 3, 2020

கவுண்டமணியும் கம்பனும்

நான்கு வரிகளில் ஒரு குறும்படம்

கம்பன் எனும் கலைஞன்

ஓவிய உருவ! நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்;
பூ இயல் நறவம் மாந்தி, புந்தி வேறு உற்றபோழ்தில்,
தீவினை இயற்றுமேனும், எம்பிமேல் சீறி, என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல்' என்றான்

ராமனால் வஞ்சகனால் வீழ்த்தப்பட்ட வாலி , ராமா , உன் தகுதிக்கு நீ இப்படி செய்திருக்ககூடாது என நாகரிகமாக பேசுகிறான். கடைசியில் சொல்கிறான்

ஓவியம் போன்ற அழகனே. எனக்கொரு வரம் கொடு. என் "தம்பி நல்லவன்தான். ஆனால் மது அருந்தினால் கொஞ்சம் அடாவடி செய்வான். தவறிழைக்காத என்னை கொன்றது போல , தவறேசெய்தாலும் அவனை கொன்றுவிடாதே

ராமன் , வாலி , சுக்ரீவன் ஆகிய மூவரின் குணநலன்களும் வந்து விடுகிறதல்லவா

ஒரு படத்தில் கவுண்டமணியை செந்தில் பெண்வீட்டாருக்குஅறிமுகம் செய்வார்

மாப்பிளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. தங்கமானவரு

அவர்கள்  கேட்பார்கள்

வெத்தல பாக்குகூட போட மாட்டாரா

போடமாட்டார் எப்பவாச்சும் தம் அடிக்கும்போது வாசனய மறைக்க போடுவார்

தம்  அடிப்பாரா ?

எப்பவும் இல்ல. எப்பவாச்சும் "தண்ணி அடிக்கும்போது லேசா தம் அடிப்பார்

என்னது தண்ணியா ?

அட .. இவரு என்ன குடிகாரரா. எப்பவாச்சும் பொண்ணுங்ககூட போகும்போது தண்ணி அடிப்பார்


இதைக்கேட்டு பெண் வீட்டார் துரத்தி அடிப்பார்கள்

அதுபோல எப்பவாச்சும்
தண்ணி அடிப்பதைத்தவிர சூதுவாது தெரியாத தம்பியை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்கிறான் வாலி

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா